tag:blogger.com,1999:blog-20160657127092234032024-03-06T11:13:42.328+05:30நாட்டவிழி நெய்தல்ஒவ்வொரு இரவின் போர்வைக்குள்ளும் ஒரு விடியல் ஒளிந்திருக்கிறது!ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.comBlogger422125tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-60121336857456597822024-02-23T21:40:00.000+05:302024-02-23T21:40:09.651+05:30ரஃபாவிலிருந்து<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0bZMJCh6-ytAzzVHa9MjyNPradH_PWVNept6_K4Og8n7RXYKo3WgOzx4FIDkdN_6putODn89rQ5f0V3ASkFrOH3H6BdmLdxTy-8nNI4-7fD3sJwASNZ_ZvPKVf9uNDv_imyRCD7dtPwZLwJOks89OW3NHeXo3ESNm7-3s_rnreLoawb0tzcdXT69cP7lP/s800/Rafa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="533" data-original-width="800" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0bZMJCh6-ytAzzVHa9MjyNPradH_PWVNept6_K4Og8n7RXYKo3WgOzx4FIDkdN_6putODn89rQ5f0V3ASkFrOH3H6BdmLdxTy-8nNI4-7fD3sJwASNZ_ZvPKVf9uNDv_imyRCD7dtPwZLwJOks89OW3NHeXo3ESNm7-3s_rnreLoawb0tzcdXT69cP7lP/s320/Rafa.jpg" width="320" /></a></div><br /><br /><p></p><p style="text-align: center;"><b>ஹஸன் அபூ சித்தா</b></p><p><br /></p><p>இஸ்ரேலியரின் இடை விடாத தாக்குதல் காரணமாக தென் காஸாவின் கான்யூனிஸிலுள்ள எமது வீட்டிலிருந்து பலவந்தமாக இடம்பெயர வேண்டியிருந்தது. </p><p>நான் அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் சட்டம் கற்பதற்குத் தயாராக இருந்தேன். ஒரு சட்டத்தரணியாகி சர்வதேச நீதிமன்றில் பலஸ்தீனுக்காகப் பேச வேண்டும் என்பது எனது குறிக்கோளாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியேறி கான் யூனிஸிலிருந்த பெண்கள் பாடசாலையில் தஞ்சமடைய வேண்டியிருந்ததால் எனது சட்டக் கல்விக் கனவு அப்படியே நி;ன்று விட்டது.</p><p>மெத்தைகள் இன்றி குளிர் மிகுந்த வெற்றுத் தரையிலேயே நாங்கள் உறங்க வேண்டியிருந்தது. இதனால் அங்கிருந்த முதியவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். டிசம்பரில் பாடசாலைக்கு அருகிலிருந்த ஹமாத் நகரத்தின் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலின் உக்கிரம் காரணமாக பாடசாலைக் கட்டடங்கள் அதிர்ந்தன. நாங்கள் வகுப்பறை ஒன்றுக்குள் இருந்தோம். தாக்குதலில் உண்டான அடர்த்தியான புழுதியும் புகையும் நாமிருந்த இடத்தை அப்படியே மூடிப் பரவியது. இதன் காரணமாக எல்லாரும் மூச்சுத் திணறலுக்கு உள்ளானோம். குண்டுத் தாக்குதலில் ஜன்னல்கள் சேதமடைந்தமையால் நச்சுப் புகையைச் சுவாசிக்க வேண்டியதாயிற்று. அந்தப் புகையில் வெள்ளைப் பொஸ்பரஸ் கலந்திருந்தது என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்.</p><p>எனது குடும்பத்தவரில் இந்தப் புகையினால் அதிகம் பாதிக்கப்பட்டது எனது தங்கை மர்யம்தான். அவள் 2 வயதாக இருக்கும் போதே ஆஸ்த்மாவால் பீடிக்கப்பட்டவள். அவளுக்குப் புழுதி, புகை என்பன ஆகாது. இதனால் அவளைத் தாயார் மிக அவதானமாக வளர்த்து வந்தார். இப்போது மர்யத்துக்கு 23 வயது. இன்னும் அந்த நோய்ப் பாதிப்பு அவளுக்கு உண்டு. தடிமன் பீடித்தாலே நாங்கள் எச்சரிக்கை ஆகி விடுவோம். கோவிட் காலத்தில் அவளுக்குத் தொற்றி விடுமோ என்று நாங்கள் மிகவும் பயத்துடன் இருந்தோம். </p><p>பாடசாலை வகுப்பறைககுள் புகுந்த நச்சுப் புகை காரணமாக மர்யம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாள். நாங்கள் அவளைச் சுற்றியிருந்து நீர் தெளித்து எழுப்புவதற்குப் பிரயத்தனப்பட்டோம். பாடசாலை நர்ஸ் வந்து மர்யத்தை எழுப்ப முயற்சிகள் செய்தாள். எதுவும் ஆக வில்லை. எனவே அவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம். இதற்கிடையில் ஏனைய அனைவரும் முகக் கவசத்தை அணிந்தோம். வாய் வழியாகப் புகை புகுந்து விடாதிருக்க வாயைச் சுற்றிப் புடவைகளால் சுற்றிக் கொண்டோம். </p><p>வைத்தியசாலையில் மர்யம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு ஒக்ஸிஜன் பொருத்தப்பட்டது. நிமோனியாவும் பீடித்திருந்ததால் ஆபத்தான நிலை உணரப்பட்டது. அவள் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை காத்திருந்தோம். </p><p>அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள நிலைமையை விவரிப்பது மிகவும் துன்பமிக்கது. தியாகிகளின் மரணித்த உடல்களும் உடற்பாகங்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இஸரேலிய தாக்குதலில் உயிர் பிழைத்தோர் நிலையும் சொல்லமளவுக்கு இருக்கவில்லை. அங்கிருந்த உடல்களின் ஒன்று எனது வாழ்நாள் நண்பன் பாரா மக்தியினுடையது என்பதையறிந்து அதிர்ந்து போய் விட்டேன். ஒரு நாள் முன்னர்தான் இருவரும் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். மெதுவாகச் சென்று அவரது நெற்றியில் முத்தமிட்டு அவருக்காகப் பிரார்த்தித்தேன்.</p><p>மர்யத்தின் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதை தாதி வந்து சொன்னாள். அடுத்த நாட்காலை ஒக்ஸிஜன் சிலின்டருடன் தங்குமிடம் திரும்பினோம். வந்ததும் அவசரம் அவசரமாக ரஃபா நோக்கிக் கிளம்பினோம். இப்போது நாங்கள் ரஃபாவில் இருக்கிறோம். இங்கேயும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை. தெருவோரம் ஒரு கூடாரத்தில் தங்கியிருக்கிறோம். நாங்கள் உணவு சமைக்கும் புகை எங்கள் சுவாசக் காற்றை நிறைக்கிறது. ஈரலிப்பான, நீர் ஊறும் நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் இப்போது கூடாரத்தில்தான் வாழ்கிறோம். அதுதான் இப்போதைக்கு என் தாய்நாடு, வீடு எல்லாமே.</p><p>ரஃபாவை இஸ்ரேல் தாக்குவதற்கு முன்னர் உலகம் எமது உதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இல்லையெனில் நாங்களும் தியாகிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம்!</p><div><br /></div>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-57273354416092458912023-10-09T18:25:00.001+05:302023-10-09T18:28:13.555+05:30கஸ்ஸான் கனபானியின் வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை - பிஸ்தாமி அகமட்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf5rjv1gS6Tfgl7z9Xbgd67l8Fq4bz1PMqIiU4Zvizj6nkpkaaPIrFCCU1zH8lgkeEWM3E_13k_E32rZSAmIpicRybmIsu2HueP1B6eIrlYOLGakTIoNgNLHcbuxMjskjPCN9RWEFpVscVsMNDv1xxAwAMYDMG4daCxMI0c0iF5gmXQZn345jrqdfy65Ma/s720/VEY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="514" data-original-width="720" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjf5rjv1gS6Tfgl7z9Xbgd67l8Fq4bz1PMqIiU4Zvizj6nkpkaaPIrFCCU1zH8lgkeEWM3E_13k_E32rZSAmIpicRybmIsu2HueP1B6eIrlYOLGakTIoNgNLHcbuxMjskjPCN9RWEFpVscVsMNDv1xxAwAMYDMG4daCxMI0c0iF5gmXQZn345jrqdfy65Ma/s320/VEY.jpg" width="320" /></a></div><br /><div style="text-align: center;"><b>கஸ்ஸான் கனபானியின் ்வெய்யில் மனிதர்கள்” - எனது பார்வை</b></div><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiun4nDoL406L3iw-qYFIBH-ffpI352TMEX2fLz2X73DsUPT6ZioXaW51KnahNsSFzaQZmOqvYtDyQVdAxSUZACUosaTvTtrBSVq6zLUBRoVLpHsR8_YhX6N6Fu9Is4ovk3jOaN_hbS8LWxOGDsPYtqynpt5Az4Rr4JJNGEfgAZVyeCB5PIyCrkRkNG1MRm/s960/Bistami.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="957" data-original-width="960" height="319" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiun4nDoL406L3iw-qYFIBH-ffpI352TMEX2fLz2X73DsUPT6ZioXaW51KnahNsSFzaQZmOqvYtDyQVdAxSUZACUosaTvTtrBSVq6zLUBRoVLpHsR8_YhX6N6Fu9Is4ovk3jOaN_hbS8LWxOGDsPYtqynpt5Az4Rr4JJNGEfgAZVyeCB5PIyCrkRkNG1MRm/s320/Bistami.jpg" width="320" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><b>பிஸ்தாமி அகமட்</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><b><br /></b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; text-align: start; transition-property: none !important;">رجال <span style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><a style="animation-name: none !important; color: #385898; cursor: pointer; font-family: inherit; transition-property: none !important;" tabindex="-1"></a></span>في الشمس</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எனும் தலைப்பில் பாலஸ்தீனிய இலக்கிய எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கஸ்ஸான் கனபானியின் அரபு நூலை ஹிலரி பெட்ரிக் இன் Men in the Sun ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாக அழகிய தமிழுக்குள் கொண்டுவந்துள்ளார் பிரபல கவிஞரும் ஊடகவியலாளருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள். மூல நூலில் உள்ள கவித்துவமும் மொழிச்செழுமையும் நொருங்காமல் கலையாமால் அப்படியே அதே உணர்வுடன் இங்கும் படர விட்டிருப்பதை வாசகர்கள் முதல் பந்தியிலிருந்து இறுதி வரி வரை உணரலாம்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அஷ்ரப் ஷிஹாப்தீன் இலங்கையின் மூத்த முன்னோடி இலக்கிய படைப்பாளி. பன்னூலாசிரியர். ஊடகவியலாளர். எழுத்தாளர். விமர்சகர். இலக்கிய மொழிபெயர்ப்பாளர்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வெய்யில் மனிதர்கள் என்ற தலைப்பே அனைத்தையுமே தொலைத்து இழந்து பெருந்தவிப்பும் அங்கலாய்ப்பும் அலைச்சலும் சகிதம் வெறுங்கையுடன் உயிரை மாத்திரம் பணயம் வைத்து வெயிலின் அகோரத்தை, உஷ்ணத்தை, ஜீரணித்து நீண்ட நெடும் பயணத்தில் தம்மை ஈடுபடுத்தி ஏதோ ஒன்றை நோக்கி சென்று கொண்டே இருக்கும் மனிதர்களை அடையாளப்படுத்தும் குறியீடு symbol என்பதை புரியலாம்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> கஸ்ஸான் தன் எழுத்துக்கள் வழியாக குறியீடுகளைத் தான் பிரதான அடையாளங்களாக கையாள்கிறார். </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கஸ்ஸான் Ghassan Kanafani (1936–72) வரையான 36 வருடங்கள் உலகில் வாழ்ந்தவர். 20 ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க பாலஸ்தீனிய எழுத்தாளர் கண்பானியின் மிகத்தரமானதும் காத்திரமானதுமான படைப்பாக இதனை கருதமுடியும். 1972 களில் கார் குண்டு வெடிப்பின் மூலம் அவரது உயிர் காவுகொள்ளப்பட்டது. பிறகு மொசாட் அதற்கு உரிமை கோரியது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவரது சிறுகதைகளும் சிறார் கதைகளும் நாவல்களும் இலக்கிய படைப்புகள் மீதான செறிவான விமர்சனங்களும் அரசியல் பத்திகளும் கனங்காத்திரமானவை. மரணத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் Popular Front for the Liberation of Palestine (PFLP) பிரச்சாரகராக செயற்பட்டதுடன் al-Hadaf (The Goal). பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் செயற்பட்டார். அவரது எழுத்துக்களில் சிறுகதை நாவல் இலக்கியங்களின் நவீன பாணிகளை நுட்பங்களை போக்குகளை துல்லியமாக அவதானிக்கலாம். கதாபாத்திரங்கள், அவர்களின் உணர்வுகள், உதிரும் வார்த்தைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அபிலாசைகள், அவஸ்தைகள் என அனைத்திலுமே அவை வெளிப்படுகின்றன.(மொழிபெயர்ப்பிலும் கூட அத்தகைய நுட்பங்களை மொழிபெயர்ப்பாளர் கவனமாக கையாண்டு நூலின் உயிர்ப்பை தக்க வைத்துள்ளார்) அதன் வழியாக பாலஸ்தீனிய பூர்வீக மக்களுக்கான இருப்பு, அடையாளம், அடையாள நெருக்கடி என்பவற்றை தனது புலம்பெயர் இலக்கிய வகையறா எதிர்ப்பிலக்கிய வகையறா போர்க்கால இலக்கிய வகையறா விடுதலை இலக்கிய வகையறா போன்றவற்றின் வழியே வெளிக்கொணர்கிறார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> உரிமைக்கும் உயிருக்கும் இருப்புக்குமான அறைகூவலாக அவரது எழுத்துக்கள் உள்ளமை குறிப்பிடதக்கது. மத்திய கிழக்கின் வாழ்வியலை பாலஸ்தீன அகதிகள் வழியாக சர்வதேச தளம் நோக்கி மிகக்கவனமாக நுணுக்கமாக, உணர்வு பூர்வமாக, உயிரோட்டமாக நகர்த்த தனது மொழியாற்றலை, இலக்கிய புனைவை, வரலாற்றுணர்வை பயன்படுத்தி வரலாற்றில் பதியவைத்துள்ளார். கஸ்ஸான் அவரது எழுத்துக்களின் வெற்றி இதுவே.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">1950 க்கு பின்னரான போர்க்கால சூழலில் வாழ்ந்த மக்களின் உணர்வுகள் தான் இங்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.வேறுபட்ட பரம்பரையை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பாலஸ்தீனியர்கள் தென் ஈராக்கிலிருந்து குவைத் நோக்கி சட்டரீதியற்ற முறையில் புலம்பெயர்வதுடன் கதை ஆரம்பமாகிறது. பஸ்ரா வரை சுதந்திரமாக வந்து அதன் பிறகு கடத்தல்காரர்களது உதவி பெற்று எல்லைப்பகுதிகளை நோக்கி பயணிக்கின்றனர். பூர்வீக நிலத்தின் வாசனையை விட்டு பிரிந்து, வலிகளை சுமந்து பயணிக்கும் அனுபவம் மரண வேதனை தான்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலும் 1600 களில் கோட்டை முஸ்லிம்கள் காலனித்துவத்தின் ஆயுத முனையில் நேரம் வரையறுக்கப்பட்டு பூர்வீக நிலத்திலிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டது முதல் 90 களில் வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்டது, 2000 ஆண்டுகளின் முதல் தசாப்தத்தில் கிழக்கின் மூதூரில் இருந்து வெளியேற்றப்பட்டது போன்ற கசப்பான துன்பியல் இருண்ட வரலாற்று நினைவுச்சுமைகளும் இங்கு நினைவு கூறத்தக்கவை. ஆக்கிரமிப்பின் விளைவால் வரும் விரக்தியே இத்தகைய உணர்வை தருகின்றன. விடுதலைக்கான குரல்களாக இவை அமையட்டும். இந்த நிமிடம் கூட பாலஸ்தீனம் குமுறிக்கொண்டு தான் உள்ளது சுதந்திர காற்றை ஒரு முறையாவது சுவாசிக்க </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பாலஸ்தீனக்கவி மஹ்மூத் தர்வீஷின் ஒரு கவிதை இங்கு நினைவுக்கு வருகிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் பின்னால் திரும்பிப்பார்க்கவில்லை</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அகதி வாழ்வுக்கு விடையளிக்க</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஏனென்றால் எதிரே இருப்பதும் அகதி வாழ்வுதான்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வட்டசாலையில் கைகாட்டி இருக்கிறார்கள்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எனவே முன்னும் இல்லை. பின்னும் இல்லை.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் நாடு பெயர்கிறார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வேலியிலிருந்து தோட்டத்துக்கு</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">முற்றத்தின் ஒவ்வொரு மூன்றடிக்கும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஓர் உயிலை விட்டுச்செல்கின்றார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நினைவில் வைத்திருப்பாய்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எங்களுக்குபிறகு</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வாழ்வை மட்டும்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் பயணிக்கிறார்கள்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பட்டு விடியலிலிருந்து உச்சித்தூசிக்கு</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இராமையின்(இல்லாமையின்) பொருட்கள் நிறைந்த </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பெட்டிகளைச் சுமந்தபடி</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் புறப்படுகிறார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வீடுகளிலிருந்து தெருக்களுக்கு</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">காயம் பட்ட வெற்றிச்சின்னத்தை விரித்தபடி</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">காண்போருக்கெல்லாம் கூறியபடி</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நாங்கள் இன்னும் உயிரோடிருக்கின்றோம்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எனவே எங்களை நினைவு கூற வேண்டாம்</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; text-align: left; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் வரலாற்றிலிருந்து வெளியேறினார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சுவாசிக்கவும் சூரியனில் குளிக்கவும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்கள் கனவு காண்கிறார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எவ்வாறு உயரே பறப்பதென்று</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><br /></div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஒரு <span style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><a style="animation-name: none !important; color: #385898; cursor: pointer; font-family: inherit; transition-property: none !important;" tabindex="-1"></a></span>நல்ல நூல் அதன் முதல் வரியினதும் இறுதி வரியினதும் உயிரோட்டத்திலும் உத்வேகத்திலும் வருடலிலும் தான் உயிர்வாழும்...</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அந்த வகையில் கஸ்ஸான் கனபானியின் கலைநுட்பம் கதைசொல்லும் பாணி வாசகர்களை கட்டிப்போட்டுவிடும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வேறெல்லா புலச்சிதறல்களையும் விட்டு கதைக்குள் குவியப்படுத்திவிடும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கவலைகளை கரைபுரண்டோட வைக்கும்</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">காலப்பொருத்தம் மிக்க ஒரு நூலாக இதனை வாசகர்களுக்கு பரிந்துரைக்கலாம்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மத்திய கிழக்கின் சமகால நிலை கொதிப்பும் குமுறலும் கொந்தளிப்பும் நிறைந்ததாக உள்ளது. பாலஸ்தீனத்தை கலைவழியாக புரிய அழகான தருணம் இது. கல்பை அப்படியே உருகி ஓட வைக்கும் தன்மை நூலின் கனதியை வலிதாக்கிவிடுகிறது. வலிகளுக்கும் வலிமை சேர்க்கிறது</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஏனைய நாவல்கள் போலவே இங்கும் மனித இயல்புகள் பட்டுத்தெறிக்கின்றன. மகாத்மா காந்தி சொல்வது போல "பசியோடிருப்பவன் ரொட்டித்துண்டில் கடவுளைக்காண்பான்" என்பது எவ்வளவு தத்ரூபமாக இங்கு காட்சியாக்கப்படுகிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆசைகள் திருமணம் இழப்பு நோய் வருத்தம் கடன்சுமை எதிர்காலம் என எல்லாமே சுழல்கிறது. ஆனாலும் அந்த துன்பியல் சக்கர சுழற்சி மட்டும் எல்லா பக்கமும் புடைசூழ்ந்து வருகிறது</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அபூகைஸ் கைஸூரான் தவிர உள்ள எல்லோருமே யதார்த்தத்தின் அடையாளங்கள் குறியீடுகள் தான்</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பாலஸ்தீன மக்களின் முக்கால பரிணாமம் தான் பிரதான கதாபாத்திரங்கள். அவை காலத்தின் நீட்சிக்கான சான்றுகள். முடிவோ முற்றுப்புள்ளியோ இன்றி தொடரும் அவலங்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எத்தனை தலைமுறையாக இந்த அவலத்தை சுமந்து திரிவது...அந்த மக்கள் </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கனரக வாகனம் என்பதே கதிரியக்க அறையின் உஷ்ணத்தை எதிரொலிக்க வைக்கிற நிலையில் எப்படி அந்த மூவரும் தம் வாழ்வை அதற்குள்ளே ரணமாகவும் மரணமாகவும் நிலைமாற்றிவிடுகிறார்கள். அதற்காக எத்தனை பகீரதப் பிரயத்தனங்கள். அதற்கான ஏற்பாடுகள். கடத்தல் பேர்வழிகள் கூட புலம்பெயர்வை எவ்வளவு சமயோசிதமாக லாபகரமான வியாபாரமாக்கியுள்ளனர். சட்டத்தில் எத்தனை ஓட்டைகள். அந்த ஓகஸ்ட் மாத கர்ண கொடூர வெயில் போலத்தான் பாலஸ்தீனத்துக்கெதிரானவர்களது மனங்களும். சுட்டுப்பொசுக்கி சாகடிக்கவே காத்திருக்கும். இதுவே இது நூலில் கதைக்கான கருவாக இருப்பினும் அங்கு காலங்காலமாக கண் முன்னே இப்படியான கவலைக்கிடமான மரணங்களைத்தானே விலை கொடுத்து வாங்கி வாழ்கின்றார்கள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சுதந்திரத்தின் பெறுமதியை உணர்த்த மரணத்தை உதாரணமாக காட்டியாக வேண்டியுள்ளது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நிம்மதியின் பொருளுணர்த்த அவலத்தை அலைச்சலை காட்டியாக வேண்டியுள்ளது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இருப்பின் பொருளுணர்த்த இல்லாமையே நோக்கி பயணித்தாக வேண்டியதை சொல்ல வேண்டி ஏற்படுகிறது</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இன்னுமின்னும் சொல்லிக்கொள்ள முடியாத சோகம் படர்கிறது... நாவலை மெல்ல மெல்ல முடிக்க நகர்கையில்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நாடி நாளமெல்லாம் புல்லரிப்பு ஏற்பட்டு விடும். மொழிபெயர்ப்பின் சொற்களுக்குள் அகப்படாத சோகம் ஊடுருவும். அது உணர்வை நிச்சயம் கசக்கிப்போடும். ஆக்கிரமிப்புக்கும் ஆயுதத்துக்கும் அழிவுண்டாக்க சாபத்தை கொட்ட கக்க தூண்டும்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வார்த்தைகளுக்குள் அகப்படாத ஒரு வலி</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">உங்களையும் ஆட்கொள்ளும். பாலஸ்தீன விடுதலை குறித்த தெளிவை புரிதலை தரும். </div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மனிதாபிமான உணர்வை சர்வதேச எல்லை வரை பீறிட்டு பிரவாகித்து அநீதிக்கெதிராக குரல்கொடுத்து உண்மையை உரத்துச்சொல்ல தூண்டும். புலம்பெயர்தல் என்பதன் பின்னால் உள்ள சுமக்க முடியாத கனதியான சுமை குறித்து குறிப்பாலுணர்த்தும்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அத்தனைக்குள்ளும் நாவலுக்கு நயம்தருவதாக</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மொழியும் அரசியலும் மானுட உணர்வும் மனிதாபிமானமும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சர்வதேச நாடுகளுக்கிடையிலான</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கொள்கை கோட்பாடுகள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எல்லைத்தகராறுகள் என ஏராளமான</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பூடகங்களை</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கட்டுடைத்து</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கடந்து விடுகிறது</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்று</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அல்லாஹ் கேட்பது போல</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இறைவனது நில எல்லை விசாலமாக</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இல்லையா</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அதனை நோக்கி நீங்கள் நகரக்கூடாதா</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">என்பதற்கப்பாலும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நீங்கள் என் வாய்திறக்காத மௌனிகளாக</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">உள்ளீர்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஒரே ஒரு வார்த்தை பேசி இருந்தால்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வாழந்திருக்கலாமல்லவா.... என்று கூறுவதாக உள்ளது</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எட்வட் செய்த் சொல்வது போல</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">Speaking truth to the power</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அதிகாரத்தின் முன் உண்மையை உரத்து பேசுவதன்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆக குறைந்த தரமாக</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவசியத்தின் போது வாய்களையாவது</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கொஞ்சம் திறந்தால்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">உயிரையாவது</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">காத்துக்கொள்ளலாம்</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வாயைத்திறந்தால் வங்காளம் வரை போகலாம் என்பார்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அந்த மூவரும்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அந்த எல்லைக்கு அப்பால் கூட போயிருக்கலாம்.... வாயை திறந்திருந்தால்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆனால் நாமோ அந்த கவ்கப் மீது பழியை போட்டு அமைதிகாக்கிறோம்</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">தட்டி ஒலியெழுப்புங்கள்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்களது கல்புகள் இனியாவது திறந்துகொள்வதற்காக</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><br /></div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">(பிஸ்தாமி அகமட் எழுதிய முகநூல் கட்டுரை. நன்றியுடன் பகிரப்படுகிறது.)</div></div></div></div></div><br /><p><br /></p>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-62511789256899437392023-08-08T13:51:00.000+05:302023-08-08T13:51:07.611+05:30<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPAowNtEAaVePDPrFxlwhiLtc1hs1hXHYoPNx2N08BL-ZSg860ZRjSTZYD1-e4pAZdSonzabWf3SgNKsGxcjAdesI7EzmhqvOvYNJ4alCZfASUVJa-0BMKvJB8J-dePUPkhy6PDQQgGV_bkvyAz9LxKMU7Epc3fNRbmPlXmurcJATQQjalUpMeLRcY5ElP/s774/Jeeva.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="774" data-original-width="552" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPAowNtEAaVePDPrFxlwhiLtc1hs1hXHYoPNx2N08BL-ZSg860ZRjSTZYD1-e4pAZdSonzabWf3SgNKsGxcjAdesI7EzmhqvOvYNJ4alCZfASUVJa-0BMKvJB8J-dePUPkhy6PDQQgGV_bkvyAz9LxKMU7Epc3fNRbmPlXmurcJATQQjalUpMeLRcY5ElP/s320/Jeeva.jpg" width="228" /></a></div><br /><div style="text-align: center;"><b> அல் அஸூமத் - எழுதிய இஸ்லாமிய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் - எனது பார்வை </b></div><p></p><p style="text-align: center;"><b>- அஷ்ரஃப் சிஹாப்தீன் -</b></p><p> </p><p>அல் - அஸூமத் அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் என்பது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. முஸ்லிம் சேவைக்கான ஒரு கவியரங்க ஒலிப்பதிவு நிகழ்வு அது. அவரது தலைமையில்தான் அந்தக் கவியரங்கம் நடைபெற்று ஒலிபரப்பானது. கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். ஏனையவர்கள் இப்போது ஞாபகம் இல்லை. எனது கவிதையை நான் வாசித்து முடித்ததும் 'உங்களுக்கு மரபுக் கவிதை நன்றாக வருகிறது,' என்று பாராட்டினார். அவருக்கு அன்று என்னைப் பிடித்துப் போயிருக்க வேண்டும். </p><p>அல் அஸூமத் கொழும்பு - நீர்கொழும்புப் பிரதான பாதையொட்டி அமைந்திருக்கும் மஹபாகே என்ற இடத்தில் குடியிருந்தார். திருமணத்தின் பின் நான் வத்தளை - மாபோளைக்கு வந்து சேர்ந்தேன். எனது வீட்டுக்கும் அவரது வீட்டுக்குமிடையிலான தூரம் மூன்று கிலோ மீற்றர் எனலாம். இதனால் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் நான் அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன்.</p><p>அவரது மூத்த புதல்வரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான இப்னு அஸூமத் (பாரூக்) எனது வயதொத்தவர். வகவத்தில் அறிமுகமாகி எனது குறிப்பிடத்தக்க நண்பர்களில் ஒருவரானவர். இதற்கப்பால் அஸூமத் அவர்களின் மூத்த புதல்வியைத் திருமணம் செய்தவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள். அமீர் அலி எனது தாய் வழிப் பாட்டனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த வகையில் அல் - அஸூமத் அவர்கள் குடும்ப வழியிலும் ஒன்றித்தவர். இந்தக் காரணங்கள் பற்றியும் எமது உறவு நன்றாக நீடித்திருந்தது. இன்று வரை நீடித்து வருகிறது.</p><p>இஸ்லாமிய இலக்கிய மாநாடுகள் நடத்துவது, வெளி நாடுகளில் கலந்து கொள்வது என்று அல் - அஸூமத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, நான் ஆகியோர் ஒன்றாக இயங்கி வந்துள்ளோம். கடந்த 2016 ஆம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் மலர், அரங்கக் கட்டுரைத் தொகுதி இரண்டையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் செம்மைப் படுத்தித் தந்தவர். ஒவ்வொரு புத்தகமும் 600 பக்கங்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.</p><p>இவற்றுக்கெல்லாம் அப்பால் அல் அஸூமத் நல்ல நகைச் சுவை சொல்லக் கூடியவர். எழுதவும் கூடியவர். நாங்கள் குழுவாகச் சேர்ந்திருக்கும் போதுதான் அவரது நகைச்சுவைகள் வெளி வரும்.அவற்றில் பெரும்பாலானவை இலக்கியமும் இலக்கியவாதிகளும் சார்ந்தவையாக இருக்கும்.</p><p>யாத்ரா (21 அல்லது 22 இல்) அவர் எழுதிய ஒரு சிறுகதை உண்டு. இலங்கையின் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களையும் கிண்டலடித்திருப்பார். இக்கதையை அவர் எனக்குத் தந்த போது அவர் தலைப்பிட்டிருக்கவில்லை. அக்கதைக்கு 'அலையழிச்சாட்டியம்' என்ற தலைப்பை நான் இட்டேன். வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைத் தேடி வாசித்துப் பாருங்கள். சிரிப்பு நிச்சயம்!</p><p>2</p><p>'ஜீவநதி' அல் அஸூமத் அவர்கள் பற்றிய மலரொன்றை வெளியிடுவதற்காக அவரது இஸ்லாமிய இலக்கிய, இஸ்லாம் மார்க்கம் சார் எழுத்துகள் பற்றிய ஓர் முழு ஆக்கத்தைக் கோரி என்னிடம் வேண்டுகோள் வைத்தது. எனவே இந்த ஆக்கத்தில் அவை பற்றி மட்டும் பேச வேண்டியதே எனக்குரிய வேலை என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். </p><p>2000 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நபி மொழிகளை குறட்பாக்களாக எழுதிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் உண்டு. ஆனால் பின்னாளில் அதை மொத்தமாக இழந்து விட்டிருந்தார். அத்தோடு அது பற்றிய ஆழந்த கவலை அவருக்கு மட்டுமல்ல, எனக்கும் இருந்தது. இதற்கப்பால் நபிக் குறள்கள் எழுதினார். அதன் தட்டச்சுப் பிரதியை நான் பார்த்திருக்கிறேன். அது இன்னும் வெளிவரவில்லை. அதில் 1800 குறட் பாக்கள் அடங்கியிருக்கின்றன என்று அவர் எனக்குச் சொன்னது ஞாபகத்தில் உண்டு. </p><p>அல் அஸூமத் அவர்களின் முதல் மொழிபெயர்ப்பு நூல்களில் 'பிலால்' என்ற நூலைத்தான் முதலில் நான் வாசித்தேன். அது ஒரு பரவசம். அந்தப் பரவசத்துக்குக் காரணங்களில் ஒன்று அந்நூலின் எழுத்து நடை. இரண்டு அந்த நூல் யாரை வைத்து எழுதப்பட்டதோ அந்த நபர். வாசிக்கும் போது பல இடங்களில் என்னை அழவும் மெய் சிலிர்க்கவும் வைத்த நூல் அது. </p><p>பிலால் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள் அபிசீனிய பரம்பரையில் வந்த ஓர் அடிமை. நபிகளார் வழி காட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சொல்லொணாத் துன்பங்களுக்கும் ஆக்கினைகளுக்கும் ஆளானவர். கருப்புத் தோல் கொண்ட இந்த பிலால்தான் தொழுகைக்காக முதன் முதலில் அதான்' சொல்ல (தொழுகைக்கு அழைப்பு விடுக்க) நபிகளாரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டவர். நபிகளார் அவருக்கு வழங்கிய இந்த உயரிய மரியாதை, நபிகளாருடனேயே நிழல் போல் வாழ்ந்தது ஆகிய காரணங்களால் இன்று வரை உலகளாவிய முஸ்லிம்கள் அனைவராலும் கண்ணியத்துக்கும் மரியதைக்கும் உரியவராகக் கருதப்படுகிறார்.</p><p>இத்தகைய கண்ணியத்துக்குரிய பிலால் அவர்களைப் பற்றி அயர்லாந்து தேசத்தவரான எச்.ஏ.எல். க்ரேய்க் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இந்நூல். இதன் முதல் பதிப்பு ஆங்கிலத்தில் 1977 இல் வெளிவந்திருக்கிறது. கவிஞர், நாடகத் துறையாளர், சினிமா வசன கர்த்தா என்று பல்வேறு திறமைகளைக் கொண்ட க்ரெய்க், நபித் தோழரான பிலால் இப்னு ரவாஹா பற்றி இந்த நூலை எழுதியிருப்பதே ஓர் ஆச்சர்யம்தான். அதை அதே கவித்துவ நடையில் அல் அஸூமத் அவர்கள் கொண்டு வந்திருப்பதும் மற்றோர் ஆச்சர்யம். இந்த நூல் பிரபல ஆங்கில இஸ்லாமிய நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களது முயற்சியின் பலனாகத் தமிழுக்குக் கொண்டு வரப்பட்டது. தமிழில் இதன் இரண்டாவது பதிப்பு 1995ல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதற் பதிப்பு 1988 இல் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். இன்றளவில் இந்த நூல் ஐந்து பதிப்புகளைக் கண்டிருப்பதாக அறிய வருகிறேன்.</p><p>இந்த நூலை ஓர் இஸ்லாமிய இலக்கிய நூலாக நான் கருதிய காரணத்தால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் நான் நடத்தி வந்த 'இலக்கிய மஞ்சரி' நிகழ்ச்சியில் போர்கள் பற்றிய ஓரிரு அத்தியாயங்கள் தவிர, ஏனையவற்றை வாசித்து ஒலிபரப்பி வந்தேன். (ஒலிபரப்பான காலத்தில் போர்கள் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட்டிருந்தது,) இந்த அத்தியாயங்களை வாசிக்கக் கேட்ட பலர் இந்த நூலை எங்கே வாங்குவது என்று கேட்டு என்னிடம் விபரங் கோரியிருந்தார்கள். அதில் ஒருவர் தன்னை முச்சக்கர வண்டி ஓட்டுனர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தனது மனைவி இந்த நூலைப் பெற்றுத் தரக் கோரியதாக என்னிடம் சொல்லி வினவியது கொண்டு இந்த நூலின் அடைவு எழுத்தழகு மேலும் என்னைப் பிரமிக்கச் செய்தது.</p><p>இந்த நூலை க்ரெய்க் அவர்களின் மொழிக்கு அப்பால் அதாவது தனித் தமிழ்க் காப்பியமாக உருவாக்கவே முதலில் அல் அஸூமத் அவர்கள் ஆரம்பிதததாகவும் மொழி பெயர்க்கப் பொறுப்பளித்தவர் க்ரெய்க் அவர்களின் மொழிப் போக்கிலேயே அதை விரும்பியதனால் தமிழ்க் கவிதைப்படுத்தும் முயற்சியை ; நிறுத்த வேண்டி வந்ததாகவும் அல் அஸூமத் என்னிடம் சொல்லியிருக்கிறார்.</p><p>ஆயினும் பின்னர் 'பிலால்' தமிழ்க் காவிய நூலை எழுதி முடித்த அல் அஸூமத் அதனை 2020 ஆம் ஆண்டு 240 பக்க நூலாக வெளியிட்டார். க்ரெய்க் அவர்களின் நடைப்போக்குக்குக் குறையாமல் இந்தத் தமிழ்க் காப்பியம் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியின் தனி அழகோடு இந்த நூலை வாசித்து இரசிக்க முடியும்.</p><p>க்ரெய்க் அவர்களின் நூலின் மொழிபெயர்ப்பில் பிலால் அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் விதமான முதற் பந்தி இப்படி அமைந்திருக்கும்:-</p><p>'நான் ஓர் அடிமை. என் பெயர் பிலால். என் தாய், தந்தையரும் அடிமைகள். பிறப்பிலேயே அடிமையான நான் எனது எஜமான் உமையா என்னைக் கொன்று விட முடிவெடுத்த நாள் வரையும் அடிமையாகவே இருந்தேன்.'</p><p>பின்னால் வந்த பிலால் காவியத்தில் இந்த வரிகள் இப்படி இருக்கும்:-</p><p>அடிமையர் குழந்தை ஆய பிலால் யான்</p><p>அடிமைத் துவத்துள் அவதரித் தென்றன்</p><p>உடையான் வணிகள் உமையா எனைக்கொல</p><p>முடிவுகொள் நாள்வரை தொடர்ந்ததில் இருந்தேன்</p><p>3</p><p>மொழிபெயர்ப்புக்கு அப்பால் அல் அஸூமத் எழுதிய இஸ்லாமிய நூல்களில் உச்சமானதாக இருப்பது முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியதுதான். இந்த நூல் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் அல் அஸூமத்தை நோக்கிக் கண்களை அகல விரிக்கும் வகையில் அமைந்திருந்தது. </p><p>தமிழகத்தைச் சேர்ந்தவரும் சிங்கப்பூரில் வசித்து வருபவருமான அன்புச் சகோதரர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் ரஹ்மத் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவிப் பல்வேறு இஸ்லாமிய நூல்களை வெளியிட்டு வருகிறார். அவர் நல்ல வாசிப்பாளர் மட்டுமன்றி இலக்கிய இரசிகரும் கூட. சிங்கப்பூரிலும் 'சிரங்கூன் டைம்ஸ்' என்ற ஒரு சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.</p><p>இந்த அறக்கட்டளையானது முகம்மது நபியவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இலகுவில் படித்தறியும் வகையில் எழுதப்பட வேண்டும் என ஒரு சர்வதேசப் போட்டியை நடத்தியது. முதலாவதாகத் தெரிவு செய்யப்படும் பிரதிக்கு இந்திய நாணயத்தில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதை ரஹ்மத் அறக்கட்டளையே வெளியிடும் என்றும் அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p><p>பொருத்தமாக அந்த நூலை எழுதி வெற்றி பெற்றவர் அல் அஸூமத் அவர்கள்.</p><p>'நூலாசிரியர் பிறப்பால் ஓர் இந்து. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். தமிழாசிரியர், தந்தை ஒரு மலையாளி. முஸ்லிம் நண்பர்களுடன் பழகியபோது, இஸ்லாமிய பழக்கவழங்கள் சிலவற்றைத் தெரிந்திருக்கிறார். இஸ்லாத்தை முறையாகக் கற்கும் வாய்ப்பு மிகத் தாமதமாகவே கிடைத்திருக்கிறது. </p><p>நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்த போது உண்மையிலேயே பல இடங்களில் அழுதிருக்கிறார். திறந்த மனதோடு ஒன்றை வாசிக்கும்போது அதிலுள்ள யதார்த்தம் உலுக்கவே செய்யும். பின்னர் குர்ஆனைப் படித்தார். இஸ்லாத்தில் இணைந்தார்' என்று நூலை மேலாய்வு செய்தவர்கள் தமது உரையில் அல் அஸூமத் அவர்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.</p><p>சற்றேறக்குறைய 750 பக்கங்களிலான இந்த தூல் 2018ம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் கிடைப்பது போல் இலங்கையில் இந்நூலைப் பெற முடியவில்லை. இந்ந நூலுக்கான பரிசளிப்பு ஒரு விழாவாக நடத்தப்படும் என்று சொல்லப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. சில வேளை தமிழக எழுத்தாளர் எழுதிப் பரிசு பெற்றிருந்தால் அப்படி ஒரு விழா நடந்திருக்கலாமோ என்று நான் சில வேளை எண்ணுவதுண்டு.</p><p><br /></p><p>4</p><p>'இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களது காலத்தில் பெண் விடுதலை' என்ற தலைப்பிலான பிரமாண்ட அளவு கொண்டு ஒரு மொழிபெயர்ப்பு நூல் 2015 ஆம் ஆண்டு வெளியானது. பிரபல இஸ்லாமிய அறிஞரும் எழுத்தாளருமான அப்துல் ஹலீம் அபூ ஷக்கா அவர்கள் அறபியில் எழுதிய ஆறு பாகங்களைக் கொண்ட நூலின் அறபியில் அமைந்த சுருக்க வடிவமான இரண்டு பாகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இது. ஏ4 அளவிலான வடிவத்தில் ஏறக்குறைய 800 பக்கங்களில் அமைந்த இந்நூல் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவர் முஸ்லிம் புத்தி ஜீவிகள் மட்டத்தில் அறியப்பட்ட நல்லவாசகரும் மொழிபயர்ப்புக்கான சிறந்த நூல்களை அடையாளம் காணக் கூடியவரும் மொழிபெயர்ப்பாளருமான தர்ஹா நகரைச் சேர்ந்த அப்த் அல் ஜப்பார் முகம்மத் ஸனீர் அவர்கள்.</p><p>நான் மேலே குறிப்பிட்;ட அறபில் சுருக்கப்பட்ட இரண்டு பாகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் பிரபல மொழிபெயர்ப்பாளர் நான்ஸி ரொபர்ட் அவர்கள். தமிழில் ஒரே நூலாக இது அமைந்த போதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த நூலின் இரண்டாம் பகுதியை (ஏறக்குறைய நூலின் பாதி) மொழிபெயர்த்தவர் அல் அஸூமத் அவர்கள். முதற்பகுதியை அறபு வல்லுனரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி பி.எம்.எம். இர்பான் அவர்கள் அறபி மூலத்திலிருந்தே மொழிபெயர்த்திருந்தார். </p><p>இந்த நூல் நபிகளார் காலத்து இஸ்லாம் மார்க்கம் சார்ந்த பெண்கள் பற்றிய புனை கதைகளைக் கொண்டவை அல்ல. நபிகளார் வந்த பின்னர் பெண்கள் வாழ்ந்த துயர வாழ்விலிருந்து பெற்ற விடுதலையை அவர்களது சமூகப் பங்களிப்பை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. நபிகளாரின் சொல், செயல், நடைமுறை அனைத்தும் பற்றிய தகவல்கள் பற்றி அறிவித்தவர்கள் யார், அதைக் கேட்டவர், கண்டவர் யார் என்பதற்கெல்லாம் ஒரு தொடர் இருந்தால் மாத்திரமே அது சரியான அறிவிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். அறிவிக்கும் முதல் நபர் முதல், கேட்டவர், கண்டவர் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான தகவல்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.</p><p>இஸ்லாமோபோபியாவை முன் கொண்டு செல்பவர்கள் முதலில் இஸ்லாம் ஒரு பயங்கரவாத மதம் என்பதையும் அங்குப் பெண்கள் அடக்கியொடுக்கப்படுகிறார்கள் என்பதையுமே முற்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். எழுதப்பட்டவற்றையே திருப்பித் திருப்பி வேறு வார்த்தைகளில் எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு கருத்து உண்டு. அதே போல பதிலளிக்கப்பட்ட கேள்விகளையே இஸ்லாமோபோபியா மீண்டும் மீண்டும் தமது செல்வாக்கு, அதிகாரம், வருமானம் ஆகியவற்றை வைத்துத் தமது ஊடகங்கள் மூலம் கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலைத் திறந்த மனதுடன் படித்தால் அக்கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் கண்டடைய முடியும்.</p><p>இந்த நூலுக்கான அல் அஸூமத் அவர்களின் பங்களிப்புப் பற்றி இந்த நூலின் வெளியீட்டாளர் இப்படிச் சொல்கிறார்:-</p><p>'மொழிச் செம்மை குறித்து மிகவும் அவதானமாக இருப்பவர் கவிஞர். அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால் 'கண்னில் விளக்கெண்ணெய் இட்டு'க் கண்காணிப்பவர்.அவரது மொழிபெயர்ப்பில் அழகழகான, பொருத்தத்தில் மிகுந்த சொற்பிரயோகங்களைக் கண்டு களிக்கலாம்.'</p><p>5</p><p>எம்.ஏ.முஸ்தபா அவர்கள் நிறுவிய ரஹ்மத் அறக்கட்டளைக்காக அல் அஸூமத் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க மற்றொரு பணி 'இஸ்லாமிய வரலாறு' என்ற மூன்று பாகங்கள் கொண்ட பெருநூலை மொழிபெயர்ப்புச் செய்ததாகும். மூன்று பாகங்களாக 2017 இல் வெளிவந்த இந்த நூல்கள முறையே; 629, 815, 573 பக்கங்கள் கொண்டவை. </p><p>உண்மையில் இந்த வராற்றுத் தொடரை தமிழ்ப் பேசும் உலகம், தமிழ்ப் பேசும் முஸ்லிம் உலகம் அறிந்து கொள்வதெனில் ஒன்றில் அராபிய நூல்களை அல்லது ஆங்கில நூல்களையே படிக்கும் நிலை மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. இந்த மூன்று பாகங்களின் மூலம் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கிறது.</p><p>எல்லா மனிதர்களாலும் வரலாற்றைப் படிக்க முடியாது போனாலும் கற்றவர்கள், புத்தி ஜீவிகள் கற்பதன் மூலம் சக இன, மதக் குழுமங்களின் பின்னணியைத் தெரிந்து பேச முடியும். தற்காலத்தில் உள்ள படிப்பாளிகளில் பலர் இவற்றையெல்லாம் படிக்காமலேயே அரை குறை அறிவுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுகிறார்கள். சச்சரவுக்குப் பின்னால் இருக்கிறார்கள். தமது முழங்கை அளவு கொண்டு வரலாறுகளைத் திரித்து விடுகிறார்கள். அவை வெறுப்புணர்வை வளர்க்கின்றன. மனிதர்களைக் கூறு போடுகின்றன.</p><p>6</p><p>அல் அஸூமத் அவர்களின் மொழிபெயர்ப்பிலான இன்னும் அச்சில் வெளிவராத இரண்டு அற்புதமான நூல்கள் அவர் கைவசம் இருக்கின்றன. இரண்டுமே அச்சுக்குத் தயாரான தயாரிப்பில் சகலதும் பூர்த்தியான நிiயில் உள்ளன. அவற்றில் ஒன்று, கலாநிதி ஆய்த் அப்துல்லாஹ் அல் கர்ணி அறபியில் எழுதிய 'லா தஹ்ஸன்' - 'கவலைப்படாதீர்கள்' என்று நூல். இந்த நூல் 625 பக்கங்களைக் கொண்டது.</p><p>இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'டோன்ற் பீ ஸாட்' - இனை தர்ஹா நகரைச் சேர்ந்து அப்த் அல் ஜப்பார் முகம்மது ஸனீர் அவர்களே அல் அஸூமத் அவர்களுக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறார். இதன் ஆத்மீகப் பெறுமதி கருதி அதனை அல் அஸூமத் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார். </p><p>மானிடரின் கவலை, ஆற்றாமை, நம்பிக்கையீனம், பலவீனங்கள் அனைத்தையும் இந்த நூல் துடைத்து எறிந்து விடுகிறது. மனதை ஆற்றுப்படுத்துகிறது. அதற்கெனக் கொடுக்கப்படும் விளக்கங்கள் மிகத் தெளிவானவை, இலகுவானவை. சிறிய சிறிய அத்தியாயங்களாக அமைந்திருக்கும் இந்த நூலை வாசிப்பவர்கள் பொறுமை மிக்கவர்களாகவும் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவர்களாகவும் மாறி விடுவார்கள் என்பதை என்னால் அழுத்திச் சொல்ல முடியும். இதே முறையில் எழுதப்பட்ட டேல் கார்ணகியின் ஒரு நூல் உலகப் பிரசித்தி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.</p><p>'கவலைப்படாதீர்கள்' என்ற இந்த நூலின் ஆக்கத் திறன், முஸ்லிம்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. திறந்த மனதோடு இந்நூலை வாசிக்கும் முஸ்லிம் அல்லாதோரும் ஆசிரியரின் ஆலோசனைகளையும் சிந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த ஆலோசனைகள் அருளப்பட்ட ஒழுக்காறுகளின் உறுதி மீதும் உண்மையை ஊடுருவிச் செல்லும் கற்றறியப்பட்ட சிந்தனைகளின் மீதும் கட்டமைக்கப்பட்டவையாகும்' என்கிறார் இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பாசிரியரான முகம்மத் இப்ன் அப்துல் முஹ்ஸின் அல் துவைஜ்ரி அவர்கள்.</p><p>ஆனால் அந்த ஆனந்தத்தை அடைய இந்த நூல் வெளிவர வேண்டாமா? எழுத்தாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் ஒரு சாதாரண அளவிலான நூலை வெளிக்கொணரப் படும்பாடு அறியதவரா நாம்? யாராவது ஒரு செல்வந்தரின் கண்களில் பட்டு, அவரது ஆத்மா இதை வெளிக் கொணரத் துடிக்குமாயின் அதை விட மகிழ்ச்சியான செய்தியொன்று இருக்காது. அந்தப் பாக்கியத்தைப் பெறும் மனிதர் யாராக இருப்பார் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியும்?</p><p>மற்றைய நூல் 'பாலைவனப் போராட்டம்.' டென்மார்க் ஊடகவியலாளரான நுத் ஹோம்போவின் பயண அனுபவ நூல் இது. டென்மார்க்கிலுள்ள ஹோர்ஸன்ஸ் நகரில் 1902 ஆம் ஆண்டு பிறந்த ஹோம்போ 1930 இல் போல்கனை ஊடறுத்துப் பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயண நூலே 'பாலைவனப் போராட்டம்.'</p><p>ஹோம்போ தனது இருபதுகளில் இஸ்லாத்தை வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்டார். பலவீனமானவர்களதும் ஒடுக்கப்பட்டவர்களினதும் பக்கமாக அவரை எப்போதும் இழுத்துச் சென்ற நேர்மையுணர்வு அவரிடம் மிகுதியாக இருந்ததால் அவர் கொல்லப்பட்டார்' என்கிறது நூலின் அறிமுகக் குறிப்பு.</p><p>''பாலை நிலப் போராட்டம்' என்ற இந்த நூல் தனித்துவமான ஒரு துணிகரச் செயல். இந்த நூலைப் படிக்கும் போது எனது கண்களில் பலமுறை கண்ணீர் வடிந்தது. அரேபியப் புரட்சியைப் பற்றிய அவருடைய சொற்களை நீங்கள் வாசிக்கும் போது இந்த டென்மார்க் ஊடகவியலாளரின் தூய இயற்பண்பை இலகுவாக நுகர முடியும்'' என்கிறார் ஃபேடல் சுலைமான் - இவரே இந்த நூலை வெளியிட்டவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.</p><p>'அவர்கள் கிழிபட்டவர்களாகக் காணப்பட்டார்கள். ஆனால் உறங்கும் இப்போது கூட, அவர்களின் எல்லா முகங்களிலும் முன் பின் அறியப்படாத அமைதியான, தீர்க்கமாக அமைதிப் பார்வை இருந்தது. இமைகளின் ஓர் இமைப்புக் கூட இல்லாமல் இறப்பதற்கு இயலுமாயிருப்பது ஏன் என்று எனக்கு விளங்கத் தொடங்கியது. ஒரு நாள் அவர்களுடன் கழித்த போது நான் கவனித்திருந்ததன்படிஅவர்கள் தமது சமய மனச்சாட்சிக்கு அச்சங்கொண்டு பின்பற்றினார்கள் என்பதைக் கண்டேன். எக் கொடிய விதி அவர்களைத் தாக்கியிருந்தாலும் அந்நடப்புக்காக இறைவனைக் குறை கூற அவர்களுக்குத் தோன்றவே இ;ல்லை.' </p><p>மேலேயிருக்கும் பந்தி ஹோம்போவின் எழுத்து நடையின் அழகை எடுத்துக் காட்டுகிறது.</p><p>புத்தக வடிவில் 10 புள்ளி எழுத்துருவில் 360 பக்கங்களைக் கொண்ட நூல் இது. </p><p>7</p><p>என்னுடைய கருத்துப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களில் முதல் இ;;டத்தை அல் அஸூமத் அவர்களே வகிக்கிறார் என்பேன். தமிழ் இலக்கணம், கவிதை, நாவல், சிறுகதை, சஞ்சிகை, பெறுமதியான மொழிபெயர்ப்புகள் என திரும்பும் பக்கமெல்லாம் அவரே தெரிகிறார். இவ்வளவையும் செய்து விட்டு அல்லது செய்து கொண்டு மிக அமைதியாக இருக்கும் ஒரு நபரும் இவரே.</p><p>நூலாக வெளிவராத அவரது எழுத்துகளை நான் இனிமேல்தான் வாசிக்க வேண்டும். இதுவரை படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது 'பிலால்' தான். அதற்குக் காரணம், க்ரெய்க் அவர்களின் மொழி நடையும் அதை அப்படியே தமிழில் தந்த அல் அஸூமத் அவர்களும் முகம்மது நபியவர்களுடன் நிழல் போல் 22 வருடங்கள் வாழ்ந்தவரும், தொழுகைக்கான முதல் அழைப்பை விடுத்தவரும் உலக முஸ்லிம்களால் நெகிழ்ச்சியுடன் மதிக்கப்படுபவருமான ஸெய்யிதினா பிலால் (ரலி) அவர்களுமாவர்.</p><p>எல்லாருக்கும் ஆயிரமாயிரம் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கின்றன. எனக்கும் உள்ள சின்னச் சின்ன ஆசைகளில் முதன்மைக்குரிய ஒன்று இருக்கிறது. கவிஞர் அல் அஸூமத்துடன் டமஸ்கஸ் சென்று; பிலால் (ரலி) அவர்களின் அடக்கஸ்தலத்தில் நின்று, அவருக்கு ஸலாம் உரைத்து, 'ஸெய்யிதினா பிலால், இதோ உங்களைத் தொடர்ந்த இன்னொரு பிலாலுடன் உங்களைக் காண வந்திருக்கிறேன்' என்று உரக்கச் சொல்ல வேண்டும்!</p><p>(ஜீவநதி 202 வது இதழில் வெளிவந்த கட்டுரை)</p><p><br /></p><p><br /></p>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-4974165621129344792022-10-13T22:15:00.001+05:302022-10-13T22:15:13.779+05:30எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கள்தான் உறை!<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq9pXyzfyqD20_rIXVB53lFM0CIqajJCrBznPfOu-RPltS6SV6v7PkaBW-sdzwMskfBJESUFtGMYLXKtViCQPXrbfGfLsPFaWoGDWjA2GSDo8leCd4MmuvTirHCS7sOEja1_FrDcN_3xn2nt8HtHTdrDbRSil6Mt2EB2AwOsfuRag2tj7IXKGdhrnrVg/s287/Adonis.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="176" data-original-width="287" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq9pXyzfyqD20_rIXVB53lFM0CIqajJCrBznPfOu-RPltS6SV6v7PkaBW-sdzwMskfBJESUFtGMYLXKtViCQPXrbfGfLsPFaWoGDWjA2GSDo8leCd4MmuvTirHCS7sOEja1_FrDcN_3xn2nt8HtHTdrDbRSil6Mt2EB2AwOsfuRag2tj7IXKGdhrnrVg/s1600/Adonis.jpg" width="287" /></a></div><br /><p></p><p><span style="font-size: x-small;"><b><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span><span> </span>அடோனிஸ்</b></span></p><p><br /></p><p>1930ம் ஆண்டு சிரியாவில் ஓர் ஏழ்மை மிகுந்த விவசாயக் கிராமத்தில் நான் பிறந்தேன். எனது கிராமத்தில் பாடசாலைகள் இல்லை. தொலைபேசி வசதிகள் இல்லை. மின்சாரமும் கிடையாது. எதுவுமே கிடையாது. எனது பதின் மூன்று வயது வரை நான் ஒரு காரைக் கண்டதும் இல்லை.</p><p>எனது தந்தையார் பாரம்பரிய அறபுக் கலாசாரத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். நானும் அந்தப் பின்னணியோடுதான் வளர்க்கப்பட்டேன். அறபுக் கலாசாரத்தின் சாரமாக அமைந்தது கவிதைதான். எனவே, அனைத்துக் கவிஞர்களதும் கவிதைகளை வாசிக்க எனது தந்தையார் என்னைத் தூண்டினார். இஸ்லாத்துக்கு முந்திய காலப்பிரிவிலிருந்து இஸ்லாம் அறிமுகமான பின்னர் தோன்றிய அனைத்துக் கவிஞர்களும் அதற்குள் அடங்குவார்கள். மிகப்பிரபல்யம் வாய்ந்த அல் முதனப்பி, அபு தம்மாம், அல் மஆரி, ஏன் இம்ரஉல் கைஸ், அபூ நவாஸ் அடங்கலாக எல்லோருடைய கவிதைகளையும் நான் படித்தேன். இப்படியொரு சூழலில்தான் நான் வளர்ந்து வந்தேன்.</p><p>இப்படியிருக்கும் போது நானும் தன்னிச்சையாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். இது இயல்பாகவே நடந்தது. </p><p>1943ம் ஆண்டில் ஒரு நாள் சிரியா சுதந்திரம் அடைந்தது. அப்போது எனக்கு வயது பதின்மூன்று. ஷூக்ரி அல் குவாத்லி முதலாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தனது நாட்டைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் நோக்கில் சிரியாவின் எல்லா மாகாணங்களுக்கும் விஜயம் செய்ய விரும்பினார். இந்தத் தகவல் எங்கள் கிராமத்திலும் பேசப்பட்டது. எனக்கு எப்படி அந்த எண்ணம் தோன்றியது என்று ; தெரியாது, எமக்குக் கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடு முகமாகவும் அவரை வரவேற்கு முகமாகவும் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அந்தக் கவிதையில் ஜனாதிபதியிடம் ஒரு வேண்டுகோள் விடுப்பது போலவும் அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால் பாடசாலை வேண்டும் என்று சொல்ல வேண்டும் என்று அது அமையக் கூடிய வகையில் கற்பனை செய்தேன். அந்தக் கவிதையை அவ்வாறே எழுதி என் தந்தையிடம் வாசித்துக் காட்டிய போது மிக நன்றாக அது அமைந்திருக்கிறது என்று சொன்ன அவர், இதை எப்படி அவரை நெருங்கி நீ வாசித்துக் காட்டுவாய் என்று கேட்டார். ஏதோ ஒரு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று தந்தையாரிடன் சொன்னேன். 'உனக்கு எனது வாழ்த்துக்கள். உனது முயற்சி வெற்றி பெறட்டும்;'என்று அவர் என்னை வாழ்த்தினார்.</p><p>எமது கிராமத்துக்கு அருகேயுள்ள நகருக்கு ஜனாதிபதி வருகை தந்தார். (கதை நீண்டுவிடும் என்பதால் சுருங்கச் சொல்கிறேன்.) அன்று கிராமத்துப் பாரம்பரிய ஆடையையும் ஒரு நைந்து கிழிந்த பாதணியையும் நான் அணிந்திருந்திருந்தேன். உண்மையில் நான் வெறுங்காலுடன் நடக்கப் பழக்கப்பட்டவன்தான். ஓர் அதிசயமான சூழலில் அவருக்கு அந்தக் கவிதையை என்னால் வாசித்துக் காட்ட முடிந்தது. உண்மையில் அவருக்கு அந்தக் கவிதை மிகவும் பிடித்திருந்தது. எனது கவிதையிலிருந்து ஒரு வசனத்தை அவர் எடுத்துத் தனது உரையில் பயன்படுத்தினார். அந்த வரிகள் இப்போதும் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. 'எங்களுக்கு நீங்கள்தான் வாள் - உங்களுக்கு நாங்கதான் உறை'. இவைதாம் அவ்வரிகள்.</p><p>அவர் தன்னை வந்து சந்திக்குமாறு என்னிடம் சொன்னதற்கேற்ப, நான் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றேன். என்னை ஆரத் தழுவிக் கொண்டு 'உனக்கு என்ன வேண்டும் மகனே?' என்று கேட்டார். 'நான் பாடசாலைக்குப் போக வேண்டும்' என்று சொன்னேன். 'உனது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும், நீ பாடசாலைக்குச் செல்வாய்' என்று சொன்னார். இப்படித்தான் அதாவது கவிதையால்தான் பாடசாலைக்குச் சென்று கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கவிதைக்காகவே நான் பிறந்தேன் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. </p><p>அடோனிஸ் என்ற பெயர் எனக்கு எப்படி வந்தது என்று நான் சொல்ல வேண்டும். பாடசாலைக் கல்விக்குப் பின்னர் இரண்டாம் நிலைக் கல்விக்காக டார்ட்டுஸ் நகர பிரஞ்சுப் பாடசாலையில் சேர்ந்தேன். அங்கே ஒன்றரை வருடமளவில் கற்றேன். 1945ல் அப்பாடசாலை மூடப்பட்டு வி;ட்டது. அதற்குப் பின்னர் அரச பாடசாலைக்குச் சென்றேன். </p><p>அப்போதே கவிதைகள் எழுதிப் பத்திரிகை, சஞ்சிகைகளுக்கு அனுப்பினேன். கவிதையில் எனது உண்மைப் பெயரான் அலி அஹமத் செய்த் எஸ்;;:பர் என்று குறிப்பிட்டேன். ஆனால் அவை என்னுடைய கவிதைகளைப் பிரசுரிக்கவில்லை. ஆகவே அவற்றின் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. ஓரிரவு கோபத்துடன் இருந்த நான் அடோனிஸ் பற்றிய புராணக் கதையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கதையில் அடோனிஸூம் இஸ்தாரும் காதல் கொள்கிறார்கள். அடோனிஸ் வேட்டைக்குச் செல்லும் பழக்கமுள்ளவன். அடோனிஸ் என்ற பெயரில் லெபனானில் ஓர் ஆறு இருந்தது என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்த ஆற்றின் பெயரைப் பின்னர் இப்றாஹீமின் ஆறு என்று பெயர் மாற்றி விட்டார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியாது. அடோனிஸ் ஒரு நாள் காட்டுப் பன்றி வேட்டைக்குச் சென்றான். வேட்டையின் போது காட்டுப் பன்றிதான் அவனை வேட்டையாடியது. அவன் இறந்து போனான். அவனுடைய இரத்தத்திலிருந்து ஒரு பூ மலர்ந்தது. அதற்கு நட்சத்திரப் பூ என்று பெயர். இந்தப் புராணக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அன்றிலிருந்து எனது கவிதைகளை எழுதிய தாளில் எனது பெயரை அடோனிஸ் என்று குறிப்பிட்டேன். ஏனெனில் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அந்தக் காட்டுப் பன்றியைத்தான் விரும்பியிருந்தன. அதனால்தான் அவர்கள் என்னைக் கொல்ல முயன்றார்கள்.</p><p>என்னுடைய கவிதைகளை முன்னர் நிராகரித்த பத்திரிகையொன்றுக்கு அடோனிஸ் என்ற பெயரில் ஒரு கவிதையை அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்தார்கள். அத்துடன் அன்புள்ள அடோனிஸ் எமது காரியாலயத்துக்கு ஒரு முறை வாருங்கள் என்ற அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றேன். அப்போது எனக்கு பதினைந்து வயது கூட நிறைந்திருக்கவில்லை. என்னைக் கண்ட அவர்களுக்குத் திகைப்பு ஏற்பட்டது. உண்மையில் நீர்தான் அடோனிஸா என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே பிரதம ஆசிரியருக்கு அடோனிஸ் என்பவர் வந்திருக்கிறார் என்று தகவல் கொடுத்தார்கள். அவரும் கூட என்னைக் கண்டு திகைத்து நின்றார்;. பிறகு 'உண்மையில் நீர் அடோனிஸ் தானா என்று கேட்டார். நான் ஆம் என்றேன். இப்படித்தான் அடோனிஸ் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டேன். இப்போதெல்லாம் என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டியிருந்தால் எனது உண்மையான பெயரை அலி அஹமத் என்று எழுதுகிறேன்.</p><p>எனது சொந்தக் கலாசார, கவிதை சார் வரலாற்றைப் புதிய நோக்குடன் உருவாக்க முயற்சி செய்திருக்கிறேன். அது சொந்த வரலாறும் சொந்த நோக்கும் சொந்த உலகத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பிற்காலங்களில் எனது போக்கையும் நோக்கையும் முழு அரபுப் பாரம்பரியத்துக்குள்ளும் கொண்டு செல்லவும் முயற்சியெடுத்தேன். அறபு வரலாற்றை நகர்த்துவதற்கு கல்வித்துறை சார்ந்த சட்டகத்திலிருந்து அதாவது மார்க்கம், பாடசாலைகள், பழக்கவழக்கங்களிலிருந்து பிடுங்கி நவீன உலகின் முன்னால் மீள் வாசிப்புக்காக வைக்கும் முயற்சி அது. அதாவது அறபுக் கலாசாரத்தின் நிலையானதும் மாறுவதும் குறித்த மறுபரிசீலனை.</p><p>இந்த முயற்சி அறபுக் கலாசாரம் குறித்த புதிய புரிதல்களுக்கு அடித்தளமிட்டது என்பதை அனைவரும் அறிவார்கள்.</p><p>அறபுக் கவிதையின் போக்கிலும் ஒரு மாறுதலை நான் உண்டு பண்ணினேன். அறபுக் கவிதைகளிலிருந்து எவற்றை நான் தேர்ந்தெடுத்தேனோ அவை குறித்து நவீன வாசகருடன் நான் பேசினேன். அவற்றை ஒரு தொகுதியாக்கி அறிமுகத்தையும் எழுதினேன். அறபுக் கவிதை குறித்து ஒரு நூலையும் எழுதினேன். அழைப்பின் பேரில் பிரெஞ்சுக் கல்லூரியில் அது குறித்து விரிவுரைகளும் நடத்தினேன். பின்னர் அறபு மொழியின் உரை நடை குறித்து மீள்வாசிப்புச் செய்ய முடிவு செய்தேன். அது பற்றி ஒரு புத்தகத்தை எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டேன். நவீன வாசகருடனான உரையாடலுக்கான படைப்புகளையும் அதில் சேர்த்தேன். நான் வெறுமனே கவிதையோடு மட்டும் நின்று விடவில்லை. அறபுக் கலாசாரம், அறபுக் கவிதை, அறபு உரை நடை, அறபு இலக்கியம் என்று ஒரு புதிய வரலாற்றுப் போக்கைத் தொடக்கினேன். </p><p>உங்களுக்குத் தெரியும். ஒரு மரம்தான் ஒரு வனத்தை உருவாக்கும். நானும் ஒரு தனி மரம்தான். ஆனால் என்னைச் சுற்றி அறபுக் கவிஞர்களால், எழுத்தாளர்களால், புத்திஜீவிகளால் ஒரு வனத்தை நான் உருவாக்கினேன். என்னுடனான உறவு அறபுக் கவிஞர்களுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. நான் இயங்கிவாறு எல்லா அறபுக் கவிஞர்களும் இயங்குவார்கள் என்றும் பழையவற்றையே மீட்டுப் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுக்கான புதிய உலகங்களை ஏற்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் என் முயற்சியைத் தொடர்வதை என்னால் காண முடியவில்லை. எனவே அவர்களைப் பற்றிப் பேசுவதை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்து முயற்சிகளுக்கு என்னிடம் மிகுந்த மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவற்றை மதிப்பிடுவதை நான் விரும்பவில்லை. இதனால்தான் அவை நவீன அறபுக் கவிதைக்குள் வரும்போது - அதாவது கலீல் கிப்ரான் காலத்திலிருந்து இன்று வரை - அவற்றை வகைப்படுத்த நான் முனையவில்லை. </p><p>(அடோனிஸ் வழங்கிய பேட்டியிலிருந்து பெரும் பகுதி)</p><div><br /></div>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-49444327886395115032022-03-19T23:40:00.004+05:302022-03-19T23:40:48.980+05:30நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன் - நூலுக்கான அணிந்துரை<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjpya1IpwkWQKcIGhfX9xgkBdC8BBnEU9S2vbiL34-WH-XJhTTXq4haA0nnbPZEE6UlnOBo9sHpYq0BHMhvbJa68Np3N8XpKzA_362X3MS7cZWcrKEcsTxDgbdg5BV5ScypVsVL07I2ErJnzeSnWlLitxpc5l9jhtbQOHzk4oCvlAGsSnmX3bdLhZYhww=s700" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="700" data-original-width="500" height="320" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjpya1IpwkWQKcIGhfX9xgkBdC8BBnEU9S2vbiL34-WH-XJhTTXq4haA0nnbPZEE6UlnOBo9sHpYq0BHMhvbJa68Np3N8XpKzA_362X3MS7cZWcrKEcsTxDgbdg5BV5ScypVsVL07I2ErJnzeSnWlLitxpc5l9jhtbQOHzk4oCvlAGsSnmX3bdLhZYhww=s320" width="229" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: center;"><b>ஷெய்க்ஹா ஜெலீலா ஷபீக்</b></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: x-small;"><b>(முன்னாள் அதிபர் - கள்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி,</b></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: x-small;"><b>முன்னாள் அதிபர் ஆயிஷா சித்தீக்கா முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரி)</b></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: x-small;"><b><br /></b></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: x-small;"><b>அவர்கள் “நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்“ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.</b></span></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br /></div><p></p><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி...</div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>அகிலங்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட கண்மணி நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் நிறைவாய்ப் பொழிய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>மனித வாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் பொருத்தமான வாழ்க்கை நெறியே இஸ்லாம் மார்க்கம். இதனை நபி (ஸல்;) அவர்கள், 'நான் உங்களை ஒரு பிரகாசமான பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவுகூடப் பகல்போல் வெளிச்சமானது,' எனக் குறிப்பிட்டார்கள். இந்த வாழ்க்கை நெறிக்குச் சொந்தக்காரர்கள் தாம் முஸ்லிம்கள். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இவ்வுயர் மார்க்கத்தின் போதனைகளையும் வழிகாட்டல் களையும் முஸ்லிம்கள் தம் வாழ்வியலாக அமைத்துக் கொண்டி ருந்தால் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மாத்திரமன்றி முழு உலகும் அமைதியும் சமாதானமும் அரசோச்சும் இடமாக மாறியிருக்கும்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களின் நடை, உடை, பாவனைகள், பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமாக அமைந்து விட்டமையால் அவர் களுக்கு இழிவும் அழிவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோதனைகளும் வேதனைகளும் வாட்டிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் இந்நிலையிலிருந்து அனைவரையும் பாதுகாப்பானாக.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இன்று அல்குர்ஆனை ஓதப் பழகுவதிலும் அதனைத் தமாம் செய்வதிலும் முஸ்லிம்கள் காட்டும் அக்கறை அது கூறும் செய்திகளை விளங்குவதிலோ அவற்றைத் தம் வாழ்வியலாக மாற்றுவதன் மூலம் மற்றவர்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டு வருவதிலோ காட்டுவதில்லை. நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம், புனித மிஃறாஜ் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு முக்கியத் துவம் கொடுக்கின்ற பலரும் அவர்களின் வாழ்வொழுங்கையும் முன்மாதிரியையும் தம் வாழ்வியலாகக் கொள்ளாமலிருப்பது மிகவும் வேதனைக்குரியது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இந்நிலையைச் சீர் செய்து இஸ்லாமிய சிந்தனையை முன்வைத்துச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் முயற்சியில் நமது உலமாக்களின் வெள்ளி மேடைப் பிரசங்கங்களும் இஸ்லாமிய நூல்களும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களால் நிகழ்த்தப்படும் உரைகளும் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கின்றன.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இந்த வரிசையில் மேற்குலகில் வாழும் இஸ்லாமியச் செயற்பாட்டாளர்களான பெண் ஆளுமைகள் பதின்மரின் கருத்தாழம் கொண்ட ஆங்கில உரைகளின் தமிழாக்கமே 'நான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறேன்,' என்ற மகுடம் தாங்கி நமது கைகளில் தவழும் இந்நூல் ஆகும். வித்தியாசமான தலைப்புகளில் வாழ்வின் பல்வேறு அம்சங்களையும் மிக அழகாகவும் தெளிவாகவும் அதே வேளை, கேட்போரின் உள்ளங்களைத் தொட்டுச் செல்லும் கவர்ச்சித் தன்மையுடனும் அவற்றை அவர்கள் முன்வைக்கும் பாங்கு அருமையானது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>சிலபோது நாம் சிறிதும் கவனத்திற் கொள்ளாத நுணுக்கமான வாழ்வியல் அம்சங்களை இவ்வுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. உதாரணமாக, 'முஸ்லிம்களாகிய எமக்கு அல்லாஹ்வைப் பற்றிய புரிதலில் ஏற்பட்ட தவறுதான் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் போது, எம்மை விரக்திக்குக் கொண்டு செல்கிறது. அல்லாஹ் கருணையாளன். எல்லாக் கருணைகளுக்கு மான ஊற்றே அவன்தான். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>ஒரு குழந்தையிடம் தாயொருத்தி வைத்திருக்கும் பாசத்தை விடப் பன்மடங்கு நம்மில் பாசத்தைக் கொண்டிருப்பவன்தான் அல்லாஹ் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உண்மையை முதல் எண்ணக் கருவாக எமது சிறாருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்,' என்று குறிப்பிடும் சகோதரி யெஸ்மின் முஜாஹிதின் உரையைக் குறிப்பிடலாம். அவரது உரையின் தலைப்பே இந்நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>சகோதரி துன்யா ஷுஐப் அவர்களின், 'ஏன் எனக்கு இப்படி?' என்ற தலைப்பினைத் தாங்கிய உரை வாழ்வில் ஏற்படும் தொடர் நோதனைகள், துன்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்பவற்றால் கடுமையாக மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ள பல நூறு உள்ளங்களுக்குச் சிறந்த ஒத்தடமாக அமைந்துள்ளது. தற்போதைய சூழலில் நாம் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உரை அது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>'இஸ்லாம் சாந்தி மயமான மார்க்கம். அது வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டி என இஸ்லாத்தின் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதல்ல முஸ்லிம்களின் பொறுப்பு. அந்தத் தூய இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாக நமது வாழ்வில் செயல்படுத்திச் சொல்லாலும் செயலாலும் சான்று பகர்வோராய் இருக்க வேண்டும்' என்பதைச் சகோதரி லிண்டா சர்ஸூர் 'இஸ்லாமும் பெண்ணுரிமைகளும்' என்ற ததனது உரையில் அழகாக முன்வைத்துள்ளார்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இவ்வாறு இந்தப் பத்து உரைகளும் ஒன்றை ஒன்று விஞ்சிய தரத்தில் மிகப் பொருத்தமான தலைப்புகளில் நம் கவனயீர்ப்புக்குரிய காத்திரமான கருத்துக்களைக் கொண்டனவாயும் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவனவாயும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இந்த உரைகளை நிகழ்த்தியவர்கள் உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகங்களையும் அநியாயங்களையும் எட்ட நின்று பார்த்துக் கருத்துக் கூறியவர்கள் அல்லர். அவற்றைக் கண்டும் எதிர் கொண்டும் மனம் தளராது, முடங்கி விடாது பொறுமையுடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கும் மக்களோடு இரண்டறக் கலந்து களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளே அவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>அநீதிகளையும் அராஜகங்களையும் கண்டு அஞ்சித் துவண்டு போகாது, முடங்கி விடாது அவற்றைத் தட்டிக் கேட்டு, அவற்றுக்கெதிராகக் குரல் கொடுப்பதோடு, அவற்றைக் களையவும் முயற்சி செய்வது நமது கடமை என்ற செய்தியையும் இவ்வுரை களுக்கு ஊடாக அவர்கள் நமக்குத் தந்துள்ளனர்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இவ்வுரைகளைத் தேடிப் பெற்று, செவிமடுத்து, அவற்றின் கவர்ச்சியும் கருத்தாழமும் குன்றாமல் மொழி மாற்றம் செய்து தந்திருப்பவர், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் சிறந்த படைப்பாளர், பல்துறை ஆளுமை கொண்டவர், இலக்கியத்துக்கான இலங்கை அரசின் உயர் விருதான சாஹித்திய விருதுகளைப் பெற்றவர், நாடறிந்த எழுத்தாளர்; எனப் பல சிறப்புகளுக்குமுரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். நிச்சயமாக அவர் முஸ்லிம் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>நாட்டிலுள்ள பல பெண்கள் அறபுக் கல்லூரிகளில் மார்க்கம் கற்றுத் தேர்ந்த ஆலிமாக்கள் மட்டுமன்றி பொதுக் கல்வியிலும் உயர் நிலையடைந்த பல நூறு பேர் இருந்தும் அவர்களைச் சமூக வெளிகளில் காணக் கிடைப்பதில்லை என்ற சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் ஆதங்கம் நியாயமானதே. இஸ்லாமியத் துறையில் கற்றுத் தேர்ந்தவர்களின் பொறுப்பை உணர்த்திக் களத்தில் இறங்கிப் பணி செய்யத் தூண்டுவதும்கூட இவரது இப்படைப்பின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இம்மாபெரும் பணியை முன்னெடுக்க அருள் புரிந்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்! தமக்கு இறைவன் அளித்த ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றை அமானிதமாகக் கருதி, அவற்றைப் பயன்படுத்தி உறுதியான இறை விசுவாசத்துடன் இஸ்லாமிய சமூகத்துக்கு வழிகாட்;டுவதற்காக இவ்வுரைகளை நிகழ்த்திய அந்தச் சகோதரிகளையும் அவர்களைப் போல் களத்தில் பணியாற்றுகின்ற அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இவ்வுரைகளை அவற்றின் தரமும் கருத்தாழமும் மாறாமல் அழகு தமிழில் மொழிமாற்றம் செய்து எமக்களித்திருக்கும் மதிப்புக்குரிய சகோதரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் இப்பணியை அங்கீகரித்து நற்கூலி வழங்குவானாக!</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>'தூண்டல் இன்றித் துலங்கள் இல்லை' அல்லவா? இவ்வுரை கள் வாசிப்போரை இஸ்லாமிய அறிவைப் பெற்று, அதனைச் செயற் படுத்தி, பிறரையும் வழிப்படுத்தத் தூண்டும் தூண்டுகோலாக அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். </div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>இஸ்லாத்தின் உயர் போதனை களை வாழ்வியலாகக் கொள்ளும் போது உள்ளங்கள் அமைதி பெறும். உலகமும் அமைதிப் பூங்காவாக மாறும். நம்மனைவரதும் அவாவும் பிரார்த்தனையும் அதுவேயல்லவா?</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>அல்லாஹ் நம்மனைவரதும் முயற்சிகiயும் அங்கீகரித்து நேர் வழியில் வாழ வைத்து, அவனது அருளுக்குச் சொந்தக் காரர்களாக ஆக்குவானாக. ஆமீன்!</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both; text-align: left;"><span style="white-space: pre;"> </span>'இறைவா, உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக. (01 - 05 - 06)</div><div class="separator" style="clear: both; text-align: left;"><br /></div><div class="separator" style="clear: both;"><br /></div><div class="separator" style="clear: both;"><br /></div></div><p><br /> </p>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-34413646753426851972021-07-18T11:36:00.001+05:302021-07-18T11:38:07.185+05:30மெல்லிசைப் பாடல்கள் - கால் முறிந்த குதிரை!<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjujxeZDpJEsNhSG_OjHNgBeu6MDkmJXL53a0Vv4IzzaqLTLBm2cR-l6QomOzK5ILSH-PSLbsdut98YFN6090J52WgmJgEVac447nq4dmsfy6HybNad6GlvPBmm3sIR_itVlze99Plod9FI/s557/solai.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="388" data-original-width="557" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjujxeZDpJEsNhSG_OjHNgBeu6MDkmJXL53a0Vv4IzzaqLTLBm2cR-l6QomOzK5ILSH-PSLbsdut98YFN6090J52WgmJgEVac447nq4dmsfy6HybNad6GlvPBmm3sIR_itVlze99Plod9FI/s320/solai.jpg" width="320" /></a></div><p></p><p><br /></p><p>நம் நாட்டு மெல்லிசைப் பாடல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால் பக்கம் பக்கமாக எழுதலாம். </p><p>வேகமாக ஓடி வந்து கால்கள் முறிக்கப்பட்டுக் கிடக்கும் குதிரையைப் போன்ற நமது மெல்லிசைப் பாடல்களின் கதையில் எனக்குத் தெரிந்தவற்றை நினைவில் உள்ளவற்றை இங்கு சொல்கிறேன் . </p><p>நம்நாட்டு மெல்லிசைப் பாடல்களின் வரலாற்றை இலங்கை வானொலியில் இருந்து தொடங்குவோம். அது ஆரம்பத்தில் 'ஈழத்துப்பாடல்கள்' என்ற பெயரிலேயே ஒலிபரப்பாகியது. காலையில் செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'ஈழத்துப்பாடல்கள்' சொற்ப நேரம் ஒலிபரப்பாகும். பிறகு 'பொங்கும்பூம்புனல்' வந்துவிடும். அப்போது முக்கியமான பாடகர்களாக வி.முத்தழகு, எஸ்.கே. பரராஜசிங்கம் போன்றவர்கள் பங்களிப்புச் செய்தார்கள். பாடகிகளாக கலாவதி சின்னச்சாமி , சுஜாதாஅத்தநாயக, முல்லைச் கோதரிகள் போன்றோர் பாடினர். வி.முத்தழகும், கலாவதி சின்னச்சாமியும் - ரி. எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் போன்று பிரபலமான ஒருசோடி அப்போது.</p><p>'பாடுபடு நண்பா பரிசு தரும் பூமி', 'கங்கையாளேகங்கையாளே 'போன்ற பாடல்கள் அப்போது அடிக்கடி ஒலிக்கும். ஈழத்து ரெத்தினம் என்பவர் பெரும்பாலும் பாடல்களை எழுதியிருப்பார். ஆர். முத்துசாமி, றொக்சாமி போன்றவர்கள் இசையமைத்திருப்பார்கள்.</p><p>இப்படிப் போய்க்கொண்டிருந்த ஈழத்துப்பாடல்கள் சிறிது காலத்திற்குப் பிறகு 'மெல்லிசைப்பாடல்கள்' என்ற நாமத்துடன, கொஞ்சம் புதுமெருகுடன் புதுப்புதுக் குரல்களுடன் புதுப்புதுப்பாடல்களாக, புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டு ஒலிக்கத் தொடங்கின.. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மெல்லிசைப் பாடல்களுக்காக அதிக சிரத்தையெடுத்த காலம்அது.</p><p>நாடு பூராவும் கலைஞர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். பரந்த அளவில் பாடல்கள் பெறப்பட்டன. புதிய இசையமைப்பாளர்களைத் தேடியெடுத்தார்கள். மெல்லிசைப் பாடல்களுக்கென்று தனி வங்கி நிலையத்தில் இயங்கத் தொடங்கியது. நாட்டின் பலபாகங்களிலுமிருந்து கிடைக்கப் பெறும் பாடல்களில் சிறந்ததைத் தெரிவு செய்து அந்த வங்கியில் வைத்தார்கள். கழிக்கப்பட்டவற்றை திருப்பிஅனுப்பினார்கள். தெரிவுசெய்யப்பட்ட பாடல்கள் பாடி இசையமைக்கப்பட்டுப் பாட்டாகினால் ஒருபாடலுக்கு 15ரூபா சன்மானமும் அனுப்புவார்கள். நானும் 60ரூபா அளவில் சம்பாதித்திருக்கிறேன். அந்தப் பணத்தில் வாங்கிப்போட்ட வளவில்தான் நான் இப்போது குடியிருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது.</p><p>தேசிய சேவையில் 'மெல்லிசைப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சி ஒலிக்கும். அதில் புதிய பாடல்கள் அறிமுகமாகும். பிறகு பருவத்திற்குப் பருவம் ஒலிபரப்பான பாடல்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஒருகுழு அவற்றிலிருந்து அடிக்கடி ஒலிபரப்பவென சில பாடல்களைத் தெரிவு செய்யும். மெல்லிசைப் பாடல்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை நேயர்கள் விரும்பிக் கேட்கும் நிகழ்ச்சியொன்றும் அப்போது இருந்ததாக ஞாபகம். 'பொப்' இசையை விரும்பிக்கேட்கும் நிகழ்ச்சியொன்றும் வர்த்தக ஒலிபரப்பில் இருந்தது. </p><p>நமது பாடல்களின் மழைக்காலம் இதுதான்.</p><p>நீலாவணன் எழுதி சத்தியமூர்த்தி பாடும் 'ஓவண்டிக்காரா', எஸ்.கே. பரராஜசிங்கம் பாடும் பஸீல் காரியப்பரின் 'அழகான ஒரு சோடிக் கண்கள்' , செ. குணரெத்தினம் எழுதி கலாவதி சின்னச்சாமி பாடும் 'பாப்பா முகத்தில் பால் நிலவு பட்டுத் தெறிக்குது' ,அக்கரைப் பாக்கியன் எழுதி ரகுநாதன் பாடும் 'நதி கொண்ட காதல் கடல்மீது', மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' போன்ற பலபாடல்கள் ஜனரஞ்சகமாகி ஒலித்துக்கொண்டிருக்கும். பிறகு ரீ.கிருஷ்ணன், எம்.ஏ.எம். அன்சார், கே.எஸ். பாலச்சந்திரன், பாக்கியராஜா போன்றவர்களின் பாடல்களும் வந்துசேர்ந்தன.</p><p>சோலைக்கிளி எழுதி வயலட் மேரி பாடிய “கொச்சிப் பழமே“ சந்ரு பாடிய “மங்கையைத் தேடுது காற்று“ திலகா பாடிய “இருக்கிற தொல்லைக்குள் இன்னொரு தொல்லையா ஆகிய பாடல்களுக்கு இசை அமைத்தவர் சரஸடீன்.</p><p>இவர்களுடன் வனஜா ஸ்ரீனிவாசன், கோகிலாசுபத்திரா சகோதரிகள், யோசப்ராஜேந்திரன், புஷ்பாராசசூரியர், ஜெகதேவிவிக்னேஸ்வரன், 'தன்னந்தனிமூங்கில்' என்ற அருமையான பாடலைப்பாடிய சாரதாவாசுதேவன், 'அழகுநிலாவானத்திலே' என்று அமுதகானம் இசைத்த விவேகானந்தன், 'குயிலே' என்று தொடங்கிப் பாடிய மாணிக்கவேல், சந்திரிக்காடீஅல்விஸ், பார்வதிசிவபாதம், பௌசுல்அமீர், ஸ்ரான்லி சிவானந்தன் என்றெல்லாம் பெரியதொரு கானக் குயில்களின் பட்டாளமே உருவாகியிருந்தது. </p><p>நமது மெல்லிசை கொழுத்துப் போயிருந்தது</p><p>என்.சண்முகலிங்கன், கோப்பாய் சிவம், சில்லையூர் செல்வராசன், எருவில்மூர்த்தி, செ. குணரெத்தினம், ஆர்.எஸ்.ஏ.கனகரெத்தினம், கமலினிமுத்துலிங்கம், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், எச்.ஏ.அஸீஸ், சபா. சபேசன் , ஒலுவில் அமுதன், மூதூர் ஜெயராஜ், கார்மேகம்நந்தா, அசனார் ஸக்காப், கோவிலூர் செல்வராசன், நிந்ததாசன் என்று இன்னுமின்னும் எத்தனையோ பேர் பாடல்எழுதினார்கள். </p><p>எம்.எஸ். செல்வராஜா, திருமலை பத்மநாதன், கண்ணன் நேசம், மோகன்ராஜ் இன்னுமின்னும் பலர் இசை வழங்கினார்கள். </p><p>இப்படி வளர்ந்த மெல்லிசையே நீ எங்கே? </p><p>இப்போதும் வி.முத்தழகு தனது விடா முயற்சியினால் இந்தத் துறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கின்றார். புன்னகைசெய்வாயா, பாடப் பாட புதுராகம், ஆடும் பாடும் மயிலும் குயிலும் ஆனந்தமாய் வாழுது ஆகிய இவரது சில பாடல்கள் இன்றைக்கும் எங்காவது ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும் 'பிறை' பிராந்திய வானொலியில் சனி தோறும் ஒலிக்கும் 'சந்தனக்காற்று' சஞ்சிகை நிகழ்ச்சியில் அதை நடத்தும் அறிவிப்பாளர் ஜே. வகாப்தீன் அவர்களால் வி.முத்தழகு நேரடியாக குரல் தர அழைக்கப்பட்டு பல விடயங்கள் பேசப்பட்டு, அவரது சிலபாடல்களும் ஒலிபரப்பாகின. நமது மெல்லிசை நட்சத்திரம் இவர் என்றால் அது மிகையாகாது. நமது மெல்லிசைக்காகவே தன்னை அர்ப்பணித்தவர் வி.முத்தழகு. மற்றவர் எஸ்.கே.பரராஜசிங்கம். இவர்களது அரும் பணியாலும் நமது மெல்லிசை துளிர் விட்டதென்றால் பிழையில்லை. </p><p>தென்னை மரத்தின் பாளைக்குள்ளே ரெண்டு தேரை இருந்துமுழிக்குதுபார், மல்லிகை, அழகானஒருசோடிக்கண்கள், கங்கையாளே என்பன எஸ். கே. பரராஜசிங்கத்திற்கு நல்ல பெயர் கொடுத்த பாடல்கள். இவர் 'கங்கையாளே' என்றபெயரில் இறுவெட்டு ஒன்றையும் வெளியிட்டதாக ஞாபகம். வி. முத்தழகு தலைநகரில் அப்போது 'ஸப்தஸ்வரங்கள்' என்ற தனி நபர் கச்சேரி செய்திருப்பதாகவும் அறிகிறேன்.</p><p>அந்தக்காலமே நீ ஏன் திடீரெனக் காலக் கடலில் பாய்ந்து உன் உயிரை மாய்க்க நினைத்தாய்?</p><p>இந்த மெல்லிசைகளிலெல்லாம் காதல்பாடல்கள், தத்துவப்பாடல்கள், அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் பாடல்கள், தேசாபிமானப் பாடல்கள், பிள்ளைகளுக்கான பாடல்கள் என்று சினிமாப் பாடல்களைப்போல பலவகையான பாடல்களும் இருக்கின்றன. </p><p>செ. குணரெத்தினத்தின் 'உனக்காக நான் பாடும் ஓராயிரம் பாடல் உன்காதில் கேட்கல்லியோ 'காதல் உணர்வை வெளிப்படுத்தும் அருமையான பாடல்.மு. சடாட்சரனின் 'நித்திரையில் தோன்றும் நித்திலமே வாராய்' இதுவும் நல்ல காதல் மெல்லிசையே! 'அழகானஒருசோடிக்கண்கள்'என்பதும் அப்படியே . என். கே. ரகுநாதன் பாடும் 'பூச்சூடும் காலம் வந்தாச்சு' அண்ணன் தங்கைப் பாசம். எம்.ஏ.எம். அன்சாரின்'பூரணை நிலவில் 'இன்னுமொரு பெண் உணர்வுப் பாடல் . 'பெத்த மனம் பித்து என்பார்' தத்துவம். திருமதி. அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடும் 'மாமயில் ஆடக் கண்டேன் கதிர்காமத்தில்' அழகான பக்திப்பாடல். சி. மௌனகுரு எழுதி திலகநாயகம்போல் பாடிய 'சின்னச்சின்னக் குருவிகள் எங்கள் சிறுவர் சிறுமிக் குருவிகள்' பாடல் பிள்ளைகளுக்கானது. 'பச்ச வயல் காட்டிலே கொச்சி மஞ்சள் பூசியொரு' என்ற பாடல் வி .முத்தழகு பாடுவது கிராமியம். </p><p>நமது மெல்லிசைப் பாடலே உனக்கு என்ன நடந்தது? </p><p>லதா கண்ணன் போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். கமலினி முத்துலிங்கம் எழுதி, இவர் பாடிய 'ஒரு பூங்காற்று' என்பது ஓர் இனிய கானம். </p><p>அனிச்ச மலர் நோகும் அழகிய பாதம்.... ஆஹா... இப்படி எத்தனை!</p><p>எங்கள் மெல்லிசையே உனது வளர்ச்சிக்கு யார் தடை போட்டது? </p><p>வானொலியைத் தவிர்த்து வெளியிலும் நமது பாடல்கள் வளர்ந்த ஒருகாலமும் நம்மிடம்இருக்கிறது. திருமலையில் இருந்து பரமேஸ்-கோணேஸ் என்பவர்களின் 'உனக்குத் தெரியுமா நான் உன்னையழைப்பது', 'போகாதே தூரப்போகாதே' , 'நீ வாழுமிடம் எங்கே' என்ற பாடல்களெல்லாம் வந்து கலக்கின. இவற்றையெல்லாம் மிஞ்சி கல்முனை மண்ணில் மிகப்பெரும் சாதனையொன்றும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.</p><p> ஓர் இசை நிகழ்ச்சியை சினிமாப் பாடல்களைக் கொண்டு நடத்தித்தான் வெற்றி பெற முடியுமென்ற ஒரு பொய்மையான கற்பிதத்தை உடைத்து, இல்லை, கொடுப்பதை கொடுப்பது மாதிரிக் கொடுத்தால், ரசிப்பவன் ரசிப்பான் என்று காட்டினான் கல்முனை கதிரவன், மட:டுநகர் ஆதவன் இசைக் குழுவைச் சேர்ந்த திரு. ஞானப்பிரகாசம் என்பவன். 'பள்ளி மாணவி புள்ளி மானைப் போல்' , 'தேர்த் திருவிழா பார்க்க வாறியா', 'மினியடிக்கும் மீனா', 'சோலையிலே ஒரு பொன் 'ஆலம் படைத்தவனே ஆதி றகுமானே', 'மாநகராம் மட்டு மாநகராம்' போன்ற எத்தனையோ சுயமான பாடல்களால் வெற்றிகரமாக கச்சேரி செய்து காட்டினான் அவன் .</p><p> ஒன்றிரண்டு சினிமாப் பாடல்களை நடுவே பாடினால் ரசிகர்கள் வேண்டாம் வேண்டாம்எனக் கூக்குரலிடுவார்கள்.. கற்கள் எறிந்து பேசுவார்கள். 'கந்தசாமி ராமசாமி ஹிப்பிப் பாணிடா ரெண்டு பேரும் சேந்துக்கிட்டா சாம்பிராணிடா' என்பது இவர்களின் பொப் பாடல்.</p><p>இந்தக் காலத்தில்தான் நமது 'பொப்' பாடல் இசையும் சிறப்பாக வளர்ந்தது. அந்தக் காலம் 1970கள். நாடு முழுக்க 'பொப்' இசை நிகழ்ச்சிகளும் நடந்த வண்ணமிருக்கும் .பத்திரிகைகளில் இவை பற்றிய விளம்பரங்களாகவே இருக்கும். எங்கள் பூமியான கல்முனையிலும் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது 'பொப்' இசை பூப்பூத்த காலம். </p><p>ஏ.ஈ.மனோகரன், நித்தி கனகரெத்தினம், எஸ். ராமச்சந்திரன், அமுதன்அண்ணமலை, ஸ்ரான்லி சிவானந்தன். சண், றொபேர்ட் ராகல், சுரேஸ் ராஜசிங்கம் போன்றவர்களெல்லாம் பெயர் பெற்றிருந்தார்கள். ஏ.ஈ.மனோகரனின் 'இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு', 'வாம்மா கண்ணே டிஸ்கோஆடலாம்' 'வடை வடையாய் விற்று வந்தாள்' வாயாடிக் கிழவி' நித்தி கனகரெத்தினத்தின் 'சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே' ,எஸ். ராமச்சந்திரனின் 'நத்தையென ஊர்ந்து', அமுதன் அண்ணாமலையின் 'ஓ...ஷீலா', 'முருகையா முருகையா முருகனைப் பார்க்கப் போறேனையா 'போன்ற பாடல் களெல்லாம் அப்போது மிக மிகப் பிரபலம். அமுதன் அண்ணாமலை பாடிய' ..ஷீலா' பாடலுக்கு இசையமைத்தவர் மிக அண்மையில் நம்மை விட்டுப்பிரிந்த கே. எம். சவாஹிர்அவர்கள். அவரை இவ்விடத்தில் நினைத்துக் கொள்வது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை .ஏ. ஈ. மனோகரன் நித்தி கனகரெத்தினமெல்லாம் 'பொப்' இசை நட்சத்திரங்களானார்கள். இப்படி; மெல்லிசையும் பொப்பிசையும் ததும்பி வழிந்த காலம் புரண்டு கவிழந்து எப்படி?</p><p>சிலர் 1983ல் இடம் பெற்ற அசம்பாவிதத்தை சொல்கிறார்கள். அப்படியென்றாலும் ஏனையவைகளில் நாம் மீண்டெழுந்ததைப் போன்று நமது மெல்லிசையிலும் மீண்டெழலாம் அல்லவா? ஏன் இந்தச் சோர்வு? தோல் இழுபடும் தொய்வு? கால் முறிந்த குதிரைக்கு இனியாவது மருந்து கட்டி நடக்கவாவது வைக்க முடியாதா?</p><p>(27.03.2021)</p><p><br /></p><p>நன்றி - வியூகம் 6</p><p><br /></p><p><br /></p>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-29011982014598958492020-04-27T20:24:00.001+05:302020-04-27T20:27:03.719+05:30என்னைத் தீயில் எறிந்தவள் - ஒரு பன்முகப் பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkiJav4fLPT4H9C_QhyphenhyphendJtLXqcz2d2cP1UgbcoVETzKZrkG93AYtxu5OVS6Q0jW1iBW4u9wtP-_to5vZbVFJg7IBsY_0IY5H5ZAUkNarM9DFRcWVjz9BxICHtAu9w2qPNXKM_bHNL9sf7R/s1600/ENNAI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="700" data-original-width="500" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkiJav4fLPT4H9C_QhyphenhyphendJtLXqcz2d2cP1UgbcoVETzKZrkG93AYtxu5OVS6Q0jW1iBW4u9wtP-_to5vZbVFJg7IBsY_0IY5H5ZAUkNarM9DFRcWVjz9BxICHtAu9w2qPNXKM_bHNL9sf7R/s320/ENNAI.jpg" width="228" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="font-size: x-small;">பேராசிரியர் - <span style="font-size: small;">முனைவர் சேமுமு. முகமதலி</span> - சென்னை</span></b><br />
<b><span style="font-size: x-small;">பொதுச் செயலாளர் - தமிழ்நாடு தொண்டு இயக்கம்</span></b><br />
<b><span style="font-size: x-small;">ஆசிரியர் - இனிய திசைகள்</span></b></div>
<br />
படிப்பறிவு ஒன்றினால் மட்டுமே கவிஞன் உருவாகி விடுவதில்லை. பட்டறிவு நிறைய வேண்டும். வெறும் பட்டறிவே கவிஞனை உருவாக்கி விடுவதில்லை. மனிதர்களை ஊடுருவி, உற்று நோக்கிப் படிக்கும் கண்களும் சமுதாயப் பிரச்சனைகளை அலசி ஆய்ந்து தெளிந்து உருகும் சுனையாக உள்ளமும் சமூக அவலங்களில் ஆழ்ந்து அனுபவித்துப் பொங்கும் அருவியாக உணர்வும் இவற்றையெல்லாம் வார்த்தைகளில் வார்த்தெடுக்கும் வல்லமையும் மிகுந்தவனிடமே கவித்துவம் குடி கொண்டிருக்கிறது.<br />
<br />
நீறு பூத்த நெருப்பாக அவனுள் உறங்கும் கவித்துவத்தை ஏதாகிவும் ஒரு நிகழ்வு நெம்பு கோலால் நெம்பி விட்டால் நீறு அகல, நெருப்பு ஜூவாலை பரவ ஆரம்பித்து விடுகிறது. மள மளவெனக் கவிதை பரவக் கவிஞன் காலத்தை வென்று விடத் தொடங்குகிறான். இத்தகையதொரு கவிஞராகவே அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
1999ம் ஆண்டு அவரது 'காணாமல் போனவர்கள்' முதற் கவிதைத் தொகுதி வெளிவந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2008ம் ஆண்டில் 'என்னைத் தீயில் எறிந்தவள்' இரண்டாம் கவிதைத் தொகுதி வெளிவந்தது. 'வெகு நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்கும் போது கண்ணீரோடும் அமைதியுடனும் சந்திப்பேன்' என்றான் கவிஞன் பைரன். 'என்னைத் தீயில் எறிந்தவ'ளைப் படிக்கும் போது மட்டுமல்ல, படித்து முடித்துவிட்ட பின்பும் அமைதியும் கண்ணீர் முத்துக்களுமே ஆக்கிரமித்துக் கொள்கிற வெற்றியை அஷ்ரஃப் சிஹாப்தீன் பெற்றுக் கொண்டுள்ளார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiSRA-1F-7MMtWiDI6nCDbWv_adx7F8Slnf4HKMawv3XP_O41FV_MnwTxhCAAd5vFnkOyqpw58Z_aJbiokS-kgyIYu2L3HGfeo-nvPitGt6D_2xuvYquNxPmtVz3eJ_s3Wx81jjzyRSiY-/s1600/Semumu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="481" data-original-width="481" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgiSRA-1F-7MMtWiDI6nCDbWv_adx7F8Slnf4HKMawv3XP_O41FV_MnwTxhCAAd5vFnkOyqpw58Z_aJbiokS-kgyIYu2L3HGfeo-nvPitGt6D_2xuvYquNxPmtVz3eJ_s3Wx81jjzyRSiY-/s320/Semumu.jpg" width="320" /></a></div>
<br />
'காணாமல் போனவர்கள்' முதல் கவிதைத் தொகுப்பைத் தன்னை முந்தியிருக்கச் செய்த தந்தைக்கும் தாய்க்கும் சமர்ப்பித்த கவிஞர் தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'என்னைத் தீயில் எறிந்தவளை'த் தன்னில் பாதியாக இருக்கும் தனது மனைவிக்கும் மீதியாக இருக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் சமர்ப்பித்துள்ளதன் மூலம் பிறந்த, புகுந்த சொந்த பந்த உறவுகளைப் பாராட்டத் தெரிந்தவன்தான் முழுமையான மனிதனாக முடியும் என்கிற மகா வித்தை தானாகவே கைவரப் பெற்றிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. முழுமையான மனிதனாக உருப்பெற முயற்சிக்கிறவனேயல்லாமல் மற்றவனெல்லாம் மாபெரும் கவிஞனாக உருவாகி விடுதல் சாத்தியமில்லாதது. இந்த மந்திரத்தை உணர்ந்திருக்கிற அஷ்ரஃப் பாராட்டுக்குரியவராவார்.<br />
<br />
இலக்கு உடையதே இலக்கியம். வாழ்க்கைக் கண்ணாடியான இலக்கியத்தில் பாவிகம் இல்லாமல் காவியம் இல்லை. படைப்பின் நோக்கத்தையும் படைத்துள்ளவை வெளிப்படுத்த விரும்புகிற நோக்கத்தையும் கோடிட்டுக் காட்டாத படைப்பு எதற்காக என்று கூறப்பெறாத விருந்தை அல்லது மருந்தைப் போன்றதாகி விடும். சிலரிடம் கனவுகள் இருக்கும். சிலரிடம் சிக்கல்கள் இருக்கும். சிலரிடம் நகைச்சுவை இருக்கும். அஷ்ரபிடம் சில கவிதைகள் இருக்கின்றன. ஆனால் நம் அனைவரிடமும் சில வருத்தங்கள் இருக்கும் - தீரும்வரை கண்ணீர் விடுவதற்கு! அந்த வருத்தங்களைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' அகிலத்துக்கு எடுத்துச் சொல்கிறது. இந்த வருத்தங்கள் எதுவரை என்பதையும் நூலுள் காட்டியதன் மூலம் அழுது புலம்ப அல்லது எழுந்து விடியல் காணவும் அவரது கவிதை கலங்கரை விளக்கமென வெளிச்சம் செலுத்துகிறது.<br />
<br />
'என் வருத்தங்கள் வருத்தங்கள் இல்லையென்றும் எனது கவலைகள் கவலைகள் இல்லையென்றும்; சாதிக்க வேண்டுமெனச் சிரித்துக் கொண்டே துப்பாக்கி காட்டுகிறார்கள். எனது அடையாளங்களை அழித்தபடி, எனது பாடல்களை எரித்தபடி, இயல்பாய் இருந்து விட்டுப் போ என்கிறார்கள்! ஆகட்டும் நண்பர்களே, உங்கள் செங்கோல் ஓங்கட்டும் - என் அச்சம் தொலைகிற நாள் வரைக்கும்!' என அச்சம் தவிர்க்க நெருப்பூட்டுகிறார். கவிதை என்பது உணர்வின் பிரதிபலிப்பாக இருந்தாலும் அறிவின் வழிகாட்டுதலாகவும் அமைய வேண்டுமென்பதைக் கவிஞர் உள்வாங்கியிருப்பது உணர்ந்து குறிப்பிடத்தக்கதாகும். 'பழமாயிருந்தால் பறவைகள் கூடமைத்து இளைப்பாறுவோர் மீது எச்சமிடும். பலகைக்காய் வாள் கொண்டறுப்பர். பெரும் வெள்ளமோ, காற்றோ புரட்டி இழுத்துத் தள்ளிவிடும். நாம் புல்லாகவே இருந்து விட்டுப் போவோம் - மிதிபட மிதிபட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்ற அவரது 'நிமிர்தல்' ஒரு நெம்புகோல் கவிதை என்றே கூறலாம்.<br />
<br />
படைத்துக் காட்ட வேண்டிய உணர்ச்சியைத் தானே அனுபவிக்கும் திறனுடைய கவிஞனே சிறந்த படைப்பை அளிக்க முடியும். படைத்தவன் அனுபவித்துத் தந்த அந்த உணர்ச்சியைப் படிப்பவனும் பெற்றானாகில் அதுதான் நிலைபெற்ற படைப்பாகவும் கவிஞன் அடைய நினைக்கும் நோக்கத்தை நோக்கிப் படிக்கிறவனையும் உந்திச் செலுத்துகிற தேர்ந்த படைப்பாகவும் அமைய முடியும். 'குண்டு வெடிப்பில் குதறப்பட்டவர், குண்டு துளைத்துக் குருதியில் கிடந்தவர், கண்ணி வெடியில் கொல்லப்பட்டவர், கடத்தப்பட்டுக் காணாமல் போனவர், கிராஸ் ஃபயரில் அகப்பட்டு அகாலமானவர், எரிந்தவிந்த டயருக்குள் எலும்பாய்க் கிடந்தவர், பாதி கருகியும் பாதி கருகாமலும் பாதையில் கிடந்தவர் - இவரெல்லாம் யாரோ ஒருவர்தான். யாரோ ஒருவர் தெருவில் சிதிலமாகச் சிதறிக் கிடக்கிறார் என யாரோ ஒருவர் உன்னைச் சொல்வதற்குள் சுதாகரித்துக் கொள்!' இந்த யாரோ ஒருவர் கவிதை சொல்ல வேண்டி ஒன்றை உணர்;த்தி விட்டுப் போவது கவிஞனின் படைப்புணர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.<br />
<br />
சமூகப் பிரக்ஞை இல்லாமல் கவிதை எழுதுவதும் உயிரற்ற சடலத்தைக் கட்டி மகிழ முனைவதும் ஒன்றாகும். அத்தகைய பிரக்ஞை கண்ணாடிச் சாரளத்துக்குள்ளே இருந்து கொண்டு வீதியில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதாக இருப்பதில் மட்டும் சிறப்பில்லை. வீதிக்கு வந்து நிகழ்வுகளின் உணர்வுகளில் வீழ்ந்து உழன்று நெஞ்சுக்குள் நஞ்சை வைத்து உதட்டுக்குத் தேனைத் தடவி உதிர்க்கின்ற நயவஞ்சக வார்த்தைகளின்றி, உள்ளத்தின் பள்ளத்தில் ஊற்றெடுக்கின்ற உணர்வுகளைப் பக்குவமாகப் படம் பிடிக்க உணர்த்துகிற நல்ல புகைப்படமாகக் கவிதை அமைவதில்தான் உண்மையான கவிஞன் ஆத்மார்த்த ரீதியாகப் படிப்பவனின் உள்ளத்தைத் தொட முடியும். உறவையும் நட்பையும் இனப் போராட்டத்தில் இழந்து போனவர் அஷ்ரப் சிஹாப்தீன். தன்னளவில் பாதிக்கப்பட்ட ஒரு மனிதர், அதிலும் தேர்ந்த ஒரு கவிஞர் வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளுக்குச் சக்தி அதிகமேயாகும். அந்தச் சக்தியைத்தான் 'என்னைத் தீயில் எறிந்தவள்' கவிதை ஒரு சான்றாக உணர்த்தி நிற்கிறது.<br />
<br />
உள்ள நிலைமையை உணராமல் வெறுமனே வீராவேச வார்த்தைகளைக் கொட்டுவதில் அஷ்ரஃபுக்கு உடன்பாடு இல்லை. உள்ள நிலைமையை யதார்த்தம் தவறாமல் எடுத்துரைக்க முனைகையில் இரங்கலும் இரங்கல் நிமித்தமுமே அவரது கவிதைகளில் எதிரொலிப்பதையும் நாம் காண முடிகிறது. 'சந்திக்கு வருவாயா சாயங்காலம்.. மீண்டும் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கலாம்!', 'செய்தித்தாள் பக்கமொன்றின் கீழ் மூலையில் அனாதரவாய்க் கிடக்கும் கவிதையொன்றைப் போல சுவாரசியமற்றுப் போய்க் கிடக்கிறது வாழ்க்கை!' 'வேறு வழியில்லாமல் கைகளைக் குலுக்கிக் கொண்டோம். வெறுங் கைகளை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் செய்ய முடிந்ததெல்லாம் அது ஒன்றுதான்... அல்லாஹ்வுக்காக என்னை மன்னிக்க வேண்டும் நீ!, 'இந்த மான்கள்தாம் பாவம்! அவை கூடிக் கூடிக் குசுகுசுப்பதெல்லாம் கானலைப் பற்றித்தான்!' - போன்றவை கையறு பாடல்களாகப் படிப்பவரது நெஞ்சைக் கவ்வுகின்றன.<br />
<br />
'என்னைத் தீயில் எறிந்தவளில் பெரும்பான்மையான கவிதைகள், ஒரேயுணர்வைப் பீறிட்டுக் காட்டுவதாய்ப் பொதுவாக உணரலாம். ஒரேயுணர்வு திரும்பத் திரும்ப வௌ;வேறு வடிவங்களில் பாடு உணர்வாய் அமைவதற்குக் காரணம், அஷ்ரஃபின் நெஞ்சில் ஆழப் பதிந்த துயரத்தின் நோக்கமாகும். வாழ்வின் ஜீவ மரணப் போராட்டத்தில் சுரண்டல், சாதி வேற்றுமை, லஞ்சம், மோசடி, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, கலப்படம் முதலிய சமூகக் கொடுமைகளையெல்லாம் விஞ்சுகின்ற இனப் படுகொலையைக் கண்டு அனுபவித்த நிலை அவருக்குரியது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான அவரது உள்ள வெளிப்பாடு பல்வேறு வடிவங்களில் வெளியாவது இயற்கையே ஆகும்.<br />
<br />
ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலானவற்றை வளர்த்துப் பண்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பும் கவிஞனைச் சார்ந்ததாகும். சமுதாயத்தால் கவிஞனும் கவிஞனால் சமுதாயமும் பாதிப்புக்குள்ளாகவே வேண்டும். அப்போதுதான் சமுதாய சீர்திருத்தத்துக்குரிய கவிதைகளைத் தனது நன்கொடையாகக் கவிஞனால் தர முடியும். அத்தகு நன்கொடைகளை அஷ்ரஃப் இந்நூலில் வழங்கியிருக்கிறார்.<br />
<br />
'பக்தியூட்டுவோர் பிள்ளை ஐராப்பாவில் படிக்க, உனது பிள்ளை கோவணத்துடன் திரிவது புரியாமல்!' என்று 'நீயும் உனது தேச பக்தியும் அறிவுறுத்துகிறது. 'நாளையை நினைத்து நடுங்கும் நண்பா நெஞ்சில் உரங்கொள்வாய்! இது வேளையில் மட்டும் வீசும் காற்று விளங்கி உளங் கொள்வாய்' என 'வேளையில் வீசுங் காற்று' நம்பிக்கை தருகிறது. 'ஏராள இடமுண்டு எல்லைகளைத் தாண்டுதற்கும் எல்லைகளைத் தாண்டி எழுந்து நடப்பதற்கும் - நீங்கள்தாம் வெளியே வருவதில்லை!' எனக் 'கிணற்றுக்குள் இருப்பவர்களை' வெளியே கொண்டுவரத் துடிக்கிறது அஷ்ரஃபின் கவிதை. 'போர் நின்று மானிடப் பெரு வேட்டையாடும் பிண வெறிக்குத் தீயிடுங்கள் - அவன் இனவெறியைக் குழியிடுங்கள்' என்று கவிஞர் முரசு கொட்டுகிறார். சமுதாயத்தின் மறுமலர்ச்சியை நோக்கி மக்களை நகர்த்துகிற கவிஞரின் திறன் நுணுகி நோக்கிப் பாராட்டுவதற்குரியதாகும்.<br />
<br />
மனிதனுக்கு மனிதன் நன்றி பாராட்டாதவன், தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி பாராட்டுபவன் ஆக மாட்டான். நன்றி உணர்வு நனி சிறக்க அமையப் பெற்றவர் அஷ்ரஃப். சமுதாயத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து மாபெரும் வெற்றி கண்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் மீது அஷ்ரஃப் சிஹாப்தீன் பெரும் பற்றும் பாசமும் கொண்டவர். அதனால்தான் தான் முனைப்புக் கொண்டு தொகுத்த ;மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' எனும் தொகுப்பு நூலை 'முஸ்லிம் சமூகத்தின் அடையாளத்துக்கு' எனக்கூறி எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். அன்னார் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் பின்னணியில் அஷ்ரஃப் சிஹாப்தீன் படைத்த 'நீ நடந்து போன தெரு' என்ற கவிதை 'என்னைத தீயில் எறிந்தவள்' என்ற நூலில் கை தட்டுகிறது. 'நீ நடந்தாய்.. தீ தீய்ந்து போயிற்று... நீ நடந்தாய்.. நதிகள் பிரவகித்து ஓடின.. இருட்டுத் தெருவுக்குள் உன்னை இழுத்துக் கொண்டு போனவர்களின் குருட்டுக் கண்களுக்கெல்லாம் வெளிச்சத்தின் விசாலத்தையல்லவா விதை;து விட்டு வந்தாய்... கேட்கிறதா.. அந்தச் சத்தம்..? நீ திரும்பிய போது எழுந்த கைதட்டல் இன்னும் ஓயவேயில்லை!' என இன்றைக்கும் இலங்கை முஸ்லிம்களின் ஆதர்ஷ புருஷராகத் திகழும் தலைவரை நன்றிகூர்கிறார்.<br />
<br />
மர்ஹூம் அஷ்ரப் கண்ட முஸ்லிம் காங்கிரஸின் சின்னம் மரம். அன்னாரின் மறைவுக்குப் பின் பிளவுகளும் பிணக்குகளும் வஞ்சகத்துக்கு ஆளாகிச் சூழ்ந்தன. அதனால்தான் வெம்பிய மனத்துடன் கவிஞர், மரமாக இல்லையென்றாலும் புல்லாகவாவது இருந்து விடுவோம். மிதி பட மிதி பட நிமிர முடியுமென்ற ஒரே ஒரு காரணத்தால்' என்று பாடுகிறார். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற வங்கரிமாதாவை 'இருண்ட கண்டத்தின் இரண்டாவது நைல் நதி' என்று பாட வந்தபோது கூட, 'அம்மணி, பன்னிரண்டு மில்லியன் மரங்களை நட்டு வளர்த்துள்ளீர்களாமே.. ஆச்சரியமாக இருக்கிறது.. எங்கள் அண்ணன் நட்டு வளர்த்த ஒரேயொரு மரத்தைக் கூடக் கட்டிக் காக்க முடியாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்' என்ற அஷ்ரஃப் குமுறி, இலங்கை முஸ்லிம் சமுதாயத்துக்குச் சூடு ஏற்றத் தவறவில்லை. சிறந்த கவிஞன் என்பவன் தேர்ந்த விமரிசகனாகவும் இருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்குச் சான்றாக அஷ்ரஃபைக் கூறலாம்.<br />
<br />
அன்றாட அவலங்களை எடுத்துக் காட்டிப் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டி விடுகிற நல்ல சிந்தனையாளனாகவும் கவிஞர் திகழ்கிறார். 'நான் எங்கே போகிறேன்?' என்று 'விடை தெரியா வினா' வாகக் கேட்பதும் நோய்களிலேயே மிகப்பெரிய 'இழி நோய்' 'உள்ளத் தினவெடுத்த உயரத்தில் நின்றபடி அடுத்தவன் மீது அபிப்பிராயம் சொல்லுவது' எனக் கூறுவதும் 'ஒரு சோடிச் செருப்பு' எனும் கவிதையில் 'குளிர் அறைகளில் பெண்ணியம் பேசும் மானிடரே, (தார்ச் சாலையில் வேகவைக்கும் வெயிலில் பச்சை மதலையைச் சுமந்தபடி செல்லும்) இவளுக்கு உங்களில் யார் வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் ஒரு சோடிச் செருப்புகளை?' என்று கேட்பதும் 'அத்தனைக்கும் ஆமாம் போட்டுத்தான் ஆகவேண்டியிருக்கிறது - உன்னிடமும் சில தேவைகள் இருப்பதால்' என்றும் 'வேறு வழியொன்றும் தோன்றுதில்லை எனக்கு.. பொய்களோடு வாழ்வதைத் தவிர' என்று யதார்த்தம் பேசுவதும் மிகுந்த சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் உருகுவதாகவும் அமைந்துள்ளன.<br />
<br />
காதலைப் பாடாதவன் கவிஞனாக இருக்க முடியாது. எந்தவொரு கவிஞனின் எழுதுகோலும் தொடக்கத்தில் அதிகமாகவும் வயதும் அனுபவமும் ஏற ஏற அவ்வப்போது அதற்கேற்பவும் காதல் கொள்ளாதிருப்பதில்லை. எல்லோருக்கும் இருக்கும் வருத்தங்களில் காதல் வருத்தமும் இருப்பதில் வியப்பில்லை. அஷ்ரஃப் 'அந்த நினைவு' என்ற கவிதையால், 'ஊசி முனையொன்று உள்நகத்துள் புகுந்ததுபோல் அவ்வப்போது வரும்.. யாருடையவளாகவோ ஆகி விட்ட உன் நினைவு' என்று கூறும் போது, அது நிறைவேறாதுபோன ஒரு காதல் உணர்வு மட்டுமே என்று சிந்தனைக்குத் தடைபோட இயலவில்லை.சமுதாயம் இழந்து விட்ட எத்தனையோ ஆக்கங்களை நினைவுகூர்கிற உருவகமாகவே அந்த வரிகள் துளைக்கின்றன.<br />
<br />
இறையருளால் உலகை உய்விக்க வந்த உத்தமத் திருநபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி, 'முஹம்மத் என்று எழுதிவிட்டு முகர்ந்து பார்த்தேன் என் கலிமா விரலில் கூட கஸ்தூரி வாசம்! மொழியின் உச்சம் கவிதை. மானுடத்தின் உச்சம் முஹம்மத்' என்று பலவாறாக எடுத்துரைக்கும்போது, அஷ்ரஃபின் சொல்லாட்சித் திறன் கொடிகட்டிப் பறக்கிறது. சொல்லாட்சித் திறன் என்பது ஒரு நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் மட்டுமல்ல, அவற்றைத் தாண்டி அறிவுக்குங்கூட அவசியமாகும் என்பதற்கு 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' எனும் கவிதையே தக்க சான்றாகும். 'வாழ்க்கையை சரியாக வகுத்துத் தந்தவர் முஹம்மத். வகுக்கப்பட்டதை வகுக்கப்போய்த்தான் வருத்தத்தில் விழுந்திருக்கிறோம்' என்று கூறி, 'நாயகமே, நீங்கள் இறைஞ்சுங்கள்.. எங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்ற இறைஞ்சுங்கள்!' என்ற இறைஞ்சுதலோடு கவிதையை முடித்திருக்கும் ஆளுமை, நல்ல நடைக்கும் ஆரோக்கியமான சுவை உணவுக்கும் அறிவுக்கும் தீனியாகிறது.<br />
<br />
'காணாமல் போனவர்கள்' என்ற தொகுப்பிலிருந்த 'ஸெய்த்தூன்', 'ஹபீப்' ஆகிய கவிதைகளை 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்திருந்தார் அஷ்ரஃப். 'மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்கள்' தொகுப்பிலிருந்து 'என்னைத் தீயில் எறிந்தவள்', 'குரும்பட்டி', 'உன் தேச பக்தியும் நீயும்' ஆகிய மூன்று கவிதைகளை 'என்னைத் தீயில் எறிந்தவள்' தொகுப்பில் மீளவும் இடம்பெறச் செய்துள்ளமையும் கவனிக்கத் தக்கதாகும். கவிஞனுடைய மன ஆழத்தில் அழுத்தமாகப் பதிந்து விட்ட நிகழ்ச்சிகளின் முத்திரை மூலாதாரப் பொருளாகக் கவிதையில் அதிகம் பிரதிபலிக்கப்படவே செய்யும். கவிஞனால் உணர்ந்து அனுபவிக்கப்பட்டுச் சிந்திக்கப்பட்ட முக்கியமானவை மட்டுமே உண்மையான மூலாதாரப் பொருளாகக் கவிதையில் திரும்பத் திரும்ப எதிரொலிக்கும் என்பதற்கேற்பவே கவிதைகளை மீளவும் அஷ்ரஃப் பதிவு செய்துள்ளார் என்றே கருதலாம்.<br />
<br />
தேசிய சாஹித்திய அரச விருது பெற்ற ஐம்பது கவிதைகளைக் கொண்ட 'என்னைத் தீயில் எறிந்தவள்' அஷ்ரஃப் சிஹாப்தீனின் வயது மற்றும் அனுபவத்துக்கேற்ப தெளிவான சிந்தனையின் போக்கில் பிரசவிக்கப்பட்டதேயாகும். கவிஞருடைய தாயாரின் தந்தையான - பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் அவர்களது பாடலைப் பாடிப் பரிசிலோடு அவரிடம் பெற்ற முத்தமே அஷ்ரஃப் கவிஞரானதற்கு அடிப்படை. ஆலிம் புலவரின் உந்துதல் அகிலத்திற்கு அருமையான கவிஞரை நன்கொடையாக அளித்திருக்கிறது. அஷ்ரஃபுக்கு வாய்த்த ஒலிபரப்புத் துறை அனுபவம் அவரின் பின்புலமாக இருக்கும் சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்கள் அவரை மிகத் தேர்ந்த கலைஞனாகச் செதுக்கியிருக்கின்றன என்பதையும் இந்நூலில் உணர முடிகிறது.<br />
<br />
ஒரு கவிஞனுடைய சிந்தனை வளமும் கருத்து வளமும் மிகச் சிறந்த முறையில் வெளிப்பட வேண்டுமெனில் மிக நேர்த்தியான அமைப்புத் திறன் அவசியம் வேண்டும். அத்தகைய வினைத் திறன் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குக் கைவந்த கலையாக அழகூட்டுகிறது. அதற்குக் காரணம் ஒரு தேர்;ந்த கலைஞனுக்குத் தேவையான சிந்தனைத் திறம், கலை ஆற்றல், விமர்சிக்கும் திறன் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்திருப்பதுதான். அதனாலேயே 'என்னைத் தீயில் எறிந்தவள்' மிகச் சிறந்த அங்கீகாரத்தை அஷ்ரஃபுக்குக் கலை உலகில் வழங்கியிருக்கிறதெனத் துணியலாம்.<br />
<br />
எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆழத்துக்கு ஊடுருவிப் பாய்ந்து உண்மையை உணர்ந்து காணுகிற வித்தை, மொழி வளம், சொல் நடை, அமைப்புத் திறன் முதலியன தெளிந்த சிந்தனை, தேர்ந்த கருத்து இவற்றோடு பொங்கி உணர்ச்சிப் பிரவாகம் எடுக்கிறபோது, பிறக்கின்ற கவிதை காலத்தை வென்று நிலைக்கும் ஆற்றல் உடையதாகவே அமையும் என்பதற்குக் கவிமாமணி அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'என்னைத் தீயில் எறிந்தவள்' நூல் சான்று பகர்கிறது. இலங்கை இலக்கிய உலகில் மட்டுமன்றி, அனைத்துலகத் தமிழ் இலக்கியப் பரப்பிலும் அஷ்ரஃப் சிஹாப்தீன் இந்நூல் மூலம் கவிமாமணியாக அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை.<br />
<br />
(2016 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை)<br />
<br />
<span style="font-size: x-small;">குறிப்பு- கட்டுரையாசிரியர் பெயர் மற்றும் பெற்றுக் கொள்ளப்பட்ட மூலம் குறிப்பிடப்படாமல் இக்கட்டுரையை அச்சிலோ, இணையத்திலோ அல்லது கல்விசார் தேவைகளுக்கோ யாராகிலும்; பயன்படுத்தினால் அந்நபர் அல்லது நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.</span><br />
<br />
<br />
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-72109005116365064412020-02-26T18:10:00.000+05:302020-02-26T18:11:40.662+05:30ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் மிக அவசியம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfAAF0VIhALmyYNhml7jh2BUXCs649uTiZ6VU-Khezovg4Cpc4LieWTNLDZ7AuhoydfoLAruulS0GnYBLPCWr8CqvAJt8ZibT9Z2AiDuUi5oFrNRIaHFQH50DiB0rT78A1uSIXpKjJKkjO/s1600/q23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="485" data-original-width="780" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfAAF0VIhALmyYNhml7jh2BUXCs649uTiZ6VU-Khezovg4Cpc4LieWTNLDZ7AuhoydfoLAruulS0GnYBLPCWr8CqvAJt8ZibT9Z2AiDuUi5oFrNRIaHFQH50DiB0rT78A1uSIXpKjJKkjO/s320/q23.jpg" width="320"></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<b>ஒலி, ஒளிபரப்பாளர், கவிஞர், பன்னூலாசிரியர், கலைஞர் என்று பல் துறை ஆளுமையான அஷ்ரஃப் சிஹாப்தீன் அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகத்தினால் கவிதைக்கான 'மகரந்தச் சிறகு' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருடனான நேர்காணல். </b><br>
<b>நேர்கண்டவர் - நாச்சியாதீவு பர்வீன் </b></div>
<br>
01. கேள்வி:<br>
<br>
அண்மையில் அகில இலங்கை கம்பன் கழகம் - கவிக்கோ நினைவு - மகரந்தச் சிறகு விருதை உங்களுக்கு வழங்கியிருக்கிறது. இது பற்றிய உங்களது எண்ண வெளிப்பாடு என்ன?<br>
<br>
பதில்:<br>
இது ஓர் உயர்ந்த விருது. அப்படித்தான் நான் இதனைக் கருதுகிறேன். அகில இலங்கை கம்பன் கழகத்தின் பார்வையும் அவதானமும் என் மீது விழுந்திருக்கிறது என்பதையே ஒரு பெரு மதிப்பாக நினைக்கிறேன். நுணுகி ஆய்ந்துதான் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த விருது எனக்குக் கிடைத்ததையிட்டு அதிலும் அவர்களது வெள்ளி விழா ஆண்டில் இந்த விருது வழங்கப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கம்பன் கழகத்துக்கும் அதன் உயிர் மூச்சாக இயங்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகம் என சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br>
<br>
02. கேள்வி:<br>
<br>
இலக்கியத்தை நோக்கி உங்களை உந்திய காரணிகள் எவை? <br>
<br>
பதில்:<br>
<br>
எனது தாய் வழிப் பாட்டனார் ஒரு புலவராயிருந்தார். கிண்ணியா நாச்சிக் குடாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் ஒலுவிலில் திருமணம் செய்து ஓட்டமாவடியில் வாழ்ந்து வந்தார். அவர் மூன்று விடயங்களில் ஈடுபட்டார். ஒன்று, ஒரு குர்ஆன் மத்ரஸாவை நடத்தினார். இரண்டு, அறபு எழுத்தணியைக் கண்ணாடிகளில் எழுதி விற்பனை செய்து வந்தார். கண்ணாடியில் வலது புறமாக எழுத வேண்டிய அறபு எழுத்துக்களை அவர் இடது புறமாக எழுதினால்தான் அடுத்த பக்கம் சரியான முறையில் தெரியும் என்பதைக் கவனிக்க வேண்டும். மூன்றாவதாக, சிறு சிறு காப்பியங்களைப் படைத்தார், இஸ்லாமிய இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார், அவற்றை விற்பனை செய்தும் வந்தார். எனவே அவரது புத்தகங்களில்தான் அதுவும் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பாடல்களை வாசிப்பதில் எனது ஆர்வம் மிகச் சிறிய வயதிலேயே ஆரம்பித்தது. <br>
<br>
03. கேள்வி:<br>
<br>
இலக்கியத் துறைக்குள் நீங்கள் நுழைந்த காலப் பிரிவு, அப்போதைய சூழல் பற்றிச் சொல்லுங்கள்?<br>
<br>
பதில்:<br>
<br>
1976ல் நான் பேருவளை ஜாமிஆ நளீமியாவுக்குள் மாணவனாக நுழைகிறேன். அங்கு நிறைய வாசிக்க முடிந்தது. சத்தியத் தீபம் என்னொறு கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அக்காலப் பிரிவில் பலப்பிட்டி அரூஸ் அவர்கள் ஜூம்ஆ என்று ஒரு பத்திரிகை வெளியிட்டார். அதில்தான் எனது முதலாவது சிறிய வசன கவிதை வெளிவந்தது. இன்று அதைக் கவிதை என்று சொல்ல முடியாது. (அந்தக் காலத்து வசன கவிதைகள் இன்று கவிதைகளே இல்லை என்பது வேறு விடயம்) காலியைச் சேர்ந்த எம்.எச்.எம். ஹாரிஸ் அவர்கள் தமிழாசிரியர். இவர் ஆசிரிய கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக இருந்த தமிழறிஞர். இவர்தான் மரபுக் கவிதையில் எதுகை மோனை சொல்லித் தந்தவர். மற்றொருவர் எனது வகுப்புத் தோழன் எம்.எம். முகம்மத். தேர்தல் திணைக்களத்தில் மேலதிக ஆணையாளராக இருந்தவர். அவர் ஒரு நல்ல மரபுக் கவிதைக் காரர். ஓசை நயத்தைக் கண்ணதாசனின் கவிதைகளில் கற்றேன்.<br>
<br>
அக்காலத்தில் தினபதி பத்திரிகையில் 'தினபதி - கவிதா மண்டலம்' என்று ஒரு பகுதி. அதில் தினமொரு மரபுக் கவிதை வெளிவரும். 1977 இறுதிப் பகுதி அல்லது 78ன் ஆரம்பப் பிரிவில் எனது முதலாவது மரபுக் கவிதை அதில் பிரசுரமானது. அதில் கவிதை வரவேண்டுமாயின் அக்கவிதையை சிபார்சு செய்யவென்று சிலர் பத்திரிகையினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தனர். அந்த சிபார்சு இல்லாமலே எனது கவிதைகள் பிரசுரமாயின.<br>
<br>
தொடர்பு சாதனங்கள், வசதி வாய்ப்புகள் என்று எதுவுமற்ற காலப் பிரிவு அது. நான் 17 வயது இளைஞன். லீவில் வந்தால் ஊரில் உள்ள இலக்கியவாதிகளோடுதான் உறவு இருந்தது. அவ்வேளை பிரதான இலக்கியவாதிகள் மூவர் இருந்தனர். வை. அகமத் அவர்கள் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் அறியப்பட்டவர். எஸ்.எல்.எம். ஹனிபா சிறுகதையாளர். ஓட்டமாவடி ஜூனைத் எனக்கு முன்பே கவிதைத் துறையில் ஈடுபட்டவர். அவருடைய நிறையக் கவிதைகள் பத்திரிகை, சஞ்சிகைளில் வந்திருக்கின்றன. இதற்கப்பால் யூசுப் ஆசிரியர், யூ.அகமட், எஸ்.எம்.தலிபா, ஓட்டமாவடி இஸ்மாயில் என்று சிலர் இலக்கிய ஆர்வத்துடன் இயங்கி வந்தார்கள். இவர்கள் அனைவரும் எனக்கு முந்திய தலைமுறையினர். எனக்குப் பிற்பாடு வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம். ஸதக்கா, வாழை மயில் (இஸ்மாயில்) ஆகியோர் கவிதை, கதை, பத்திரிகை, சஞ்சிகை என்று இயங்கி வந்தவர்கள். பின்னால் எஸ்.நளீம், ஓட்டமாவடி அறபாத், ஜிப்ரி ஹஸன், சல்மான் வஹாப், சல்மானுல் ஹாரிஸ் என்று ஒரு படை உருவாகியது. இதற்குள் சில பெயர்கள் ஞாபக மறதியால் விடுபட்டிருக்கலாம். இங்கே நான் குறிப்பிட்டவர்கள் எனது இலக்கியத் தொடக்கத்தின் சற்று முன்னும் பின்னுமானவர்களாவர்.<br>
<br>
இதற்கெல்லாம் அப்பால் ஒருவரை நான் குறிப்பிட்டாக வேண்டும். அவர்தான் பொது நூலகராக இருந்த சமத் நானா அவர்கள். நூலகத்துக்கு நல்ல நூல்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பார். நல்ல நூல்களை எனக்குத் தெரிந்து வைத்திருந்து தருவார். எல்லாருக்கும் இரண்டு புத்தகங்கள்தாம் வழங்குவார். எனது வாசிப்பு வேகத்தைக் கண்டு எனக்கு மூன்று நூல்கள் தருவார். அவரை என்னால் மறக்க முடியாது.<br>
<br>
04. கேள்வி:<br>
<br>
உங்களது முதலாவது கவிதை தொகுதிபற்றியும், அதற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?<br>
<br>
பதில்:<br>
<br>
முதலாவது கவிதைத் தொகுதியான 'காணாமல் போனவர்கள்' 1999ல் வெளி வந்தது. இதில் இடம்பெற்ற இரண்டு கவிதைகளைத் தவிர ஏனைய அனைத்தும் 1978க்கும் 1986 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப் பெற்றவை. ஒரு நூலுக்கான கவிதைகளை 1984லேயே தொகுத்து வைத்திருந்தேன். ஆனாலும் வெளியிடும் அளவு வசதி வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. பயிற்றப்பட்ட ஆசிரியனாக இருந்த நான் 1992ல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரம் பெற்ற அலுவலர் தெரிவுக்கான அகில இலங்கை ரீதியான பரீட்சையில் சித்தியடைந்ததுடன் 1993ல் அதில் இணைக்கப்பட்டேன். 1996 அளவில் எனது முதல் நூலைக் கொண்டு வந்திருக்கலாம். அப்போதும் அதுபற்றி ஆர்வம் இருக்கவில்லை.<br>
1998ம் ஆண்டு எனது முதற்தொகுதியைக் கொண்டு வர பலவந்தப் படுத்தியவர்கள் இருவர். ஒருவர், மறைந்த கவிஞர் ஏ.ஜி.எம். சதக்கா. மற்றையவர் வாழைச்சேனை அமர் என்கிற அப்துல் ரகுமான். இதற்காகவே அவர்கள் ஊரிலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டு வந்து ஒரு முழுநாளும் நின்று என்னை ஊக்கப்படுத்தினர். இதன் விளைவாக 1999ல் முதற் தொகுதி வெளியாயிற்று. என்னை மீண்டும் அவர்கள் இலக்கியத்துக்குள் இழுத்துக் கொண்டு வந்தவர்கள் என்ற அடிப்படையில் பின்னால் எழுதப்பட்ட அனைத்து எழுத்துக்களுக்குமான தோற்றுவாயை உண்டு பண்ணியவர்கள் அவர்கள் இருவரும்தாம். 'காணாமல் போனவர்கள்' முதற்பதிப்பாக ஆயிரம் பிரதிகளும் இரண்டாம் பதிப்பாக அறுநூறு பிரதிகளும் வெளியிடப்பட்டன.<br>
<br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg34IWKCioWh69hQflc20JBPkMlI0FNqE_09_xpK-ACB4zDMGqZMF-PI6qCaYbc0Lt-FtaBJXxg-uODFj9WSyTCcpkYdbt7u5NwAJGRZBU64ejkLc2uU2cjGzozE5J_ZzzTvb7dpvsdDNaI/s1600/Farveen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="639" data-original-width="639" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg34IWKCioWh69hQflc20JBPkMlI0FNqE_09_xpK-ACB4zDMGqZMF-PI6qCaYbc0Lt-FtaBJXxg-uODFj9WSyTCcpkYdbt7u5NwAJGRZBU64ejkLc2uU2cjGzozE5J_ZzzTvb7dpvsdDNaI/s320/Farveen.jpg" width="320"></a></div>
<div style="text-align: center;">
<b> நாச்சியாதீவு பர்வீன் </b></div>
<br>
அங்கீகாரம் பற்றிக் கேட்டீர்கள் அல்லவா? யாருடைய அங்கீகாரத்துக்காகவும் நான் எதையும் எழுதவில்லை. யாருடைய அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்ப்பவனும் அல்லன். இன்னின்னார் பாராட்ட வேண்டும், பல்லக்கில் ஏற்ற வேண்டும் என்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. எனக்குக் கவிதை எழுதத் தோன்றினால் எழுதுகிறேன். கதை, கட்டுரை, பத்தி, மொழிபெயர்ப்புகள் - இவையெல்லாமே நானே தீர்மானித்து நானே எழுதினேன், எழுதுகிறேன். வாய்ப்புக் கிடைத்தால் இன்னும் எழுதுவேன். <br>
<br>
05. கேள்வி:<br>
<br>
ஆரம்பத்தில் கவிதைக்கூடாக ஆரம்பித்த உங்களது இலக்கியப் பயணம் பத்தி எழுத்து, கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் எல்லாத் தளத்திலும் பயணித்தது எவ்வாறு?<br>
<br>
பதில்:<br>
இதில் எந்த மாயமோ மந்திரமோ இல்லை. எனக்கு முன்னரும் கவிதையில் ஆரம்பித்து பல் துறைகளில் ஜொலித்தவர்கள் இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கு வாசிப்பும் வாழ்வனுபவமும் கிடைக்கக் கிடைக்க அவனது தளம் விரிந்து செல்லும். சிலர் எனக்கு ஒரு துறையே போதும் என்று அதிலேயே தொடர்ந்து ஈடுபடுவார்கள். இதுவும் வாலாயமாகும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் ஏளைய துறைகளுக்குள்ளும் கால் பதிப்பார்கள்.<br>
சிறுவர் இலக்கியத்தில் ஈடுபட்டது எதிர்பாராமல் நடந்நதது. ரூம் டு ரீட் என்ற நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் கடமை புரிந்த ராஜா மகள் என அறியப்பட்ட லதா சிறுவர் இலக்கியம் பற்றிய பயிலரங்குக்கு அழைத்து இதில் ஈடுபட வைத்தவர். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நான் சொல்ல வேண்டும். இந்தியரான சுபீர் சுக்ளா என்ற பயிற்றுவிப்பாளர்தான் இந்தப் பயிலரங்கை நடத்தியவர். இந்திய கல்வியமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அவர். சிறுவர் இலக்கியத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர். கடந்த காலங்களில் ஈஸாப்பு நீதிக் கதைகள், தந்திரக் கதைகள் போன்றவற்றைச் சிறுவர்களுக்குக் கற்பித்தது பிழை என்று அவர் சொன்னார். தந்திரம், ஏமாற்று ஆகியவற்றைக் கதைகள் மூலம் இளம் பிஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும் முயற்சி மூலம் இலக்கை அடைவதைப் பற்றியே கதைகள் எழுதப்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததுடன் அதன் படி எழுதவும் தூண்டினால். ஆனால் துரதிர்ஷ்டமாக இன்று விற்பனைக்கிருக்கும் சிறுவர் கதைகள் இந்த நியமங்கள் அடிப்படையில் எழுதப்படுவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பயிலரங்குக்குப் பின் நான் மூன்று கதைகளை எழுதினேன். சிறார்களுக்கென இலக்கியம் படைப்பது ஏனைய படைப்பாங்களைச் செய்வதை விட முற்றிலும் வேறு பட்டது, சவாலானது, சிரமம் மிக்கது என்பதே எனது கணிப்பாகும்.<br>
<br>
06. கேள்வி:<br>
<br>
இலங்கை அரசினால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற உயர் விருதான சாகித்திய மண்டலப்பரிசினை மூன்று தடவைகள் பெற்றவர் என்ற வகையில் அந்த விபரங்ளை பகிர்ந்து கொள்ளமுடியுமா?<br>
<br>
பதில்:<br>
<br>
முதல் விருது 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்ற எனது இரண்டாவது கவிதை நூலுக்கு 2009ம் ஆண்டு கிடைத்தது. இரண்டாவது விருது அறபுக் கதைகளின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள்' நூலுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலான 'பட்டாம் பூச்சிக் கனவுகள்' தொகுதிக்கு 2016ம் ஆண்டு கிடைத்தது.<br>
<br>
இது தவிர, ஏனைய நான்கு நூல்கள் இறுதிச் சுற்றுக்குள் வந்த மூன்று நூல்களில் ஒன்றாக இடம்பிடித்துச் சான்றிதழ் பெற்றன. 2011ல் 'ஒரு குடம் கண்ணீர்', 2014ல் எனது சிறுகதைகளின் தொகுதியான 'விரல்களற்றவனின் பிரார்த்தனை', 2017ல் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதியான 'யாரும் மற்றொருவர் போல் இல்லை', 2018ல் எனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'தேவதைகள் போகும் தெரு' ஆகியனவாகும்.<br>
<br>
கேள்வி<br>
<br>
07. இலங்கை இந்திய தமிழ் பரப்புக்கு பெரிதும் பரிச்சயமற்ற அரேபிய சிறுகதைகளை மொழி பெயர்க்கும் ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?<br>
<br>
என்னுடைய அவதானத்தின் படி உலகத்தை ஆகர்ஷிக்கும் இலக்கியப் படைப்புகள் லத்தீன் அமெரிக்க, அரேபிய, ஆபிரிக்க நாடுகளிலேயே வெளிவருகின்றன. அதிகமாகப் பேசப்படும் இலக்கியங்களாக இவையே இருக்கின்றன. தமழ் சூழலில் என்ன காரணம் பற்றியோ லத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுமளவுக்கு, பேசப்படுமளவுக்கு அறபு இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுவதுமில்லை, பேசப்படுவதுமில்லை.<br>
<br>
அறபு மொழி இலக்கியச் செழுமையும் ஆழ வேருன்றிய இலக்கியச் சிறப்பும் கொண்டது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கவிதைகளை எழுதி கஃபா என்ற இறை ஆலயத்தில் தொங்க விட்டவர்கள் அவர்கள். கவிதையிலேயே பொருதிக் கொண்டவர்கள். கதையும் அப்படித்தான். ஆயிரத்தொரு அராபியக் கதைகள் இன்று வரை பேசப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன.<br>
<br>
மேற்கு நாடுகளில் குடியேறிய பல அறபு எழுத்தாளர்கள் ஆண்களும் பெண்களுமாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்ற மொழிகளில் அற்புதமான இலக்கியங்களைப் படைக்கிறார்கள். 1998லிருந்து லண்டனில் 'பானிபால்' என்றொரு சஞ்சிகை அறபு நாடுகளின் இலக்கியத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இதை நிறுவியவர்கள் மார்கிரட் ஒபாங் என்ற பிரிட்டிஷ் பெண்மணியும் சாமுவேல் சிமோன் என்ற ஈராக்கிய எழுத்தாளருமாவர். இருவருமே முஸ்லிம்கள் அல்லர். தேடல்கள் மூலமே இவற்றை நான் அறிந்து கொண்டேன். எனவே அவற்றில் எனக்குப் புரிந்தவற்றில் சிறந்தவற்றைத் தேர்ந்து மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். நான் மொழிபெயர்த்த சிறுகதை ஒன்றை எழுதியவர் ஜோக்ஹா அல் ஹார்த்தி. ஓமானைச் சேர்ந்த இப்பெண்மணியின் அறபு நாவல் ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேன் புக்கர் விருது பெற்றிருக்கிறது. ஓமானில் இருந்த வேளை நமது முன்னோடி எழுத்தாளர் மானா மக்கீன் அவரைச் சந்தித்ததாக அறிந்தேன். <br>
<br>
எனக்கு மொழிபெயர்ப்புக்கான நூல்களை வாங்கித் தரும் இருவர் லண்டனில் வசிக்கின்றனர். சட்டத்தரணி ஷர்மிலா ஜெய்னுலாப்தீன், ஒலிபரப்பாளர் ஷைபா அப்துல் மலிக் ஆகிய இருவருமே அவர்களாவர்.<br>
<br>
அறபு மொழி துறைபோகக் கற்றவர்கள் அந்த மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் இது லாபமீட்டும் துறையல்ல. அறபு மொழியில் பாண்டித்தியம் பெற்று அரச பதவிகளில் இருப்பவர்களும் இவ்விடயத்தில் ஆர்வம் செலுத்துவதில்லை. எல்லாருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனையவர்கள் அறபு நாடுகளில் வாழும் பணிப்பெண்களின் 'பாபா'வுக்குக் கடிதம் எழுதுவனுடன் தமது திறமையை மட்டுப் படுத்திக் கொண்டார்கள்.<br>
<br>
எனது அறிவுக்கெட்டியவரை உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர், ஷெய்க் ஏ.பி.எம். இத்ரீஸ், ஷெய்க் ஏ.சீ. மஸாஹிர் போன்றோர் சற்றுப் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எனக்குத் தெரியாமலும் வேறு சிலரும் இருக்கக் கூடும். <br>
</div><a href="http://ashroffshihabdeen.blogspot.com/2020/02/blog-post_26.html#more">மேலும் படிக்க»</a>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-31004516829709573332020-02-14T19:53:00.000+05:302020-02-14T19:53:50.953+05:30அப்துல் ஹமீத் - ஒலியில் ஒளிரும் வானவில்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXISQ74hPKzz4jdIBh6MaMs9W8C9Sd5zMQhsz9xRqnjPqtJlJagnXLfQKy646XlRhCbYg9673iJxm6Q-11obQoUpAQVY4uzHWcqZxlPmNHLmbHrKSVimTJ-ZSvo7YdEIKHhgcNn67WOAQk/s1600/Hameed+-+01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="700" data-original-width="500" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXISQ74hPKzz4jdIBh6MaMs9W8C9Sd5zMQhsz9xRqnjPqtJlJagnXLfQKy646XlRhCbYg9673iJxm6Q-11obQoUpAQVY4uzHWcqZxlPmNHLmbHrKSVimTJ-ZSvo7YdEIKHhgcNn67WOAQk/s320/Hameed+-+01.jpg" width="228"></a></div>
<br>முன்னோடி ஒலிபரப்பாளர்களில் ஒருவரான பி.எச். அப்துல் ஹமீத் அவர்கள் நேற்று 13.02.2020 அன்று கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற வானொலி அரச விருது விழாவில் 'பிரதீபா பிரணாம' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இலங்கை அரசின் காசார அமைச்சின் கீழ் இயங்கும் கலாசாரத் திணைக்களம் இதனை வழங்கியிருக்கிறது.<br><br>இந்த விருது எப்போதோ அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மிக அண்மித்த காலங்களில்தான் இவ்வாறான விருதுகள் வழங்கப்பட ஆரம்பித்தன என்ற வகையில் ஆறுதலடைய முடியும். இன்னொரு வகையில் அவர் தொடர்ந்தும் ஒலிபரப்புத் துறையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அடிப்படையிலும் தாமதத்துக்காகக் கவலை கொள்ள வேண்டியதில்லை.<br><br>அப்துல் ஹமீத் அவர்களை ஓர் அறிவிப்பாளன் என்ற வகையில்தான் பலரும் மேலோட்டமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர் ஓர் அற்புதமான கலைஞர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தொகுப்பாளர், பாடலாசிரியர் என்ற விடயங்கள் பற்றிப் பெருமளவில் யாரும் அறிந்திருக்கவில்லை. அதற்கு ஒரு பிரதான காரணம் தன்னைப் பற்றி அவர் எடுத்துக் காட்ட முனைந்ததில்லை.<br><br>1985இல்தான் நான் அவரை முதன் முதலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தாழ்வாரத்தில் சந்தித்தேன். யாரோ ஒருவர் என்னை அறிமுகம் செய்தார். அப்போது 'யாவரும் கேளிர்' என்ற நிகழ்ச்சியை முஸ்லிம் சேவையில் நடாத்திக் கொண்டிருந்தேன். அப்போது அவர் வர்த்தக சேவையில் 'ஒலி மஞ்சரி' என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்தார். 'உங்களது கவிதையொன்று ஒலி மஞ்சரி'யில் ஒலிபரப்பாகியிருந்தது கேட்டீர்களா?' என்று கேட்டார். 'நான் ஒலிமஞ்சரிக்குக் கவிதை அனுப்பவில்லையே' என்றேன். நண்பர் கிண்ணியா அமீர் அலி வீரகேசரி வார மஞ்சரியில் வெளி வந்த 'குழந்தைகளுக்கு மாத்திரம்' என்ற கவிதையை இரசித்த கவிதையாக 'ஒலி மஞ்சரி'க்கு அனுப்பியிருந்த விடயத்தை எனக்குச் சொன்னார்.<br><br>வர்த்தக நிகழ்ச்சிகளூடாக இலக்கியத் தரத்துடனான ஒரு நிகழ்ச்சியாக 'ஒலி மஞ்சரி' இருந்தது. மிக அதிகமான இளைய தலைமுறை அதில் எழுதி வந்தது. கவிதையாக இல்லாத போதும் அதைத் தனது வாசிப்பின் மூலம் கவிதையாக்கி விடுவார் அப்துல் ஹமீத் என்று அந்நிகழ்ச்சி பற்றிப் பேசும் போது ஒலிபரப்புத் துறை சாராத ஒரு நேயர் எனக்குச் சொல்லியிருக்கிறார். அதை ஒரு பல்சுவை நிகழ்ச்சியாக அவர் நடாத்தி வந்தார்.<br><br>அக்காலங்களில் இன்று போல் உடனடியாக ஒருவரோடு தொடர்பு கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களும் பத்திரிகைகளில் வந்தால்தான் உண்டு. ஒலிபரப்பாளர்களின் பேட்டிகள் கூட வருவதில்லை. அறிவிப்பாளர்கள் பற்றிய சில செய்திகளை அவர்களாகக் கற்பனை செய்து கொண்டு எப்போதாவது அவர்களுடன் தொடர்பு பட்டவர்களிடம் கேட்பார்கள். ஒரு பகுதிநேர அறிவிப்பாளனாகச் சேர்ந்த பிறகு விசாலாட்சி ஹமீத் தான் பி.எச். அப்துல் ஹமீதின் மனைவியா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். என்னைப்போல் எத்தனை பேரிடம் யார் யார் கேட்டிருப்பார்களோ? <br><br>அவரிடமுள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, யாரையும் பற்றி யாரிடமும் அவர் பேசமாட்டார். விமர்சிக்கவும் மாட்டார். இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று யாருக்கும் இலவச அறிவுரை வழங்குவதும் இல்லை. அவரிடம் எதையாவது கேட்டால் மாத்திரமே அது பற்றிய விபரங்களையும் ஆலோசனையையும் நமக்குத் தருவார். 'என்னுடைய சக தொழிற் பயணியாக ஒருவர் வந்து விட்டால் அவர் என்னைப் போல் ஒருவர்தான்' என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.<br>
<br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDBu50WAWx21HZS44E3XD5d3mmyukLCXYpaqmvyYqTVVGmKqif9TWHcF2R6yiH-fNb53ONuT-zFwXKStkJM3hm-YtjyomqxC1NCiHcrj6Y4XAlyBSVo-JBT2WYp5miT1ZnQ3hBJ0OG3kiQ/s1600/Hameed+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="501" data-original-width="700" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDBu50WAWx21HZS44E3XD5d3mmyukLCXYpaqmvyYqTVVGmKqif9TWHcF2R6yiH-fNb53ONuT-zFwXKStkJM3hm-YtjyomqxC1NCiHcrj6Y4XAlyBSVo-JBT2WYp5miT1ZnQ3hBJ0OG3kiQ/s320/Hameed+2.jpg" width="320"></a></div>
<br><br>தொண்ணூறுகளில் தொலைக் காட்சிச் செய்தி வாசிப்புக்குச் சென்ற பிறகு ஒரு நாள் என்னைக் கண்டு சொன்னார், 'அஷ்ரஃப்... மீசை ரொம்பப் பெரிதாகத் தெரிகிறதே.. சிறிதாகக் கத்தரித்துக் கொள்ளக் கூடாதா?' அவர் சொல்லும் வரை நான் அதுகுறித்துச் சிந்தித்திருக்கவில்லை. அவர் அப்படிச் சொன்னதே ஓர் அபூர்வமான விடயம். அது பற்றிப் பிறகு யோசித்தால் இளவயதில் நறுக்கப்படாத மீசை திரையில் நமது முகத்தில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்தது மட்டுமல்ல, அது குறித்து அவரது நுணுக்கமான அவதானிப்பை நினைத்தும் வியந்தேன்.<br>
</div><a href="http://ashroffshihabdeen.blogspot.com/2020/02/blog-post.html#more">மேலும் படிக்க»</a>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-20504666418554992402020-01-18T22:49:00.001+05:302020-01-18T22:49:11.655+05:30 சோலைக்கிளியின் 'கப்புத் தென்னை' - நாடகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnhfkobCBT2SGzXNUhrmUWhCxDC6HYEULYHRfS8TWM-AyX0yKvrNcDAuacJZQf-pJuzaEayEHoP6WdAX1r8dy-7cNXlWGj8OkIopvJcQj85b4U8pxFOnElTR-iNl1NRyyDb-czKbWBxLqi/s1600/DFGDS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1000" data-original-width="1000" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnhfkobCBT2SGzXNUhrmUWhCxDC6HYEULYHRfS8TWM-AyX0yKvrNcDAuacJZQf-pJuzaEayEHoP6WdAX1r8dy-7cNXlWGj8OkIopvJcQj85b4U8pxFOnElTR-iNl1NRyyDb-czKbWBxLqi/s320/DFGDS.jpg" width="320" /></a></div>
<br /> சோலைக்கிளி பற்றிக் கேட்டால் முதலாவது அவர் ஒரு அசல் கவிஞர், இரண்டாவதும் அவர் ஒரு அசல் கவிஞர், மூன்றாவதும் அவர் ஒரு அசல் கவிஞர் என்றுதான் என்னால் சொல்லத் தோன்றும். அவரது கவிதைகள் மட்டுமல்ல, அவருடைய பேச்சும்கூட நகைச்சுவை ததும்பும் கவிதைத்தனமானதாகவே இருக்கும்.<br /><br /> நாலாவதாகவும் சொல்லுங்கள் என்று என்னைக் கேட்டால் அவர் ஒரு நல்ல நாடக எழுத்தாளர் என்பேன். கவிதைகளாலேயே அவர் பெயர்பெற்று விட்ட காரணத்தால் அவருக்குள் இருந்த நாடகாசிரியன் பற்றி பெருமளவில் யாரும் கவனித்ததில்லை.<br /><br /> எண்பதுகளின் பிற்கூறில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் சோலைக்கிளியின் பல நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாடகங்களில் நானும் நடித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நாடகங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது ஒலிநாடாவில் அவர் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்த 13 நாடகங்களை ஓர் இறுவட்டாக எனக்குத் தந்தார். அவற்றுள் சில நாடாவில் இருக்கும்போதே மீள மீள ஒலிக்க விடப்பட்டிருப்பதால் ஒலியளவு மாறியிருந்தன.<br /><br /> இவரது நாடகங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்த காரணத்தால் அதைப் பெற்று இறுவட்டிலிருந்து கணினிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். சில போது இலக்கிய மஞ்சரிக்காகவும் அவரது நாடகங்களிலிருந்து சில பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறேன். <br /><br /> ஒரு நூலை வாசித்து அது குறித்து எழுதுவதை விட ஒலிப்பதிவைக் கேட்டுக் குறிப்பெடுத்து எழுதுவது சிரமமான காரியம். அதை ஒரே மூச்சில் செய்து முடித்து விட முடியாது. நிறைய நேரம் தேவைப்படும். பொறுமையும் அவகாசமும் தேவை. இருந்த போதும் மனதில் எண்ணியதை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாடகமாக எழுதி முடித்துவிடும் தீர்மானத்துக்கு வந்தேன்.<br /><br /> 'கப்புத் தென்னை' என்று ஒரு நாடகம். பொதுவாக தென்னை ஒற்றையாக நெடிதுயர வளரும். அபூர்வமாக மற்றொரு கிளை விடும் தென்னைக்குக் கப்புத் தென்னை என்று பெயர். ஆசிரியராகக் கடமையாற்றும் போது ஐம்பதாயிரம் ரொக்கம், நான்கு ஏக்கர் காணி, வீட்டுடன் திருமணம் செய்யும் பாருக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றதும் கார் ஒன்றை வாங்கி ஓடினால்தான் கௌரவம் என்று நினைக்கிறான். எனவே மாமனாரிடம் உள்ள மீதி நான்கு ஏக்கர் காணியையும் தனக்குத் தர வேண்டுமென்று மனைவிடம் தினமும் சண்டை பிடிக்கிறான். தனக்கு மேலும் மூன்று சகோதரிகள் இருந்தும் தன்னிடமிருந்த எட்டு ஏன்னர் காணியில் பாதியை மூத்த பிள்ளை என்று தனக்குத் தந்ததை அவள் எடுத்துச் சொல்லியும் அது தனது பிரச்சனை அல்ல என்று வாதிடுகிறான் பாருக். <br /><br /> இதே வேளை பாருக்கின் தந்தையும் தாயும் அவனது வேண்டுகோள் நியாயமானது என்று மகன் பக்கம் நின்று பேசுகிறார்கள். மாமனாருடன் நேரடிப் பேச்சு முற்றி வீட்டை விட்டு வெளியேறுகிறான் பாருக். விவாக ரத்துக்குப் பின்னர் பாருக் வசதி வாய்ப்பான ஓரிடத்தில் காரொன்றை சீதனமாகப் பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்கிறான். அவனது மனைவியும் மறுமணம் செய்து கொள்கிறாள். பாருக்கின் பிள்ளையுடன் சேர்த்து புதியவன் அவளை நன்றாக வாழ வைக்கிறான்.<br /><br /> பாருக்கின் நண்பன் வெளிநாட்டிலிருந்து வந்து பாருக்கையும் அவனது தந்தையாரையும் சந்தித்து விட்டு பாருக்கின் முதல் மனைவி, அவளது தந்தையார் ஆகியோரைச் சந்திக்கும் காட்சியில்தான் பாருக் ஒரு காருக்காக எடுத்தது தப்பான முடிவு என்பதை அவர்களே சொன்ன வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்துகிறான். <br /><br /> பாருக் மனைவியுடன் சண்டையிட்டுத் தன் வீட்டுக்கு வந்ததும் - அவனுடைய தந்தையிடம், 'என்ன.. மகன் கோவிச்சுக்கிட்டு வந்துட்டாராமே..' என்று மற்றவர்கள் கேட்பதைப் பற்றி மனைவியிடம் சொல்லும் போது, 'ஒரு சின்னப் பெரச்சின எண்டா ஊரானுக்கு என்ன சந்தோஷமா இருக்குடா வாப்பா..' என்கிற இடமாகட்டும் - பாருக்கின் தாயார் கணவனிடம் சம்பந்தி குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் போது, 'மாப்புள கேட்டு வரக்குள்ள கருகின வாழப்பழத்தக் கொண்டாந்த குடும்பம்தானே அது..' என்று சொல்லும் இடமாகட்டும் - வெளிநாட்டிலிருந்து வந்த பாருக்கின் நண்பரிடம் தனது புதிய மருமகளைப் பற்றிச் சொல்லும் போது, 'அவ ஒரு ஊத்தக் கிடா.. தலைக்கி எண்ணெய் வெக்காளுமில்ல.. குளிக்காளுமில்ல..' என்று சொல்லுமிடமாகட்டும் நம்மையறியாமல் சிரிப்புப் பீறிடுகிறது. இதே மாதிரி சோலைக் கிளியின் கிண்டலான வசனங்கள் நாடகம் முழுக்க இடம்பெற்றுள்ளன.<br /><br />'நான் பிழை செய்துட்டன்.. என்ட காசிலயாவது அவனுக்கு ஒரு காரை வாங்கி நான் குடுத்திருக்கணும். பொண்டாட்டியோட சண்ட புடிச்சிக்கிட்டு வந்தவனை ஏசி திருப்பி அனுப்பியிருக்கணும்' என்று பாருக்கின் தந்தை சொல்வதுடன் நாடகம் முடிவடைகிறது.<br /><br /> இந்த நாடகத்தில் பாருக்கின் தந்தையாக மறைந்த கே.ஏ.ஜவாஹர் அவர்களும் தாயாக நூர்ஜஹான் மர்ஸூக் அவர்களும் மனைவியாக ஞெய்றஹீம் ஷஹீத் அவர்களும் பாருக்கின் மாமனாராக ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களும் நண்பனாக மஹ்தி ஹஸன் இப்றாஹீம் அவர்களும் நடித்துள்ளனர். பாருக் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தது நான்தான். <br /><br /> நாடகத்தின் தொடக்கக் காட்சியில் பாருக்கின் தந்தை இறைச்சிக் கறியுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எச்.ஐ.எம். ஹூஸைன் பிச்சைக்கானாக வருவார். 'சனியனுகள்... சாப்பிடுற நேரம் பாத்துத்தான் பிச்சையெடுக்க வருவானுகள்' என்று அவர் சாப்பிட்டுக் கொண்டே கொம்புவதும் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு சோறு கேட்பார். சோறு இல்லை என்றதும் 'எங்கேயோ இறைச்சிக் கறி வாசம் வருகிறது' என்று பிச்சைக்காரன் சொல்லுவதும் வெகு சுவாரஸ்யமாகத் தூக்கி விடுகிறது.<br /><br />18.01.2020<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-8499133117884780362020-01-17T20:27:00.001+05:302020-01-17T20:27:54.793+05:30மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் 'நிழலைத் தேடி'<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBsVbbrj7gtzaHscrYK-6RnBz4M5aSvhnQigda33zA3QmaFa-7X_qajFcETl8THDSa39iiEVWcaG0vVKTnyC32o9rfwyFjVBUKjK0eb4YCBDVPfihen1zUu2ri6S4UgFM0FYNsiiSQWRxK/s1600/DDD.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="540" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBsVbbrj7gtzaHscrYK-6RnBz4M5aSvhnQigda33zA3QmaFa-7X_qajFcETl8THDSa39iiEVWcaG0vVKTnyC32o9rfwyFjVBUKjK0eb4YCBDVPfihen1zUu2ri6S4UgFM0FYNsiiSQWRxK/s320/DDD.jpg" width="240" /></a></div>
<br /><br />மூதூர் ஏ.எஸ். உபைத்துல்லாஹ்வின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியான 'நிழலைத் தேடி'யை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த நூல் 2017ம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 'ஜலசமாதி' 2008 இல் வெளிவந்திருக்கிறது.<br /><br />ஏ.எஸ். உபைத்துல்லாஹ் ஒரு நல்ல சிறுகதையாளர் என்று முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். 2016ல் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன்விழா மாநாடு சம்பந்தமான பிரதேசவாரியான எழுத்தாளர் சந்திப்பின் போது ஒரு மாலை வேளை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.<br /><br />திருமலை மாவட்டத்தின் இயற்கை அழகு, கடலும் ஆறும் அண்மிய நிலம், அப்பிரதேச ஊர்களின் கடந்த காலமும், நவீன மயப்படுதலும், அப்பிரதேச மக்களின் ஒற்றுமையான வாழ்க்கை, சுனாமி, இனப்பிரச்சனை ஏற்படுத்திய வடுக்கள், இடப்பெயர்வின் துயரம், மீள்குடியேற்றமற்றுச் சீரழியும் ஏழை - எளியவர்களது வாழ்க்கை, சிறிய வரலாற்றுக் குறிப்புகள், பிரித்தாளும் அரசியல் தந்திரங்கள், பிரதேச கல்வி என்றெல்லாம் நிறைய விடயங்களைத் தனது கதைகளுடே உபைத்துல்லாஹ் பேசுகிறார். திருமலையும் அதனுள்ளடங்கும் பிரதேசங்களும் நீர் வளம் நிரம்பியவை என்பதால் அவரது கதைகளில் கடல், ஆறு, கிணறு என்று நீர் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.<br /><br />'தண்ணீர், தண்ணீர்' இத்தொகுதியின் முதலாவது கதை. குடும்பத்தில் வலது குறைந்த பிறந்த, ஒரு பக்கம் காலை இழுத்துக் கோணி நடக்கும் மம்மறாயன் - முகம்மது இப்றாஹீம் - நேர்மையாக வாழ வேண்டும் என்ற லட்சியமுடையவன். அக்காலத்தில் வீடுகளில் உள்ள கிணற்று நீர் உவர்ப்புத் தன்மை கொண்டதாக இருந்தபடியால் மக்கள் குடிநீருக்கு அலைந்த போது தூரத்தே இருந்த நன்னீர் கிணறுகளில் நீர் பிடித்து வந்து வீடுவீடாகக் கொடுத்து அவர்கள் கொடுப்பதைப் பெற்று வாழ்ந்து கொண்டிருந்தான். குடங்களில் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு தள்ளு வண்டியை ஒரு நல்லவர் கொடுக்கிறார். ஏழ்மை நிறைந்த அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கையில் ஒரு நாள் குழாய் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தனது ஒரே வருமான வழியும் இழக்கப்பட்ட நிலையிலும் வலது குறைந்த மம்மறாயன் மனைவியிடம் சொல்கிறான்.. 'பாத்தும்மா யோசிக்காத... இந்த உலகத்துல தண்ணி யாவாரம் மட்டுந்தான் ஒரு தொழிலா? எத்தனையோ தொழில் இருக்கு.. நமக்குப் பொருத்தமான ஒன்றைத் தேடிக் கொள்ளுவம்..!'<br /><br />'கொடி பறக்குது' என்ற கதை வெள்ளை மணல் அருகே இருக்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசல், அங்கு வருடா வருடம் விழாவாக நடக்கும் கந்தூரி, பெயர் தெரியாத நாற்பது முழ அவுலியா (இறைநேசர்) அடக்கஸ்தலம், அதனோடு இணைந்த 1815ல் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை ஜூனைதீன் என்ற முதியவர் நினைவு கூரும் கதை. இப்போது இந்த இடங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சொல்லி ஒரு பெருமூச்சுடன் முடிவடைகிறது.<br /><br />நீண்ட நெடுங்காலமாக மூதூர், கிண்ணியா பிரதேசப் பயணத்தைத் தோணி மற்றும் மிதவை மூலம் கடந்த மக்கள் பாலங்கள் அமைக்கப்பட்டதும் அதில் ஒரு சுற்றுலாத் தலம் போல் போய் நின்று மகிழ்ச்சியனுபவித்ததையும் பாலங்கள் அமையுமுன் எப்படியெல்லாம் மக்கள் சிரமங்களை அனுபவித்தார்கள் என்பதையும் நினைவூட்டுகிறது 'நீலக் கடல் தாண்டி' என்ற கதை. <br /><br />'ஓயாத அலைகள்' என்ற கதையில் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் பிரதேசத்தின் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு தினத்தில் சென்று கற்பிக்கும் சேவையைச் செய்து கொண்டிருப்பதையும், சிறு வகுப்பு முதல் ஏ.எல் வரை நடக்கும் டியுஷன் பணத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதையும் பேசுகிறது. பாடமற்ற வேளை வேறு ஓர் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை அதிபர் கோர, அதை மறுத்துப் பேசும் ஆசிரியர் ஒருவருக்கு உதவிக் கல்விப் பணிப்பாளராகத் தரமுயரும் கடிதம் வருவதோடு கதை முடிகிறது.<br /><br />மிக அண்மைக் காலம் வரை அறபிகள் பள்ளிவாசல் கட்டித் திறப்பதற்காக வருவதும் அந்தப் பள்ளிகள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் வாழ்வதற்கு வீடுகள் இல்லாத நிலையில் வாழும் மீனவர்கள் பற்றியதுமான கதை 'ஏமாற்றம்.' 'ஊர் துறந்து' என்ற கதை புலிகளுக்கும் அரச படையினருக்கும் நடந்த ஷெல், மோட்டார் வீச்சில் மரித்தவர்களதும், ஊர் துறந்து அகதிகளாகச் சென்றவர்களதும் கதை. 'நிழலைத் தேடி' என்ற கதையும் இனப் பிரச்சனை காரணமாக ஊர் துறத்தலைத்தான் பேசுகிறது. ஆனால் மூவின மக்களும் எப்படித் தத்தம் தொழிலைச் செய்தபடி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைப் பேசும் ஓர் அருமையான கதை இது.<br /><br />'வாயில்லாப் பூச்சிகள்' வீடற்ற பிற்படுத்தப்பட்ட ஒரு குடும்பம் நிராகரிக்கப்படுவதையும் 'வாழத்துடிப்பவர்கள்' என்ற கதை உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்பும் தத்தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதையும் பேசுகிறது.<br /><br />'அம்மா என்றால் அன்பு' என்ற கதை பாடசாலையில் கொடுக்கும் கஞ்சியை வீட்டிலிருக்கும் தாயாருக்கு எடுத்துச் செல்லும் வறுமைப்பட்ட குடும்பச் சிறுமி பற்றியது.<br /><br /> மூதூரின் நொக்ஸ் வீதிக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்பதை கப்பல் மாலுமியான நொக்ஸின் வருகை தந்ததை வைத்து உண்டாகியிருக்கிறது என்பதை ஒரு கதையிலும் மலை நாட்டில் இருந்த ஜேம்ஸ் என்ற ஒரு வெள்ளைக்காரன் பொழுது போக்குக்காக திருமலை வந்து அங்கேயிருந்த ஒரு பிரதேசத்தில் தெங்குத் தோட்டம் அமைத்ததையும் அதில் கூலிக்கு வேலை செய்தவர்களையும் கதைகளில் குறிப்பிடுகிறார். பொதுவாக எல்லாக் கதைகளிலும் சாதாரண மக்களின் வாழ்வியல் உபைத்துல்லாஹ்வினால் எடுத்துக் காட்டப்படுகிறது. தான் வாழும் பிரதேசம் பற்றிய அவருடைய ஆழமான அறிவு விதந்துரைக்கத்தக்கது.<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-5172642260565498342020-01-13T14:53:00.001+05:302020-01-13T14:53:17.011+05:30கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB7JRAjvtjuAlYHh4GKgt31nDMcHx0uIbk0OONK_FH81L9kE11WeVgth9l6NkEWVq6Z1-xSz45P21wFgsIvHbuCuslcowyYEDnRZ-tUUOGVhIH1XfINo97GtAQPrCGxgoACni6zCAH7mFn/s1600/Solai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="501" data-original-width="700" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB7JRAjvtjuAlYHh4GKgt31nDMcHx0uIbk0OONK_FH81L9kE11WeVgth9l6NkEWVq6Z1-xSz45P21wFgsIvHbuCuslcowyYEDnRZ-tUUOGVhIH1XfINo97GtAQPrCGxgoACni6zCAH7mFn/s320/Solai.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b>கவிஞர் சோலைக்கிளி </b></div>
<div style="text-align: center;">
<br /></div>
இந்தப்பிரதேசத்தின் முக்கியமான படைப்பாளி ஒருவரின் நிகழ்வில் சிறப்புரையாற்றுவதையிட்டுமகிழ்ச்சியடைகிறேன்.<br />
<br />சிறப்புரையாற்றுவது சந்தோசமான ஒரு விடயம்தான். வெளியீட்டுரை, விமர்சன உரை, நன்றி உரை, வரவேற்புரை, போன்று ஓர் எல்லைக்குள் நின்று பேசத்தேவையில்லை. காற்றுமாதிரி அங்கும் இங்கும் அலைந்து பூக்களைப் பொறுக்கிக் குவிக்க வேண்டிய ஒன்றுதான் சிறப்புரை. சிறப்புரை ஆற்றுகின்றவனும், அந்த உரையை நிகழ்த்தும்போது ஆனந்தப்படுவான். நான் ஆனந்தப்படவில்லை! இது ஆனந்தப்படுகின்ற ஒருநேரமில்லை.<br />
<br />
விடிந்தால் என்ன நடக்குமோ என்று எழும்புகின்றோம். விஷக்காற்று வீசி நமது ஈரல்குலைகள் அழுகிப்போய் இருக்கின்றன. நமக்கு உள்ளிருக்கும் குயில் இப்போது பாடுவதை நிறுத்தியிருக்கிறது. நமது மனதின் புல்வெளி கருகிப்போனது. எப்படி சிறப்புறையாற்றலாம்? சிரித்த முகத்தோடுஎப்படி சபையில் பேசலாம்? எப்படி ஆனந்தம் அடையலாம்?<br />
<br />என் அன்புக்குரியவர்களே! அஸ்ரப் சிஹாப்தீன் முக்கியமான ஒரு படைப்பாளி. கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு என்று பல பக்கங்களைக் கொண்டவர். பல பக்கங்களைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பதற்கு நீண்ட காலம் எடுப்பதைப் போல, பல பக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனைப் பற்றிப் பேசுவதற்கும்: அவகாசமும் ஆறுதலான சூழலும் அச்சமில்லாத நிலமையும் நமக்கு வாய்க்க வேண்டும். இன்று இவைகள் நம்மத்தியில் உள்ளனவா? வெள்ளைக் காகிதத்தைக் கசக்கி எறிந்ததைப் போல விஷக்காற்று நம்மை கசக்கி எறிந்து விட்டதல்லவா?. நாம் குப்பையில் உருளுகின்ற கடதாசிகளைப் போல ஆகிவிட்டோம். நம்மை ஏறி மிதித்துக் கொண்டு கால்கள் நடக்கின்றன. கவிஞன் எப்படி இந்தக் காலத்தில்நிலா பார்ப்பான்?. அழுகிய தோடம் பழம் போல நிலவு கண்ணீர் வடிக்கிறது. வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டதே! நான் எப்படி இங்கு சிறப்புரையாற்ற முடியும்? ஆனந்தப்பட முடியும்?<br />
<br />நான் மனமிழந்து போன மனிதனாக இருக்கிறேன். என் அன்றாட வாழ்க்கை கெட்டுவிட்டது. விடிந்தால் வாசலுக்கு வந்து விரிந்திருக்கும் மல்லிகைப் பூவை ரசித்தநான், இப்போது வெயிலேறிய பிறகுதான் வாசலுக்கு வருகிறேன். எதிலும் பிடிப்பற்றுப் போன கூதல் பிடித்த பூனையைப் போல வாசலை முகர்கிறேன். காலையில் மனைவி தரும் தேநீரின் ஆவிபறக்கும் போது இரவு ஏதோ ஒன்று பற்றி எரிந்திருக்கிறது என்ற எண்ணம்தான் வருகிறது. ஒருகிழவனைப் போல மனம் சதாவும் நடுங்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் சுவை குன்றிப் போன ஒரு காலமாக இது இருக்கிறது. பத்திரிக்கைகளைப் பிரித்தால் அனேகமாக எல்லாம் அபத்தமான,அச்சம் தரும் செய்திகளாக இருக்கின்றன. யாருடன் யார் கம்பி நீட்டினான் என்ற இனிப்பானசெய்திகளைப் பார்த்து மகிழ்ந்த எனக்கு, இந்தச் செய்திகளில் சுவை இல்லை. எந்தமணமகனுக்கு எந்த மணமகள் பொருத்தம் என்று பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்ற பகுதியைப் பார்த்து கணித்து மகிழ்ந்த எனக்கு, இப்போது வேலை இல்லை. யாரும் இப்போதுகம்பி நீட்டுவதில்லை. அதைப் பிரசுரிக்க பத்திரிகைகளில் இடமும் இல்லை. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? மேடையில் ஒருகுருவியாக நான் எப்படிப் பறப்பது?<br />
<br /> இதற்குள் நாங்கள் எழுதுவதே ஒரு போராட்டமாக இருக்கிறது. அச்சத்துள் வாழ்ந்து அச்சத்தையே சாப்பிடுகிறோம். அச்சத்தால் ஆடைகட்டுகிறோம். பேனைக்குப் போராட்டம் பிடிக்கும். அதனால் அது சோரவில்லை. நாம் தான் சோர்ந்து விட்டோம். அஸ்ரப் சிகாப்தீன் துணிச்சலான ஒருபேனைக்காரன். இந்தச் சூழலிலும் அவர் நிமிர்ந்து நிற்பவர். வாயால் கதையளந்து பெரியஎழுத்தாளனாக முயற்சிக்காதவர். எழுத்தோடு தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர். அவருடைய மண்ணில் அவருடைய இரண்டு புத்தகங்கள் இன்று வெளிவருகின்றன. சொந்த மண் எல்லோருக்கும் சுவையானது. அதில் ஒட்டும் கொசுக்கள்தான் நாங்கள் எப்போதும். இதில் என்னை சிறப்புரையாற்றக் கேட்டிருக்கிறார்கள். எப்படி சிறப்புரையாற்றுவது? நான் தண்ணீராக ஓடுவது? இப்போது முடியுமா?<br />
<br />நாம் எப்படித்தான் எழுந்து நின்றாலும், உன்னிப் பறக்கும் சிறகுகள் சோர்ந்துவிட்டனவே!. நாம் எப்படித்தான் நம்மை தயார் செய்து எடுத்தாலும் நாமாக நடக்கமுடியாமல் இருக்கிறதே! நமது சோற்றுப் பாத்திரங்களில் காகங்கள் குந்திக் கழிக்கின்றனவே! நமது விளை நிலங்களில் எருதுகள் படுத்து பயிர் செய்ய விடாமல் அழிச்சாட்டியம் செய்கின்றனவே! பன்றி வயற்காரனை வெட்டிவிட்டுப் போகிறது. இரவுகளில் நான் பாடிவைத்துவிட்டுப் படுத்த கவிதையைக் காலையில் தேடினால் காணவில்லை. அது களவு போய் இருக்கிறது. நண்பர்களின் முகங்களில் சிரிப்புகள் போனதைப் போல, என் மேசை வாடிக்கிடக்கிறது. புன்னகைகள் ஊரில் ஒறுத்துப்போய் விட்டன. பதர்கள் உசும்புவதைப்போல மக்கள் உசும்பித் திரிகின்றார்கள். நெல் மணிகள் குறைந்துவட்டன. வயல் செய்தவன் வெறுங்கையோடு வீடு வருகிறான். கவிஞனைப் போல! 'கலவெட்டியில்' பிச்சை கொடுக்கவும் என்னிடம் மகிழ்ச்சி இல்லை. நான் மகிழ்ச்சிக்கு பிச்சை எடுக்கின்ற ஒரு காலம் வந்துவிட்டது. எப்படி நான் சிறப்புரையாற்றுவது? என் கவிஞனை விட்டுவிட்டு நான் தன்னந்தனியே சிறப்புரையாற்ற முடியுமா? அவன் இல்லாமல் எனக்கு ஒரு வாழ்வா?<br />
<br /> அவன்தானே எனக்கு குதிரை. அவனில்தானே எனது பயணமெல்லாம். எனது கவிஞன் காலக் கொடுமையினால் ஆடிப்போய் சின்னப் சின்னப் பிள்ளையைப் போல யோசனையுடன் நகம் கடித்துக் கொண்டிருக்கிறான். துப்பு துப்பு என்று தலையில் அடித்தாலும், துப்புறானில்லையே! அவனை எழுப்புவது சிரமமாக இருக்கிறது. <br /><br />
சிறப்புரை என்றால், சொல்லாத பல செய்திகளை அது சொல்ல வேண்டும். கேட்டிருப்போர் மெய்சிலிர்க்க வேண்டும். சிறப்புரை என்றால் அதில் ஒரு கவர்ச்சி, அதில் ஒரு இனிமை, அதில் ஒரு உண்மை, அதில் ஒரு ஆறு ஓடவேண்டும். சிறப்புரை என்று சொல்லிக் கொண்டு, அதில் ஒரு ஓணானாவது ஓடாமல் உரையாற்ற எனக்குவிருப்பமில்லை.<br />
<br />அஸ்ரப் சிகாப்தீனும் நானும் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக தலைமுடி வெட்டியவர்கள் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் எழுத வந்த காலத்தில்தான் நானும் எழுத வந்தேன். அவர் பேனை வாங்கிய நேரத்தில் தான் நானும் பேனை வாங்கினேன். கடதாசியும் வாங்கினேன். நானும், அவரும் என்ற இந்த இரண்டு மீன்பிடிக்காரனுக்கும் அவரவருக்கென்று தனித்துவமான வள்ளங்களும் வலைகளும் இருக்கின்றன. இது எழுத்தாளன் என்ற மீன்பிடிக் காரனுக்குமுக்கியமானது. அவர் மீன் பிடிக்கும் முறையும் வேறு வேறானது. இதனால் இவர் இந்தக் கடற்கரையில் இப்போதும் தனித் தன்மையோடும் இருக்கிறவர். எனக்கு இந்தத் 'தண்டையல்' காலம் கடந்துதான் பழக்கமானார். சோலைக்கிளி என்ற தண்டையலும், அஸ்ரப் சிகாப்தீன் என்ற தண்டையலும் நாட்பட்டு உறவாகிய 'செம்படவர்கள்.<br />
' <br />எனது மீன்பிடியில் அவர் எந்த இடத்திலும் குறுக்கு வலைபோடவில்லை. என் வலையை வெட்டவில்லை. சிலர் செம்படவர்களாக மீன்பிடிக்க வந்து தங்கள் 'சிறுவால்களை' இழந்ததுதான் மிச்சம். அறுநாக் கொடியும் அறுந்து போனார்கள். அவர்களை அடையாளப் படுத்தும் அளவுக்கு அவர்களுக்கென்று ஒரு தோணி இல்லை. ஒரு வலை இல்லை. கடல் அவர்களை ஏற்கவில்லை. ஓட்டைவலையில் எப்படி மீன் பிடிப்பது? நிர்வாணம் கடலுக்குப் பிடிக்காது. தன்னில் குளிக்க வந்தசிறுவர்களை விரட்டுவதைப் போல கடல் அவர்களை விரட்டிக்கொண்டிருக்கிறது.<br />
<br />எனது இந்த உரை ஒரு சிறப்புரையாக அமையாது விட்டாலும், ஒரு சின்னக் காற்று மாதிரி இந்தச்சபையின் மனதைத் தடவும் என்று நினைக்கின்றேன். உங்கள் அகத்துக்குள் நுளைந்து கிளுகிழனுப்பை ஏற்படுத்தாவிட்டாலும், நகத்துக்குள் நுளைந்து ஊத்தை எடுக்கும் என்று கருதுகின்றேன். அனேகமாக எனது உரைகளை சபையோர் காதுகளுக்குள் வெந்நீர் ஊற்றுபவையாக இருக்காமல் பார்த்துக்கொள்வது எனது பழக்கம். நான் போன பல கூட்டங்களில் சிலர் ஊற்றிய வெந்நீரால்தான் எனதுகாது பொசுங்கியது. அந்த அனுபவம் எனக்குப் பேசுகிறது.<br />
<br />இப்போது நான் அந்தரத்தில்இருக்கிறேன். எனது எதிரிகள் ஏசும் போது சிரிக்கிறேன். அது என்னவென்று விளங்காமல், விளங்காமல் இருப்பது வாழ்க்கைக்கு நல்லதுதான். நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதனாக பெயர் வாங்கலாம் விளங்காமல் இருந்தால்தான். சமுகத்தில் உயர்ந்தும் போகலாம். இந்தச்'செவிடன்'எப்படி சிறப்புரையாற்றுவது?<br />
<br />நீங்கள் கைதட்டுவதே எனக்குக் கேட்கவில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் போய் எனது கேட்கும் திறனை இழந்து வருகிறேன். அதுதான் நான் எந்தக்கூட்டத்திற்கு யார் பேசுகிறார் என்று பார்த்துப் போவது. அண்மையிலும் ஒரு நாவலாசிரியர் என்னை அழைத்தார். நான் போகவில்லை. அங்கு முழங்க இருந்த பீரங்கிகளைப் பார்த்துப் பயந்துவிட்டேன். யுத்தங்களுக்குப் பாவிக்கும் தளபாடங்கள்! நான் மலர் கொய்பவன்தான். மலை உடைப்பவனல்ல. சிலர் மலை உடைக்கிறார்களே கூட்டங்களில்இ ஏன்? மனிதன் இப்படியான நிகழ்வுகளுக்கு வரக்கூடாதென்றா?<br />
<br />இங்கு வந்திருக்கும் உங்களைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. ஒரு பூந்தோட்டத்தைப் பார்ப்பது போன்றே இருக்கிறது. மகிழ்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிகிறது. இது என்னால் உண்டான மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை. உங்கள் அஸ்ரப் சிகாப்தீன் உண்டாக்கிய மகிழ்ச்சியாகவே வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தாளனால் ஊருக்கு மகிழ்சிசி, ஊரால் எழுத்தாளனுக்கு மகிழ்சிசி என்ற நிலை கண்டு நானும் மகிழ்கிறேன். 'பசுமை'இலக்கிய வட்டத்தையும் பாராட்டுகிறேன்.<br />
<br />
இனிய சபையோர்களே! நேரம் போய்க்கொண்டிருக்கிறது. அதுவும் வால் எரிந்து அலறிக் கொண்டிருக்கிறதல்லவா? இவ்வளவு தூரம் இருந்து வந்து, உங்கள் முன் ஒரு சிறப்புரையாற்றாமல் போவது எனக்கும் கவலைதான். முதல் முதலாக நான் கொடுத்த காதல் கடிதத்தை அவள் கிழித்ததைப்போல. <br />நிலா வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இரவுக்குள் சிறு பூச்சியைப் போலஊர்ந்து ஊர்ந்தாவது நான் ஊர் போய்ச் சேரவேண்டும். என் பூச்சி புழுக்களைப் பார்க்க வேண்டும். நான் போகும் போது ஊர் இருக்குமோ தெரியாது! எவன் வெட்டிச் சாய்த்து அதைத் தோளில் சுமந்து போகிறானோ! நான் அறியமாட்டேன்.! போகும் போது வழிகாட்டநிலாவையும் கூட்டிக்கொண்டுதான் போகவேண்டும். பகலிலும் இருட்டுப்பட்ட ஊராகிவிட்டதே நமதுஊர்கள்! அதற்குள் ஒரு சிறப்புரையை ஆற்றிவிடலாமென்றால் முடியாமல்தான் இருக்கிறது. கோழிதான் முக்கி முக்கி முட்டையிடுகிறது. பேச்சாளன் முக்கி முக்கி உரையாற்றலாமா? அது நதி போல ஓடிவரவேண்டுமல்லவா! மழைபோல பெய்து சபையோர் குடைபிடிக்க வைக்கவேண்டும் அல்லவா!<br />
<br />பேச்சு கட்டிப்போனது. அதற்கான காற்று இப்போது இல்லை. மணக்கின்ற காற்றில்தான் மனம் குளிர்ந்து, வார்த்தைகள் துள்ளுகின்றன. காற்றுப் பிழைத்தால் வார்த்தைகளும் சமாதியாகிவிடும். நான் வார்த்தைகளின் எலும்புக் கூடுகளைவைத்துக் கொண்டு எப்படி இங்பு சிறப்புரையாற்றுவேன்? நீங்கள் என்னில் குறை நினைக்கக்கூடாது. நாம் உறவுக்காரர்கள்! அப்படி எடுத்ததற்கெல்லாம் என்னில் குறை நினைக்க நீங்கள் எனக்கு சீதனம் தந்து பெண்னும் தந்த மாமனும் இல்லையே!.<br />
<br />அன்புள்ள சபையோர்களே! நான் உங்களிடம் வந்து கடன் பட்டுக்கொண்டு செல்கின்றேன். காலத்தால் பால்ஒழுகி, நான் நானாகும் போது உங்களுக்கான எனது சிறப்புரையை நிச்சயம் தருவேன். ஒரு புத்தகத்தை படித்து விட்டுத் தருகிறேன் என்று வாங்கினாலும், தராதவன்தான் எழுத்தாளன். இவன் பொய் சொல்லுகிறான் என்று நினைக்க வேண்டாம். நான் அப்படியல்ல! எனது சோற்றுக்குள் தலை முடியையும் பொறுக்கி எடுத்துஇ இது யாருடையது என்று வினவி உரியவரிடம் ஒப்படைப்பவன். எனது சிறப்புரைக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கலாம். காலமும் சரிவரத்தான் போகிறது.<br />
<br />இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமாக இருந்தது? கண் இருந்த இடத்தில் மூக்கும், மூக்கு இருந்த இடத்தில் கண்ணுமா, எப்போதும் மனிதன் வாழமாட்டான். அவை உரிய உரிய இடங்களுக்கு வந்துதான் ஆகவேண்டும். எனது கண்ணும் மூக்கும் உரிய இடங்களுக்கு வந்தவுடன் எனது சிறப்புரையும் வரும். ஒரு பறவையாகவேனும் வந்து நின்றுதான் உங்களின் வாசலில் பேசுவேன். காலம் புரளக்கூடியது. அதை நமது பெருமூச்சுகள் புரட்டிவிடும். நமது சூரியோதயங்களை எவரும் தொடர்ந்து தடுத்துக் கொள்ள முடியாது. இறைவன் எல்லோருக்கும் நீதியானவன். இந்தநம்பிக்கையை நாம் விட்டு விடக்கூடாது. இந்தச் சிறப்புரையை முடிக்கிறேன்.<br /> <br />(04.09.2019ல் ஓட்டமாவடியில் நடைபெற்ற இரு நூல்களின் வெளியீட்டு விழாவில் ஆற்றப்பட்ட சிறப்புரை - எழுத்துத் தொகுப்பு - எஸ்எம். முர்ஷித், தலைவர், பசுமை கலை இலக்கிய வட்டம் - வாழைச்சேனை)<br /><br />
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-43540543757193145152020-01-10T12:14:00.000+05:302020-01-10T12:14:33.168+05:30அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'எனக்குள் நகரும் நதி'<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzLNDsQsoA4DRVJ4DZLfgvbwPokKAXtzKiniUDdR8Iw9uTAI_05eaGMOZGDYQkVPVeTyd54C8B3nbF-Shait37zwfj4dyRU9CTn4YPZ2G8Wupe7gsCXuDuWWFJbwGCOZg3mlfy8b0ai5OC/s1600/Nathy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="840" data-original-width="600" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzLNDsQsoA4DRVJ4DZLfgvbwPokKAXtzKiniUDdR8Iw9uTAI_05eaGMOZGDYQkVPVeTyd54C8B3nbF-Shait37zwfj4dyRU9CTn4YPZ2G8Wupe7gsCXuDuWWFJbwGCOZg3mlfy8b0ai5OC/s320/Nathy.jpg" width="228"> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br></div>
<div style="text-align: center;">
நூல் அறிமுகம் : <b>முஹம்மத் றிழா</b></div>
<br>பத்திரிகைப் பத்திகள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி, அஷ்ரஃப் சிஹாப்தீனின் இரண்டாவது பத்திகளின் தொகுப்பாகும். இவரது முதலாவது பத்திகளின் தொகுப்பாக தீர்க்க வர்ணம் 2009ம் ஆண்டு வெளிவந்தது. இந்த தொகுப்பு பல்சுவை பத்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இந்த பத்தித் தொகுப்பிற்கும் தற்போது வெளிவந்துள்ள பத்தித் தொகுப்பிற்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு. இதனை நூலாசிரியரும் ஏற்றுக் கொள்கிறார். தீர்க்க வர்ணம் பத்தித் தொகுப்பில் இடம்பெற்ற பத்திகள் எல்லோருக்கும் பொதுவானவை. முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விடயங்கள் குறித்தே எனக்குள் நகரும் நதியை நான் எழுதினேன் என்கிறார் அஷ்ரஃப் சிஹாப்தீன்.<br>
<br>இலங்கையில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் தமிழ்மொழி பத்திரிகையான மீள்பார்வைப் பத்திரிகையில் அஷ்ரஃப் சிஹாப்தீன் பத்தி எழுதினார். அவருக்கென தனியான பகுதியொன்றை மீள்பார்வை வழங்கியிருந்தது. அவர் அப்பத்திரிகையில் எழுதிவந்த காலங்களில் அவரது பத்தி எழுத்துகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வந்ததை நான் அறிவேன். மீள்பார்வை பத்திரிகையை தொடர்ந்து வாசித்த அனுபவம் எனக்குண்டு என்ற வகையில் நூலாசிரியரால் எழுப்பப்பட்ட கேள்விகள் முஸ்லிம் சமூக, சமய செயற்பாட்டாளர்களுக்கு நெருடலாக அமைந்திருக்கும் என்பது திண்ணம். அவர் இந்த பத்தி எழுத்துக்கள் மூலம் முஸ்லிம் சமூகம் தன்னை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யுமாறு, தனக்கான மொழியில் அழகுறச் சொல்லியிருப்பார். இது அவருக்கேயான தனித்தன்மை என்று கருதுகிறேன்.<br>
<br>எமது பிரதேச எழுத்தாளர்களில் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களை நான் புரிந்துகொண்டது ஏனைய எழுத்தாளர்களைச் சங்கடத்திற்கு உட்படுத்தும் என்றிருந்தாலும்,அவர்களை விட இவர் வித்தியாசப்படும் புள்ளியை இங்கு பதிவுசெய்துதான் ஆகவேண்டும். இதனை ஏனைய எழுத்தாளர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எனது நம்பிக்கை மனங்கொள்கின்றது. எமது பிரதேசத்தில் 80களில் எழுதவந்த எழுத்தாளர்களுள் எதுவித சோர்வுமின்றி இன்றுவரை எழுதியும் நூல்களை வெளியிட்டும் வருவர் அஷ்ரஃப் சிஹாப்தீன். இந்த மன உறுதி அவரிடம் இருப்பதே என்னை அவர் மீது ஈர்க்க பிரதான காரணமானது. அவரது ஏனைய அனைத்து நூல்களையும் வாசிக்க முடியாது போனது எனது துரதிஸ்டம். அவரது நூல்கள் அனைத்தையும் வாசிக்க முடியாது போனதால் அவர் பயணித்துவந்துள்ள கருத்தியல் தளத்தினை என்னால் ஆழமாக புரிந்துகொள்ள முடியவில்லை. இதனால் இந்த நூல் குறித்தான எழுதுகையை அறிமுகக் கட்டுரையாகவே அமைத்து கொள்ள வேண்டிய நிலை எனக்குள் ஏற்பட்டது.<br>
<br>தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட படைபாளியும் ஒளி, ஒலிபரப்பாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் பன்முக ஆளுமை கொண்டவர். 1978ம் ஆண்டு தினபதி பத்திரிகையின், தினபதி கவிதா மண்டலம் பகுதியில் தனது முதலாவது மரபுக் கவிதையை எழுதுவதன் மூலம் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுத்துலகத்திற்குள் வருகிறார். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து,பயண அனுபவ குறிப்புகள், முகநூல் எழுத்து என்று எழுத்தும் செயற்பாடும் என தன்னை வடிவமைத்துக் கொண்டார்.இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பதன் மூலமும், வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலமும் இலங்கை ஒளி, ஒலிபரப்பாளர் தளத்தில் தனக்கான இடத்தை தடம்பதித்துள்ளார்.<br>
<br>காணாமல் போனவர்கள் (1999), என்னைத் தீயில் எறிந்தவள் (2008),தேவதைகள் போகும் தெரு (2018)ஆகிய கவிதைத் தொகுதிகளையும்,புள்ளி (2007), கறுக்கு மொறுக்கு - முறுக்கு (2009),புல்லுக்கு அலைந்த மில்லா (2009) ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களையும்,விரல்களற்றவனின் பிரார்த்தனை (2013) எனும் சிறுகதை தொகுதியையும்,உன்னை வாசிக்கும் எழுத்து (கவிதை) (2007), ஒரு சுறங்கைப் பேரீச்சம் பழங்கள் (2011), பட்டாம்பூச்சிக் கனவுகள் (சிறுகதை) (2015),யாரும் மற்றொருவர் போல் இல்லை (கவிதை) (2017), வெய்யில் மனிதர்கள் (நாவல்)(2019) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும்,பல்சுவைப் பத்திகளின் தொகுப்பான தீர்க்க வர்ணம் (2009),பயண அனுபவ குறிப்பான ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை (2009),உண்மைக் கதைகளின் தொகுப்பான ஒரு குடம் கண்ணீர் (2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். <br>இவரதுஎன்னைத் தீயில் எறிந்தவள் கவிதை தொகுதிக்கும், பட்டமாம்பூச்சிக் கனவுகள் சிறுகதைத் தொகுதிக்கும் அரச சாஹித்தய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.ஓட்டமாவடி அஷ்ரஃப் எனும் பெயரில் ஆரம்பத்தில் எழுத்திய இவர் பின்னர் அஷ்ரஃப் சிஹாப்தீன் என தனது பெயரை மாற்றி கொண்டார். யாத்ரா எனும் தமிழ் கவிதைகளுக்கான சஞ்சிகையின் ஆசிரியராகவுள்ளார். தற்போது இலக்கிய படைப்புகள் ஒலித் தொகுப்புகளாக வெளிவந்து கொண்டுள்ள சமகாலத்தில் யாத்ரா சஞ்சிகையினை இணைய ஒலிச் சஞ்சிகையாக வெளியிட்டு வரவேற்பையும் பெற்றுக் கொண்டார். நாட்டவிழி நெய்தல் எனும் பெயரில் தனது எழுத்துகளை வலைப்பதிவில்; பதிவேற்றமும் செய்துவருகின்றார்.<br>
<br>யாத்ராவின் பதிப்பதில் வெளிவந்துள்ள எனக்குள் நகரும் நதி பத்திரிகைப் பத்தியை தனது தந்தை வழிப் பாட்டனார் மிஷின்கார லெப்பை என அறியப்பட்ட மீராலெப்பை ஆலிம் அவர்கள் நினைவுக்கு என சமர்ப்பணம் செய்துள்ளார். 26 தலைப்புகளை உள்ளடக்கியுள்ள இந்த நூல் பல்வேறு விடயங்களை பேசுகிறது.<br>
<br>எழுத்துச் சேவை, மொழியாள்கை,மன்னரே முதல்வர், ஒரு நாடகமன்றோ நடக்குது,கோலத்தைச் சிதைக்கும் கோடுகள்,வற்றாத கடலில் ஓயாத அலைகள்,தெற்கே உதித்த சூரியன்,கண்ணுக்குத் தெரியாத கபட வலை,முகத்திரண்டு புண்ணுடையார்,நுணலும் தன்வாயால் கெடும்,மூக்குகளால் சிந்திப்பவர்கள்,குகைவாசிகள்,நடத்தை காட்டும் நல்வழி, நீ சொன்னால் காவியம்,அவனன்றி அணுவும் அசையாது, அடைந்துகொள்ளப்படாத ஆயுதம்,எல்லைக்குள் எட்டப்படா இடங்கள், மூன்று காட்சிகள், வேர்கள் இறக்கும் விதம், அவளுக்கும் அழுகை என்று பெயர், நோன்புக் குழந்தைகள், அஸ்ஸலாமு அலைக்கும், ஆர்ப்பரிக்கும் ஆசை, ஹஜ் - காசாகி நிற்கும் கடமை, உன்புகழ் கூறாத சொல்லறியேன், அனல் ஹக் ஆகிய தலைப்பில் இந்நூல் பேசுகிறது.<br>
<br>எழுத்தாளனின் பற்றிய சமூகப் புரிதல்,ஒவ்வொரு இஸ்லாமிய முகாமும் இஸ்லாமிய சிந்தனைக்கு முழு வடிவம் கொடுக்காது தங்களை முழுவடிவமாக சமூகத்தில் அடையாளப்படுத்தியதால்; ஏற்பட்ட விளைவுகள், அறபிகளின் அரசியல், பழங்காலப் பெருநாள் கொண்டாட்டமும் அதை தடுத்துநிற்கும் நிலமற்ற வாழ்வியலும், பிரிந்துள்ள முஸ்லிம் அரசியலும் தேர்தலின் பின்னரான உறவும், எகிப்திய ரிஹாம்களாக மாறும் மனங்கள், மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் குறித்த பதிவு, போதைப்பொருள் பாவனையும் சமூக சீரழிவுகளும், பௌத்த போதனையிலுள்ள இஸ்லாமிய வாழ்வு, சிக்கலும் பிரச்சினையும் நிறைந்த குடும்ப வாழ்வை திருப்தியாக வாழ்தல், பிள்ளை வளர்ப்பு, வறுமையும் உதவியும், அன்பு கொள்ளச் செய்யும் தாஈ றபீக், கருத்தை ஏற்றலும் மதித்தலும்,மருதூர் ஏ மஜீதின் மஞ்சமாமாவும் நம்மிடமுள்ள புரிதலும், கவிஞர் கா.மு. ஷரீப் என்ற அற்புதமான கவிஞர் குறித்த பார்வை, மஹ்மூத் தர்வீஷின்யூஸூப் (அலை) பற்றிய கவிதை சொல்லும் செய்தி, ரமளான் மாதமும் நகர் வாழ்வும், பாவம் செய்தல், பெண் கல்வி, நோன்பு, சீர்திருத்தம் வேண்டிநிற்கும் குத்பா பிரசங்கம், இலாபமீட்டும் தொழிலாக மாறியஹஜ் கடமை, வைக்கம் முகம்மது பஷீரின் அனல் ஹக் சிறுகதையும் நாமும் போன்ற விடயங்களை பிரதான பேசு பொருளாக்கியுள்ளார் நூலாசிரியர்.<br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJbM6aWxl83WKxJ5CBF_FyS0keVV2Zma332NJVbaIK74aPCo8hTyk1stmfXlzKbVh5hLC8ZFJpyNLMVais6JTYOD5HnYCNvx68o6O-TKrxmHSu75NVZ4oKKVcf8hzVb5CoEGM704Q8I7eP/s1600/Rila.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><b>முஹம்மத் றிழா</b><img border="0" data-original-height="960" data-original-width="960" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJbM6aWxl83WKxJ5CBF_FyS0keVV2Zma332NJVbaIK74aPCo8hTyk1stmfXlzKbVh5hLC8ZFJpyNLMVais6JTYOD5HnYCNvx68o6O-TKrxmHSu75NVZ4oKKVcf8hzVb5CoEGM704Q8I7eP/s320/Rila.jpg" width="320"></a></div>
<br>
</div><a href="http://ashroffshihabdeen.blogspot.com/2020/01/blog-post.html#more">மேலும் படிக்க»</a>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-489013369687454852019-07-23T11:29:00.000+05:302019-07-23T11:29:00.015+05:30Re-Election Of Rizvi Moulavi As ACJU President; Reflects Religious & Moral Bankruptcy Of Muslim Community<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj39RqqQxJvsAUTMZDl58AHTYuaqkrEEmd2IDdKzokO46ieumSGrm168gi77WBdseE_EO-Rd27GLIO_4EorAjPCHewuoRSZOs3l_1I6N3mvhwjlTEFGG2lkE9hpYBdVjP2vXMTq3uZjUpIt/s1600/Rizvi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj39RqqQxJvsAUTMZDl58AHTYuaqkrEEmd2IDdKzokO46ieumSGrm168gi77WBdseE_EO-Rd27GLIO_4EorAjPCHewuoRSZOs3l_1I6N3mvhwjlTEFGG2lkE9hpYBdVjP2vXMTq3uZjUpIt/s320/Rizvi.jpg" width="320" /></a></div>
<br />
The re-election of Rizvi Moulavi, despite his
reputation for frequent controversies and repeated blunders which
caused immense damage to the community, as the president of All Ceylon
Jamiathul Uema,<a href="https://www.colombotelegraph.com/?s=ACJU"><strong><span style="color: #ff6600;"> ACJU</span></strong></a>, reflects the religious and moral bankruptcy of the Muslim community.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvth18rAomIq-6ec_B3e4S7AbeaYfQq6oXLgkIXpFlDGSBoY_Sqp8qH6RV-s9qeJ2DB9tEsSXFn6AD94xYy1Nv1RL56SNGJ3jhJjN44mPaIs0zSG2kNJwXRV49WUvfktpPbPxJ2SVww_1E/s1600/Latheef-Farook-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvth18rAomIq-6ec_B3e4S7AbeaYfQq6oXLgkIXpFlDGSBoY_Sqp8qH6RV-s9qeJ2DB9tEsSXFn6AD94xYy1Nv1RL56SNGJ3jhJjN44mPaIs0zSG2kNJwXRV49WUvfktpPbPxJ2SVww_1E/s320/Latheef-Farook-.jpg" width="320" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<strong><span style="color: #ff6600;">By <a href="https://www.colombotelegraph.com/?s=Latheef+Farook" style="color: #ff6600;">Latheef Farook</a></span></strong></div>
<br />
<br />
<strong><span style="color: #ff6600;"> </span></strong>This was expected as the ACJU has been a one man show, ever since <a href="https://www.colombotelegraph.com/?s=Rizvi+Mufthi"><strong><span style="color: #ff6600;">Rizvi Mufthi</span></strong></a> who, kicked out ACJU President Riyal Moulavi under questionable circumstance 20 years ago and grabbed power.<br />
ACJU is an association of those who have gone through Madarasas. ACJU
has no mandate to speak or act on behalf of the Muslim community as it
was not given this authority by the community.<br />
<div class="code-block code-block-1" style="clear: both; margin: 8px 0;">
<div class="AdCompact" data-google-query-id="CL3kuoypyuMCFZkm4AodgpYH1A" id="ct-ls-01">
</div>
</div>
In <a href="https://www.colombotelegraph.com/?s=Islam"><strong><span style="color: #ff6600;">Islam</span></strong></a>
there is no priesthood. We only have Islamic scholars. There are many
Islamic scholars who are not members of ACJU as they do not have
independent voice on crucial religious matters.<br />
During mid-1920s simple and respected religious men who guided the
community, formed the All Ceylon Jamiathul Ulema. This continued until
Rizvi Moulavi became the ACJU president and began to manipulate to
assert himself as the religious and political leader of the community,
though he is not. Sorry state of affairs<span class="Apple-converted-space"> </span>is such that he tries to play the role of medieval Pope who exercised political and religious powers. <span class="Apple-converted-space"> </span><br />
<div class="wp-caption alignleft" id="attachment_175376" style="width: 326px;">
<a href="https://i1.wp.com/www.colombotelegraph.com/wp-content/uploads/2017/03/ACJU-Rizvi-Mufthi.jpg?ssl=1"></a><div class="wp-caption-text" id="caption-attachment-175376">
<br /></div>
</div>
Today the ACJU is an organization of yes men. No one dare question
the president who has been known for unnecessary controversies even on
issues such as Ramadhan and eid moon sightings. He committed blunder
after blunder exploited by Sinhala racists to distort Islam and mislead
the Sinhalese masses.<br />
<br />
ACJU has always dabbled on issues without consulting the community
and the most serious was that of the halal issue. Muslims had been in
this country for centuries and they had no problems in deciphering what
is halal and haram for them particularly when it comes to food habits.
ACJU made halal issue purely from the commercial angle and that
infuriated the other communities.<br />
<div class="code-block code-block-2" style="clear: both; margin: 8px 0;">
<div class="AdCompact" data-google-query-id="CPLcw4ypyuMCFU6xewodIs8KPg" id="ct-ls-02">
</div>
</div>
Starting from halal certificate issue, women’s face cover which he claimed is compulsory though neither Holy <a href="https://www.colombotelegraph.com/?s=Quran"><strong><span style="color: #ff6600;">Quran</span></strong></a>
or Hadees, (sayings of holy Prophet Muhammad (PBUH,) speaks about it
brought disaster and ridicule the community, failure to reform madrasas
to suit the need of the time within the framework of Sharia, blocking of
reforms to Muslim Marriage and divorce Act and many such issues.<br />
<br />
It is well known that after oil boom US-Israeli controlled Saudi’s spent billions of dollars exporting <a href="https://www.colombotelegraph.com/?s=Wahhabi"><strong><span style="color: #ff6600;">Wahhabi</span></strong></a> Islam to counter the rise of Imam Khomeini and to show that Saudi is the leader of Muslims.<span class="Apple-converted-space"> </span>This
even prescribed different dress codes for Muslims to the dislike of
other communities, particularly in countries where non-Muslims were in
the majority. <span class="Apple-converted-space"> </span><br />
<br />
<sub><span class="Apple-converted-space"> </span></sub>He had 20 long
years to attend to burning issues. However he miserably failed and
wasted time protecting and promoting deviated Tableegh Jamaath, hob
knobbing with shady businessmen and politicians, accused of implementing
oil rich Gulf countries agendas, frequent travel abroad for reasons
only known to him and many more.<br />
<br />
Since independent in 1948 successive governments never interfered in
the religious affairs of the Muslim community. Instead they respected
Muslims’ religious rights. Sinhalese political leaders, civil society
and even monks ,except few racist mercenaries, respected religious
rights and feelings of Muslims so much that<span class="Apple-converted-space"> </span>Buddhist monks appealed to President Sirisena to consult<span class="Apple-converted-space"> </span>Muslims<span class="Apple-converted-space"> </span>before<span class="Apple-converted-space"> </span>banning face cover.<br />
<br />
However ACJU’s callous negligence to attend to these matters made the
government and its mercenaries to interfere in the religious rights of
Muslims. For example today madrasas were brought under education
ministry, President Sirisena banned face cover and marriagble age for
girls fixed at 18 years. Besides ever since Easter Sunday massacre
Maithri-Ranil government has unleashed a vicious campaign against
Muslims striking at their very survival as a community.<br />
<br />
Despite the government’s failure to prevent mob attacks on Muslims in
the North East, Kurunegala and Nikaqwaratiya and other areas and the
sufferings of Muslims, Rizvi Moulavi attended President Sirisena’s iftar
party on 3 June-the day the frightened Muslims in and around Kandy
forced to remain closed doors and break Ramadan fast due to growing
tension built up by the drama of so-called fast to death undertaken by <a href="https://www.colombotelegraph.com/?s=Athuraliye+Rathana"><strong><span style="color: #ff6600;">Authuraliye Rathana</span></strong></a> Thera who is in the forefront in the hate Muslim campaign. <span class="Apple-converted-space"> </span><br />
<br />
Muslims throughout the island were furious but were helpless to
prevent this humiliation. The list of Rizvi Moulavi’s blunders is long.<br />
<br />
Muslims have nothing to do with <a href="https://www.colombotelegraph.com/?s=Easter+Sunday"><strong><span style="color: #ff6600;">the Easter Sunday Massacre</span></strong></a>.
However the government and its mercenaries unleashed a campaign of
persecution which has caused considerable damage to this peaceful and
peace loving community.<br />
<br />
It has now become clear that this anti-Muslim campaign is a well-planned conspiracy<span class="Apple-converted-space"> </span>involving
the government and opposition combined, racist monks, racist media,
racist bureaucracy, racist businessmen and others hell bent on crushing
Muslims.<span class="Apple-converted-space"> </span><br />
<br />
Vicious and calculated <a href="https://www.colombotelegraph.com/?s=anti-Muslim"><strong><span style="color: #ff6600;">anti-Muslim</span></strong></a>
media campaign since April 21 had done tremendous damage poisoning
Sinhalese minds against Muslims. Organized racist thugs were given free
hand and this culminated in the violence against Muslims in the North
East and Kurunegala district especially Minuwangoda.<span class="Apple-converted-space"> </span><br />
<br />
Muslim houses, business establishments, hotels and other such places
were burnt during curfew hours while an innocent fasting Muslim was
chopped to death and another battered Muslim man was dragged in the
street to hospital where he died.<span class="Apple-converted-space"> </span><br />
<br />
According to reports President Sirisena was aware of these attacks,
but failed to prevent. Instead he left to china to attend an
insignificant conference. Most of the attackers were freed on bail and a
notorious thug known for his violence against Muslims in Digana last
year was garlanded and taken in procession.<br />
<br />
Today the situation is such, as pointed out by a columnist, that
“Life has become a nightmare in their ordinary day to day living and
virtually changed every aspect of life in the island’s Muslim
population. Harassment, discrimination and a well-orchestrated hate
campaign has been taking shape in the public domain, demonizing,
alienating and foistering a besieged mentality towards Muslims.<span class="Apple-converted-space"> </span>Racism
has found a new meaning in Sri Lanka and everything Muslims are being
targeted. There is total harassment of Muslims in public places, buses
and trains, taxis and even in work places<br />
Sinhala lawyers refused to appear for Muslims taken into custody,
doctors refused to treat Muslim women insisting that they remove their
head scarves, Muslim shops were boycotted, a pradeshiya sabah chairman
prevented Muslim from trading in the market, some temples began advising
Buddhists not to deal with Muslims and this ostracization continues
unabated while US-European- Israeli war mongers’ <a href="https://www.colombotelegraph.com/?s=Islamophobia"><strong><span style="color: #ff6600;">Islamophobia</span></strong></a> brought to the island pushed Muslims to the wall.<br />
The ongoing campaign is so vicious that a Muslim company which
provided daily free meals to around 3000 – breakfast-lunch and dinner –
to cancer hospital patients and visitors cancelled this generosity due
to adverse comments.<span class="Apple-converted-space"> </span><br />
<br />
In this tense atmosphere, tearing apart the communities, came the shocking call by<b><i> Ven. Warakagoda Sri Gnanarathana Thera, the incumbent Mahanayake of the Asgiriya Chapter, </i></b>for
stoning to death of Muslims and urging Sinhala Buddhists to refrain
from frequenting Muslim-owned shops and consuming food offered by
Muslims. <span class="Apple-converted-space"> </span><br />
<br />
The community is passing through the worst ever crisis in its more
than a thousand year history since the Easter Sunday massacre. Powerful
local and international anti-Muslims forces have got together plotting
and conspiring against Islam and Muslims. <span class="Apple-converted-space"> </span><br />
<br />
Under the circumstance<span class="Apple-converted-space"> </span>the pressing need<span class="Apple-converted-space"> </span>is to thoroughly overhaul<span class="Apple-converted-space"> </span>the ACJU with respected scholars who could guide the community in keeping with the teachings of Holy Quran, work<span class="Apple-converted-space"> </span>for the<span class="Apple-converted-space"> </span>interest of the community and the country, help bring communities together, win<span class="Apple-converted-space"> </span>the<span class="Apple-converted-space"> </span>respect and confidence of the community and others, stop hob knobbing with<span class="Apple-converted-space"> </span>embassies and implementing their evil designs on the community<span class="Apple-converted-space"> </span>and use the Friday Juma<span class="Apple-converted-space"> </span>sermons to educate Muslims on current issues.<br />
<br />
In this darkest of dark hour there is a pressing need for the Muslim
community, especially the civil society, to do some stock taking, undo
past mistakes and reorganize the community to join hands with the
Sinhalese and Tamil communities<span class="Apple-converted-space"> </span>to face the emerging challenges.<br />
<br />
Failure to do so means endless disaster as evil forces are fully active.<br />
Racist politicians and their mercenaries may shout from roof top and
resort to violence against minorities to retain or grab power. The
reality is that Sinhalese, Tamils, Muslims and all other citizens of
this country need to live together if we are to progress.<span class="Apple-converted-space"> </span><br />
<br />
<span class="Apple-converted-space">Thanks to -</span><br />
<span class="Apple-converted-space">https://www.colombotelegraph.com/index.php/re-election-of-rizvi-moulavi-as-acju-president-reflects-religious-moral-bankruptcy-of-muslim-community/?fbclid=IwAR1vgP2xd9pAhJIyMhyLIfSekjmcHU3GliWYrrGBoAMCpTxM1W2-TXlpMUI </span><br />
<br /><div class="widget widget_text" id="text-70">
<div class="textwidget">
<div class="AdCompactsidebar" data-google-query-id="CPLS2IypyuMCFZQr4AodfMgMJA" id="ct-rs-02">
</div>
</div>
</div>
<div class="eltd-column2">
<div class="eltd-column-inner">
<br />
</div>
</div>
</div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-57233612863478022952019-06-29T11:12:00.000+05:302019-06-29T11:13:29.672+05:30 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3944Z1UFm3HjgNSRwbHBbDZ_ONx3bMjmg74gRp6p6c0Hq-waGh8V4a4P-leeEoCjvFqtpssLGQuX4nqpGqbX1E8kIhg_fdSvZArVsqRuoHmmvmrbaydmzAFkfvBcqy-l7EQ6QOSshJ-3V/s1600/SUNANDHA.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="249" data-original-width="249" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3944Z1UFm3HjgNSRwbHBbDZ_ONx3bMjmg74gRp6p6c0Hq-waGh8V4a4P-leeEoCjvFqtpssLGQuX4nqpGqbX1E8kIhg_fdSvZArVsqRuoHmmvmrbaydmzAFkfvBcqy-l7EQ6QOSshJ-3V/s1600/SUNANDHA.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b> சுனந்த தேசப்பிரிய</b></div>
<br />
<br />
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலானது இலங்கை சமூக அரசியலில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்று வெடித்த குண்டுகளின் அதிர்ச்சி இலங்கையில் ஓயாத அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.<br />
<br />
பாதுகாப்பு தொடர்பாக சோடிக்கப்பட்டு வரும் கதையாடல்களால் பொதுவாக நாடே பீதியில் உறைந்துபோயுள்ளது. இதில் குறிப்பாக முஸ்லிம் சமூகமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானமே வெட்கித் தலைகுனியுமளவுக்கு முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று நாட்டில் தலைதூக்கி யுள்ளது.<br />
<br />
ஜேர்மன் நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிய பாஸிசவாதிகளுக்கெதிராக அந்நாட்டில் தலையெடுத்த எதிரிகளை அடக்குவதற்கு பாஸிஸ்டுகளாலும் இதே பாணியிலான வெறித் தனமான அடக்குமுறைகளே கையாளப்பட்டன. இலங்கையிலும் இன்று இதே நிலையே உருவாகியுள்ளது. இந்த காட்டுமிராண்டிக் குழுவின் பின்னால் இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும் துணைபோய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தேசத்துரோகிகள் என்று இப்போதே இனம்காணப்பட்டுள்ளார்கள்.<br />
<br />
எந்தக் குற்றச் செயலும் புரியாத டாக்டர் ஷாபியை தூக்கிலிடும்படியான போராட்டங்கள் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டுள்ளன. இரத்தினபுரியில் எத்தகைய முறைப்பாடுகளுமின்றி இரண்டு முஸ்லிம் வாலிபர்களுடன் கைது செய்யப்பட்ட சிங்கள வாலிபரை ஐந்து நிமிடங்களில் விடுவிக்கும்படி பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸுக்கு சவால் விடுத்துள்ளார். அவ்வாறு வெளிவிடுவதற்குக் கோரியிருப்பது கொலை செய்வதற்கென்றே குறித்த வாலிபரின் தந்தை கூறியிருக்கின்றார். சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ரதன தேரருக்காக வீதியில் இறங்கி திரண்டிருந்தோர் முஸ்லிம் வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.<br />
<br />
முஸ்லிம் சமூகத்தால் சிங்கள சமூகத்திற்கு பேராபத்து விளைவிக்கப்படுவதாக போலிப்பிரசாரமே இதுவரையும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மலடாக்கும் வில்லைஇ கருத்தடை போன்ற பீதியூட்டும் பிரசாரமே முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் உச்ச கட்டமாக சிங்கள பௌத்த தாய்மார்கள் 4000 பேர் மகப்பேறு கிடைக்காத வண்ணம் மலடாகச் செய்துள்ளதான பொய் முறைப்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. இது மற்றுமொரு கறுப்பு ஜுலைக்குத் தூபமிடும் நாசகாரச் செயலாகும். 1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரையும் சமூக விரோத காடையர் கூட்ட பரம்பரையொன்று இருந்து வருவதையே இது உணர்த்துகிறது. கறுப்பு ஜுலையின் விபரீத விளைவுகள் குறித்து சிங்கள சமூகம் இது வரையும் சுயவிசாரணை செய்யத் தவறியதன் விளைவே இதற்குக் காரணமெனலாம். இலங்கை மக்கள் இதற்கு முன்னர் கண்டிராத அளவுக்கு இன மத வெறி தலைக்கேறி மதம் சமூகம் என்று மக்கள் துருவங்களாக்கப் பட்டுள்ளனர்.<br />
<br />
இதனால் நாட்டின் இன்றைய சமூக அரசியல் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கத் தவறிய பொலிஸ்இ இப்போது முஸ்லிம் விரோத நிறுவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />
<br />
அதி முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த வழிபாட்டிடங்களுக்குத் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் கிடைத்திருந்தால் பொலிஸாரும் அரச உயர்மட்டத்தினரும் வேறு விதமாகச் செயற்பட்டிருப்பார்களல்லவா? பொலிஸார் சிறுபான்மையினர் விடயத்தில் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர்.<br />
<br />
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு குளியாப்பிட்டியிலிருந்து வாரியப்பொல வரையில் பரவிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை முன்னரே தடுத்து நிறுத்துவதற்கு அரசு எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கத் தவறியுள்ளது. அது மட்டுமல்லஇ இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சாட்சிக்கமைய மனிதாபிமானமற்ற வன்முறையாளர்களுக்கு பொலிஸாரும் துணை போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குழப்பக்காரர்கள் நால்வர் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டோரும் இணைந்தே பொலிஸார் பார்த்திருக்கையில் குளியாப்பிட்டி பள்ளிவாசல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.<br />
<br />
கப்பல் சுக்கான் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடையுடன் காணப்பட்ட மகியங்கனையைச் சேர்ந்த பெண்இ சிங்கள யுவதியென்றால் பொலிஸார் எவ்வாறு செயற்பட்டிருப்பார்கள்? சின்னம் தொடர்பில் தெளிவு ஏற்பட்ட பின்னர் விடுவித்திருப்பார்கள் அல்லவா? மினுவாங்கொடையில் காட்டு மிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் நபர் மரணத்துடன் போராடிக்கொண்டிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளுடன் பொலிஸாரும் கூடவே அவரின் உடலை தரைவழியே இழுத்துச் சென்றார்களல்லவா? அந்நபர் ஒரு சிங்களவராக இருந்தால் பொலிஸார் இப்படி நடந்து கொள்வார்களா?<br />
<br />
இலங்கையில் முஸ்லிமாகப் பிறப்பது பெருந்தவறு என்று எண்ணுமளவுக்கு முஸ்லிம் என்பதால் இம்சைக்குள்ளாகும் சம்பவங்கள் தொடரவே செய்கின்றன.<br />
<br />
முஸ்லிம் பெண்களுக்கு புர்காவையும் நிகாபையும் தடைசெய்த அரசாங்கம் அதனைத் தொடர்ந்து சகல அரச பெண் ஊழியர்களும் சிங்கள பெண்மணிகள் அணியும் சாரி உடுத்து வேலைக்கு வர வேண்டும் என்று பணிப்புரை விடுத்துள்ளது. அரச நிறுவனங்களுக்கு வரும் சகல பெண் ஊழியர்களும் சாரி அணிந்தே வர வேண்டும் என்றும் சுற்றுநிருபம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் எழுந்த எதிர்ப்பினால் அந்த சுற்றுநிருபமும் வாரிச்சுருட்டப்பட்டது? இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது முஸ்லிம்களை மட்டம் தட்டுவதற்காக எல்லா வழிகளிலும் எத்தனம் நடக்கிறது என்பதுதான் தெளிவு.<br />
<br />
தற்போது இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியாக அநீதி இழைக்கும் முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. டாக்டர் ஷாபி ஆளுநர்களாக இருந்த ஹிஸ்புல்லாஹ் அஸாத் சாலி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோருக் கெதிராக பொலிஸார் நடந்துகொள்ளும் முறைமையை இதற்கு உதாரணமாகச் சுட்டிக் காட்டலாம். சாட்சிகள் ஏதும் இல்லாமல் அடிப்படைவாதிகளின் கோஷங்களுக்காக வேதான் இவர்கள் விடயத்தில் பொலிஸார் செயல்படுகிறார்கள். ஷாபி கைது செய்யப்பட்டதன் பின்னர் தான் அவருக்கெதிரான முறைப்பாடுகள் குறித்து கோரிக்கை விடுக்கின்றனர். இதே போன்றுதான் மேற்படி அரசியல்வாதிகளுக் கெதிரான முறைப்பாடுகளையும் கேட்டு கால அவகாசம் வழங்குகிறார்கள். உலகில் எந்தவொரு ஜனநாயக நாடுகளிலும் காணப்படாத புதுமையான சட்ட முறைமையே இங்கு கையாளப்படுகிறது.<br />
<br />
பல்வேறு முறைப்பாடுகளும் சுமத்தப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்களான ஹேமசிரி பெர்ணாந்து கோதாபய ராஜபக் ஷ ஆகியோரை கைது செய்து முறைப்பாடுகளைத் தெரிவிக்கும்படி கோரிக்கை விடுக்காதது அவர்கள் சிங்கள பௌத்தர்கள் என்பதனாலா?<br />
<br />
முஸ்லிம் விரோத அரசியலின் உச்சபட்ச சட்டத்தை ரதன தேரரின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தியது. ரத்ன மற்றும் ஞானசாரர் போன்ற அடிப்படைவாத பிக்குகளும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் சிங்கள பௌத்த அரசியல் வாதியான சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் ஒன்றுபட்டு முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கெதிராக எழுப்பிய கோஷத்திற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் அடிமைப் படும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசாங்கத்தின் இத்தோல்வியை தனிப்பட்ட ரீதியில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் வெற்றிகொள்ள முடிந்துள்ளது. கட்சி வேற்றுமை பாராது அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசாங்கத்திலிருந்து பதவிகளைத் துறந்ததன் மூலம் வெற்றிவாகை சூடியுள்ளனர்.<br />
<br />
முஸ்லிம்களுக்கெதிராக தாக்குதல் நடத்தியோர் எத்தகைய தராதரமும் பாராது தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஒரு மாதத்திற்குள் விசாரணை நடத்தி தீர்த்து வைக்கும்படியும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு தம் செய்தியை எத்தி வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பலம்வாய்ந்த இஸ்லாமிய நாடுகளின் அமைப்பும் அறிக்கையொன்றை வெளியிட்டு இவர்களது கோரிக்கைக்கு உரம் சேர்த்துள்ளது.<br />
<br />
பித்துப் பிடித்த சிங்கள பௌத்த அரசியல்வாதிகளால் தூண்டப்படும் முஸ்லிம் விரோதப் போக்கினால் பெருமளவில் முஸ்லிம்கள் மீதான கலவரம் வெடிக்குமானால் சர்வதேச ரீதியில் இலங்கை மிகவும் பாரிய நஷ்டஈட்டை செலுத்தவேண்டி வரும். சுமார் பத்து இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் இதுவே பிரதான பங்கு வகிக்கிறது. அத்துடன் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு ஏற்கனவே உள்ள அவப்பெயர் மேலும் சீர் கெட்டுப் போவதற்கும் இது வழிவகுத்துவிடும்.<br />
<br />
தேசிய ரீதியில் இந்நாட்டில் முஸ்லிம்கள் மூன்றாவது சமூகமாக இருந்து எத்தனை இன்னல்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? வன்முறைக் கொடுமைகள் மட்டுமல்லஇ முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் நுகர்வுக்கான தடை ஹலால் சான்றிதழ் இல்லாமலாக்கல் பர்தாவுக்கான தடை முஸ்லிம் சர்வகலாசாலை மாணவ மாணவிகளுக்கான விடுதிகள் வழங்காமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதத்திற்கு உடந்தையானவர்கள் என்று ஊடகங்கள் ஊடாக புகைப்படத்துடன் காட்சிப்படுத்தல் முஸ்லிம் வைத்தியர்களை நாடாது சிங்களவர்களைத் தடுத்தல் – இத்தகைய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வரும் சமூகம் தொடர்ந்தும் தலைகுனிந்து கொண்டிருக்குமா?<br />
<br />
இந்நாட்டு முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. அத்துடன் சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாதம் தொடர்பாக முஸ்லிம்கள்தான் முறைப்பாடு செய்துள்ளார்கள். ஐ.எஸ். பயங்கரவாதத்தை இந்நாட்டு முஸ்லிம்களிடமிருந்து பிடுங்கியெறிவதற்குஇ சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளின் குரல்களுக்கு தலைசாய்ப்பதன் மூலம் சாதித்துவிட முடியாது.<br />
<br />
முஸ்லிம்களுக்கு சமமான அந்தஸ்தை வழங்கிஇ அவர்களும் உரிமையோடு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமே சாதிக்கவேண்டும்.<br />
<br />
விடயம் இவ்வாறிருக்கையில் முஸ்லிம்களுக்கு சமஉரிமைஇ பாதுகாப்பு வழங்குவதில் ஜனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறவே தவறியுள்ளனர். ராஜபக் ஷ ரதன தேரர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கி நிலைமையை மேலும் உக்கிரமடையவே வழிசெய்கின்றனர். முஸ்லிம் எதிர்ப்பு மேலும் பற்றியெரிவதற்கு ரதனஇ ஞானசாரஇ மெல்கம்இ சம்பிக்க ஆகிய நால்வரும் மேலும் எண்ணெய் வார்த்து ஜனாதிபதி தேர்தலிலே கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இனங்களுக்கிடையேயான சமநிலை மற்றும் நேர்மைப் பண்புகளை நிலைநாட்ட வேண்டிய சவாலையே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ளது. இனவாதஇ வன்முறை அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும். இவற்றிலிருந்து நாம் வெற்றி கொள்ளத் தவறுவோமானால் நாடு என்ற வகையில் இலங்கையும் படுநாசத்தில் தள்ளப்படும்.<br />
<br />
இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது எவரது அரசியல் களியாட்ட வண்டியிலோ அல்லது பென்ஸ் வண்டியிலோ ஏறுவதா? அல்லது எங்களுக்கென்ற சுயாதீன வண்டியொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதா?<br />
<br />
(From Face book page of AL Thavam) <br />
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-91341950410154447282019-05-16T23:48:00.002+05:302019-05-17T19:56:29.549+05:30அலையழிச்சாட்டியம் - சிறுகதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI1n29zWq1DkABv3h-9ms1Ow8d4ZbRfzdmJWQzdS0EmMAdSIeY_5rphiumrqjFOQ7UGc5dKGW25q7hbmjWn1c2CSO8bQn3NQS0N6ZvWa8oI1XOpekiFD-ENWYog58oFqPb3uqHaktQeJKp/s1600/alaiya.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="690" data-original-width="866" height="254" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI1n29zWq1DkABv3h-9ms1Ow8d4ZbRfzdmJWQzdS0EmMAdSIeY_5rphiumrqjFOQ7UGc5dKGW25q7hbmjWn1c2CSO8bQn3NQS0N6ZvWa8oI1XOpekiFD-ENWYog58oFqPb3uqHaktQeJKp/s320/alaiya.jpg" width="320"></a></div>
<h2 style="text-align: center;">
அலையழிச்சாட்டியம்</h2>
<div style="text-align: center;">
<br></div>
<div style="text-align: center;">
<b>- அல் அஸூமத் - </b></div>
<br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBSwXx-KC_rdlLQc0Zaj8Jm_P2oZfgxNAlIKDcy3KTvDBut5R8O6pLVWBSCC4ET02yzQRyY0D4blVbzitHthlC7UZps0PWKvvXqhH8xKonrjWVX5U8ihbqFMP9TEV59Juc6BkyGQ306XjP/s1600/Asoomath.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" data-original-height="675" data-original-width="900" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBSwXx-KC_rdlLQc0Zaj8Jm_P2oZfgxNAlIKDcy3KTvDBut5R8O6pLVWBSCC4ET02yzQRyY0D4blVbzitHthlC7UZps0PWKvvXqhH8xKonrjWVX5U8ihbqFMP9TEV59Juc6BkyGQ306XjP/s320/Asoomath.jpg" width="320"></a> சுவர் மீது கடமை நோன்பு கிடக்கும் மணிக்கூடு, 'நான் ஏழாகி விட்டேன்' என்று என்னை அடித்தெழுப்பியது.<br>
<br>
குடல் மூச்சுடன் எழுந்து கட்டில்மீது இருந்த போது, மனைவி தேனீருடன் அண்மி நின்றாள்.<br>
<br>
'போய்க் கொலைக்காட்சியை - அட, தொலைக் காட்சியைப்போடு' என்று பணித்தது காட்சியவா.<br>
<br>
ஓர் ஆங்கிலப் பாடலின் முன்னிசைக் களவில், சுடலைப் பேய்களின் அச்சுறுத்தும் குரலில், 'ஷேடம், ஷீடம், ஷாடம், ஷூடம், ஷேடம், ஷீடம், ஷாடம்,ஷூடம்' என்று வையத்தை உருட்டி 'விஷேடம் டீஈஈஈஈஈஈஈஈஈஈ வீஈஈஈஈஈஈஈ' என்ற இழுப்போடு தமிள் நிகழ்ச்சி தொடங்கியது.<br>
<br>
ஓர் ஓலை விரிய, 'இன்ரு நமதே' எனப் பெண் குரல் அறையப் பொழுதறிவித்தல் நடந்து முடிய, அதே பெண் குரல் ஓர் அரிய அறிவுரையையும் திணித்தது.<br>
<br>
இன்னொரு முறையும் 'ஷேடம், ஷீடம்' உருண்ட பிறகு, 'நியூஸ்ஸெய்தி' இடம் பெற்றது.<br>
<br>
'வன்கம்! முத்லில் தலிப்பு செய்திகள்,' என்றவாறு வேறொரு பெண்மணி எழினியில் முறைக்க, 'சி.பி.ம.நரசிம்ம ராவி' எனப் பெயர் காட்டப்பட்டது. <br>
<br>
தலிப்பு செய்திகள் வேறொரு பெண் குரலில் காட்சிகளுடன் தோன்றின:-<br>
<br>
'தலிப்பு செய்திஹால். மென்னாரிலிருந்த கெல்முனைக்கு கெருவாடு கொண்டு செல்லும் எனுமதியை எரசாங்கம் தடி செய்திருப்பதாக ஸ்வாதாரமிச்சர் அரிவித்தார்.'<br>
<br>
தெலுங்குப் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இடை வெட்டி, 'அக்கிய தேஸ்ய கச்சிப் பிரைநிய்கல் வவனியா பணயம் - பயணம்!' என்றார்.<br>
<br>
'நிலையத்தை மாற்றித் தொலையடா!' என்று சீறியது எனது தமிழ்.<br>
<br>
'கட்டுப்பெட்டிச் சனல்' பிடிபட்டது.<br>
<br>
'.... மதர்லேண்டில் நடக்கவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நெதர்லேண்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, நம்நாட்டு அரசாங்கக் கட்சியே பெரும் பான்மை பெற்றிருப்பதால், நெதர்லேண்டுக்கே வந்து ஆட்சி அமைக்கும் படி அந்நாட்டு அரசாங்கம் வேண்டியிருப்பதாக அறிய வருகிறது. உலகிலேயே அதிக மகிழ்ச்சி யுடன் சிறுபான்மையினர் வாழும் நாடு இலங்கைதான் என்று :பிரிட்டிஷமேரிக்க ஜனாதிபதி :புஷ்பிளேயர் ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்திருக்கிறார். இலங்கையில் மொழிப் பிரச்சினையோ இனப்பிரச்சினையோ பயங்கர வாதப் பிரச்சினையோ இல்லை என்றும், இங்கே உள்ள தெல்லாம் வட - கிழ - தென் பிரச்சினையே என்றும், இந்தத் திசைப் பிரச்சினையை ஊட்டி வளர்க்கும் 'நோவே'ப் பிரதி நிதிகளை உலகத்தை விட்டே துரத்த வேண்டும் என்றும், சகல உரிமைக் கட்சியும் கொள்கை விடுதலைக் கட்சியும் கூட்டறிக்கை விட்டிருக்கின்றன - மன்னிக்கவும், விட்டிருக்கிறது.<br>
<br>
'என்ன தலையிடியா?' என்று நகைத்தது உள்ளுணர்வு. 'வானொலியிடம் புகலடைந்து பார்!' என்றும் அறிவுறுத்தியது.<br>
<br>
காட்சிக் கருவியின் எரிச்சலால், 'விஷேடம் எஃபெம்' சிறிதே வன்மையோடு திறந்து கொண்டது. 'கெடுகுறிமணி'யின் கொலைக் குரல் வெடித்ததோடு, அடுத்த அறையில் உறங்கிக் கிடந்த எங்களின் குழந்தை மகள் அச்சத்தோடு வீறிட்டாள்!<br>
<br>
'ஐயோ புள்ள.....' என்று நிலைகுலைந்து ஓடிய மனைவியோடு நானும் ஓடினேன்.<br>
<br>
அழமுடியாது மூச்சடைக்க நடுங்கிக் கொண்டு கிடந்த செல்வத்தை வாரியெடுத்த அவள், ..தங்ங்ங்கம்... தங்ங்ங்கம்... இல்லடா... ராஜா... ம், ம், ம்ம்ம்...' என்றெல்லாம் தோளில் கிடத்தி முதுகில் தட்டி ஆறுதற் படுத்தினாள்.<br>
<br>
'அந்த எழவு சனியன் ரேடியோவ நிப்பாட்டித் தொலைங்களேன்பா!' என்று கெடுகுறி மணியை வெல்லும் பேய்க்குரலில் மனைவி என்மீது பாய்ந்தாள்!<br>
<br>
அந்தப் பாய்ச்சலை முன்னறியாதிருந்த நிலையில் நான் போய் அந்த இழவுமணியனைக் குறைத்த பிறகு இவளுடைய வசவு இன்னும் நன்றாக என்னை எரித்தது:-<br>
<br>
'மனுசங்க மாதிரியாப் பேசுறானுங்க! வெசம் புடிச்சிப் போயில்லியா அலறிக்கிட்டுச் சாஹ்றானுங்க.... ...ச்சீ!... .....அம்ம்ம்மா... அம்ம்ம்மா, இல்லடா தங்கம்| ஒங்கள ஒண்ணுமே சொல்லல ராஜாத்தி!... புள்ள பயந்து கியந்து நோய்கீய் புடிச்சிக்கிட்டா இவிய்ங்களா வந்து பாப்பாய்ங்க.. அஞ்சே அஞ்சி பாட்ட வச்சிப் போட்டுக் கிட்டு நாள் பூரா அஞ்சடிச்சிக்கிட்டுக் கிடக்கிறானுங்க| என்னத்தையோ அடச்சிக்கிட்டு அவனுங்க கத்துறத வீடான வீட்டில போட வேணாம்னா இந்தாளு கேக்கவா செய்யிறது? காலங் காத்தாலேயே கருமாதி வீடுமாதிரி!...'<br>
நாளேடுகளில் செய்திகளை மேலெழுந்தவாரியாகவாவது அறியலாம் என்றுதான் வானொலியை மூடாமல் இவளது வாயையும் மூடமுடியாமல் நிலத்தைப் போலிருந்தேன். கெடுகுறிக் கத்தல் நின்றதோடு வழவழத்தார் நாளேடுகளோடு வந்தார்:-<br>
<br>
'வணகம்!... மீண்டும் ஒரு ... அதாவது இன்றைய இனிய நாளுக்காக... உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!... ' என்று தொடங்கினார் உமிழ்நீர் வழவழத்தார். 'அதாவது இப்போது பத்திரிகைச் செய்திகள் இடம்பெறுகிறது. இன்ரு - அதாவது முப்பத்தி ஐந்து அதாவது முப்பது -ஐந்து - இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டாம் ஆகிய இன்ரு வெளிவந்த... பத்திரிகைகளில் ... அதாவது நாளேடுகளின் முக்கிய அதாவது பிரமாத அதாவது பிரதான செய்திகளை உங்களுக்கு... தர... தயாராகின்றோம். அதாவது நீங்கள்... வீட்டிலிருந்தபடியே இன்ரும் பத்திரிகை கேட்கலாம்! இன்ரைய பார்வைக்காக... ஏராளமான நாளேடுகள்... அதாவது பத்திரிகைகள் வந்திருக்கிறது. வீரகரணம், தினகரணம், கரணக்குரல், கரணச்சுடர் ஆகிய நான்கு பத்திரிகைகள் மட்டுமே இன்ரு எமக்கு... கிடைத்திருக்கிறது. முதலாவதாக வீரகரணம் பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்;. அந்த வகையில், இதன் முக்கிய - பிரதான - தலைப்பு.... செய்தியாக, ஒரு படைவீரர் ஒருவரின் ஒரு துப்பாக்கி ஒன்ரு.... தானாகவே வெடித்ததில் அதாவது தற்செயலாக வெடித்ததில், முப்பத்தி இரண்டு பேர் மரணம்.... நாப்பத்தி ஐந்து பேர் படு...காயம் என்ரு ஒரு முக்கிய தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது. அதைப் போலவே அரிசி விலை... பன்னிரண்டு மடங்கு குறைந்திருப்பதாகவும் எரிபொருள் அதாவது பெட்ரோல், டீஸல், மண்ணெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றின் விலை பதினேழு மடங்கு கூடியிருப்பதாகவும் ஒரு முக்கிய செய்தி - பிரதான செய்தி பெட்டி கட்டி வந்திருப்பதாக தெரிகிறது.... இன்னும் அதைப் போலவே, ....ம்.... அதைப்போலவே, பிரபல மந்திரி அதாவது பிரதம் மந்திரி சவ்தி அரேபியா வுக்காக ஒரு... ஒரு உள்நாட்டுப் பயணத்தை... அதாவது வெளிநாட்டு விஜயத்தை... கடைப்பிடித்திருப்பதாகவும் ஒரு முக்காத அதாவது முக்கியமல்லாத செய்தி இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. உபதலைப்பில் அதாவது தலைப்புக்கு... கீளே, சிறிய எளுத்தில், 'கைலஞ்சம் அதாவது கைலஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பிடிப்பதற்காக.... கணனி வெடி அதாவது கன்னி வெடி வாங்குவதற்காக' என்றும் வந்திருக்கிறது. அதைப் போலவே, இம்முறை விசகம் அதாவது வீசாகம் பெருநாளை அதாவது பண்டிகையை முன்னிட்டு... நாட்டின் இலட்சக்கணக்கான பகுதிகளிலிருந்தும் அதாவது பல பகுதிகளிலிருந்தும் இலட்சக் கணக்கான மக்கள் - பொது மக்கள் படையெடுத்து அதாவது படைதிரண்டு வருவதாகவும் அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள்... பலப்படுத்தப் பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி ஒன்ரு பிரசவிக்கப்பட்டு அதாவது பிரசுரிக்கப்பட்டிருப்பதாக... தெரிகிறது. அதைப்போலவே, சிறப்பு 'ளூனா', கொளும்பு எனும் வாக்கியத்தில் அதாவது சொல்லில் இருப்பதால், கொளும்பு நகரமானது, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன்பிருந்தே தமிளர்களின் வதிவிடமாக இருந்ததென்ரும் ஒரு தமிளாராய்ச்சி தெரிவிப்பதாக ஒரு முக்கிய செய்தி ஒன்றும் கீளே வந்திருக்கிறது. ஒரு விளம்பரம் ஒன்ரின் பிறகு அடுத்த செய்தியை பார்ப்போம்.'<br>
<br>
வானொலியை மூவிட்டு கழிப்பறைக்குப் போய் வந்தேன். வந்த பிறகு, வானொலியைத் திறந்து வேறொரு நிலையத்தைத் தேர்ந்தேன்.<br>
<br>
'ஈஈஈது ஊங்ங்ங்கள் அடக்க்க்க முடியாத :டார்ளிங் தமிள் ஏஃபேஏஏஏம்!' என்று கழுதித்தது ஒரு வன்குரல். '.....வணக்க்கம்! அதாவதிபொதுங்கள்கொருபூதிய.... பூதிய தமிள் - பாடலை - தருவதன்... மூலம் - எங்கநியள்ச்சி யளை யாரபிக்கிறோம்... இனிமேலிதேபாடலைமணித்... யாலதுகைந்துமுறை... யாவதுநீங்ளேட்டுமகீஈஈஈலவும்!... இன்ருமாலைகுளிபாடல் வெறுகதகபாளைய்ய்யபாடலா கியிடும்! இதன் பிறகுவே - ரெவருமிதைபு - தீயபடலென்ரு ...சொந்தங்கொண் - டாடமூ - டீயாது! அதபாடலெழுது களை கவிபேர்சர் வீரவாளியறியதாக சொலபடுகிறது - தாலியறுவெலும - ஹோதைமானதி - மரய்யோன்னிய திலிருந்து அதாவதிதை நேயர்களுகாக நாங்கதான்மு தன்..முதலாக தருஹ்றோம்! இதோந்தபாடல்பாடியிர் பவர்ர்ர் ஆஆஆகுடல்நாதனிசைய்ய்ய் தகர - டப்பன்! ஈஈஈதோ கேட்டாருங்கள்ள்ள்!'<br>
<br>
'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்! - இந்த<br>
நாறத்தீனி வயித்துக்குள்ளே கொண்டாட்டம்!...'<br>
<br>
'என்னை ஏன் கடிக்கிறாய்?' என்று சினந்தன என்னால் கடிக்கப்பட்ட எனது பற்கள். 'வேண்டுமானால் வேறொரு நிலையத்தை நாடிப்பார்!'<br>
<br>
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூதானே இனிப்பு என்று மறுபடியும் விஷேடம் எஃபெம்!<br>
<br>
ஒரு திறனாய்வு தொடங்கியது. ஒரு சொல்லில் மறுமொழி தரக் கூடாது. அம்மறுமொழியில் பிற மொழிச் சொல்லே வரக் கூடாது என்று, பிறமொழிச் சொற்களா லேயே திறனாய்வு நெறிகளை விளக்கியது பெண்குரல்.<br>
<br>
கொல்லைப்பட்டி அழகேசு தொலையுரையாடியில் முந்திக் கொண்டார்.<br>
<br>
'எங்கள் அளகேசு வந்து விட்டீர்களா?'<br>
<br>
'ஹீஹீ... ஹீ... ஆமாக்கா! வணக்கம்'<br>
<br>
'வணக்கம்! மாலைக்குள் எப்படியாவது ஏளெட்டு முறையாவது நீங்கள் எங்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு விடுவீர்கள், அப்படித்தானே?'<br>
<br>
'ஹி...ஹீ...ஹீ!'<br>
<br>
'ஞ்சரி! போட்டியை ஆரம்பிப்போமா, அளகேசு?'<br>
<br>
'சரிங்கக்கா!'<br>
<br>
'நீங்கள் என்ன தொளில் செய்கிறீர்கள், அளகேசு?'<br>
<br>
'வாகனம் ஓட்டுறேன்க்கா!'<br>
<br>
'ஞ்சரி. என்ன வாகனம் ஓட்டுகிறீர்கள்?'<br>
<br>
'வேன் ஒன்று வச்சிருக்கிறேன்க்கா!'<br>
<br>
'ஹோ... ஹோ.. ஹோ...! ...வேண் என்று பிறமொளிச் சொல்லைப் பாவித்து விட்டீர்கள்! நீங்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுகிறீர்கள்!'<br>
<br>
'வேன், வான் - அப்புடீன்னுதானே தமில்ல சொல்றோம்,'<br>
<br>
'இல்லை! அது ஆங்கிலச் சொல்!'<br>
<br>
'அப்ப தமில்ல எப்புடீக்கா சொல்றது?'<br>
<br>
'ஏன் மோட்டார் ஊர்தி என்றிருக்கலாமே?'<br>
<br>
'பெண்டாட்டி உதைத்தாலும் உனக்கு நாணம், சூடு, உணர்ச்சி எதுவுமே கிடையாது, போ!' என்று இளித்தது எனது மூளை.<br>
<br>
மறுபடியும் :டார்லிங் தமிள் எஃபெம்மிடமே புகலடைந்தேன்.<br>
<br>
'எந்தவி - டயத்தையும் முந்தித்தருவதூங்கள் :டர்லிங் தமிள் எஃபேம் மட்டுமே. நாங்களே முதல் - வன்ன்ன்! இதோங்கள்கான அவசரசெய்தியறிகையிதன் தோப்பாசிரியர் நியூஸ்ஸ்ஸ் மாமா! சரிபார்- தவர் லூஸ்ஸ்ஸ் மாமா! வாசிபவர் முதலாவது பெணறிவிபாளினி ரேஸ்ஸ்ஸ் மாமீஈஈஈ!'<br>
<br>
'வணஹம்! டாடடடடடடட டுடுடுடுடுடுடு! டடடடடடடடடிடடி டிட்டிட்டி. கட கட கட குடு குடு குடு இடி யிடி யிடி யிடி யிடி. டொரலட்டு டொட்டு, டர்ர லர லர லர பர பர பர பர டமீக்கிடிம்மீடும்மீ டும்மு டும்மு டுமுக்கிடி!...'<br>
<br>
ஆண் அறிவிப்பாளரை வென்ற விரைவுப் பெருமையில் ரேஸ் மாமி வணஹத்தைக்கூட மறந்துபோய் ஓடிவிட்டார்.<br>
<br>
'ஓரு..... ஒரு.... ஒரு.... ' என்றவாறே ஓர் இழுபறிக் குரல் புதிதாக அறுக்கத் தொடங்கியது. '...அதி.. முக்கியமான... ஒரு... செய்தியை... உங்களுக்கு தர... இப்போது... நாங்கள்.... தய்யாராகிக்... கொண்டிருக்கிறோம்.... அதாவது.... இன்ரு... அதிகாலை.... அதாவது... குறிப்பாக ஏளு மணி.... அளவில்... கொளும்புவிலிருந்து... சற்று... தொலைவில்... அதாவது... கொளும்புக்கு அண்மையில்... ஒரு... அதாவது... ஒரு குண்டு வெடிப்பு.... வெடித்ததில்.... சுமார்... ஆறுபேர்... வரையில்.... கொல்லப்பட்ட தாக.... அதாவது மரணமடைந்ததாக.... தெரியவருகின்றது... இந்த வைபவத்தின்போது... அதாவது விபத்தின்போது... இன்னும் ஸ்தலத்திலேயே... எமது நிருபர்... இருக்கிறார்.... இப்போது அவர்... நேயர்களுக்காக... தேச... அதாவது... சேத... விபரம் பற்றி... நேயர்களுக்காக... தொலைபேசியில்... விபரங்களை... எடுத்துரைப்பார்... சிறிசேன?'<br>
<br>
செய்தியாளர் சிரிசேன அழகாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இனிய சிங்களத்தில் கூறி முடித்தார்.<br>
<br>
'அடடா, இவ்வளவு இனிமையான மொழியை பாரதி கேட்காமல் போய்விட்டானே!' என்று நொந்து கொண்டது எனது உள்ளுணர்வு.<br>
<br>
'ஸ்த்தூத்தி, சிறிசேன!... அதாவது... எமது... நிருபர்... சிறிசேன... கூறியதை... இப்போது... நேயர்களுக்காக... தமிளில்... தருகிறோம்... அதாவது... இன்ரு... காலை...'<br>
<br>
'மூஞ்சி கழுவல்லியாப்பா?' என்றாள் மனைவி.<br>
<br>
'இந்த நியூஸ் முடியட்டும்,' என்றேன்.<br>
<br>
'அதுதான் சிரிசேன அழகா சொல்லிட்டதேப்பா, வாங்க!'<br>
<br>
'இந்த... விபத்து... பற்றிய... ஒரு... ஒரு... கலந்துரையாடலை... இப்போது... நேயர்களுக்காக... நாம்... ஏற்பாடு... செய்துகொண்டு... இருக்கிறோம்... மேலதிக... தகவல்களுக்காக... அதாவது.... நேயர்கள்... ஏதாவது கேட்க... விரும்பினால்... கேட்பதற்காக.... எம்முடனேயே.... இருங்கள்... எமது தொலை பேசி.... இலக்கம்... ஆறாறாறி... ஏளேளெளி... அதுவரையில்... ஒரு... சுபர்பட.... பாடலை.... கேட்டு... மகிழுங்கள்...'<br>
<br>
'சாரப்பாம்புக்கும் கீரப்பூச்சிக்கும் கண்ணாலம்!....'<br>
புலன்கள் செத்துப்போன நிலையில் வானொலியை அடக்கிவிட்டுப் போய் முகம் கழுவி வந்து மேலுமொரு தேநீரோடு தொலைக் காட்சியை இயக்க, விஷேடம் டீவியில் நரசிம்மராவி இன்னுமே வன்கொலை செய்து கொண்டிருந்தார்.<br>
<br>
'...சுமர் அய்ந்தண்டுக் கலமாக நோய்வைப் பட்டிருந்த அவர், நேட்ரு முன்தினம் கொலிசெய்யப் பட்டதக புலிஸ்மாதிபர் கூர்னர். கொலியலிகள் கண்டிவிலும் மாத்தளைவிலும் ஒளிந்துள்ளதகவும் ஆரம்பகட்ட விசரணைகளும் பெச்சு வார்த்தைகளும் முடிவுட்ரதகவும், நீதி மன்ர நடிமுறிகள் பின்பட்ரப்படுவதகவும் அவர் மேலும் தெரிவித்தர்... இன்ரு நாடளுமன்ரத்தில் ஐக்கியேஸியக் கச்சி வெளிநடுப்பு செய்ததக எமது செய்தி நிருபர் தெரிவிக்கின்ரர். இதை அனித்து ஊடகங்களும் கண்டித்துள்ளது. நாடல் மன்ரம் எதிரரும் பதினௌhம் தீய்தி குடுமென்ரு சபைநகர் அறிவித்துள்ள பொதிலும், நாளை மர்தினம் பார்ளு மன்ரம் குடுமென்ரு சர்வச்சி மாநட்டில் அமிச்சர் குர்நார். மாஜனைக்கிய முண்ணி இதை சர்வேஸ்ஸமுகத்திற்கு அறிவித்துள்ளனர். ... கல்வி பொது தரதர சாதர்ணதர பரிச்சை நாளை அரம்பமாகின்ரது.... தென்னிந்திய ரமேஷ்வரத்தில் மெலூம் பல அஹ்திகள் முகமிட்டிருப்பதக தமிள்நட்டு செய்திகள் கூர்கின்ரது.'<br>
<br>
புதிதாக ஓர் ஆண் குரல் பின்னணியில் வந்தது:-<br>
</div><a href="http://ashroffshihabdeen.blogspot.com/2019/05/blog-post.html#more">மேலும் படிக்க»</a>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-83847669698343861492018-12-24T12:52:00.000+05:302018-12-24T12:52:22.915+05:30கையெழுத்து!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNzKR_vGbWKecygk4t3y8T0s-htCJ97h5w4Q6oozMY_kB05BNOGRApFyky138Oxg3fxqhvZRl8f6jP7w1kbtJVgJPS0J8Wh-2T-NXNyeYkf391mA9ALxuBrW0AKqJR66rjiDRswl9EJO_t/s1600/ASDFG.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="160" data-original-width="314" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNzKR_vGbWKecygk4t3y8T0s-htCJ97h5w4Q6oozMY_kB05BNOGRApFyky138Oxg3fxqhvZRl8f6jP7w1kbtJVgJPS0J8Wh-2T-NXNyeYkf391mA9ALxuBrW0AKqJR66rjiDRswl9EJO_t/s1600/ASDFG.jpg" /></a></div>
கைகளால் எழுதுவது குறைந்து விட்டது.<br />
<br />
அந்நாட்களில் தமிழ் பாடம் கற்பதில் உறுப்பமைய எழுதுவது ஓர் அங்கமாக இருந்தது. அதற்கென பெரிய ரூல் அப்பிடியாசக் கொப்பிகள் இருந்தன. எழுத்துச் சீராக, அழகாக வரும் வரையில் ஆசிரியர்கள் விடமாட்டார்கள். மேல் வகுப்புக்கு வரும்போது அழகான, முத்து முத்தான எழுத்துக்கள் மாணவிகளுக்குக் கைவந்து விடும். காரணம், அவர்களுக்குப் பொறுமை அதிகம்.<br />
<br />
கணினிக்கு முன்னர் நான் கையெழுத்தால் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர் சுஜாதா டைப் ரைட்டரிலேயே தனது கதைகளை உருவாக்குகிறார் என அறிந்து ஆச்சரியப்பட்டதுண்டு. எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத்தாளர் மானா மக்கீன் டைப் ரைட்டரில் உட்கார்ந்திருந்து ஒரு நாடகத்தை உருவாக்கி விடுவார் என்று முஸ்லிம் சேவையின் நாடகத் தயாரிப்பாளராகவும் நாடக எழுத்தாளராகவும் இருந்த எம். அஷ்ரப் கான் அவர்கள் சொன்ன போது உண்டான ஆச்சரியம் இன்னும் தீர்ந்தபாடில்லை.<br />
<br />
கடிதம் எழுதி அனுப்பும் வழக்கம் அருகிப்போய்விட்டது. அதனிடத்தை மின்னஞ்சல்களும், கைப்பேசியும், ஏன் சமூக ஊடகங்களும் கூடப் பங்கு போட்டுக் கொண்டன. கடிதம் தகவலாக மட்டுமன்றி நிகழ்வுகளைக் கோத்து, எண்ணங்களைச் சிந்தாமல், சிதறாமல் எழுதுவதற்கான பெரும் பயிற்சிக் களமாகவும் இருந்தது. கடிதத்தில் வெறும் எழுத்தை மட்டுமல்ல, உணர்வுகளையும் சேர்த்தே பதிந்திருக்கிறோம்.<br />
<br />
அந்நாளைய இலக்கியகாரன் மிக உணர்வுபூர்வமாக தன்து படைப்பை எழுத்து மூலம் காகிதத்தில் உருவாக்கினான். அந்த எழுத்துக்களில் ஒரு நேர்த்தியும் அழகும் இருந்தது.<br />
<br />
கணினி எழுத்தை இலகுபடுத்தித்தான் இருக்கிறது. யாராவது ஒருவர் கையால் எழுதிய பிரதியைத் தபாலிலோ, வட்ஸ்ஏபட, மெஸஞ்சர்களில் படமாகவோ அனுப்பும்போது கொஞ்சம் கோபம் வரவும் செய்கிறது. முதல் பிரதியைக் கணினியில் வைத்துக் கொண்டே நாட்கணக்கில் திருத்திக் கொண்டேயிருக்கலாம். படைப்பாளி தாளில் வெட்டிக் குத்தித் திருப்பித் திருப்பி எழுதும் நோவினை இன்று இல்லாதாகி விட்டது. ஆனால் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்திக் கையால் மாய்ந்து மாய்ந்து எழுதும் அந்த ஆத்மார்த்த உணர்வு அற்றுப் போய்விட்டதோ என்று அவ்வப்போது எனக்குச் சந்தேகம் எழுகிறது.<br />
<br />
நான் எனது எழுத்து முதல் மொழிபெயர்ப்பு வரை கணினித் தட்டச்சிலேயே மேற்கொள்கிறேன். என்னைப்போல்தான் இன்று பல இலக்கியப் படைப்பாளிகளும் கணினியே கதி என்று கிடக்கிறார்கள். எழுதவும் பகிரவும் வசதியாகத்தான் இருக்கிறது.<br />
<br />
தொடர்ச்சியான கணினித் தட்டச்சு கழுத்து முதல், கைச்சந்து வரையான வலியை உடலில் உருவாக்கி விடுகிறது. மாதக்கணக்கில் அவதியுற்று, பெருந் தொகை வைத்தியர் பார்த்து, மருந்தெடுத்து, பயிற்சி செய்து வருகையில்தான் மூத்த இலக்கியவாதியான ஜவாத் மரைக்காரின் குறிப்பு பார்க்கக் கிடைத்தது. தொடர்ச்சியான கணினிப் பாவனை, இந்த வருத்தங்களைக் கொண்டு வரும் என்பது. அதிலும் குறிப்பாகத் தொடர்ச்சியான தட்டெழுத்துப் பாவனை இந்த வருத்தத்தைத் தந்து விட்டுப் போகிறது.<br />
<br />
இப்போது இந்த வருத்தங்களைக் குறைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டே கணினியில் தட்டிக் கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டால் நான்காவது நாள் கணினிப் பக்கமே நெருங்கி விடாமல் இருக்க வேண்டியிருக்கிறது.<br />
<br />
கைகளால் எழுதும்போது இப்படியான வருத்தங்கள் யாருக்கும் ஏற்பட்டதாக நான் கேள்விப்பட்டதேயில்லை!<br />
<br />
24.12.2018</div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-86622136007319663062018-11-18T22:14:00.001+05:302018-11-18T22:14:22.709+05:30'தம்பியார்' - ஓங்கி எழும் எதிர்க் குரல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0uL5kdMiAG905BvHr2MnpSdzO3Qy_tvUZnFirp6cV0h7E-Mx5KnBeMNBJpzs4OZdAl_zk8DabRzB9J3Wu1sF9IDqjkTYM0JjX0eUcG3Rz-qBHJs6nwZcM0DPX7ERNK4tzOT7oYNKoxADy/s1600/46495559_359567384791221_3086870597104304128_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="664" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0uL5kdMiAG905BvHr2MnpSdzO3Qy_tvUZnFirp6cV0h7E-Mx5KnBeMNBJpzs4OZdAl_zk8DabRzB9J3Wu1sF9IDqjkTYM0JjX0eUcG3Rz-qBHJs6nwZcM0DPX7ERNK4tzOT7oYNKoxADy/s320/46495559_359567384791221_3086870597104304128_n.jpg" width="221" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><br /></b></div>
<div style="text-align: center;">
<b>'தம்பியார்' - ஓங்கி எழும் எதிர்க் குரல்!</b></div>
<br />
<span style="white-space: pre;"> </span>எங்கே, எப்போது சந்தித்தேன் என்பது ஞாபமில்லாத போதும் முதல் சந்திப்பிலேயே மனதில் ஒட்டிக் கொண்டவர் டாக்டர் அஸாத். சந்தித்த அன்றே கவிதைக்காரனாகவே அவர் அறிமுகம் செய்யப்பட்டது ஞாபகம் இருக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அவரது முதலாவது கவிதைத் தொகுதி வெளியீடு, பெரும்பாலும் பின்னால் வந்த எனது எல்லா நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வுகள், ஏனைய நூல் வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று அவ்வப்போது அவரைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களூடே அவருடனான நட்பும் அழகிய கவிதைகளைப் படிப்பது போன்ற அனுபவங்களையே எனக்கு வழங்கியிருக்கின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>ஆயிரமாயிரமாய்ச் சமூக வலைத்தளங்களில் கொட்டப்படும் தமிழ்க் கவிதைகளுள் வெகு சிலவே நமது கவனத்தைக் கவருகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கவிதைகளுள் - எனது கண்ணில் படும்போது நான் தவறாமல் வாசித்து விடும் கவிதைக்காரர்களுள் டாக்டர் அஸாத் அவர்களும் ஒருவர். அவருடனான அறிமுகமே அவரது கவிதைகளை நோக்கி என்னை இழுத்துச் சென்றாலும் அவருடைய கவிதைகளைத் தவறவிடாமல் வாசிக்கத் தூண்டுவது அவர் கவிதைகளில் அவர் பேசும் விடயதானங்கள்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இலக்கியம் மக்களுக்கானது என்ற முடிவு எப்போதோ எடுக்கப்பட்டு விட்டது. எனவே இலக்கியப் படைப்புகள் யாவும் மக்களை, மக்களது பிரச்சனைகளை, அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களை பொது வெளியில் கொண்டு சேர்க்கும் கைங்கரியத்தைச் செய்யத் தொடங்கின. புதுக்கவிதை தோற்றம் பெற்ற பிறகு அவை பாரிய அளவில் மக்கள் பிரச்சனைகளையும் மனிதாபிமானத்தையும் தூக்கிப் பிடித்தன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>நவீன கவிதைகள் என்ற பெயரோடு பின்னால் வந்த ஒரு திருப்பம் இந்த நோக்கிலிருந்து பிறழ்ந்து எல்லாவற்றையும் பேசலாம் என்று நடைபோடத் தொடங்கின. சும்மா தேமே என்று அமர்ந்திருக்கும் போது ஓர் பழுத்த இலை விழுதல், ஆகாயத்தில் மேகம் நகர்தல், மழைபெய்தல், குளிரடித்தல் என்று உண்டாகும் உணர்வுகளைப் பெரிது படுத்தி - அவை பேச ஆரம்பித்தன. நவீன கவிதைகள் என்றால் சொற்களைப் புணர்த்தி எழுதுவது என்றொரு மயக்கமும் வந்து சேர்ந்தது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அண்மையில் வெளியான எனது தேவதைகள் போகும் தெரு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறு குறிப்பில் தற்போதைய கவிதைப் போக்குக் குறித்து நாவலாசிரியரும் சிறந்த சிறுகதையாளரும் கவிஞருமான ஆர். எம். நௌஷாத் 'எனதான இரவு, உனதான மூக்கு என்றெல்லாம் கவிதைகள் படித்து நமதான முடிமயிர் கொட்டுண்ட இந்த வேளையில்...!' என்று சொல்கிறார். இதற்குமேல் அவை பற்றிப் பேசவேண்டியதில்லை.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இவை கவிதைகள் இல்;லை என்றோ குற்றம் என்றோ இங்கு நான் குறிக்க வரவில்லை. ஓர் உன்னதமான கவிஞன் இலக்கியம் மக்களுக்கானது என்ற நோக்கில் செயற்படும்போது அவனது கவிதைகளும் மக்களுக்கானவையாகவும் மகத்துவம் மிக்கவையாகவும் மாறிவிடுகின்றன. அந்த வகையில் புதிய தலைமுறைக் கவிஞர்களுக்குள் மக்களுக்கான கவிஞனாக அஸாத் ஹனிபா திகழ்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் கண்டு வருகிறோம்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இன்று வெளியிடப்படும் 'தம்பியார்' என்ற இந்தக் கவிதைத் தொகுதி ஆஸாத் ஹனிபாவின் 3ஆவது கவிதைத் தொகுதி. இதற்கு முன்னர் 'ஆத்மாவின் புண்', 'பிரேத பரிசோதனைகள்' என்ற தலைப்புகளில் இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>'தம்பியார்' கவிதைத் தொகுதியை நான் முழுமையாகப் படித்து விட்டேன் என்பதை அஸாத் ஹனிபாவுக்கும் சபைக்கும் மனச்சுத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். குறித்தளவு பக்கங்களைப் படித்து விட்டு நூல் நயம் செய்யாமல் முழுவதையும் படித்து விட்டு நூல் நயம் செய்வது அபூர்வமாக நடைபெற்றுவரும் சூழலில் நான் முழுவதையும் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன் என்பதையிட்டு அஸாத் ஹனிபா மகிழ்ச்சியடைய வேண்டும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>197 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் 180 பக்கங்களில் 77 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. நான் இதுவரை நூல்நயமோ, விமர்சனமோ, திறனாய்வோ செய்த நூல்களில் வாசித்துக் குறிப்பெடுத்துக் கொண்ட முதலாவது நூல் இதுதான்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இக்கவிதைகளை எனது வசதிக்கேற்ப முஸ்லிம் சமூகம் பற்றிய கவிதைகள் - தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள் - முஸ்லிம், தமிழ் சமூகம் பற்றிய கவிதைகள், பொதுவான கவிதைகள் என நான்கு வகைகளுக்குள் அடக்கியிருக்கிறேன். பெரும்பான்மை சமூகம் பற்றி ஏதுமில்லையா என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுவது நியாயம். இவற்றுள் பெரும்பாலான கவிதைகள் அந்தச் சமூகத்தின் முன்னால் நின்றுதான் சுட்டுவிரல் நீட்டியபடி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>உண்மையைச் சொன்னால் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளையும் அவை பேசும் விடயங்களையும் குறித்துப் பேச எனக்குக் குறைந்தது ஒரு மணித்தியாலம் தேவைப்படும். அதற்கான வாய்ப்பு ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சாத்தியமற்றது என்பதால் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இவரது கவிதைகள் மானுடம் என்ற அடித்தளத்தில் நின்றபடி கேள்விகளை எழுப்புகின்றன. அவை வில்பத்துக் குறித்துப் பேசும் அதே வேளை மியன்மார் அகதிகள் குறித்துப் பேசுகின்றன. அம்பாறைக் கலவரம் குறித்துப் பேசும் அதே வேளை சிரியா குறித்துப் பேசுகின்றன. புலிகள் ஒழிக்கப்பட்ட பின்னர் நடந்த கொண்டாட்டம் பற்றிப் பேசும் அதே வேளை காஷ்மீர் கோவிலுக்குள் சிதைக்கப்பட்ட சிறுமி பற்றிப் பேசுகின்றன. தம்புள்ளைப் பள்ளி பற்றிப் பேசும் அதே வேளை ஜெரூசலம் பற்றிப் பேசுகின்றன. காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் பற்றிப் பேசுகின்றன, முள்ளிவாய்க்கால் பற்றிப் பேசுகின்றன. துரத்தப்பட்ட முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிப் பேசுகின்றன. தேசிய அரசியல், சிறுபான்மை அரசியல் பற்றிப் பேசுகின்றன. ஹலால் பிரச்சனை பற்றியும் ஹபாயா பிரச்சனை பற்றியும் பேசுகின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>77 கவிதைகளிலும் குறைந்தது 66 விடயங்கள் பற்றிப் பேசுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் ஒரு செய்தி இருக்கிறது என்பதுதான் இங்கே ஈண்டு குறிப்பிடத் தக்கது. வெறும் அழகியலை வைத்துக் காலமோட்டும் கவிஞராக அல்லாமல் சமூக, தேசிய, சர்வதேசிய மனிதாபிமானப் பார்வையுடன் அவர் எழுந்து நிற்கிறார்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அஸாத் ஹனிபாவுடன் பேசுபவர்கள், பழகுபவர்கள் அவரின் அப்பாவி முகத்தையும் குழந்தைச் சிரிப்பையும் கண்ணியமான பேச்சுப் போக்கையும் பார்த்து அவரைப் பற்றி அவர் ஒரு மென்மையான மனிதர் என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் அவரது கவிதைகள் அந்த முடிவுக்குரியவை அல்ல என்பதை இந்த நூலைப் படித்ததும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>ஏறக்குறைய சொல்வதானால் ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தீக்குச்சியின் உரசல் இருப்பதை நான் உணர்கிறேன். சிறுமை கண்டு பொங்கும் கடும் கோபத்தைக் கவிதைகளினூடு அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். சிறுபான்மைகளுக்கெதிராக நடந்த கொடுமைகளை மிகத் துல்லியமாக வரலாற்றுப் பதிவாக்கி வைத்திருக்கிறார். எல்லாக் கொடுமைகளுக்கும் எதிராக கவிதை கொண்டு ஒரு கூரிய வாளைச் சுழற்றிக் கொண்டிருக்கிறார். இதைவிடப் பொருத்தமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு கவிதையையும் ஒரு சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வெட்டலகாக (பிளேட்) ஆகப் பயன்படுத்துகிறார். இதனால் என்ன நடக்கிறது என்றால் அவர் கவிதைகளைச் சொல்லிச் செல்லும் அவரது மொழி மூலம் அவர் என்ன மனோ நிலையில் நின்று பேசுகிறாரோ அதே மனோ நிலைக்கு நம்மையும் ஆளாக்கி விடுகிறார். ஒவ்வொரு கவிதையிலும் அவர் தட்டி விடும் தீக்குச்சி நமது மனங்களுக்குள் ஒரு காட்டுத் தீயாய்ப் பரவ ஆரம்பிக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>புன்மையை எதிர்த்து நிற்பதும் அநியாயத்துக்கும் அத்து மீறல்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புவதுதான் நேர்மையான ஒரு கவிஞனின் உன்னத பண்பு. அந்தப் பண்பை இந்நூலில் அடங்கியிருக்கும் பெரும்பாலான கவிதைகளில் நீங்கள் கண்டடைய முடியும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>மானுட மேம்பாட்டுக்கான போராளியாக, அநீதிக்கெதிராக எழுந்து நிற்கும் உள்ளத்தவராக, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தக்காரனாகத் தனது மூன்றாவது கவிதைத் தொகுதியிலேயே பிரகாசிக்க ஆரம்பித்து விட்டார் அஸாத். இந்தக் கொடுப்பினை முப்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டாலும் சிலருக்குச் சித்திக்காமலேயே போய்விடுகிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>குறைந்த வார்த்தைகளில் பேசுவது கவிதை. ஒரு நல்ல கவிதை வாசகனுக்குள் இறங்கும் போது அவனின் சிந்தையில், உணர்வில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் அவனைது ஆவியையும் உடலையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. சிறந்த கவிதையொன்றின் சில வரிகள் ஒரு நூலில் எழுதப்பட வேண்டிய அகக் காட்சியை உண்டு பண்ணி விடுகிறன. சாப்பேறுகள் என்றொரு கவிதையின் இறுதி நான்கு வரிகள் இப்படி முடிகின்றன.<br />
<br />
'இங்கு எல்லாமே<br />
பிழையான இடத்தில்தான் உள்ளன<br />
மனிதர்கள் மட்டுமல்ல -<br />
கற்சிலைகளும்தான்!'<br />
<br />
<span style="white-space: pre;"> </span>பெரும்பான்மையின் அடாத்தான செயற்பாடுகள் குறித்துப் பேசும் இந்தக் கவிதையில் ஒரு நீண்ட காட்சிப் படிமத்தை உருவாக்கி விட்டுச் செல்கிறார். இந்தத் தொகுதிக்குள் இருக்கும் அநேகமான கவிதைகளின் சாராம்சமாகவே நான் இந்த வரிகளைப் பார்க்கிறேன்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த போது பெரும்பான்மையினருக்கு பீடித்த - இன்னும் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று இந்தத் தேசம், இந்த நிலம் முழுவதும் தங்களுக்கானதே என்று நிறுவ முயன்றது. இதற்காகவே வரலாறு புரட்டிப் புரட்டி எழுதப்பட்டு, அது பாடப் புத்தகங்கள் வரை சென்று வரலாறு என்ற பாடம் கட்டாய பாடமாக ஆக்கப்பட்டது. அது மாணாக்கருக்கு கணித, விஞ்ஞான பாடங்களை விடப் பெரும் சவாலாக மாறிற்று. ஒவ்வொரு அரசனும் பிறந்தது முதற்கொண்டு அவனது அனைத்து செயற்பாடுகளும் வருடங்கள் ரீதியாக எழுதப்பட்டன. இந்த விபரங்களை ஒவ்வொரு மாணவனும் மனனமிடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. வரலாற்றுப் பாட நூல்களை நீங்கள் கையில் எடுத்துப் பார்த்தீர்களானால் அதன் விபரீதத்தை நீங்கள் உணரலாம்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த வழிமுறையை இவர்கள் இஸ்ரேலிலிருந்து கற்றிருக்க வேண்டும். அங்குதான் அறபிகளின் நிலத்தைப் பிடித்துக் கொண்ட யூதர்கள் தமது மாணாக்கரின் பாட நூல்களில் அது தங்களது பூமி என்ற வரலாற்றை எழுத ஆரம்பித்தனர்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இது இப்படியே போய்க் கொண்டிருக்க 2009 நடுப்பகுதியிலிருந்து வேறொரு முன்னெடுப்பு ஆரம்பித்தது. எங்கெல்லாம் இராணுவ முகாம்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஓர் அரச மரத்தை நடுவதும் அதன் அருகே கௌதமரின் சிலையொன்றை வைத்து விடுவதும். இது விரிவடைந்து பொதுப் பணி இடங்களில், அரச நிறுவனங்களில், தரிசு நிலங்களிலெல்லாம் இதே செயற்பாட்டின் நீட்சி சென்று கொண்டேயிருக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இது குறித்துப் பேசும் ஒரு கவிதையை இங்கு தருகிறேன். அந்தச் செயற்பாட்டுக்காக மட்டுமன்றி இக்கவிதையை அவர் சொல்லிச் செல்கின்ற அழகுக்காகவும் தெரிவு செய்திருக்கிறேன்.<br />
<br />
கௌதம புத்தரை முதன்முதலில்<br />
பாடப் புத்தகத்தில் நான் பார்த்தேன்<br />
மிகவும் சாந்தமாக இருந்தார்<br />
எந்த சந்தேகமும் அவரில் இருக்கவில்லை<br />
<br />
அவரின் சீடர்களோ<br />
புத்தகத்தை மட்டுமல்ல -<br />
வரலாற்றையும் கிழித்துக் கிழித்து<br />
மீள எழுதிக் கொண்டிருக்கிறார்கள்<br />
<br />
புத்த பெருமான்<br />
வீதியின் இருமருங்கிலும்<br />
புழுதிபடியும் சிலையாகவும்<br />
முச்சக்கர வண்டிகளின்<br />
தரிப்பிடச் சந்திகளில்<br />
காட்சிப் பொருளாகவும் இருந்தார்<br />
<br />
அவருக்காக<br />
எமது பூர்வீக நிலமெங்கும்<br />
படைமுகாம்களை அமைத்தனர்<br />
பின்னர் அவற்றை<br />
விகாரைகளாக மாற்றிக் கொண்டனர்<br />
<br />
இராணுவச் சிப்பாய்கள்<br />
அன்று காவல்நின்ற<br />
அரச அலுவலகங்களில்<br />
இன்று பாதுகாப்புக்காக<br />
சிலைகள்தாம் உள்ளன<br />
<br />
வைப்பதற்கும் இருப்பதற்கும் இடமின்றி<br />
இறுதியில் அவரை<br />
வைத்தியசாலையில் அனுமதித்தனர்<br />
<br />
ஒவ்வொரு விடுதிகளுக்குள்ளும்<br />
வெளியிலும்<br />
புத்தர் பகவான்<br />
நோயாளிகளுக்காக<br />
இரவு பகலாகத் தியானத்தில் உள்ளார்<br />
<br />
பிரசவ கட்டிலிலிருந்து<br />
பிரேத அறைவரை<br />
அவர்தான் மருத்துவம் செய்கிறார்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்தக் கவிதையை எழுந்தமானமாகப் பார்த்து விட்டு கௌதம சித்தார்த்தரை கவிஞர் அவமதிக்கிறார் என்று கருதினால் அது முழு முட்டாள்தனம். கௌதமர் அவமானப்படுத்தப்படுவதற்கு எதிரான குரல்தான் இந்தக் கவிதை. புத்தரை முன்னிறுத்தி அவர் அவர்கள் ஏதோ நமக்குச் சொல்ல வருகின்றனர். அதைத்தான் அஸாத்தும் சொல்ல வருகிறார்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள் அநேகமானவும் 95 வீதமான கவிதைகளும் எதிர்க் குரலாகவே ஒலிக்கின்றன என்று நான் கருதுகிறேன்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இதே விதமாக முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தவறாகப் புரிந்து நடக்கின்ற, அல்லது பேச்சில் மார்க்கத்தை சரியாகப் பேசிக் கொண்டு 'தொழுவது அல்லாஹ்வுக்காக.. வைக்கோல் திருடுவது மாட்டுக்காக' என்ற பாணியில் நடந்து கொள்வது பற்றி உள்ளார்ந்த கிண்டலும் கோபமுமாய் இந்தத் தொகுதிக்குள் சில கவிதைகள் இருக்கின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த வகையில் ஏமாளி இந்த நோன்பாளி என்ற தலைப்பில் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் ஒன்று இருக்கிறது. ஒருவரைப் பற்றிப் புறம் பேசுவது இறந்த மனிதனின் தசையைப் புசிப்பதற்கு ஒப்பானது என்று நபிகளார் சொல்லியிருக்கிறார்கள். இங்கு இக்கவிதையில் அதைச் சொல்லும் விதத்தைப் பாருங்கள்..<br />
<br />
கண்ணியமிக்க புனித நாட்களில்<br />
நானும் பகலில் உண்ணவில்லை<br />
இறந்து போன இனிய நண்பனின்<br />
மாமிசத்தைத் தவிர<br />
சத்தியமாய் எதையுமே புசிக்கவில்லை<br />
<br />
எச்சில் துளியுமின்றி<br />
தாகத்தைத் தாங்கிக் கொண்டேன்<br />
பச்சைப் பள்ளிக்குள்<br />
பிறர் நடத்தைகளைக் கழுவி<br />
அதை மட்டுமே<br />
ஐவேளை பருகிக் கொண்டேன் இவ்வாறு தொடரும் இந்தக் கவிதை சப்பென முகத்தில் அறைந்து விட்டுப் போகிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>மார்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மூடத்தனங்களில் மூழ்கிக் கிடப்போரின் நடவடிக்கைகளையும் ஆஸாத் தொட்டுக் காட்டுகிறார். அசேதன மார்க்கம் என்ற கவிதையில் இப்படிச் சொல்கிறார்...<br />
<br />
பிரசவத்துக்கு மருத்துவ மனை<br />
இனித் தேவையில்லையாம்<br />
முதலிரவுக் கட்டிலில்<br />
வீட்டில் பிரசவம் பார்ப்பது<br />
பிழையா என்கிறாள்<br />
உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி..<br />
<br />
<span style="white-space: pre;"> </span>உடலில் ஒட்டிய நவீன அபாயாக் காரி என்ற வார்த்தையில் ஒலிக்கும் குசும்பு அவதானிக்கத் தக்கது. கவிதையின் சாரம் அதற்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வதில்தான் கவிதையின் குரலையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அதே போல் நஞ்சுக் கொடி என்ற கவிதை. அந்தக் கவிதையில் காட்சிச் சித்தரிப்பு மூலம் முஸ்லிம் சமூகத்தின் மூடத்தனத்தைச் சொல்லிச் செல்லும் அழகு பிரமாதமானது. கவிதை நூலின் 49ம் பக்கத்தில் உள்ள அந்தக் கவிதையை நீங்கள் கட்டாயம் படித்து விட வேண்டும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்து ரசித்த, என்னை ஆவேசத்துக்குள்ளாக்கிய ஒரு கவிதைத் தொகுதி இது. ஏறக்குறைய எனது சிந்தனைப் போக்கையொத்த சிந்தனைப் போக்கு டாக்டர் அஸாத்திடம் இருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசமாக நான் உணர்வது என்னவெனில் எனது எழுத்துக்களில் அதிகம் கிண்டலைப் பயன்படுத்துகிறேன். அஸாத் அதை வேறொரு விதத்தில் கையாள்கிறார். அநேகமாகவும் நோகாமலே ஊசி போட்டு விடுகிறார். போட்ட பிறகுதான் வலிக்க ஆரம்பிக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இலக்கியத்தில் வைத்தியத் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காப்பியக்கோ ஜின்னாஹ், தி. ஞானசேகரன், எம்.கே. முருகானந்தன், தாஸிம் அகமது, ச.முருகானந்தன் என்று நீளும் பட்டியலில் அஸாத் எம். ஹனிபாவும் இணைந்து கொள்கிறார். வைத்தியர்களின் இலக்கியப் பங்களிப்புக் குறித்து ஒரு தனி நூல் எழுதப்படலாம். இன்னும் புதுமைப்பித்தன் கதைகளில் சமூகப் பார்வை என்று தலைப்புக் கொடுத்துக் கொண்டிராமல் இப்படியொரு தலைப்பில் பல்கலைக்கழக மாணாக்கருக்கு ஓர் ஆய்வைச் செய்வதற்கும் பேராசிரியர்கள் வழிகாட்டலாம் - சாத்தியமும் மனமும் இருந்தால்!<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அஸாத் ஹனிபாவின் கவிதைகளில் குறைகளே இல்லையா என்று ஒரு கேள்வி வர வேண்டும். ஒவ்வொருவருக்கும் கவிதை வெளிப்பாட்டுக்கென்று ஒரு மொழி உண்டு. கருத்தும் இல்லாமல், நோக்கமும் இல்லாமல், மொழியழகும் இல்லாமல், சொல்லிச் செல்லும் வழியும் அறியாமல் அஸாத் ஹனிபாவின் கவிதைகள் சிக்கல்படவில்லை. ஆனால் ஒரு சில கவிதைகளில் மேலதிகச் சொற்களும் வாக்கியங்களும் இருக்கவே செய்கின்றன. கவிதை குறித்து ஓர் ஆழ்ந்த தெளிவு அவரிடம் உண்டு. எதிர்காலப் படைப்புகளில் அவற்றை அவராகவே தவிர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அசேதன மார்க்கம் என்ற தலைப்பிலான ஒரு சில முஸ்லிம்களின் மூடத்தனத்தைப் பேசும் கவிதையை அவர் இப்படி முடித்திருப்பார். 'என்னையும் அவர்கள் - உற்றுப் பார்க்கிறார்கள் - அவர்களின் தீர்ப்பை நானறிவேன்.' மூட நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்கள் குறித்து எதிர்க் கருத்து இருந்தால் உடனே 'மார்க்கத்துக்கு முரணானவன்' என்ற தீர்ப்பை எழுதுவார்கள் என்பதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அது உண்மைதான். கவிதைகளைப் படிப்பார்கள். அப்புறம் கவிதை நூலின் தலைப்பைப் பார்ப்பார்கள். ;தம்பியார்' என்றிருக்கும் தலைப்பு அவர்களுக்கு 'நம்பியார்' என்று தெரியும்!<br />
<br />
(18.11.2018 அன்று கொழும்பு - தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் நிகழ்த்தப்பட்ட நயவுரை)<br />
<br />
<span style="white-space: pre;"> </span><br />
<br />
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-16942212119714952322018-09-02T10:47:00.000+05:302018-09-02T10:47:04.972+05:30நல்லா பிராண்ட் தரட்டுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXzAiBTH0UZegaVaxqz5Evt6B0jNsKNVkGeSt-_cQLkw5uNh7GuRbjM63azShMHOD8HMBC9kkq9AdiuNTp8T36YOpQ6NW1c3oDg2Lzbis2-nzSlg5nmQlwwEV-pmEpS-aF4ZWLvBGlMrRa/s1600/Medicine-reu-L.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="440" data-original-width="660" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXzAiBTH0UZegaVaxqz5Evt6B0jNsKNVkGeSt-_cQLkw5uNh7GuRbjM63azShMHOD8HMBC9kkq9AdiuNTp8T36YOpQ6NW1c3oDg2Lzbis2-nzSlg5nmQlwwEV-pmEpS-aF4ZWLvBGlMrRa/s320/Medicine-reu-L.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><span style="font-size: x-small;">டாக்டர் ஹாலித் முகம்மத் புகாரி</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><span style="font-size: x-small;"><br /></span></b></div>
உங்களுக்கு வைத்தியரிடம் இருந்து வெளியே பாமசிகளில் வாங்குமாறு எழுதித்தரப்படும் சிட்டையைக் காட்டியதும் பாமசிகளில் கேட்கப்படும் பிரதான கேள்வி இதுதான் !<br />
<br />
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா? அல்லது அத்தோடு<br />
இந்த மருந்து பழையது அதைவிட சிறந்த புதியமருந்து ஒன்று வந்திருக்கின்றது தரவா?<br />
<br />
இவ்வாறான கேள்விகளுக்கிடையில் வைத்தியர்களை பரிகசிக்கவோ அல்லது வைத்தியர்களின் தரத்தை கீறிக்கிழிக்கவோ உள்ள சில வசனங்களும் கூட பொருத்தப்படலாம்.<br />
<br />
அனேகமாக ஏன் இந்தக்கேள்வி உங்களிடம் கேட்கப்படுகின்றது?<br />
<br />
அப்படியாயின் பாமசிக்காரருக்கு தெரிந்த அந்த நல்ல பிராண்ட் டொக்டருக்கு தெரியாதா?<br />
<br />
ஒரு கதை சொல்லி விடுவோம்.<br />
<br />
ஒரு கடுங்குளிர்காலம் காலையில் ஒரு வயதுக்குழந்தையுடன் ஒரு தாய் எனது வீட்டிற்கு வந்தார்.<br />
<br />
சரியான இருமல், தடிமல் டொக்டர். இரவையில தூங்குறாரும் இல்ல. கடும் கஸ்ட்டமாயிருக்கு !<br />
<br />
பரிசோதித்துவிட்டு மூன்று வகையான மருந்துகள் எழுதிக்கொடுத்தேன் அதில் ஒன்று பிரிட்டன் சிரப்.<br />
<br />
இரண்டு நாள் கழித்து மீண்டும் அதே தாய் அக்குழந்தையுடன் எனது கிளினிக்கிள் வருகிறாள். இருமல் தடிமல் கொஞ்சம் குறைந்திருக்கின்றது. தூக்கம் தான் இல்லை என்றார். அவருக்கும் தூக்கம் இல்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.<br />
<br />
சரி நான் தந்த மருந்தை தாருங்கள் என்றேன் அவர் அதை தயங்கித்தயங்கி தந்தார். அதில் நான் எழுதிய பிரிட்டன் பாணி இருக்கவில்லை. ஏன் நான் எழுதிய அந்த பிரிட்டன் பாணி வாங்கப்படவில்லை என்று கேட்ட்டேன் .<br />
அதற்கு அவர், இல்ல டொக்டர் அது நீங்க தந்த பிரிட்டன் பாணிய விட புதுசா ஒரு மருந்து வந்திருக்குதாம் தடிமல் இருமலுக்கு. அந்தமாதிரி மருந்தாம், புது மருந்தாம். பிரிட்டனை விட கடும் நல்லமாம் என்று லொரட்டிடீன் என்ற சிரப்பை காட்டினார்.<br />
<br />
இல்லம்மா தடுமல் இருமலுக்கு நல்லமருந்து என்றதோட சேர்த்து பிள்ளை பிரிட்டன் மருந்துக்கு நல்லா தூங்கட்டும் எண்டுதான் நான் பிரிட்டன் சிரப்பை தந்தேன். எனக்கு லொரட்டிடீன் சிரப் தர தெரியாமலா உம்மா நான் உங்களுக்கு பிரிட்டன் சிரப் தந்தேன் என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.<br />
<br />
இல்ல டொக்டர் ஹஸ்பண்ட்தான் வாங்கி வந்திட்டாரு. எனக்கு தெரியும் டொக்டர் மன்னிச்சிருங்க.<br />
<br />
இல்லம்மா, அதெல்லாம் பராவல்ல இந்தாங்க பிரிட்டன் சிரப் இதையும் சேர்த்துகுடுங்க. புள்ள நல்லாதூங்கும். இருமலும் 4 அஞ்சி நாளைல சரியாகிடும் என்று அனுப்பிவைத்தேன் .<br />
<b><br /></b>
<b>நான் கொடுத்த பிரிட்டன் சிறப் 48 ரூபாய். பாமசியில் கொடுக்கப்பட்ட லொரட்டிடீன் சிரப் மட்டும் 300 ரூபாவிற்கு மேல்!</b>.<br />
<br />
ஒரு டொக்டர் உங்களுக்கு மருந்து தரும் போது பல விடயங்களை கவனமெடுப்பார் .<br />
<br />
உங்களது நோயின் தன்மை, உங்களுக்கு உள்ள மற்ற நோய்களின் தன்மை, உங்களது வயது, உங்களது கிட்னி, ஈரல் போன்றவற்றின் செயற்பாட்டின் அளவு, தரப்படும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதன் தேவைகளும் (உதாரணமாக நான் மேலே கூறியது போல் பிரிட்டனின் பக்கவிளைவு சிறிது தூக்கத்தை ஏற்படுத்தல்) நீங்கள் கருவுற்றிருக்கிறீர்களா? குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா? உங்களது அன்றாட செயற்பாடுகள் ( பிரயாணம், பரீட்சை, நுணுக்கமான வேலைகள்) போன்ற மேலும் பல காரணங்களோடு உங்களது சமூக பொருளாதார நிலையை முக்கியமாக கவனத்தில் எடுத்தே ஒருவைத்தியரால் உங்களுக்கு மருந்து தரப்படும் .<br />
<br />
ஆனால்இ அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா! எனக்கேட்கும் நபரோ மேலுள்ள எந்த விடயங்களிளும் பொருத்தமான அறிவைக் கொண்டிருப்பவராக இருக்கமாட்டார். ஏனெனில் தாம் செய்வது இலங்கையில் தடை செய்யப்பட்ட தண்டனைக்குறிய குற்றமாகும் எனத்தெரிந்துகொண்டு அதன் பாரதூரங்களை அறியாமல் தன் சுயநலத்திற்காக ஒரு குற்றமிழைக்கும் குற்றவாளியே அவர். எமது நாட்டின் சட்டத்தின் ஓட்டைகள் மட்டும் இல்லாவிட்டால் அல்லது வெளிநாடு ஒன்றில் என்றால் கனகாலம் கம்பி எண்ணும் ஒருவராய் இருப்பார்.<br />
<br />
இவர்களது அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா என்று கேட்பதற்கான காரணங்கள் பல..<br />
<br />
1-விலைகூடுதலான மருந்துப்பொருட்களை உங்கள் தலையில் கட்டிவிடுதல்<br />
<br />
2-அவர்களுக்கு சிறப்பு கொமிசன், சலுகைகளை வழங்கும் மருந்துகளை உங்களுக்கு தள்ளி விடுதல்<br />
<br />
3-இலாபம் கூடுதலான மருந்துவகைகளை உங்களுக்கு புகட்டி விடுதல்.<br />
<br />
4-ஸ்டொக் அதிகமாக எடுக்கப்பட்ட மருந்துகளை குறைத்துக்கொள்ளல்.<br />
<br />
5-திகதி காலாவதியாகும் மருந்துகளை முன்கூட்டி தீர்த்துவிடல்.<br />
<br />
6-நீங்கள் கேட்ட அந்த மருந்து அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.<br />
<br />
இதையெல்லாம் தாண்டியும் சில புனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் டொக்டரை விட தமக்கு நிறைய விடயங்கள்தெரியும் என்ற தனது மூளையின் மகுடிக்கு ஆடுபவர்கள்.<br />
<br />
அத்தோடு சிலர் மெடிக்கல் ரெப் சொல்லுவதையெல்லாம் நம்பி, மக்களுக்கு நல்லதைக்கொடுக்க போராடும் தியாக செம்மல்கள்<br />
<br />
கவனம்<br />
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா !<br />
<br />
என்பது உங்களுக்கு, அல்லது உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தாய் முடியலாம்.<br />
<br />
அதைவிட நல்ல பிராண்ட் ஒண்டு இருக்கு தரவா ! என்ற<br />
இவ்வாறான குழப்பங்கள் தோன்றினால் உங்கள் வைத்தியரிடம் கலந்தாலோசித்து முடிவை எடுங்கள்!<br />
<br />
02<br />
<br />
<b>எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த </b><br />
<b>வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப் பொருளைக்கொண்ட வேறு </b><br />
<b>பிராண்ட் பாவிக்கலாமா?</b><br />
<br />
பாமசிகளை குறைகானும் எந்த நோக்கமும் தேவையும் எனக்கில்லை.<br />
<br />
எனது நோக்கம் அப்பாவி மக்களுக்கு அறிவூட்டுவதே ஒழிய குற்றம் இழைக்கும் பாமசிக்காரர்களை வம்புக்கிழுப்பதோ, அல்லது அவர்களுடன் யார் அறிவாளி என்று மோதுவதோ, அல்லது அவர்களை திருந்தச்சொல்வதோ, அல்லது அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோ நோக்கம் அல்ல அதை இறைவனும், சட்டமும் பார்த்துக்கொள்ளட்டும்<br />
<br />
உங்களுக்கு யாராவது பாமசி நடத்தும் நன்பர்கள் இருந்தால் கேட்டுப்பாருங்கள். அங்கே நடக்கும் அநியாயங்களை, கொள்ளையைப்பற்றி நான் சொல்பவை உண்மையா இல்லையா என விளங்கும். சிலர் பாமசிகளில் நடக்கும் இக்கொடுமைகளை அவர்களது வியாபார தந்திரம் என்று தற்புகழ்ச்சி அடைந்துகொள்வர்.<br />
<br />
இலங்கை போன்ற சட்டம் காலுக்கு கீழ் போட்டு மிதிக்கப்பட்டாலும் எதுவும் நடந்துவிடாத நாட்டில், பெரும்பாலான பாமசிகள் ஆங்கில மருத்துவத்திற்கு ஒரு கேடு என்றே சொல்லமுடியும். ஆனால் மிகச்சிறந்த நம்பிக்கையான பாமசிக்களும் மிகச்சிறந்த விடய அறிவுடைய பாமசிஸ்ட்களும் டிஸ்பென்சர்களும் இல்லாமல் இல்லை.<br />
<br />
பாமசிக்களில் நடக்கும் திருகுதாளங்கள் எல்லாவற்றையும் பற்றி நான் கதைக்க வரவில்லை அவ்வாறு கதைக்கபோனால் ஒரு பெரும் புத்தகம் எழுதும் அளவு திருகுதாளங்களால் நிரம்பி வழிகின்றது சில பாமசிக்கள் இவைத்தியரினால் எழுதப்படும் வெளிச்சிட்டைகளில் என்னவெல்லாம் நடக்கும் எனத்தான் சொல்லவருகின்றேன் இ எப்படியெல்லாம் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதே எனது இன்றைய தலைப்பு.<br />
<br />
ஆங்கில மருந்துகள் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை(யேவழையெட <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;">(National Medicine Regulatory Authority)</span> பல சட்டங்களை இயற்றி அதனை மீறினால் கடும் தண்டனைகளையும் பிரேரித்திருக்கின்றது. ஆனால் இச்சட்டங்கள் மீறப்படாத பாமசி ஒன்றை இலங்கையில் தேடிக்கண்டுபிடித்தல் மிகக்கடினமானது.<br />
<br />
கதை ஒன்றைச்சொல்லிவிடுவோம்...<br />
<br />
2016ஆம் ஆண்டில் கொழும்புக்கு வேலைமாற்றம் பெற்று வந்து விட்டேன். வந்ததன் பிற்பாடு எந்தவொரு பிரைவட் கிளினிக் செய்வதிலிருந்தும் பிரைவட் ஹொஸ்ப்பிட்டலில் வேலை செய்வதிலும் ஈடுபடவில்லை.(காரணங்கள் மிகப்பல பிறகு ஒரு பதிவில் சொல்கிறேன்) அதனால் தேவைப்படும் மருந்துகளை பாமசிக்களில் வாங்கிக்கொள்வேன்.<br />
<br />
அன்று வீட்டில் ஒருவருக்கு கால்வலிக்கு பாவிப்பதற்காக டைக்குளொபெனக் எனும் வலிமாத்திரை தேவைப்பட தெமட்டகொட வீதியில் உள்ள ஒரு பாமசிக்கு சென்றேன் (அங்கே நான் டொக்டர் என்று தெரியாது) .<br />
டைக்குளொபெனக் டெப்லட் ஒரு கார்ட் தாங்க என்றேன். அதிலும் நான் ஒரு பிராண்டைச்சொல்லிக்கேட்டேன் அது இல்லை என்று வேறு ஒரு பிராண்ட் இருப்பதாகவும், நல்லபிராண்ட் என்றும் ஏதோஒரு நாட்டின் பெயரையும் சொன்னார். எவ்வளவு என்று கேட்டேன் ஒரு டெப்லட்டின் விலை மாத்திரம் 80 ரூபாய். நான் கேட்ட பிராண்ட் ஒரு டெப்லட்டின் விலை ஒரு ரூபாய் கூட இல்லை. சரி விலைகுறைந்த பிராண்ட் ஒன்றும் இல்லையா என்றேன். இது தான் எங்களிடம் தற்போது உள்ள விலை குறைந்த பிராண்ட் என்றார்.<br />
வேண்டாம் என்று விட்டு வேறு பாமசிக்கு சென்றுவிட்டேன்.<br />
<br />
இந்த பாம்சிக்காரர் எவ்வாறு சட்டத்தை மீறுகிறார் என்று பாருங்கள்..<br />
<br />
1- நான் கேட்ட உடனே டொக்டரின் சிட்டை இல்லாமல் எனக்கு மருந்தை தரமுற்படுகிறார் (மிகவும் ஒரு தண்டனைக்குரிய குற்றம். போதைமாத்திரைகளின் ஆதிக்கத்துக்கு வழிகோளியது இதுவே)<br />
<br />
2- வேறு ஒரு பிராண்ட் இருக்கின்றது என்று அவரது விலைகூடிய மருந்தை என்னில் திணிக்கப்பார்க்கிறார் (உண்மையில் அவ்வாறு இல்லாவிடில் நான் கேட்ட அதே பிராண்டின் விலையை என்னிடம் சொல்லவேண்டும். அத்தோடு அவரிடம் உள்ள மற்ற அதே இரசாயன மருந்தின் பிராண்ட்களின் விலைப்பட்டியலை தரவேண்டும். அதில் ஒன்றை நான் தேர்வுசெய்ய இடமளிக்கவேண்டும்)<br />
<br />
3- டைக்குளொபெனக் போன்ற ஓரு அவசியமான மருந்தின் பொதுமருந்து வகையை <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"> (Generic medicine)</span> தமது பாமசியில் வைத்திருக்காமல் விலைகூடியவகை மாத்திரை ஒன்றைமட்டும் வைத்திருத்தல்.<br />
<br />
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் சட்டம் 2015-5 , சரத்து 56 இன் படி ஒரு வைத்தியர் ஒரே ஒரு இரசாயனப்பொருள் கொண்ட ஒரு மருந்தின் பொதுப்பெயரையே <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;">(Generic name)</span><span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;"> </span>எழுதவேண்டும். இங்கே அவர் விரும்பினால் அந்த இரசாயனத்தைக்கொண்ட தான் விரும்பும் பிராண்ட் <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;">(Brand name) </span> ஒன்றை குறிப்பிட முடியும். அவ்வாறு பிராண்ட் எழுதப்பட்டிருந்தால் இங்கே பாமசிக்காரர் இதை விட சிறந்த பிராண்ட் இருக்கின்றது தரவா எனக்கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த பிராண்ட் இருக்குமிடத்து அவர் அதை தரவேண்டியது கடமை. அந்த பிராண்ட் இல்லாவிடில், எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் அதே இரசாயன மருந்தை மாத்திரம் கொண்ட மற்ற ஏதாவது பிராண்டை உங்களின் விருப்பத்தோடு தரமுடியும். ஆனால் அவர் தன்னிடமுள்ள மற்றய ப்ராண்டுகளினதும் இலங்கை அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினதும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனத்தைக்கொண்டுள்ள மற்றய பிராண்டுகளினதும் விலைகளை உங்களுக்கு தெரிவித்து அதில் உங்களை தெரிவு செய்யச்சொல்லலாமே ஒழிய பாமசிக்காரர்கள் இது நல்லது இதை எடுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்தவோ அல்லது உங்களை மடக்கவோ முடியாது. அவ்வாறு செய்யமுற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.<br />
<br />
ஒன்றுக்குமேற்பட்ட இரசாயன மருந்துகளின் கலவையைக் கொண்டுள்ள மாத்திரைகளை அல்லது மருந்துகளை எழுதும் போது வைத்தியர்கள் இவ்விரசாயனப் பெயர்களைக்கொண்ட பொதுப்பெயர்களை <span style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;">(Generic name)</span> எழுதவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிராண்ட் பெயரைமட்டும் எழுதினாலே போதுமானது. இவ்வாறான நிலைகளில் குறித்த பிராண்டைத்தவிர வேறு எதையும் பாமசிக்காரர் தருவது குற்றமாகும்.<br />
<br />
இதே மருந்தில் வேறு பிராண்ட் தருகிறோம் என்று விட்டு அதையொத்த ஆனால் இரசாயன ரீதியில் வேறுபட்ட மருந்துகளை தந்து விடுவதில் தான் பாமசிக்காரர்கள் உங்களை ஏமாற்றிவிடுகிறார்கள்.<br />
<br />
எழுதப்பட்ட ஒரு குளிசையின் பிராண்ட் இல்லாதவிடத்து எந்த வித்தியாசமும் இல்லாத அதே இரசாயனப்பொருளைக்கொண்ட வேறு பிராண்ட் பாவிக்கலாமா?<br />
<br />
இப்போது நீங்கள் ஆம் என்ற விடையை தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள்<br />
<br />
(வைத்தியரின் முகநூல் குறிப்புகள்)</div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-63587927783061563102018-05-25T17:04:00.001+05:302018-05-25T18:10:07.071+05:30தாயத்து கட்டு... தாகம் தீரும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2sp8hOMOJq50ydkQU0ftWOj4RMUpAE2V25u99-UGvVSy3g2z7QxUVEjRYuQKdCTBv8gQ4l17tG5pkLaQg-uEFUHPyk9HeLNiKXxl1WmUsMir6R7ZcIB_RQDpGIkXf149V4o0xmNbiF03B/s1600/THAYATHTHU.jpg+111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="319" data-original-width="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2sp8hOMOJq50ydkQU0ftWOj4RMUpAE2V25u99-UGvVSy3g2z7QxUVEjRYuQKdCTBv8gQ4l17tG5pkLaQg-uEFUHPyk9HeLNiKXxl1WmUsMir6R7ZcIB_RQDpGIkXf149V4o0xmNbiF03B/s1600/THAYATHTHU.jpg+111.jpg" /></a></div>
<span style="white-space: pre;"> </span>எண்பதுகளின் நடுப்பகுதியில் எம்.எச்.பௌஸூல் அமீர் எழுதி மானா மக்கீன் நெறிப்படுத்திய 'தோட்டத்து ராணி' (பல்கீஸ் உம்மா) நாடகத்தில் ஒரு காட்சி.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>கொழும்பில் தோட்டம் - தோடம் என அழைக்கப்படும் நெருக்கடிப் பட்டு வாழும் பகுதிக்குல் பல வீடுகளை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கும் 'சொர்ணக்கா'வான தோட்டத்து ராணியின் மகன் அதே தோட்டத்தில் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டில் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடிவிடுவான். தாயாரான தோட்டத்து ராணி 'மை வெளிச்சம்' பார்க்கும் ஒரு நபரிடம் போய் மகனும் அந்த இளம் பெண்ணும் எங்கிருக்கிறார்கள் என்று அறியச் செல்கிறாள்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>மை வெளிச்சம் பார்ப்பவர் அவராகப் பார்த்துச் சொல்வதில்லை. பருவமடையாத சிறுவனை அல்லது சிறுமியொருத்தியைத்தான் பயன்படுத்துவார்கள். வாயகன்ற ஒரு போத்தலில் நீர் நிரப்பி அதற்குள் கண் இமைக்காமல் உறுத்திப் பார்க்கச் சொல்லியபடி தாம் வாயால் ஒரு காட்சியை உருவாக்கி பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கோ சிறுமிக்கோ சொல்லிக் கொண்டேயிருந்து விட்டு இப்போ எங்க இருக்கிறான், என்ன செய்கிறான் என்று கேட்பார்கள். பார்வைப் புலனை நீருக்குள்ளும் கேள்விப் புலனை மைவெளிச்சம் பார்க்கும் நபரின் குரலிலும் ஒன்றித்துக் கொண்டுள்ள அவர்களுக்கு அதுவே உலகமாய் மாற அவர்கள் கண்ணுக்குப் புலப்படும் மாயக் காட்சியைச் சொல்லத் தொடங்குவார்கள். இதை பெருமளவில் நம்பிப் பலர் அடிபிடிப்பட்டிருக்கிறார்கள். குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. நட்புக்கள் அறுந்து போயிருக்கின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>ஆனால் நாடகத்தில் நீருக்குள் பார்த்துக் கொண்டிருந்த பையன், என்ன தெரிகிறது என்று கேட்ட போது 'வீவா' தெரிகிறது என்பான். சபை கொல்லெனச் சிரிக்கும். அந்த நாட்களில் பிரபல்யமாயிருந்த வீவா மாவு வந்த போத்தல் அது. அதன் அடிப்பகுதியில் 'Viva 'என்று ஆங்கிலத்தில் எழுதியிருக்கும். அதைத்தான் அந்தப் பையன் சொன்னான். மை வெளிச்சம் பார்ப்பதே ஒரு டுபாக்கூர் வேலை என்பது வெளியானதைப் புரிந்து கொண்டுதான் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>20ம் நூற்றாண்டில்தான் இவ்வாறு ஏமாற்றுவதற்குக் கில்லாடிகளும் ஏமாறுவதற்கு மக்களும் இருந்தார்கள் என்றால் 21ம் நூற்றாண்டிலும் போலி வைத்தியர்கள், போலிச் சாமியார்கள், போலி மந்திர வித்தைக்காரர்கள், ஜின் வைத்தியர்கள் நிறைந்து போயிருப்பதுவும் அதை ஒரு மக்கள் கூட்டம் நம்பியிருப்பதுவும்தான் வேடிக்கை.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>மேலே நான் சொன்ன சம்பவம் போன்று என் வயதொத்த என் வயதுக்கு மூத்த நபர்களுடன் உரையாடினீர்கள் என்றால் பல நூறு கதைகளையும் டூப்பு விளையாட்டுக்களையும் சொல்லிச் சிரிப்பார்கள். பலர் மூளை என்ற ஒன்றைப் பயன்படுத்தாமலேயே மாட்டிச் சித்திரவதைப்பட்ட ஆயிரமாயிரம் கதைகள் சமூகத்துக்குள் உலாவிக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இதன் அடிப்படையைப் பற்றி மேலோட்டமாகச் சிந்தித்தாலே மனிதனின் பேராசை, வேகமான வழியில் முன்னேறுதல், எதிராளிக்கு அடையாளம் தெரியாமல் துன்பம் இழைத்தல், வேண்டப்படாத ஒருத்தனைப் பழி வாங்குதல் போன்ற மனித மனத்தின் குரூரங்களை வெளிப்படுத்த பேராசை கொண்டலையும் மனதைத் திருப்திப்படுத்த என்றுதான் இந்த முயற்சிகள் யாவும் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது வடிகட்டிய சுயநலத்துக்காகவே இவ்வாறான நியாயத்துக்கு முரணான, இயற்கைக்கு முரணான, மனச்சாட்சிக்கு முரணான காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை தௌ;ளத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள முடியும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இருபது வருடங்களுக்கு முன்னர் எனக்கும் ஒரு போது ஓர் அற்புதமான அனுபவம் கிடைத்திருக்கிறது!<br />
<br />
<span style="white-space: pre;"> </span>பொருளாதார முடை பற்றி நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர்தான் என்னை பலவந்தமாக அந்த ஹஸரத்திடம் நேரம் குறித்து அனுப்பி வைத்தார். அங்கு சென்ற போது ஆண்களும் பெண்களும் ஏகப்பட்ட பொருட்களுடன் (தெம்பிலிக் குரும்பை, வெற்றிலை, தேசிக்காய்கள், மெழுகுச் சீலை, நாடாக்கள்.....) என்னைக் கண்டதும் உடனடியாக ஹஸரத்துக்குத் தகவல் சென்றது. பத்து நிமிடத்துள் அழைக்கப்பட்டேன். பொருளாதார முடையைச் சொன்னேன். 20 தேசிக்காய், 3 தெம்பிலி, ஒரு பகழி வெற்றிலை ஆதியவற்றுடன் மீண்டும் வரும்படி அடுத்த வாரத்தில் ஒரு திகதியைத் தந்து விட்டுத் தனது பதிவேட்டில் குறித்துக் கொண்டார். ஆயிரம் ருபாய்த் தாளை நீட்டினேன். முன்னால் வைக்கச் சொன்னார். வைத்து விட்டுத் திரும்பினேன்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>குறித்த திகதியில் சென்ற போது பொருட்களை அவரது உதவியாளர் பெற்றுக் கொண்டார். உள்ளே சென்றதும் ஹஸரத் வரவேற்றார். பதிய எழுதப்பட்ட ஒரு சிறிய செம்புத் தகட்டைத் தந்து, 'இது மட்டும் போதும். இதை பணப்பை (பேர்ஸ்)யில் ஒரு வெள்ளைக் கவரில் போட்டு வைத்திருங்கள் என்று தந்தார். மீண்டும் ஓர் ஆயிரம் ருபாவை வைத்து விட்டு வந்தேன். இனி எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடும் அல்லவா?<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இது நிகழ்ந்து மூன்றாவது வாரம் மோட்டார் சைக்கிள் பயணம் ஒன்றை மேற்கொண்ட விட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது எனது பேர்ஸ் தொலைந்து போயிருந்தது, இரண்டாயிரத்துச் சொச்சம் ருபாய்ப் பணத்துடன் அந்த செம்புத் தகடும் அதற்குள்தான் இருந்தது!<br />
<br />
25.05.2018 </div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-56518894743417308522018-05-02T12:05:00.001+05:302018-05-02T12:07:30.176+05:30ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7fbz26r1T4IrKT3NmaTaoRMbry-zfiMmT__1CIcVV8rHtuRq7i33i5eJ4GUxH8tduUQJPShzd132-1BtaUeorBYrY43MH9rx4bXkU2RoMQitO7qtWOvRltMoo5d0vnG0YEHevPohtrDN1/s1600/31444672_1633746223375472_8968501723958083584_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="641" data-original-width="960" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7fbz26r1T4IrKT3NmaTaoRMbry-zfiMmT__1CIcVV8rHtuRq7i33i5eJ4GUxH8tduUQJPShzd132-1BtaUeorBYrY43MH9rx4bXkU2RoMQitO7qtWOvRltMoo5d0vnG0YEHevPohtrDN1/s320/31444672_1633746223375472_8968501723958083584_n.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b>ஷாமிலா ஷெரிபின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'</b></div>
<br />
<span style="white-space: pre;"> </span>நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை நூல் பற்றிய உரையை எழுதிக் கொண்டு வந்து படிப்பதற்கு ஷாமிலாவின் 'மறைக்கப்பட்ட சொற்களின் அழகு' என்னைத் தூண்டியிருக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span><br />
<span style="white-space: pre;"> </span>ஷாமிலாவின் முதலாவது கவிதைத் தொகுதியான 'நிலவின் கீறல்க'ளுக்கும் இன்று அறிமுகப்படுத்தப்படும் மறைக்கப்பட்ட சொற்களின் அழகு'க்குமிடையில் ஷாமிலாவின் கவிதைப் பரப்பின் எல்லை விசாலித்திருப்பதை உணர்கிறேன். இந்த நூலில் உள்ள கவிதைகள் ஷாமிலாவிடம் பெற்றுக் கொண்டு வெளிவந்திருக்கும் வார்த்தைகள் மிகத் தெளிவானவை. ஷாமிலாவின் கல்வியியல், சமூகவியல், குடும்பவியல் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்றுக் கொண்டு வந்திருப்பதைப் போலவே அவரது கவிதை வெளியும் விசாலித்துச் செழித்து வளர்ந்திருக்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>கவிதைகளை ஒவ்வொன்றாகப் படித்துக் கொண்டு போகும் போது 28ம் பக்கத்தில் நான் தரிக்க நேர்ந்தது. 'என் இலக்கிய நிலம்' என்ற கவிதையின் முதற் பந்தி என்னைத் தரிக்க வைத்தது. அந்தக் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.<br />
<br />
எழுத்தில் உடல் விதைத்து<br />
அதைக் கொண்டாடியபடி<br />
கவிதை அறுவடை நடக்கிறதெனில்<br />
என்னுடைய இலக்கிய நிலம்<br />
தரிசாய்க் கிடக்கட்டும்<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த வார்த்தைக்குப் பின்னால் ஒரு பாரிய எல்லை கொண்ட ஒரு சிந்தனை வெளி உருக்கொள்கிறது. உடலுக்குள்; இருக்கும் மனமும் அதன் எண்ணங்களும் அது தூண்டும் செயற்பாடுகளும் எழுதித் தீர்க்க முடியாத நிலையில் ஒரு பேரழியாய் பெருஞ் சமுத்திரமாகக் கிடக்கையில் எங்கோ ஓர் இடத்தில் ஆற்றின் நடுவே, அல்லது கடலின் நீர் குறைந்த நீர்ப்பரப்பின் மத்தியில் இருக்கும் ஒரு தீவு பற்றிப் பேசுவதே உடல் விதைக்கும் எழுத்து.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>உடல் விதைக்கும் எழுத்து தப்பா என்றால் இல்லை. எப்போது இல்லை என்றால் சகதிக்கு அருகே சகதி படாமல் நடக்கும்போது அது தப்பாக இருக்காது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இது அவசர உலகம். எல்லாமே அவசமாக நடக்க வேண்டும், எதுவுமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என்று தூண்டல் கொண்ட இடத்துக்கு வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டிருக்கிறது நவீன உலகம். உடனடியாகவே கவிதை எழுதி, உடனடியாகவே கட்டுரை எழுதி, உடனடியாகவே சிறுகதை எழுதி உடனடியாகவே உலகப் புகழ் பெறவேண்டுமானால் அதற்கு மிகவும் பொருத்தமானது உடல் விதைக்கும் எழுத்து.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த எழுத்து ஒன்றும் புதியதல்ல. இப்போதும் உடல் விதைக்கும் எழுத்தை படைப்பாளிகள் 'சரோஜா தேவி' எழுத்து என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 35 வருடங்களுக்கு முன்னர் இத்தகைய எழுத்துக்கள் அடங்கிய பிரசுரங்கள் பெட்டிக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விடப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவற்றை எழுதுவதற்கென ஒரு எழுத்தாளர் குழு இருந்தது. அச்சிடவும் வெளியிடவும் ஒரு பட்டாளமே இயங்கியது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அன்று அந்த எழுத்து பணத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்று நவீன இலக்கியம் என்ற பெயரால் உடனடிக் கவனம் பெறவும் உடனடிப் புகழ் பெறவும் இந்த எழுத்துப் பயன்படுத்தப்படுகிறது. நோக்கம் பன்முகமானது இல்லை என்பதாலும் எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதாலும் இந்த எழுத்து ஒரு சிறிய சுழல் காற்றுக்கு மேலெழும் சருகுபோல் எழுந்து சட்டெனக் கீழே வந்து விடுகிறது.<br />
<br />
அதைத்தான் அதே கவிதையில் இப்படிச் சொல்கிறார்:-<br />
<br />
எனது நிலம் ஒரு போதும் துண்டாடப்பட முடியாதது<br />
பருவம் கடந்தாலும் பயிர் விளையும்<br />
பக்குவத்தைக் கொண்டுள்ளது.<br />
<br />
ஒரு சிறு காற்றில் விதை பரவி<br />
செழித்து எழுந்து வீச்சு மிக்கதாய்<br />
என் நிலம் வளங்கொழிக்கும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>எழுத்து வல்லமையும் மொழி வாலாயமும் இருக்கும் எவரும் அவசரப் புகழுக்கு ஆசைப் பட்டு அசூசை கொண்ட இலக்கியம் படைக்கத் தேவையில்லை என்பதுதான் இதன் அர்த்தம்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்நூலின் 35ம் பக்கத்தில் இதை இன்னும் உறுதியாகவும் தெளிவாகவும் பேசுகிறது மற்றொரு கவிதை. 'கவிதை எழுத்து' என்ற அந்தக் கவிதை.<br />
<br />
மௌனத்தைக் கலைத்து<br />
விரதத்தை உடைத்து<br />
சமயத்தை அடகு வைத்து<br />
சாக்கடைகளை<br />
எழுத்தில் கொண்டுவரவேண்டிய தேவையை<br />
ஒருக்காலும் உணரப் போவதில்லை<br />
ஒழுக்கமற்ற எழுத்துக்களை<br />
யார்தான் விரும்பப் போகின்றனர்<br />
விரும்புவோர் குறித்தும் கவலையில்லை<br />
மருந்து குடித்தால் குணமாகிவிடும்<br />
வருத்தமல்லவே எழுத்து<br />
<br />
<span style="white-space: pre;"> </span>நானும் மீன்காரனும் என்றொரு கவிதை நூலின் 63ம் பக்கத்தில் உள்ளது. ஷாமிலாவுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் எனக்கும் 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. தன்னிடம் கற்ற மாணவன் கற்றலை விட்டதற்காக அவனிடம் கவலைப்பட்ட போது உங்களது மாதச் சம்பளத்தை நான் நான்கு நாளில் உழைக்கிறேன் என்கிறான். நான் கற்பித்த காலத்தில் துடுக்குத் தனம் மிகுந்த ஒரு மாணவனால் நான் பட்ட அவஸ்தை சொல்லுந்தரமன்று. எனது பாடசாலைக் கற்பித்தல் நேரத்தில் பாதி நேரம் அவன் சம்பந்தப்பட்;ட பஞ்சாயத்திலேயே கழிந்திருக்கிறது. பாடசாலையை விட்டு விலகிய அவன் மூன்று வருடங்களுக்குப் பிறகு பாடசாலை விளையாட்டுப் போட்டியைக் கேள்விப்பட்டு என்னை வந்து சந்தித்தான். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். விளையாட்டு விழா பற்றிய அழைப்பு அடங்கிய நிகழ்ச்சி நிரலை அச்சிட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டேன். எவ்வளவு வரும் என்று கேட்டான். 600 ருபாயளவில் வரும் என்றேன். பணப்பையைத் திறந்து ஆயிரம் ருபாய்த் தாளை உருவி என் முன் மேசையில் வைத்து விட்டுப் போனான். அப்போது எனக்கு மாதச் சம்பளமே 600 தான்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>ஷாமிலாவின் கவிதை பேசுவது கல்வியை விட அவசரமாகப் பணம் உழைப்பதற்கு ஆர்வப்படும் நிலைதான் பெரும்பாலும் இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது என்ற கவலையை. இன்றைய அவசர பண உழைப்பு எப்போதும் நிலையாக இருக்காது. ஆனால் கற்றுத் தேர்ந்து ஒரு நிலைக்கானபின் அதன் மூலம் கிடைக்கும் ஒரு தொழில் போனால் மற்றொரு தொழிலை அக்கல்வி பெற்றுத் தரும் என்ற அறிவு அல்லது தெளிவு இன்றைய இளைஞர் தலைமுறையினரிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதைத்தான் ஷாமிலாவின் நானும் மீன்காரனும் கவிதை சொல்லுகிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்த நூலில் அரசியல் என்று ஒரு சிறிய கவிதை உண்டு. இதைப் படித்ததும் மருதமுனை ஹரீஸாவின் பெண் பூச்சி என்ற கவிதை ஞாபகம் வந்தது. இரண்டு கவிதைகளும் பூச்சியைக் குறியீடாகக் கொண்டு பேசுகின்றன. இரண்டு கவிதைகளினதும் இறுதி வரிகள் ஒரு கஸல் கவிதையைன் ஈற்றடியை ஒத்தனவாக அமைந்திருக்கின்றன. ஹரீஸாவின் கவிதை இப்படிப் பேசுகிறது..<br />
<br />
விறகுக் கட்டுகளிலும்<br />
ஒத்தாப்புத் திண்ணையிலுமாய்<br />
அடிபட்டு அடிபட்டு<br />
தன் தலையை முட்டி மோதி<br />
ராவெல்லாம் ஓங்கியடித்தது கதவை<br />
<br />
ராவு ஒழிந்தபின்<br />
தகட்டுக் கதவைத் திறந்து பார்த்தேன்<br />
முதுகைத் தேய்த்தபடி<br />
மல்லாக்கக் கிடந்தது பூச்சியொன்று<br />
<br />
சிறகுண்டு<br />
எட்டுக் கால்களுண்டு<br />
ராவுண்டு பகலுண்டு<br />
வானமுண்டு எல்லையில்லை<br />
பின்<br />
உனக்கென்ன பூச்சி?<br />
<br />
பூச்சி சொன்னது<br />
நான் பெண் பூச்சி என்று!<br />
<br />
ஆனால் ஷாமிலாவின் பூச்சி அரசியலைக் குறியீடாகக் கொண்டது.<br />
<br />
காற்றுவரத் திறந்துவைத்த கதவிடுக்கால்<br />
கரப்பான் பூச்சி<br />
பாதணி கொண்டும்<br />
தும்புத்தடி கொண்டும் அடிக்க முயற்சித்து<br />
புரட்டி விட்டேன்<br />
ஓட முடியவில்லை மல்லாந்து கிடக்கிறது<br />
நிமிர்ந்து விடத் துடிக்கிறது<br />
தானாகப் புரண்டு கொள்ளவியலாது<br />
வட்டமிட்டு நேரத்தைக் கடத்துகிறது<br />
காலால் மிதித்துவிட<br />
அருவருப்பால்<br />
வெளியே எத்தி விடுகிறேன்<br />
காகம் கொத்திச் செல்கிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>ஹரீஸாவின் கவிதை படித்தவுடன் புரிந்து கொள்ளக் கூடியதான இருக்கிறது. ஷாமிலாவின் கவிதை என்னை நிறையச் சிந்திக்க வைத்தது. அரசியல்வாதியைப் பேசுகிறதா, அரசியலில் புகுந்து கொள்ள இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து கொள்ள முனைவோரைப் பேசுகிறதா என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் வெளியே போட்டால் காகத்தால் கொத்திச் செல்லத் தக்கதான ஒருவரையோ பலரையோ இது குறிப்பதாகத்தான் நினைக்க முடிகிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>மறைக்கப்பட்ட சொற்களின் அழகு கவிதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதையாக அமைந்திருப்பது 'என்னாடை' என்ற கவிதை. அதில் பெரிதாகக் கவித்துவம் வழிந்தோடவில்லை. ஆனால் அக்கவிதை பேசுகின்ற விடயமும் பேசுகின்ற முறையும் உண்மையில் நயக்கத் தக்கதாகத்தான் இருக்கிறது. நயக்கத்தக்கதாக அமைந்து விட்டால் அது ஒரு நல்ல கவிதைதான்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இக்காலத்தில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி அந்தக் கவிதை பேசுகிறது.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>என்னுடைய தனிப்பட்ட கருத்தில் இந்த ஆடையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்காக இன்னொருவரின் சுதந்திரத்தில் தலையிட்டு அதை நிராகரிக்கச் சொல்லும் உரிமையும் எனக்குக் கிடையாது.<br />
பாதி மார்பகங்களும் அரைவாசி அடித்தொடைகளும் தெரிய அணிந்து செல்லும் ஆடைகள் பற்றி யாருக்கும் எந்த உறுத்தல்களும் இல்லை. முஸ்லிம் பெண்களை நோக்கி இலங்கையருக்குரிய ஆடைகளை அணியுங்கள் என்று சொல்லும் யாருக்கும் அரை குறை ஆடையணிவோரைப் பார்த்து அப்படிச் சொல்லத் துணிவு வருவதில்லை. இந்த விடயத்தைத்தான் ஷாமிலா மிக வினயத்துடன் மனிதனுக்குரியஆடைத் தெரிவுச் சுதந்திரத்துக்கான நியாயத்தை முன் வைத்துக் கேள்விகளாக எழுப்புகிறார். அந்தக் கேள்விகளுக்கூடே முஸ்லிம் பெண்களுக்குரிய ஆடையை விமர்சிப்பதானது குறிப்பாக முஸ்லிம் பெண்களது சுதந்திரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார்.<br />
<br />
அந்தக் கவிதையில் இப்படி வருகிறது:-<br />
<br />
என் சுதந்திரத்தில்<br />
என் விருப்பத்தேர்வில்<br />
எனக்குப் பிடித்தமானதில்<br />
மற்றவர் விருப்பு வெறுப்புக்களை<br />
ஏன் திணித்துவிட முயல்கின்றார்கள்<br />
<br />
உங்கள் பிரச்சனைதான் என்ன<br />
நானா<br />
நான் அணிகின்ற ஆடையா<br />
அல்லது பின்பற்றும் மதமா?<br />
<br />
உங்கள் சுதந்திரத்தில்<br />
நான் தலையிடாமல் இருப்பது போல்<br />
என் சுதந்திரத்திலும் நீங்கள்<br />
தலையிடாதிருங்கள்<br />
<br />
இது என் வாழ்க்கை<br />
எனக்குப் பிடித்தமான மாதிரித்தான்<br />
வாழ முடியும்<br />
<br />
என் ரசனைக்கேற்பவே நான்<br />
ஆடையணிகிறேன்<br />
உங்கள் ரசனைக்கேற்ப<br />
நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்!<br />
<br />
<span style="white-space: pre;"> </span>இந்தத் தொகுதியிலிருந்து பதச்சோறாகச் சில கவிதைகளை முன் வைத்துப் பேசியிருக்கிறேன். எல்லாக் கவிதைகளையும் ஒரே உரையில் கொண்டுவருவதும் சாத்தியம் அல்ல.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>கவிதை என்பது மிகச் சுருக்க மொழியாலானது. சொல்ல வந்த விடயத்தைச் சொல்வதற்குத் தேவையான சொற்களை மாத்திரம் பயன்படுத்தும் போது அது அழகுபெறும். ஷாமிலாவின் கவிதைகளில் துருத்திக் கொண்டு நிற்கும் சொற்கள் இல்லை என்ற போதும் ஒரு சில கவிதைகளில் தவிர்த்திருக்க வேண்டிய சொற்;கள் இருக்கின்றன என்று காண்கிறேன். இன்னொருமுறை இக்கவிதைகளை ஷாமிலா வாசிக்கும் போது அவற்றை அடையாளம் காண முடியும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>பொதுவாக ஷாமிலாவின் கவிதைகளின் அடிநாதமாக அறச்சீற்றத்தை நான் உணர்கிறேன். இது முழு மனித சமூகத்தையோ அல்லது தனது சமூகத்தையோ நோக்கிய அறச்சீற்றமாக அல்லாமல் ஒரு சில தனி நபர்கள், ஒரு சில குழுமங்களை நோக்கியதாகவே இருக்கக் காண்கிறேன். இது வழமையாக கவிதைத் தொகுதிகளில் காணக் கிடையாக்கத ஒரு பண்பு.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>அறச்சீற்றமானது பொதுவாகப் படைப்பாளிகளுக்குள்ள ஒரு பொதுப் பண்பாயிருப்பினும் எல்லோரும் அதை வெளிக்காட்டுவதில்லை. தன் பெயர் கெட்டுவிடும், தனது பொன்னாடை தவிர்க்கப்பட்டுவிடும், எனது இடம் கீழே சென்று விடும், எனக்குக் கிடைக்கவிருக்கின்ற பட்டம் தவறிவிடும் அவர் என்ன நினைப்பார், இவர்கள் என்ன நினைப்பார்கள், என்னைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பன போன்ற அற்பத் தனங்களை மனதில் கொண்டோர் எந்த விதமான ஒரு குற்றத்தையும் பாவத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். இது அந்தப் பாவத்துக்குக் குற்றத்துக்கு இணையான ஒரு செயலாகும்.<br />
<br />
<span style="white-space: pre;"> </span>எதுவும் ஆகிறதோ இல்லையோ நூறு எதிர்க்குரல்களில் என்னுடைய குரலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அதற்காக இயங்குவதுமே உன்னதமான இலக்கியத்தின் அச்சாகவும் அசைவாகவும் இருக்கும். மனித குலத்துக்காகக் குரல் தரும் அதிசிறந்த மனத்தின் செயற்பாடாக இருக்கும். அந்த மனம் ஷாமிலாவிடம் இருக்கிறது என்பதை இந்தத் தொகுதியின் கவிதைகள் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.<br />
<br />
29.04.2018</div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-38665093058763634022017-09-27T21:02:00.000+05:302017-09-27T21:02:15.252+05:30யாரும் மற்றொருவர்போல் இல்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD48jPqYTzBLddbIUwWA47v4qMzvmUhb49ktovZL7onK1DERBE998pU8Y805vZv3rElgMXMhF-Afosd_m8O9fyk0T1hB2gmODOYCK0ZEWZYMpa8NAKvIzxLjkgTuGj7jopn46E72PfDHwD/s1600/Sh.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="504" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhD48jPqYTzBLddbIUwWA47v4qMzvmUhb49ktovZL7onK1DERBE998pU8Y805vZv3rElgMXMhF-Afosd_m8O9fyk0T1hB2gmODOYCK0ZEWZYMpa8NAKvIzxLjkgTuGj7jopn46E72PfDHwD/s320/Sh.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: center;">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப். எச். ஏ. ஷிப்லி
(கவிஞர் நிந்தவூர் ஷிப்லி)</span></b><b><span lang="EN-GB"><o:p></o:p></span></b></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: center;">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விரிவுரையாளர்</span></b><b><span lang="EN-GB"><o:p></o:p></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt; text-align: center;">
<b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இலங்கை தென்கிழக்குப்
பல்கலைகழகம் </span></b><b><span lang="EN-GB"><o:p></o:p></span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பன்முக இலக்கியவாதி, சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளர், எழுத்தாளர் என பல்துறை ஆளுமை
கொண்ட அஷ்ரப் சிஹாப்தீன் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்
ஒரு இளமை நதி. வற்றாத அறிவியல் ஊற்று.பல்துறைகளிலும் ஆழமாக் காலூன்றி, வேரூன்றிய
கலை ஜாம்பவான்..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவரதுபத்தாவது நூலாகவும்,மூன்றாவது மொழிபெயர்ப்பு நூலாகவும் அண்மையில் வெளியாகியது“யாரும்
மற்றொருவர்போல் இல்லை”எனும்மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுதி.யாத்ரா பதிப்பகத்தினால்
வெளியிடப்பட்டஇந்த நூலில் முப்பது நாடுகளைச் சேர்ந்த </span><span lang="EN-GB">49 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கவிஞர்களின் ஐம்பது கவிதைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. நூலினைநூலாசிரியர் அவரது தாய்வழிப் பாட்டனார் புலவர் மஹ்மூது
அப்துஸ்ஸமது ஆலிம் அவர்கட்கு சமர்ப்பித்துள்ளார்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இளைய இலக்கியவாதிகளை மனமாரப்பாராட்டி, அவர்களை ஊக்கப்படுத்தும் மூத்த
இலக்கியவாதிகளில் அஷ்ரப் சிஹாப்தீன் முக்கியமானவர். அதற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் நூற்றுக்கணக்கான இளைய எழுத்தாளர்களை வெளிச்சம்
போட்டுக் காட்டி அவர்களை ஊக்கப்படுத்தியமைமுக்கிய சான்று.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலில் இடம்பெற்றுள்ளமொழிபெயர்ப்புக் கவிதைகளின் கவிதைத்தேர்வுகளை
வாசிக்கின்றபோது தனிமனித உணர்வு சார் கவிதைகள், காதல் கவிதைகள், யுத்தமும், அதன்
கோர நகங்கள் பதித்த வலிமிகுந்த கீறல்கள் தொடர்பான கவிதைகள், அரசியல் சார்
கவிதைகள், வாழ்வியலையும், அழகியலையும் பேசக்கூடிய கவிதைகள், மனிதாபிமானம் தொடர்பான
கவிதைகள், புரட்சி விதைகளை விதைக்கின்ற கவிதைகள் என்று பல கோணங்களிலும் கவிதைகள்
தேர்வு செய்யப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு நூலுருவாக்கம் பெற்றதை அவதானிக்கலாம்.
அதேபோலகானா, பங்களாதேஷ், பாரசீகம், நமீபியா, போஸ்னியா, பாலஸ்தீன், நேபாளம்,
பாகிஸ்தான், சிரியா, ஆப்கானிஸ்தான், குர்திஷ், அமெரிக்க, கென்யா, நைஜீரியா,
தன்ஜானியா, அல்பேனியா, எகிப்து, கியுபா உள்ளடங்கலாகநாம் இதுவரை வாசிக்காத, நமது
தமிழ் வாசிப்புச் சூழலுக்கு அதிகம் பரிச்சயமில்லாத பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்படுள்ளன.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
Translation என்ற வார்த்தை "translatio" என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது, இதற்கு ‘கொண்டு சொல்லுதல்’ என்று பொருள். ‘ஒரு மூல மொழிப் பிரதியின் அர்த்தத்தை அப்பிரதிக்கு இணையான இலக்கு மொழிப் பிரதியின் வழியாக வெளிப்படுத்துதலே மொழிபெயர்ப்பு.’ இந்த வரையறையை மொழிபெயர்ப்பு பற்றிய மிக அடிப்படையானவொரு வரையறையாகக் கொள்ளலாம். இதில் ‘அப்பிரதிக்கு இணையான’ என்ற பிரயோகம் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மொழிபெயர்ப்பு எனும்போது இலக்கிய மொழிபெயர்ப்பையே பெரிதும் நாம் சுட்டுகிறோம். தழுவல், சுருக்கம், மொழியாக்கம், நேர்மொழிபெயர்ப்பு என்பவற்றை மொழிபெயர்ப்பின் வகைகளாகக் கொண்டால் நேர்மொழிபெயர்ப்பே இலக்கிய மொழிபெயர்ப்பாக அமைய முடியும். ஏனென்றால் அதுவே ‘பிரதிக்கு இணையான’ எனும் அடிப்படையைக் கொண்டது.<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்பு உத்தியைப்
பார்க்கின்ற போது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான பண்பு “எளிமை” அதாவது
எளிய சொற்கள்.</span><span lang="TA"> </span><span style="font-family: Latha, sans-serif;">நோபல் பரிசு பெற்ற காப்ரியல் கார்சியோ மார்க்கேஸ் என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரை
ஆங்கில மொழிபெயர்ப்பில் இலகுவாகப் படித்துப் புரிந்து கொள்ளமுடிகிறது. அனால், அதே
எழுத்தாளரின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒரு வாக்கியத்தைக் கூட புரிந்து
கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் ஒருவிதமான சிக்கலான மொழியில் எழுதினால்தான் இலக்கியம்
என்ற கருத்து இங்கே நிலவுவது சற்று துரதிஸ்டவசமானது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அப்படி அல்லாமல் மிக எளிமையான சொற்களின் மூலம், கவிதைகளின் மூலம் கெடாமல்
தமிழுக்கு அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார் அஷ்ரப் சிஹாப்தீன். மொழிபெயர்ப்பு என்பது
இலகுவான இலக்கிய வடிவம் அல்ல. மொழிபெயர்க்கின்ற நபருக்கு மொழியறிவும்,
கலையுணர்வும், கவிதைகள் தொடர்பான ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவசியம். மிகப்பெரிய
இலக்கிய மேதைகள் கூட தடுக்கி விழுகிற இடமே இந்த மொழிபெயர்ப்பு என்றுகூடச் சொல்லலாம்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இன்றைய திகதியிலுள்ள வாசகர்களுக்கு எளிமையான இலக்கியங்களே அதிகம் புரிகிறது.அதிகம்
பிடிக்கிறது.பின்நவீனம், அதிபின்நவீனம் என்று வலுக்கட்டாயமாகப்
படைக்கப்படுகிற இலக்கியங்கள் எடுபடாமல்
போவதற்கு இதுவே காரணம்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கவியரசர் கண்ணதாசனின் வெற்றிக்கு “எளிய” என்கிற உத்தியே மூலகாரணம் என்பதில்
மாற்றுக்கருத்தில்லை.“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று கண்ணதாசன்
எழுதுகிறபோது அது எல்லோரது இதயங்களை இலகுவாக சென்றடைகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இத்தகைய எளிய என்கிற உத்தி அஷ்ரப் சிஹாப்டீனுக்கும் கைவந்த
கலையாகிப்போயிருக்கிறது. “பயமாயிருக்கிறது ஏனெனில்” என்கிற கானா
நாட்டுக்கவிஞ்சரின் கவிதையை இப்படி மொழிபெயர்க்கிறார்..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உன்னை முதன்முதலாகப் பார்த்தபோது </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உனது பெயரைக்கேட்கப் பயமாயிருந்தது</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மனதைக்கவரும் பெண்களைக் காண்கிறபோது எல்லோருக்கும் இயல்பாகவே எழக்கூடிய உணர்வினை
உயிருக்கு நெருக்கமான சொற்களால் உரசிச்செல்கிறார்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதுபோலவே லஜ்வா கோலூவி என்கிற நமீபிய நாட்டுக் கவிஞரின் அழுகுரல் என்கிற
கவிதையில்..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அது ஓர் அழுகுரல்..</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம் அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தெருவில் நிற்கும் பெண்ணின் அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யாராவது அதைச் செவிமடுப்பார்களா?</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யாராவது சென்று பார்ப்பார்களா??</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று தொடங்கி</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனக்கருகே நிற்கும் பெண்ணின் அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது நெருங்கிய நண்பியின் அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது பெண் குழந்தையின் அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது சொந்த அழுகுரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று கவிதை விரவி முடிகிறபோது நம் செவிட்டில் யாரோ அறையும் உணர்வு இயல்பாகவே
நமக்குள் எழுகிறது.இதுமொழிபெயர்ப்பாளரின் வெற்றி.அவரது மொழிபெயர்ப்பு நுட்பத்தின்
வெற்றியேயன்றிவேறில்லை.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலின் கவிதைத்தேர்வின்வகைகளாக நான் ஏலவே குறிப்பிட்ட பல பிரிவுகளில் தனி
மனித உணர்வுகள், காதல், யுத்தம் குறித்த கவிதைகள் ஆகிய மூன்று பெரும்பகுதிகளை
மட்டும் ஆய்வு செய்வதாகவே எனது விமர்சனம் அமைகிறது.நீங்கள் இந்த நூலை வாசிக்கிறபோதுஇதன்
மற்றைய பரிமாணங்களை மிக இலகுவாக உங்களால் கண்டடைய முடியும்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் காணக்கூடிய மிகப்பெரிய அபாயம் மூலக்கவிதைகளின்
உணர்வுகளை அவர்களது கலை, கலாசார வடிவங்கள் தாண்டி தமிழ் மொழிக்கு ஊடுகடத்துவது.
மூலக்கவிதையின் உள்ளுணர்வை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்ப்பது சுலபமான
விடயம் என்று யாரேனும் நினைத்தால் அவர்களது இலக்கிய அறிவுக்கு எனது இரண்டு நிமிட
மௌன அஞ்சலிகளை சமர்ப்பிக்கிறேன்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலில் வெவ்வேறு நாடுகளின், வெவ்வேறு கவிஞர்களின், வெவ்வேறு
பிரச்சினைகளை, வெவ்வேறு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கிறார்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒளிந்திருக்கும் எனது உணர்வுகள் என்கிற நபீமிய நாட்டுக் கவிஞர் எவலைன் ஹைஹம்போ வின் கவிதையின் சில வரிகள்
எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பதைப்பாருங்கள்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உண்மையாக நான் யார் என்று பாருங்கள்..</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது வாயால் சொற்களை வெளிப்படுத்த முடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உண்மையை என் இதயம் அறியும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால்,</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்னிடமிருந்து அதை வெளியே கொண்டு செல்வது</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எப்படியென்று அதற்குத் தெரியாது</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று விரியும் கவிதை</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது காதுகளால் கேட்கமுடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனக்காகக் கேளுங்கள்’</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது தோலினால் உணர முடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனக்காக உணருங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது கண்களால் பார்க்கமுடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனக்காகப் பாருங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது வாயினால் பேச முடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனக்காகச் சொற்களைப் பேசுங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எனது ஆத்மாவினால் அறியமுடியவில்லை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் அறியத் தவறிய உலகத்தை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அல்லது நான் மறைந்து விடுவேன்..!!</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோலமனிதர்களின்உள்ளுணர்வுகளைப்பேசும் இன்னொரு கவிதை“எனது தாயார் மரணித்த
போது” என்கிற நைஜீரிய நாட்டுக் கவிஞர் லேம்பொன் சலிபு முகம்மத்எழுதியகவிதையின்
மொழிபெயர்ப்பு. இந்தக்கவிதை கிட்டத்தட்ட எனது நிலையினைப்பேசும் ஒரு கவிதையாக என்
உயிருக்குள் ஒட்டிக்கொண்டுவிட்டது.சில ஆண்டுகளுக்குமுதல் விடிந்தும் விடியாத ஒரு
காலைப்பொழுதில் எனது தகப்பன் எனக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து “உம்மா மௌத்து”
என்று சடுதியாக் கூறியபோது எனக்குள்என்னவெல்லாம் ஊசலாடித்திரிந்தனவோ அதே உணர்வுகளை
இக்கவிதையில் உணர்கிறேன்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோல“முஹம்மத் றஊப் பஷீர்” எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய“நானும் ஓர்
அகதி” என்கிற கவிதை ஒரு அகதியின் உள்ளுணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓர் அகதியாக உங்களிடம் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உங்களிடம்வந்தமைக்காக</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நீங்கள்என்னை மன்னிக்க வேண்டும் அய்யா..</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓர் அடிமையாக அல்லாமல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்னை ஒரு மனிதனாக ஏற்றுக்கொள்ளுங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று உயிரைப்பிழிந்து நம்மை உலுக்கி எடுக்கும் கவிதை இப்படித் தொடர்கிறது</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உங்களில் ஒருவனாக </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓர் அகதியாகத்தானும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்னை ஏற்றுக்கொள்வீர்களா?</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் யார்? நான் என்ன></span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று நீங்கள் கேட்கிறீர்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் கடந்த காலமற்றவன்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நிகழ்காலமுமற்றவன்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முகமுமற்றவன்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நான் ஒரு மனிதனின் எச்சம்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உங்களில் ஒருவனாக </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓர் அகதியாகத்தானும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்னை ஏற்றுக்கொள்வீர்களா?</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்தக்கவிதைஎப்படி அழகாக மொழிபெயர்க்கப்பட்டு, ஒரு அகதியின் வாழ்க்கை வலிகளைஒரு
ஊசிமுனை வழியாக நமக்குள் அஷ்ரப் சிஹாப்தீன் ஊடுகடத்துகிறார் என்று பாருங்கள்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோல இந்த நூலில் காதல் கவிதைகள் சிலவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “உலகத்தின்
காதல் எல்லாம் ஒன்றே ஒன்றே அது உள்ளங்கள் மாறி மாறிப் பயணம் போகும்” என்கிற
வைரமுத்துவின் கவிதை வரிகள் சொல்வது போல அந்தந்த நாடுகளின் காதல் பற்றிய
பார்வையும் இந்தக்கவிதைகள் மூலம் நம்மால் உணரமுடிகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பயமாயிருக்கிறது ஏனெனில்என்கிற கானா நாட்டுக் காதல் கவிதை “காதலியை
இழந்துவிடுவேனோ என்கிற” அச்சதைப்பேசுகிறது</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோல அழகு என்கிற ஆப்கானிஸ்தான் நாட்டுக்காதல் </span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவள் மலைகளில் உள்ள </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பைன் மரங்களும், அறிந்த உயரமும்,</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உடல்நேர்த்தியும் கொண்டவள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்திக்கருக்கலில்நிலவின்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிறு குடையின் கீழ் சுவர்க்கத்தில் குளித்த </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பெண்ணைப் போன்றது உனது குரல்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவள் அதிகாலையில்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வீட்டின் சுத்தமான</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஓர் ஒலிக்குடுவையை ஒத்தவள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவள் மழையின் கிசிகிசுப்பைக் கொண்டு </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உருவாக்கப்பட்ட காதணி அணிந்தவள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோல அமெரிக்க கவிஞர் சாம் ஹமூத் எழுதிய கவிதை “அவளும் அவனும்” என்கிற
தலைப்பில் காதல் உணர்வுகளை மிக இயல்பாக பேசிச்செல்கிறது..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலின் முக்கிய கவிதைகள் என்று பார்க்கிறபோது “யுத்தம், அதுபரிசளித்தவாழ்வியல் போராட்டங்கள்,
அரசியல், புரட்சி” என்பனசார்ந்தகவிதைகளுக்கே நூலாசிரியர் முக்கியத்துவம்
அளித்துள்ளார்.ஒவ்வொரு கவிதையும்இதயத்தை கீறிக்கிழித்து நம்மை கண்ணீர் மழையில்
நனைய வைக்கின்றன.இலங்கை கூட இத்தகைய யுத்த வடுக்களைச் சுமந்திருக்கும் பூமிதான்.
அதனால்தானோ என்னவோ இந்தக் கவிதைகள் பேசும் போர் குறித்த ரணங்கள் நம்மை மிகக்கடுமையாகப்
பாதிக்கின்றன.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எல்லாவற்றுக்கும் பிறகு என்கிற பொஸ்னிய நாட்டுக்கவிஞர் கோரன் சிமிக் கின்
கவிதை யுத்தம் முடிந்தபின்னரான வாழ்க்கை முறையை சாடிச்செல்கிறது..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவ்வாறே நிசார்கப்பாணி எனும் சிரிய நாட்டுக் கவிஞர் எழுதிய ஜெருசலமே என்கிற
கவிதை ஜெருசலம் மண்ணின் வலிகளைப்பேசிவிட்டு..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாளை</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நமது எலுமிச்சைகள் பூக்கும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நமது எல்லா ஒலிவ் செடிகளும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கொண்டாட்டத்தில் திளைக்கும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உனது விழிகள் நடனமிடும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உனது குழந்தைகள் யாவும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மீண்டும் விளையாட ஆரம்பிக்கும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பிள்ளைகளும் பெற்றோரும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மீண்டும் உனது அழகிய மலைகளில் சந்தித்துக்கொள்வார்கள்..</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்றுவலிகளைக்கடந்த நம்பிக்கையை பேசிச்செல்கிறது.. </span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அவ்வாறே.. கேரி கோர்சன் எழுதிய“நாங்கள் பாலஸ்தீனியர்கள்” என்கிற கவிதை </span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உலக சபைக்கு </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மனுக்கள் எழுதினோம்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சபையே எங்களைப் பார்த்துச் சிரித்தது</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கருணை, புரிதல், அமைதி, நீதி,</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இவையெல்லாம் வேண்டி </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சர்வ வல்லமைகளிடம் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">முறையீடு செய்தோம்.</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிலபோது அவர்கள் அமைதியாகச்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">செவிமடுத்தார்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">(நாங்கள் அவர்களது விளையாட்டுக்கென அடகு
வைக்கப்பட்டவர்கள்)</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பலபோதுஎங்கள் காயங்களைப் பார்த்து கொட்டாவி
விட்டார்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று நீளும் கவிதை இப்படி முடிகிறது</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாங்கள் மக்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நிலத்துக்குச் சொந்தமுள்ள மக்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதனால்தான் உங்களிடம் பெரிய மீனைக்கோருகிறோம்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">உங்களை உள்ளாரக் குடையும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நாடாப்புழு எத்தகையது?</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நீங்கள் கடவுள் பற்றிப் பேசுகிறீர்கள் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆனால் குழந்தைப்பலி கேட்கும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தெய்வத்திடம் தலை குனிகிறீர்கள்</span></i></b><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று முடியும்போது இதைவிட இந்த வலிகளை வேறெப்படி மொழிபெயர்ப்பது?</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதுபோலவே அந்தனி ஜே.மெர்சலா எழுதிய யுத்தம் என்கிற கவிதையில்..</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எவ்வளவோ எழுதப்பட்டும் </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எவ்வளவோ பேசப்பட்டும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">எவ்வளவோ செதுக்கப்பட்டும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">யுத்தத்தின் பாடங்கள்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தொடர்ந்து அலட்சியப்படுத்தப்படுவதும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தொடர்ந்து மறுக்கப்படுவதும்</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தொடர்ந்து திரிதுக்கூறப்படுவதும் ஏன்?</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதோ..இன்று சிரியா..</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்று முடிகிற கவிதை மிகப்பெரும் பாறாங்கல்லை எம் நெஞ்சின் மீது
உருட்டிவிடுகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதேபோன்றுதான் நாசர் பர்கூதி எழுதிய சிரியாவின் சிறுவர்கள் என்ற கவிதை கரையோரத்தில்
கவிழ்ந்து கிடந்த ஐலான் குர்தி என்கிற அழகிய சிறுவனதும், அதற்குப்பின்னர்நம்மைரத்த
கண்ணீர் வடிக்க வைத்த யுத்தத்தால்சிதைந்துபோன சிறுவர்களின் புகைப்படங்களையும்
கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இப்படிஎளிய சொற்கள் மூலம் அந்த அந்த நாட்டின் மொழியையும், கலாச்சாரத்தையும்,
வாழ்க்கை நுணுக்கங்களையும், தமிழ் மொழிக்கு மிக நேர்த்தியாக மொழிபெயர்த்து
இலங்கையில்மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதியதொரு ராஜபாட்டையை அஷ்ரப் சிஹாப்தீன் திறந்துவிட்டிருக்கிறார்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஒருவிதமான தேக்க நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கு
இவரது இந்த முயற்சி தாராளமாகவே நீர் பாய்ச்சுகிறது.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இந்த நூலை எதிர்விமர்சனம் செய்யக்காத்திருக்கும் சிலருக்கு சில வார்த்தைகள்.இப்போதெல்லாம்
விமர்சனம் என்பது படைப்பை பார்க்காமலே, வாசிக்காமலே, அது என்னவென்றே தெரியாமலே விமர்சிக்கும்
ஒரு நிலை நம் மத்தியில் தோன்றியிருக்கிறது.மொழிபெயர்ப்பு இலக்கியம் என்பது
தமிழுக்கு இன்று நேற்று, தோன்றிய ஒன்று அல்ல.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">மொழிபெயர்ப்பு இலக்கியம் குறித்து “தொல்காப்பியத்தில்”</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">“தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து </span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<b><i><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே”</span></i></b><b><i><span lang="EN-GB"><o:p></o:p></span></i></b></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இங்கு“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு” என்பது பொதுவான மொழிபெயர்ப்பையே
சுட்டுகின்றது. கி. பி.</span><span lang="EN-GB">14 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம் நூற்றாண்டு
முதல்</span><span lang="EN-GB"> 19</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஆம் நூற்றாண்டு வரை, மொழிபெயர்ப்புத் துறையில்
புராணங்களே முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. கி.பி.</span><span lang="EN-GB">19</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ஆம் நூற்<a href="https://www.blogger.com/null" name="_GoBack"></a>றாண்டுக்குப்பின்னர்தமிழில்
உரைநடை இலக்கியங்கள் தோன்றலாயிற்று. இதன்விளைவாக மொழிபெயர்ப்பு இலக்கியம் முக்கிய
ஒன்றாக விளங்கத் தொடங்கிற்று.<b><i><o:p></o:p></i></b></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="background: white; line-height: normal; margin-bottom: 1.2pt; text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இலங்கையை பொறுத்தவரை முதன்முதலாக தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நூல் </span><i><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-GB; mso-hansi-font-family: Arial;">மேகதூதம்</span></i><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-GB;"> - </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-GB; mso-hansi-font-family: Arial;">மகாகவி காளிதாசர்
வடமொழி மூலம் எழுதிய நூலை சோ.நடராசன் தமிழாக்கம் செய்தார். </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இது</span><span lang="EN-GB"> 1954</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஆம் ஆண்டு
வெளியானது. இதன்பின்னர்கிராமப் பிறழ்வு</span><span lang="EN-GB"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">என்ற
மொழிபெயர்ப்பு நாவல் </span><span lang="EN-GB"> </span><span lang="EN-GB"><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95" title="மார்ட்டின் விக்கிரமசிங்க"><span lang="TA" style="color: windowtext; font-family: Latha, sans-serif; text-decoration-line: none;">மார்ட்டின் விக்கிரமசிங்கவின்</span></a></span><span lang="EN-GB"> '</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">கம்பரெலிய</span><span lang="EN-GB">' </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சிங்கள நாவலின் அடிப்படையாக்கொண்டு </span><span lang="EN-GB">1964 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இல் வெளியானது. அதன்பின்னர் </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-GB; mso-hansi-font-family: Arial;">தொண்ணூறுகளுக்குப்பின்னரே
பல மொழிபெயர்ப்பு நூலுருவாக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.அவ்வாறு
மொழிபெயர்ப்பு இலக்கியங்களில் இலங்கையில் ஈடுபட்ட, ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற
எழுத்தாளர்களாக எஸ். பொன்னுதுரை, சோ. பத்மநாதன்,வி.பி. ஜோசப், சி. சிவசேகரம்,</span><span lang="TA" style="background-attachment: initial; background-clip: initial; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: Latha, sans-serif; font-size: 10.5pt;">ரூபராஜ் தேவதாசன், அருட்திரு நீ.மரியசேவியர், த.தர்மகுலசிங்கம், கெக்கிராவ
சுலைஹா, எம்.எச். முஹம்மது யாக்கூத் என்கிற வரிசையில் நமது நூலாசிரியர் அஷ்ரப்
சிஹாப்தீன் ஆகியோர்களின் பெயர்களை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. இதில்
யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களை இப்பட்டியலில் இணைத்தே ஆகவேண்டும்.</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-GB;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin: 6pt 0in; text-align: left;">
<span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">’</span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">குறிப்பிட்ட
ஒரு மொழியில்</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">குறிப்பிட்ட ஒரு வார்த்தை பல அர்த்தங்களைக்
கொண்டிருக்கும்.’ என்பதிலிருந்து ஒரு மொழி சார்ந்த பண்பாட்டு கலாச்சாரப்
பின்புலங்களை அறிந்துவைத்திருத்தல் வரை மொழிபெயர்ப்பாளன் கடந்து வர வேண்டிய தடைகள்
பல. பழமொழிகள்</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">மரபுத் தொடர்களை மொழிபெயர்க்கையில் கவனம் தேவை. வாக்கிய
அமைப்பு</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">இடம் சார்ந்த பொருள் இவற்றையும் கவனித்து மொழிபெயர்க்க
வேண்டியிருக்கிறது. விடாமுயற்சி</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">கவனம்</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">,
</span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">மொழியறிவு</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">மொழிசார்
பண்பாடு குறித்த புரிதல்</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">படைப்பின்
தொனி</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">படைப்பு மொழியின் சிக்கல்</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt;">, </span><span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">அடர்த்தி
ஆகியவற்றை உள்வாங்கும் திறன் ஆகியவை ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளனின் அடையாளங்களாக
அமையக்கூடும். ‘எவ்வளவு பெரிய மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் ஒருவர் அகராதியைப்
புரட்டத் தயங்கக் கூடாது’ என்கிற தியோடர் ஸேவரியின் கூற்றையும் நாம் மறந்துவிட
முடியாது. </span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<div style="background: white; margin: 6pt 0in; text-align: left;">
<span lang="TA" style="color: #222222; font-family: "Latha","sans-serif"; font-size: 10.5pt; mso-ascii-font-family: Arial; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Arial;">மொழிபெயர்ப்புகள் வழியே மொழிபெயர்ப்பாளர்கள்
உலகை இணைக்கிறார்கள் என்கிற கூற்று உண்மையானதே.இந்த நூலின் மூலம் அஷ்ரப்
சிஹாப்தீன் நமக்கு முப்பது நாடுகளின் இலக்கிய வாசனையை நுகரச்செய்கிறார், நாற்பது
ஒன்பது கவிஞர்களோடு கைகுலுக்க வைக்கிறார்.ஐம்பது கவிதைகளோடு நம்மை பிணைத்துவிடுகிறார்.
இந்தமூலக்கவிஞர்கள் யார்? அவர்களது பிற
கவிதைகள் என்னென்ன? என்கிற ஆய்வையும், தேடலையும் இன்றைய வாசகர்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும் ஏற்படுத்திவிடுவதில் நூலாசிரியர் வெற்றி காண்கிறார். அதேபோல
மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் புதிய கதவொன்றையும் நூலாசிரியர்
திறந்துவிட்டிருக்கிறார்.</span><span lang="EN-GB" style="color: #222222; font-family: "Arial","sans-serif"; font-size: 10.5pt; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><o:p></o:p></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அந்தவகையில் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் மிக முக்கியமான நூலாக இது
விளங்கும் என்பதோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் நூலாசிரியர் இன்னும் பல சிகரங்களை
அடையவும், அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறந்தோங்கவும் அடியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.</span><span lang="EN-GB"><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<span style="font-family: Latha, sans-serif;">(22.09.2017ல் கொழும்பி</span><span style="font-family: Latha, sans-serif;">ல் நடைபெற்ற வெளியீட்டு விழா</span><span style="font-family: Latha, sans-serif;">வில் ஆற்றிய உரை)</span></div>
</div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-76737953457073951382017-09-25T11:25:00.000+05:302017-09-25T11:25:13.536+05:30பேசியதும் பேச மறந்ததும் - யாரும் மற்றொருவர்போல் இல்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYamfj8uiu9Wom65qDxv-954oVaLFI-2WrfkBs1vjny7kl9rwrh_W88kG-cdabf9rXibJZzzxaN6W1a4LTmqET4_qvVPyf3E4EHA4pjknMdQjzlsmR3e5x3C8cY3dVlgvEc78DjlZvEZsX/s1600/COVER+Front+copy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1143" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYamfj8uiu9Wom65qDxv-954oVaLFI-2WrfkBs1vjny7kl9rwrh_W88kG-cdabf9rXibJZzzxaN6W1a4LTmqET4_qvVPyf3E4EHA4pjknMdQjzlsmR3e5x3C8cY3dVlgvEc78DjlZvEZsX/s320/COVER+Front+copy.jpg" width="228"></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b>- அமல்ராஜ் பிரான்ஸிஸ் -</b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><br></b></div>
முதலில் 'யாரும் மற்றொருவர்போல் இல்லை' என்கின்றதொரு நீண்ட பயணத்தை முடித்து அதை இன்று நம் கைகளில் சேர்ப்பித்திருக்கின்ற அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.<br>
<br>
என்னைப்பொறுத்தவரையில் விமர்சனம் என்பதெல்லாம் மிகப்பெரிய வார்த்தைகள். அது அதீத புலமையையும் ஆழ்ந்த வாசிப்பையும் தேர்ந்த அனுபவத்தையும் கோரி நிற்பது. ஆதலால் இங்கு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த வேலையை என்னால் சரிவரச் செய்ய முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால் அதைக் கண்ணியத்தோடு செய்யவேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறேன். இங்கு கண்ணியம் என்பது இதைப் படித்தபோது எனக்கு தோன்றியதையும் பெற்றுக்கொண்டதையும் ஒளிவு தயக்கம் முகதாட்சண்யம் இன்றி வெளிப்படையாகப் பேசிவைப்பது. இங்கு அதற்கான இடத்தை திரு. அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எனக்குக் கொடுத்திருக்கிறார் என்றே நம்புகிறேன்.<br>
<br>
இந்த நூலிலே இருக்கின்ற ஒவ்வொரு கவிதைகளைப் பற்றியும் நீளமான ஆழமான முறைப்படியான விமர்சனத்தையோ அல்லது ஆய்வையோ இந்த மேடையில் நடாத்திவிட்டுப் போவது என்னுடைய நோக்கமல்ல. அதை இங்கு வந்திருக்கும் திரு. ஷிப்லி அவர்கள் என்னைவிடத் திறமையாகச் செய்யக்கூடியவர். அப்படியெனின் நான் எதைப்பற்றிப் பேசப்போகிறேன்.<br>
<br>
இந்த 'யாரும் மற்றொருவர் போல் இல்லை' என்கின்ற மொழிபெயர்ப்பைப் படித்தபோது எனக்குள் உண்டான உணர்வுகள் அகத்தடுமாற்றங்கள் எல்லாவற்றையும் விட அந்த உன்னதமான ஒட்டுமொத்த வாசிப்பு அனுபவம்... இவற்றை மட்டுமே உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என வந்திருக்கிறேன்.<br>
<br>
எனக்கு கவிதையில் நீண்டகாலமாகவே ஆர்வம் உண்டு. அதிலும் என்னை 'கவிஞன்' என்று சொல்வதைவிட 'வாசகன்' என்று சொல்வதில்தான் எனக்கு பெருமையும் ஆத்மதிருப்தியும் கிடைத்திருக்கிறது. அந்தவகையில் 'கண்ணீர்ப்புக்கள்' 'திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்' 'இரத்ததானம்' என ஆரம்பித்து மேத்தா வைரமுத்து புதுவை இரத்தினதுரை ஞானக்கூத்தன் காசி ஆனந்தன் எனச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு முதல் முறையாக 'என்னைத் தீயில் எறிந்தவள்' என்கின்ற கவிதைப் புத்தகத்தோடு அதன் கவிஞர் அஷ்ரப் ஷிகாப்தீனை அறிமுகப்படுத்தியவர் மன்னாரைச் சேர்ந்த கவிஞர் மன்னார் அமுதன் அவர்கள். இன்று கவிதைகளிடமிருந்து கொஞ்சம் தூரமாய் போய் தி.ஜானகிராமன் சுந்தர ராமசாமி அ.முத்துலிங்கம் வண்ணதாசன் தஸ்தயேவ்ஸ்கி அ.சோ சுஜாதா ஜேமோ சாரு என என் பிரியத்திற்குரிய இன்னுமோர் உலகத்தை உருவாக்கிக்கொண்ட பிறகும்கூட அந்த http://ashroffshihabdeen.blogspot.com என்கின்ற 'நாட்டவிழி நெய்தல்' இன்னும் என்னுடைய <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Bookmark list</span> இல் முதலில்தான் இருக்கிறது.<br>
<br>
அவ்வாறாக நாம் யாருக்கு தீவிர வாசகனாக இருக்கிறோமோ அவருடைய புத்தகத்தைப் பற்றி பேசுவதற்கே நம்மை அழைத்து வந்து ஒலிவாங்கிக்கு முன்னால் நிறுத்திவைத்தால் எப்படியிருக்கும்? ஒரு வாசகனுக்கு இதைவிடவும் மிகப்பெரியதொரு கௌரவம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. அதற்காக அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br>
<br>
இந்த 21ஆம் நூற்றாண்டுக் காலத்திலே அதுவும் முகப்புத்தகம் ட்விட்டர் எனப் பல சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டப் பிறகு இந்த 'கவிதை' என்கின்ற வஸ்து ஓர் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">irritation</span> ஆகவே மாறிப்போய்விட்டது. திரும்பும் இடங்களிலெல்லாம் கவிதைகளிலேயே தடக்கிவிழவேண்டும் என்பது எப்படியான வாழ்க்கை. முகப்புத்தகத்தைத் திறந்தால் கவிதை. ட்விட்டருக்குப் போனால் கவிதை. இணையத்தளங்களைத் திறந்தால் கவிதை. இப்படி திரும்புமிடமெல்லாம் கவிதை கவிதை என்றால் அது <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">irritation</span>இல்லாமல் என்னவாக இருக்கமுடியும்? இதனால் நம்முடைய கவிதை வாசகர்களுக்கெல்லாம் இன்று ஏற்பட்டிருக்கும் மாபெரும் அவலம் என்னவென்றால் அது நல்ல கவிதைகளை எங்கு எப்படி தேடிப்படிப்பது என்பதுதான். இந்த தேடலுக்காக மட்டுமே அந்த வாசகன் ஏராளாமான மணித்தியாலங்களைச் செலவு செய்யவேண்டியிருக்கிறது. இந்தக் களேபரங்களுக்குள் ஓர் நல்ல கவிதையைக் கண்டடைதல் என்பது ஒரு 'ஜக்பொட்' மனநிலையாகவே மாறிப்போய்விட்டது. இப்பொழுதெல்லாம் முதல் நாள் யாருக்கும் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே அவ்வாறான நல்ல கவிதைகள் கண்களில் மாட்டுகின்றன. ஆனால் இந்தக் கலவரச் சூழலில் அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய கவிதைகள் எனக்கு எப்பொழுதுமே ஒரு நீண்ட ஓட்டத்தின் இறுதியில் கிடைக்கும் ஒரு டம்ளர் தண்ணீர் போலவே இருக்கிறது.<br>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwaIjtxw8LqT3NPqmrxjKf2SMPL1Kt8zF-fohmTGZIYayUlCpZ3gEdaOkdEHGzuGpk93ZRR_kmkxhQZCDpDQtKmSl4RA1vAtvYBfLz0-lCU8cPNyo2As8Yk6fYkjaWw9q8wTwjlByqWe4-/s1600/Am.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="840" height="228" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwaIjtxw8LqT3NPqmrxjKf2SMPL1Kt8zF-fohmTGZIYayUlCpZ3gEdaOkdEHGzuGpk93ZRR_kmkxhQZCDpDQtKmSl4RA1vAtvYBfLz0-lCU8cPNyo2As8Yk6fYkjaWw9q8wTwjlByqWe4-/s320/Am.jpg" width="320"></a></div>
<br>
இலங்கையில் இப்பொழுது வருடத்திற்கு 20 தொடக்கம் 30 வரையிலான கவிதைப் புத்தகங்கள் வெளிவருகின்றன எனச்சொல்கிறார்கள். கவிதைப் புத்தக வெளியீடுகள் வெங்காயம் உரிப்பதைவிட லேசான காரியமாய்ப் போய்விட்டது. இப்பொழுது எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள். எல்லோரும் கவிதைப் புத்தகம் போடக்கூடிய அருகதையை அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் வாசகனைத்தான் இப்பொழுதெல்லாம் காணக்கிடைப்பதில்லை. அப்படியொரு ஜந்து அழிந்துகொண்டுவருகிறது என்பதும் அந்த 'ஓவர் நைட்' கவிஞர்களுக்குப் புரிவதில்லை. ஆதலினால் அந்த அபாயகரமான வெற்றிடத்தை இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களே வில்லங்கத்திற்கு நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு முறை சுந்தர ராமசாமி சொன்னார். 'தமிழ் எழுத்தாளனல்லாத ஒரு வாசகனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு வாசகனைச் சந்தித்து குதூகலிக்கும் போதே சடாரென தன் சட்டைப் பைக்குள்ளிருந்து தன்னுடைய கவிதை என ஒரு கவிதையை எடுத்துக்கொடுத்து எப்படி இருக்கிறது என்கிறான்'. இதுதான் இப்போதைய இலக்கிய நிஜம்.<br>
<br>
இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய கையில் கிடைத்த இந்த 'யா.ம.போ.இ' என்கின்ற நூலைத் தட்டிக்கொண்டு போனபோது எனக்கு சில திடீர் ஆச்சரியங்கள் பிடிபட்டன. எதிர்பார்ப்பு சேமித்து வைத்திருந்த குதூகலத்தை இந்த ஆச்சரியம் நொடியில் இரட்டிப்பாக்கிப்போட்டது. அது நான் ஏலவே ஆங்கிலத்தில் படித்த மூன்று கவிஞர்களை இந்நூலில் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவு செய்திருக்கிறார். அதுவும் நான் படித்த அதே கவிதைகள். பலஸ்தீனத்தைச் சேர்ந்த <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Nasser Barghouty</span> ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Reza Mohammadi</span> மற்றும் துருக்கியைச் சேர்ந்த <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Nasim Hikmat.</span><br>
<br>
இவற்றில் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Nasser</span> உடைய <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;"> “To the children of Palastine'</span>என்கின்ற கவிதை அட்டகாசமானது. <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Reza</span> உடைய கவிதை நுட்பங்களை படித்து முடிக்கவேண்டும். <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Reza</span> என் இதயத்திற்கு மிகவும் பிரியமானவர். சுநணய பற்றிய ஓர் சுவாரஷ்யமான அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது.<br>
<br>
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியபோது அந்நாட்டின் தென் நகரமான கந்தகாரிற்கு அடிக்கடி போய்வருவது வழக்கம். முதல்முறை அங்கிருந்த எங்களுடைய அலுவலகத்திற்குச் சென்று என்னோடு பணியாற்றும் ஒரு நண்பனுடைய அறைக்குள் போனபோது வலப்பக்க மூலையில் தனியனாய் நின்றுகொண்டிருந்த ஒரு புத்தக அலுமாரியைக் கண்டேன். போகும் நாடுகளிலெல்லாம் அந்நாட்டு இலக்கியங்களைச் சேகரித்து படித்துப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய இலட்சியம். இலட்சியத்தில் அந்தச் 'சேகரிப்பு' நடந்துகொண்டிருக்கிறது ஆனால் 'படிப்பு'தான் இன்னும் கைகூடவில்லை. <br>
<br>
அப்படி நண்பனுடைய அந்தப் புத்தக அலுமாரியைக் கிண்டியதில் கிடைத்த அத்தனை புத்தகங்களிலும் அந்நிய பாஷைகள். பஷ்ருன் டாரி பேர்ஷியன் மொழிகளில் ஏராளமான புத்தகங்கள். இடைக்குள் மொத்தமாயிருந்த ஒரு புத்தகத்தை 'அல்லாஹ்வை' மனதில் நிறுத்திக்கொண்டு இழுத்து வெளியில் போட்டபோதுதான் தெரிந்தது. அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">Reza Mohammadi</span> இன் ஓர் கவிதைப் புத்தகம். 'அல்ஹம்துலில்லா!!'. எடுத்து அறைக்குக் கொண்டுபோய் நான்கு நாட்களில் அதைக் காலி பண்ணி முடித்தேன். பிரமாதமான கவிதைகள். ரூமியை நோக்கித் தாவிக்கொண்டிருக்கும் எழுத்து.<br>
<br>
ஆனால் அதை என்கூடவே இலங்கைக்குக் கொண்டுவரவேண்டும் என்கின்ற ஆசை இறுதிவரை நிறைவேறவேயில்லை. காரணம் அது ஆப்கான் அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகம். காரணம் சுநணய தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர். அவர் 2014 ஆல் லண்டனில் வெளியிட்ட <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">“Taliban's Poetry”</span>' என்கின்ற நூல் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி ஓய்ந்தது. அவருடைய புகழ்பெற்ற <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">'Friendship'</span>' மற்றும் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">'Illegal Immigration', 'You crossed the border' </span> ஆகிய கவிதைகள் உலகத்தரமிக்கவை. தரமான கவிதைகளின் உச்சக்கட்ட உதாரணங்கள் இவருடைய கவிதைகள் எனச்சொல்ல முடியும். அவற்றில் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">“You crossed the border”</span> என்கின்ற கவிதையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் அதே உணர்வியலோடும் <span style="background-color: #435b0d; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15.84px; text-align: justify;">emotional aliveness</span> ஓடும் இந்த நூலில் மொழிபெயர்த்திருப்பது பேரானந்தத்தைக் கொடுக்கிறது.<br>
<br>
இப்படி மேற்சொன்ன மூன்று கவிஞர்களினுடைய கவிதைகளின் ஆங்கில மூலப் பிரதிகளைப் படித்தவன் என்கின்ற முறையில் இப்பொழுது அவற்றை அஷ்ரஃப் சிஹாப்தீனுடைய தமிழில் படிக்கும் போது தேகம் சிலிர்க்கிறது. அவற்றை அதே அடிப்படை நுட்பங்களோடு மொழிபெயர்த்திருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனை மெச்சாமல் கடந்துபோக முடியாது. அஷ்ரப் ஷிகாப்தீன் போன்றவர்களின் இருத்தல் இத்தலைமுறையின் நல்லூழ் என்றே சொல்லவேண்டியிருக்கிறது.<br>
<br>
</div><a href="http://ashroffshihabdeen.blogspot.com/2017/09/blog-post.html#more">மேலும் படிக்க»</a>ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-17474934789521972632017-08-31T23:01:00.001+05:302017-08-31T23:01:26.319+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjOo_6I2vsz2vuz1XuM_5T8WD868g7pA4x_1pSaNcgL5rq7Z_3Yz82CvxARMkBrrd4J1WxJcCK7z3k14afLelyxjE_lMiXe0u4jbOhQgf5mqeag891Z31Jz2tgGpbd3EpE8TvUPIZfJ8Ml/s1600/RRR.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="299" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjOo_6I2vsz2vuz1XuM_5T8WD868g7pA4x_1pSaNcgL5rq7Z_3Yz82CvxARMkBrrd4J1WxJcCK7z3k14afLelyxjE_lMiXe0u4jbOhQgf5mqeag891Z31Jz2tgGpbd3EpE8TvUPIZfJ8Ml/s1600/RRR.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="font-size: large;">நான் ரோஹிங்யா</span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b>அலி ஜொஹார் (புதுடில்லி)</b></div>
<br />
ஆம்! நான் ரோஹிங்யா<br />
நான் மியன்மார் தேசத்தான்<br />
ஆயினும்<br />
நானும் ஒரு மனிதன்!<br />
<br />
எங்கேனும் நான் கொடுமைக்குள்ளானவன்<br />
எங்கேனும் நான் சித்திரவதைக்குள்ளானவன்<br />
எங்கேனும் நான் கொல்லப்பட்டவன்<br />
எங்கேனும் நான் கடத்தப்பட்டவன்<br />
<br />
ஆம்! நான் ரோஹிங்யா<br />
எங்கேனும் நான் கட்டுப்படுத்தப்பட்டவன்<br />
எங்கேனும் எனது உரிமைகள் மறுக்கப்பட்டவன்<br />
எங்கேனும் நான் அவமரியாதைக்குள்ளானவன்<br />
எங்கேனும் எனக்கான நியாயங்கள்<br />
தாமதப்படுத்தப்பட்டவன்<br />
<br />
எங்கேனும் நான் எல்லை கடக்கிறேன்<br />
எங்கேனும் நான் பின்னுக்குத் தள்ளப்படுகிறேன்<br />
எங்கேனும் நான் கடலுக்கு இரையாகிறேன்<br />
எங்கேனும் நான் களவாகக் கடத்தப்படுகிறேன்<br />
<br />
எங்கேனும் நான் முகாமொன்றுள் அடைக்கப்படுகிறேன்<br />
எங்கேனும் நான் தின உணவு கிடைக்கப்பெறாதவன்<br />
எங்கேனும் நான் தங்க ஓரிடமிருக்கலாம்<br />
எங்கேனும் நான் இடமற்றவனாகிவிடுகிறேன்<br />
<br />
எங்கேனும் நான் தடுக்கப்பட்டு வாடுகிறேன்<br />
எங்கேனும் நான் வரையறைக்குள் வளர்ந்து வந்தேன்<br />
எங்கேனும் நான் பாடசாலை மறுக்கப்பட்டேன்<br />
எங்கேனும் நான் காரணமின்றி சிறை வைக்கப்பட்டேன்<br />
<br />
எங்கேனும் நான் குப்பை பொறுக்குகிறேன்<br />
எங்கேனும் நான் பட்டினியில் இருக்கிறேன்<br />
எங்கேனும் நான் குழந்தைத் தொழிலாளியாகிறேன்<br />
எங்கேனும் நான் வேலைசெய்ய வற்புறுத்தப்படுகிறேன்<br />
<br />
எங்கேனும் எனக்குக் கூரை இல்லை<br />
எங்கேனும் எனக்குக் கட்டில் இல்லை<br />
எங்கேனும் எனது குழந்தைகள் நிர்வாணிகள்<br />
எங்கேனும் நான் ஒரு போர்வையின்றி உறங்குகிறேன்<br />
<br />
எங்கேனும் நான் வன்புணர்வுக்குள்ளாகிறேன்<br />
எங்கேனும் நான் பாலியல் அடிமையாயிருக்கிறேன்<br />
எங்கேனும் நான் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகிறேன்<br />
எங்கேனும் நான் வாழ்வதற்காகப் பாலியலில் ஈடுபடுகிறேன்<br />
<br />
எங்கேனும் நான் மனைவியைத் தொலைத்தேன்<br />
எங்கேனும் நான் ஒரு தனித் தாயாகவுள்ளேன்<br />
எங்கேனும் நான் குடும்பத்தைத் தொலைத்து விட்டேன்<br />
எங்கேனும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர்<br />
<br />
ஆம்! நான் ரோஹிங்யா<br />
சிலர் நான் நாடற்றவன் என்று எண்ணுகின்றனர்<br />
சிலர் நான் அகதி என்கிறார்கள்<br />
சிலர் நான் வேற்று நாட்டவன் என்கிறார்கள்<br />
சிலர் மாத்திரமே என்னை உண்மையாக அறிவர்<br />
<br />
எங்கேனும் என்னை 'கலார்' என்கிறார்கள்<br />
எங்கேனும் என்னை 'பங்காளி' என்கிறார்கள்<br />
சிலர் என்னை 'அறபி' என்கிறார்கள்<br />
ஆனால் நானோ அவர்களைச் சேர்ந்தவனல்லன்<br />
<br />
எங்கேனும் எனக்கான ஒரு தொழில் இல்லை<br />
எங்கேனும் எனக்கான கல்லூரி தடைசெய்யப்பட்டுள்ளது<br />
எங்கேனும் நான் ஒரு கூட்டில் அடைபட்டுள்ளேன்<br />
எங்கேனும் நான் எந்த உதவியுமற்றவன்<br />
<br />
ஆம்! நான் ரோஹிங்யா<br />
நான் மியன்மார் தேசத்தான்<br />
ஆயினும்<br />
நானும் ஒரு மனிதன்<br />
நானும் இவ்வுலகின் ஓர் அங்கத்தவன்<br />
எனக்கும் உங்களைப் போல<br />
ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்<br />
எங்களை இனச்சுத்திகரிப்பு மூலம்<br />
அழித்து விடாதீர்கள்!<br />
<br />
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2016065712709223403.post-44975511779907484722017-07-18T10:19:00.000+05:302017-07-18T10:19:55.505+05:30 'அப்பாவின் துப்பாக்கி!' <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCMyZJUFNB_FoiDoqLJ-jZgxc5ECitEY6ycqwpej-NEYZxwUvYYmdygvx2ySsqGkvAwmHfV5WuZS6nAtULC8iUMUZCRV7YIWGotZ-7SGPFYvWjMGCFileIuCiLHXTOK-QswJDGCOyXMnjt/s1600/Hiner+Saleem.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="468" data-original-width="324" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCMyZJUFNB_FoiDoqLJ-jZgxc5ECitEY6ycqwpej-NEYZxwUvYYmdygvx2ySsqGkvAwmHfV5WuZS6nAtULC8iUMUZCRV7YIWGotZ-7SGPFYvWjMGCFileIuCiLHXTOK-QswJDGCOyXMnjt/s320/Hiner+Saleem.jpg" width="221" /></a></div>
<div>
<br /></div>
<div>
இலக்கியம் உண்மையான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது என்பதற்கு மற்றொரு உதாரணமாகக் குறிப்பிடப்படக் கூடிய அண்மையில் வெளியான நூல்களில் ஒன்று 'அப்பாவின் துப்பாக்கி!' </div>
<div>
<br />1964ல் ஈராக்கிய குர்திஸ்தான் நிலப்பரப்பில் பிறந்த ஆசாத் ஷெரோ செலீம் என்ற இயற்பெயர் கொண்ட ஹினெர் சலீம் எழுதிய இந்தப் படைப்பு ஒரு நாவலாகவும் சுய சரிதையாகவும் வரலாற்று உண்மைகளைக் கொண்ட ஆவணமாகவும் அமைந்திருக்கிறது.</div>
<div>
<br />சத்தாம் உப ஜனாதிபதியாக இருக்கும் போது ஆரம்பிக்கும் கதை சத்தாம் ஜனாதிபதியாகியதுடன் முடிவுக்கு வருகிறது. சத்தாமின் அகண்ட அறபு தேசக் கனவு, அவராலும் அமெரிக்கா, ஐ.நா. ஆகியவற்றாலும் ஏமாற்றப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் ஆயுத மோதலுக்குள் வாழ்ந்த ஒரு சிறுவன்;, முன் கட்டிளமைப் பருவத்தை அடைவது வரை இக்கதையை இரத்தமும் சதையுமாகச் சொல்லிச் செல்கிறான்.</div>
<div>
<br />இரண்டு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் பிறந்த சலீம் இனப் போராட்டதில் தந்தை முதல் சகோதரர்கள் உட்பட அனைத்து ஆண்களும் தமக்கான சுதந்திரத்துக்காப் போராடியதை இக்கதையூடே சொல்லிச் செல்கிறார். பலாத்காரமான இடப்பெயர்வு, குர்திஸ் மலைப்பாங்கான நிலத்தின் எழில், இனப்போராட்டத்தின் ஆதரவாளர்கள், காட்டிக் கொடு;ப்பவர்கள், அறபு இராணுவம், அதன் அட்டூழியம், கிராமத்தின் வறுமை, பெண்களில் அழகு, ஒரு கோலா பானத்துக்கான ஏக்கம், வறுமை, இடத்துக்கு இடம் மாறி வாழ்தல், கைதிகளாதல், ஏமாற்றப்படுதல் என்று ஏகப்பட்ட விடயங்களை இந்தத் தன் கதை சித்தரிக்கிறது.</div>
<div>
<br />கதையில் வரும் முக்கிய பாத்திரங்களில் முதன்மை இடத்தைப் பெறுபது சலீமின் தந்தையாவார். அவர் குர்திஸ்தான் போராட்டக் குழுத் தலைவரின் முக்கிய தகவலாளியும் நம்பிக்கைக்குரியவருமாக இருந்ததுடன் அவர் வைத்திருந்த பழைய, மிகப் பழைய துப்பாக்கியும் கதையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டொரு நாட்கள் வீட்டில் இருப்பதும் மாதக் கணக்கில் போராட்ட அணியுடன் இணையவும் சென்று விடும் சகோதரர்கள், எந்நேரமும் இருந்த இடத்திலிருந்து கிளம்பத் தயாராக இருக்கும் தந்தை, பாசம் மிகுந்த ஆனால் எல்லாவற்றையும் புரிந்து அமைதியும் பொறுமையுமாக இருக்கும் தாய், வயது முறுக்காலும் இனப் பற்றினாலும் தானும் தன் நண்பரும் போராட்டக் குழுவில் சேரச் சென்று திரும்பும் அபாயம் மிக்க பயணம், ஓவியம், பாடல் ஆகியவற்றில் சலீமுக்கு இருந்த ஆர்வம், நிறைவேறாத அற்பக் காதல் என்று பல விடயங்களை இக்கதை நமக்கு எடுத்துச் சொல்வதோடு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஈராக் குர்திஸ்தானில் மக்கள் பட்ட அவதியையும் துன்பத்தையும் மனதில் பதித்து விட்டு நகர்கிறது.</div>
<div>
<br />அவர் கதையைச் சொல்லிச் செல்லும் போது ஒரு புன்னகையை வாசகனின் முகத்தில் தோன்றச் செய்யும் வகையிலான வசனங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தாலும் கதையைப் படித்து முடிக்கின்ற போது வாழ்வில் சுதந்திரத்தை மட்டுமல்ல மகிழ்ச்சி என்ற ஒன்றை அனுபவித்திராமல் வாழ்நாள் பூராகவுமே கலக்கத்தோடும் நிம்மதியின்றியும் வாழ்ந்த மக்களின் துயர் ஒரு பாறாங் கல்லாய் மனதை அழுத்துகிறது.</div>
<div>
<br />அறபி - குர்திஸ் என்ற பாகுபாடு காரணமாகவும் அறபியரோடு இணைந்து ஒரு சமூகத் துரோகியாக மாறி வாய்ப்புக்களைப் பெற்றுக் கற்று உயராமல் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் சலீமின் சிறு வயது ஆசையான சினிமா தயாரிக்கும் கனவு நிஜத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. அது அவரது கதையில் இல்லை.</div>
<div>
<br />இத்தாலியில் தஞ்சம் புகுந்த சலீம் அங்கு குர்தியருக்கு பிரசாவுரிமை வழங்கப்படாத காரணத்தால் பிரான்ஸில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.</div>
<div>
<br />சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் தமிழ் மொழிபெயர்ப்பு இடறல் இல்லாதது. இந்நூல் காலச் சுவடு வெளியீடு - 2013</div>
<div>
<br /></div>
<div>
(16.07.2017 தினகரன் பிரதிபிம்பம் பகுதியில் பிரசுரமானது)</div>
<br /></div>
ASHROFF SHIHABDEENhttp://www.blogger.com/profile/03081701502403615262noreply@blogger.com0