அமைச்சுப் பதவியை தூக்கியெறிய தயாராக இருக்கின்றோம்
– றிசாத் பதியுதீன்-
'இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30இ 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.' இவ்வாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்தார்.
இன்று 29.03.2013 மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பைஇ கல்வி காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்கஇ முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலிஇ தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்இ
'கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்று சொன்னோம்.
சட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.
கடை உரிமையாளர் முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கின்றார்கள். பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட்டுத்தலத்திலிருந்து வந்துதான் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கடை உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் பாரிய உயிரழிவும் சொத்தழிவும் எல்லாமே கணப்பொழுதில் ஏற்பட்டிருக்கும். இந்தக் கலகக் காரர்களுக்குத் தேவை பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.
நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்து எடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று வந்தது போல இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.
புதுப்புது விளக்கங்களுடன் பொது பல சேனா என்றும் ஜாதிக ஹெல உறுமய என்றும் ராவய என்றும் சட்டரீதியற்ற பொலிஸ் காரர்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்டு முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த அநியாயத்தை இப்பொழுதே தடுக்கவில்லை என்றால் இந்த நாடு இன்னும் முப்பது வருடங்கள் அல்ல முடிவுறாத காலத்திற்கு அழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை ஜனாதிபதிக்கும்இ பஷில் ராஜபக்ஷவுக்கும்இ கோத்தபாயவுக்கும்இ பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் நேற்று அல்லது முந்தநாளிலிருந்து அரசுடன் சேர்ந்தவர்களல்ல. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மை இல்லாமல் இவர்கள் தடுமாறிய பொழுது கைகொடுத்தவர்கள்தான் நாம்.

