Saturday, March 30, 2013

அழகொளிரும் கவிதைகள்


கிண்ணியா பாயிஸா அலி கவிதைகள் நூலுக்கு
நான் எழுதிய அணிந்துரை


அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டைத் தவிரஇ நவீன தமிழ்க் கவிதைகள் என் கவனத்தை ஈர்த்ததில்லை.

ஒரு படைப்பு எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லைத்தான். எனக்குப் பிடித்த ஒரு கவிதை மற்றொருவருக்குப் பிடிக்காமல் போகலாம். பலருக்குப் பிடித்த கவிதையில் எனது ரசனைக்குப் பிடித்ததாக எதுவும் இல்லை என்றும் ஆகலாம். ஒரு படைப்பின் ஆகர்ஷம் ஒவ்வொருவரின் வாசிப்புப் பரப்பையும் ரசனைத் தரத்தையும் பொறுத்தே அமைகிறது.

ஆயினும் கூட நல்ல கவிதைக்கும் அல்லாத கவிதைக்கும் ஒரு பொதுக் கணிப்பீடு இருக்கவே செய்கிறது. கவிதை என எழுதப்படும் ஒன்றில் கவிதை இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு நடுநிலை வாசகன் கண்டு பிடித்து விடுவான். அப்படிப்பட்ட கவிதை ஒரு நட்சத்திரம் போல் தனித்துத் தெரியும். அது படிக்கும் அனைவரது கவனத்தையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளும். அந்தக் கவிதை துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதை நமது ஆத்மா நமக்கு உணர்த்தி விடும்.

ஒரு கவிதை - அது சொல்லப்படும் மொழி, விதம், பொருள் ஆகியவற்றால் அழகும் உயிரும் பெறுகிறது. அவற்றை வாசிக்கும் போதெல்லாம் நமது உள்ளம் ஏதோ ஒரு உணர்வுத் தாக்கத்துக்கு உள்ளாகிறோம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் செதுக்கப்படும் ஒரு கவிதை நம்மை கிளர்ச்சியூட்டுகிறது, மகிழ்விக்கிறது. ஓர் இளம் பெண்ணின் நளினத்தை, ஒரு குழுந்தையின் சிரிப்பை, ஒரு மலரின் மென்மையை, ஒரு வாளின் கூர்மையை, இரத்தத் துளியொன்றின் கனதியை, கண்ணீர்த் துளியொன்றின் கவலையைஇ வியர்வைத் துளியொன்றின் உழைப்பை நம்மீது படர விட்டுப் பாடாய்ப்படுத்துகிறது.

நவீன கவிதைகளில் அழகொளிரும் எழுத்துப் போக்கை சகோதரி பாயிஸா அலியின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். அவர் பேசும் கவிதை மொழி என்னை அசத்தி விட்டிருக்கிறது. இன்று வெளிவரும் நவீன கவிதைகளில் இதுவரை நான் கண்டிராத அழகு அது.

நவீன கவிதைகள் என்றால் பாலுறுப்புக்களைப் பற்றிப் பேசுவது என்று பலர் நினைக்கிறார்கள். எதுவும் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும் வரை அல்லது தூரத்தே இருக்கும் வரையே அழகானதாக இருக்கும். தமிழில் எழுதும் சில பெண் கவிஞர்கள் அவ்வாறு எழுதுவதன் மூலம்தான் தான் கவனத்தை ஈர்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் இருப்பது மிகவும் தெளிவானது. இதில் முஸ்லிம் பெண் கவிஞர்களும் அடங்குவார்கள். மற்றவர்களின் முன்னால் தான் தனித்துத் தெரிவதற்கு வேறு ஏதும் இல்லாத பெண்களே உடலழகைக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள். இதன் மறுவடிவமாகவே பாலியலைப் பச்சையாக எழுதும் படைப்பாளிகளின் செயலை நான் பார்க்கிறேன்.

ஆண்களில் சிலரும் கூட இவ்வாறான போக்கில் இருப்பதை நாம் கண்டே வருகிறோம். பாயிஸாவுக்கு அப்படி ஒரு நிலைமை என்றைக்குமே வராது என்பதற்கு அவரது கவிதைகள் உயிர்த் துடிப்போடு நின்று சாட்சி பகர்கின்றன.
இந்தத் தொகுதிக்கு ஒரு மதிப்புரை எழுதுவதற்காகக் கவிதைகளைப் படித்த போது நான் பெரிதும் இடர் பட்டேன். எல்லாக் கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவையாக அமைந்ததும் கவிதையொன்றின் பகுதியொன்றை எடுத்துக் காட்ட முடியாமல் (காட்டுவது எனில் முழுக் கவிதையையும் தரவேண்டும்) தடுமாற்றம் ஏற்பட்டதும்தான் அதற்குக் காரணம். ஒரு கவிதையின் பகுதியொன்றை எடுத்துச் சொல்லி மற்றொரு பகுதியை விட்டு விடுவது அந்தக் கவிதையை நான் கொல்வதற்குச் சமானாகும் என்ற உணர்வு என்னில் எழுந்தது.

கடைசி இருக்கை என்று ஒரு கவிதை இருக்கிறது. பொதுவாக கற்பிப்பவர்கள் கடைசி இருக்கை மாணவ மாணவிகளைக் கணக்கில் கொள்வதில்லை. வறுமையும் கற்பதைத் தவிர்க்க முடியாத வலியுமாக உணரும் ஒரு சிறுவனைப் பற்றி இக்கவிதை பேசுகிறது. பாயிஸா ஒரு பெண். ஒரு தாய். ஓர் ஆசிரியை. அவர் கவிஞராக இருப்பதாலும் ஒரு தாயாக இருப்பதாலும்தான் அந்த கடைசி இருக்கை பற்றிப் பேசுகிறார் என்று எனக்குத் தோன்றிற்று. ஏதாவது ஓர் கவிதை பற்றிச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன். அந்தக் கவிதையில் ஒரு துண்டைப் பெயர்த்து வந்து விளக்கஞ் சொல்ல நான் தயாரில்லை. நிலவை யாராவது உடைக்கத் துணிவார்களா என்ன?

சமகாலத்தில் தமிழ்க் கவிதை இலக்கியத்தில் ஈடுபடும் அநேகர் கவிதை என்ற பெயரால் இருண்மையும் மயக்கமும் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள். எழுதுபவர்களுக்கும் புரியாமல் படிப்பவர்களுக்கும் புரியாமல் பெருந் திண்டாட்டமே நடந்து கொண்டிருக்கிறது. பாயிஸாவின் கவிதைகள் மயக்கமானவையோ படிப்பவரை மயக்கத்துக்குத் தள்ளி விடுபவையோ அல்ல. மாறாக சொல்லும் அழகால் படிப்போரை மயங்க வைப்பவை.

பாயிஸாவின் கவிதை மொழியானது நம்மைச் சொக்க வைப்பது. அவரது கவிதை மனதுக்கு அப்பால் அவர் தனது கவிதைக்குத் தேவையானஇ பொருத்தமான வார்த்தைகளை மட்டும் தேர்ந்து பயன்படுத்துவது அதற்குக் காரணம் என்று சொல்ல முடியும். அல்லது அவரது கவிதை தான் வெளிப்படுவதற்குத் தேவையான வார்த்தைகளை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்கிறது என்றும் சொல்ல முடியும்.

கிண்ணியா தமிழ்க் கவிதை வளம் நிறைந்த பூமி. எனது தாய்வழிப் பாட்டனார் அப்துஸ்ஸமது ஆலிம் புலவர் இந்த ஊரிலேதான் பிறந்தார். அண்ணல்இ கிண்ணியா ஏ.எம்.எம். அலிஇ கிண்ணியா அமீர் அலி போன்ற கவிஞர்களைத் தேசத்துக்கு வழங்கிய தமிழ்ச் செழுமை நிறைந்த ஊர் இது. இங்கிருந்து பாயிஸா அலி என்ற கவிதைப் பெண்ணாள் முகிழ்த்திருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லைத்தான். மரபுக் கவிதை மன்னர்கள் நிறைந்த பூமியில் அதே செழுமையோடு நவீன கவிதை வடிவத்தில் அவர் பிரகாசிப்பதுதான் எடுத்துச் சொல்ல வேண்டிய சிறப்பு.

நான் முழுக்கவும் படித்து ரசித்த ஒரேயொரு நவீன தமிழ்க் கவிதைத் தொகுதி இது ஒன்றுதான். அதற்குக் காரணம் பாயிஸாவின் கவிதை சொல்லும் அழகு. கவிதை என்பதே அழகுதானே!

பாயிஸா அலி எனது தூரத்து உறவு என்ற போதும் இன்று வரை அவரை நேரில் நான் கண்டதில்லை. அவரது கவிதைகளை நான் மெச்சிப் பாராட்டுவதற்குக் காரணம் அவர் என் உறவினர் என்பதால் அல்ல என்பதை நீங்கள் இந்நூலில் அடங்கியிருக்கும் கவிதைகளைப் படித்ததும் புரிந்து கொள்வீர்கள்.

நூலின் பெயர் - எஸ்..பாயிஸாஅலி கவிதைகள்
நூலாசிரியர் –எஸ்..பாயிஸாஅலி
வெளியீடு - கிண்ணியாநெட் பதிப்பகம்
விலை – 250.00ரூபாய்
தொடர்பு 0773784030

Friday, March 29, 2013

அப்பிடிப்போடு...! போடு...! போடு...!


அமைச்சுப் பதவியை தூக்கியெறிய தயாராக இருக்கின்றோம் 

– றிசாத் பதியுதீன்-


'இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30இ 40 வருடங்களுக்குப் பற்றியெரியும் என்பதை நான் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் சொல்லியிருக்கின்றேன்.' இவ்வாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அறைகூவல் விடுத்தார்.

இன்று 29.03.2013 மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பெருவிழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பைஇ கல்வி காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்கஇ முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலிஇ தேசிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் றிசாத் பதியுதீன்இ

'கலகம் விளைவிப்பவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடையாளம் காட்ட மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்று சொன்னோம்.

சட்டத்தைக் கையிலெடுக்கும் நாம் சட்டபூர்வமற்ற பொலிஸார் என்று சொல்கின்றவர்களை கைது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கின்றோம்.

கடை உரிமையாளர் முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்திற்காக அந்தக் கடையைச் சூழ்ந்து கொண்டு தாக்கியிருக்கின்றார்கள். பக்கத்திலிருந்த பௌத்த வழிபாட்டுத்தலத்திலிருந்து வந்துதான் இந்த அராஜகத்தைப் புரிந்திருக்கின்றார்கள். கடை உரிமையாளர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

இன்னும் சிறிது நேரம் தாமதித்திருந்தால் பாரிய உயிரழிவும் சொத்தழிவும் எல்லாமே கணப்பொழுதில் ஏற்பட்டிருக்கும். இந்தக் கலகக் காரர்களுக்குத் தேவை பிரச்சினை என்ற ஒன்றுதான். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதி தேவை.

நாட்டிலுள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் நையாண்டி செய்து குழப்பம் விளைவித்து அவர்களை எப்படியாவது வம்புக்கு வலிந்திழுத்து எடுக்க அவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.

ஆயிரத்து நாநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம்களின் சமய கலாசார பண்பாட்டு அம்சங்கள் இன்று நேற்று வந்தது போல இவர்கள் பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

புதுப்புது விளக்கங்களுடன் பொது பல சேனா என்றும் ஜாதிக ஹெல உறுமய என்றும் ராவய என்றும் சட்டரீதியற்ற பொலிஸ் காரர்கள் நாட்டைக் காக்கப் புறப்பட்டு முஸ்லிம்களுக்கு அநியாயமிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அநியாயத்தை இப்பொழுதே தடுக்கவில்லை என்றால் இந்த நாடு இன்னும் முப்பது வருடங்கள் அல்ல முடிவுறாத காலத்திற்கு அழிவைச் சந்திக்க வேண்டிவரும் என்பதை ஜனாதிபதிக்கும்இ பஷில் ராஜபக்ஷவுக்கும்இ கோத்தபாயவுக்கும்இ பொலிஸ் மா அதிபருக்கும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம்.

இந்த அரசாங்கத்தைப் பொறுத்த வரை நாங்கள் நேற்று அல்லது முந்தநாளிலிருந்து அரசுடன் சேர்ந்தவர்களல்ல. ஆட்சியமைப்பதற்குப் பெரும்பான்மை இல்லாமல் இவர்கள் தடுமாறிய பொழுது கைகொடுத்தவர்கள்தான் நாம்.

Wednesday, March 27, 2013

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு



கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில்  'சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு' எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான  நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

தற்போது இலங்கையில் பொதுபல சேனா மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்கள் இனவாத மதவாத அமைப்புகள் முஸ்லிம்களின் இந்நீண்ட வரலாறுகளை பகிரங்கமாகவே மறுத்துவருவதுடன் மார்க்க கிரிகைகளையும் கலாசார விழுமியங்களையும் கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் மனிதத்தன்மையுடனும் நடுநிலை தன்மையுடனும் நடந்து கொள்ளும் நல்லுள்ளம் படைத்த பௌத்த மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காலத்தின் நிலவரங்களை கவனத்தில் கொண்டு மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாற்று உண்மைகளை வெளிகொண்டுவரும் நோக்கில் சிரேஷ்ட விரிவுரையாளரான  நன்த தர்மரத்ன அவர்கள் இக்கட்டுறையை எழுதியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்.

-தமிழில் எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி-

சகோதரத்துவம் எனும் உறவு சிங்கள முஸ்லிம்களுக்கிடையில் மிகவும் பிணைக்கப்பட்டு இருந்ததாக வரலாறு சாட்சி சொல்கிறது.

முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்கையில் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் உறவுகளை பேணி நடந்தமைக்கான சாட்சி வரலாற்றில் காணப்படுகிறது. அந்த உறவு பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் என இருவகைப் படுகிறது. 7-8 நூற்றாண்டு ஆகுகையில் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டுடன் மிக பலமான உறவை கட்டியெழுப்பியிருந்தனர். அதுமட்டு மன்றி அராபியர்கள் இலங்கை பற்றி எழுதிய நூற்களை பார்க்கையில் அவர்கள் இலங்கை சம்பந்தமாக மிகவும் கவனம் செலுத்தியுள்ளதாக சாட்சி காணப்படுகிறது.

இஸ்லாம் மார்க்கம் வருவதற்கு முன் நீண்ட காலம் தொட்டே அரபியர்கள் எனும் முஸ்லிம் இனத்தவர்கள் இலங்கைப் பற்றி அறிந்திருந்தனர். கிரேக்கர்களும் ரோமர்களும் இந்நாட்டின் விடயங்களை அராபி பயணிகள் மூலமே அறிந்து கொண்டனர். அப்படியிருந்தும் அராபியர்கள் எனும் முஸ்லிம்கள் மூலம் எழுதப்பட்ட நூற்களில் இலங்கைபற்றிய செய்திகள் இஸ்லாம் தோன்றிய பின்பே எழுதப்பட்டுள்ளது. முதலில் சுலைமான் என்பவர் மூலமே இந்நாடு பற்றி எழுதப்பட்டது. கி:பி: 950ம் ஆண்டு ஸில்ஸிலா அல்கவாரி எனும் நூலில் இலங்கைப்பற்றிய செய்திகள் உள்ளடக்கபட்டது. அதன் பின் இலங்கைப்பற்றி மிக முக்கிய வர்ணனைகள் வழங்கியவர் இப்னு பதூதா என்ற எழுத்தாளர் ஆவார். இவ்வெல்லா விடயங்களையும் உள்ளடக்கி 10ம் நூற்றாண்டில் மஸ்கினர் எனும் எழுத்தாளர் இன்னுமொரு நூலை எழுதினார் அதன் பின் மக்தஸி எனும் எழுத்தாளரும்  இலங்கைப்பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

பிற்காலத்தில் அபுல்தீதா போன்ற புவியிலாளர்கள் கூட இலங்கைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். இந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவர் 15ம் நூற்றாண்டில் இந்நாட்டில் பயணித்தவரான இப்னு பதூதாவுடைய செய்தியாகும். குறிப்பாக 7ம் நூற்றாண்டு ஆகையில் மேற்கு திசை கடற்மார்கங்களில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தனர். தென் இந்தியாவில் சோழ பாண்டிய ஆட்சி விழுந்ததுடன் அராபிய ஆட்சி வளம் பெற்றது.

அதன் பலனாக கி:பி: 949ம் ஆண்டு ஆகையில் அராபிய கப்பல் வர்த்தக நிமித்தம்  இலங்கைக்கு வந்தனர். 8ம் நூற்றண்டிலிருந்து பெறுமளவில் முஸ்லிம்கள் இலங்கையில் வளர்ச்சியடைந்தனர். இலங்கையில் இருந்த இம்முஸ்லிமகள்  இலங்கை முஸ்லிம்கள் என்றும் கடலோரப்பகுதி முஸ்லிம்கள் என்றும் அறியப்பட்டனர்.

Sunday, March 24, 2013

தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்கு



“'தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தரப்பட்டிருக்கிறது. இது ஓர் ஆழமான தலைப்பு. ஏறக்குறைய ஓர் ஆய்வு நூலுக்கான தலைப்பு என்று சொல்லலாம். என்னால் முடிந்தவரை தமிழ்க் கவிதைகளில் புண்ணாக்குப் பற்றிக் குறிப்பிடப்பட்ட தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இத் தலைப்பிலான ஒரு முன்னோடி அறிமுகமாக இதை எடுத்துக் கொள்ளுமாறு இங்கு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கும் எனது பேராசிரிய நண்பர்களையும் உங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

'தமிழ்க் கவிதைப் புண்ணாக்கு' என்று எனக்குத் தலைப்புத் தராதிருந்தமைக்காக மாநாடு நடத்தும் நண்பர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.”

கடைசி வசனத்தைப் பேராசிரியர் சொன்ன போது சபையிலிருந்து 'கொல்'லென்ற சிரிப்புச் சத்தம் எழுந்தது. அவரது அடுத்த வார்த்தைக்கிடையில் பலர் கசமுசாவெனப் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார்.

“இந்த மாநாட்டின் ஆய்வரங்குக்கான தலைப்புகளை எனது அன்புக்கும் நெஞ்சார்ந்த நேசத்துக்கும் உரியவரும் எனது உள்ளத்தில் உறைந்திருக்கும் முன்னாள் முதுநிலை விரிவுரையாளருமான செவ்வண்ணன் அவர்கள் வழங்கியிருக்கிறார். அவரைப் போன்ற உயரிய தமிழ் அறிஞர்களால் என்னைப் போன்ற பல நூறு கல்விமான்கள் நாட்டில் உருவானார்கள். இவ்வாறான தமிழ் வளர்க்கும் மாநாடுகளில் அவரது பங்கு எத்தகையது என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.”

'பெரிய புண்ணாக்கைச் சின்னப் புண்ணாக்குப் புகழ்ந்து தள்ளுது. அடுத்த சோதினை இருக்குமாக்கும்' என்று சபையில் அமர்ந்திருந்த ஓர் இளைஞன் மற்றவன் காதில் குசுகுசுத்தான்.

“முதலில் புண்ணாக்கு என்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். புண்ணாக்கு என்பதன் சரியான வடிவம் பிண்ணாக்கு என்பதாகும். பிண்ணாக்கை நமது புண்ணாக்குகள் பேசிப்பேசி புண்ணாக்காக மாற்றி விட்டார்கள்.

எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்ட பின் எஞ்சும் சக்கைப் பொருள் புண்ணாக்கு எனப்படும். புண்ணாக்கு மூன்று வகைப்படுகிறது. தேங்காய்ப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவையே அவை மூன்றுமாம். தேங்காய், கடலை, எள்ளு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெயும் கடலையிலிருந்து கடலை எண்ணெயும் எள்ளிலிருந்து நல்லெண்ணையும் பெறப்படுகிறது. இவற்றின் சக்கையாக எஞ்சுவது புண்ணாக்கு. பொதுவாக புண்ணாக்கு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சங்க கால, சங்கமருவிய கால, பல்லவர் கால இலக்கியங்களில் புண்ணாக்குக் கிடையாது. அதாவது நமது பழந் தமிழ் இலக்கியங்களில் ஓர் இடத்திலாவது புண்ணாக்கு என்ற பதத்தை நமது புலவர்கள் யாரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்தக் கட்டுரைக்காகவும் உரைக்காகவும் பல இலக்கியங்களைக் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு தேடினேன். கிடைக்கவேயில்லை. கண்ணில் விட்டது எந்த எண்ணெய் என்று கேட்க வேண்டாம்.” (சபையில் மறுபடி சிரிப்பு)

“பாரதிக்குப் பிறகு பலர் புண்ணாக்கைப் பாடியிருக்கிறார்கள். சற்றுத் தெளிவாக அதைச் சொல்ல வேண்டுமாயின் முன் நவீனத்துவ, பின் நவீனத்துவ காலக் கவிதைகளில் ஏராளமாகப் புண்ணாக்குக் கிடைக்கிறது. மரபுக் கவிதைகளில் புண்ணாக்கு விரவிக் கிடப்பதாக பலரும் அவ்வப்போது எழுதும் கட்டுரைகளில் படித்து வந்திருக்கிறேன்.

ஓர் ஆய்வுக் கட்டுரையையோ ஒரு உரையையோ நான் தயார் செய்ய அமர்ந்தால் நான் நொறுக்குத் தீனி உண்பது வழக்கம். இந்த உரைக்காக நான் தயாராகும் வேளை எனது சின்ன மகனிடம் ஒரு பருப்பு வடை வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினேன். வடையை உண்பதற்காக அதைச் சுற்றியிருந்த தாளைப் பிரித்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்தத் தாளில் புண்ணாக்குப் பற்றிக் கவிதை வரிகள் இரண்டிருந்தன. அது ஒரு சஞ்சிகையில் கிழிக்கப்பட்ட தாள். தாறுமாறாக அந்தத் தாள் கிழிக்கப்பட்டிருந்ததால் அதன் அடுத்த துண்டு கடையில் இருக்கலாம் என நினைத்து அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று விசாரித்தேன். எனது மகன் வடை வாங்கிய அடுத்த நிமிடத்தில் இன்னொரு நபருக்கு இரண்டு வடைகள் சுற்றிக் கொடுத்ததாகக் கடைக்காரர் சொன்னார். அவர் பதில் சொன்ன போது 'இரண்டு' என்ற சொல்லில் அழுத்திச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.

ஒரு பேராசிரியரான எனக்கு வால் கிடைத்தால் போதாதா? அத்துண்டை எடுத்துப் பார்வையைச் செலுத்தினேன். அதில் பின்வரும் சொற்கள் இருந்தன. புலவர் பேத்தை, மகன் நீ, கடனைத் திருப்பிக் கேட்டு,  வறுமையில் உழன்ற ஆகிய சொற்களுடன் 'எதிரி வந்தால் புண்ணாக்கு - கதிரில் குருவி சுண்ணாக்கு' என்ற கவிதை வரிகளும் இருந்தன.

கவிஞர் காத்து வாயனைப் போல் புலவர் பேத்தை வாயன் என்று ஒருவர் இருந்திருக்கிறார். வறுமையில் வாடிய புலவர் யாரிடமோ கடன் பட்டிருக்கிறார். கடனைத் திருப்பிக் கேட்க வந்தவனைத் தாக்குமாறு புலவர் மகனைக் கேட்டுக் கொள்கிறார். அதாவது இந்த இடத்தில் புண்ணாக்கு என்பது புண்படுத்து என்கிற அர்த்தத்தில் வருவதை நாம் காண்கிறோம். புலவர்கள் ஒரு சொல்லில் பல பொருள் கோடுவார்கள். எனவே 'எதிரி வந்தால் புண்ணாக்கு' என்ற அர்த்தத்தில் புலவர் சொல்லியிருக்கிறார். இந்தக் கவியடியை யுத்தம் நடக்கும் போது நாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டவும் பயன்படுத்தலாம் என்பது வெள்ளிடை மலை.

இந்தக் கவியடியை மற்றொரு நாட்டுடன் யுத்தம் புரியும் எந்தவொரு நாட்டு மக்களும் பயன்படுத்த முடியும் என்பதால் கவிஞர் சர்வதேச தரத்தைத் தொட்டு விடுகிறார். அதேவேளை இச்சொல் மற்றொரு பொருளையும் குறிக்கிறது என்பதை மேல் நாட்டார் அறிய வருகையில் அவர்கள் தமிழ் மொழியின் மேன்மை குறித்துச் சிலிர்ப்படைய நேரிடும் என்பது நமக்கெல்லாம் நிறைந்த பெருமையாகும். அதே போல பிற நாட்டார் புண்ணாக்குப் பற்றி அறிந்து கொள்ளவும் வழியேற்படும்.

அடுத்த வரி நமக்கு அவசியம் இல்லையெனினும் அதன் மூலம் நாம் புரிந்து கொள்வது யாதெனில் விளைந்திருக்கும் வேளாண்மைக் கதிரில் குருவிகள் உட்கார்ந்தால் அத்தனையையும் கொறித்து விட்டுப் போய்விடும். குருவிகள் எப்போதும் வயலுக்குப் பாட்டம் பாட்டமாகவே வரும். அப்படி குருவிகள் வரும் போது சுண்ணக் கல் எடுத்து வீசு என்பதையே 'சுண்ணாக்கு' என்பதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார். அதற்கு ஏன் சுண்ணாக்கு என்று சொல்ல வேண்டும் என்று கேட்கக் கூடாது. புலவர்கள் அப்படித்தான். கவிதைக்கு ஏற்றவாறு தமிழைப் பயன்படுத்துவார்கள்.

Friday, March 22, 2013

அரைகுறைத் துறவிகள்!




ஒரு நீர் ஏரிக் கரையில் இளந்துறவிகள் மூவர் கவனத்தை எங்கும் சிதைய விடாமல் கண்களை மூடித் தியானம் மேற்கொண்டிருந்தனர்.

சட்டென முதலாவது இளந்துறவி எழுந்தான். 'எனது பாயை மறந்து விட்டேன்' என்று சொல்லி விட்டு ஏரித் தண்ணீரின் மேலால் நடந்து அடுத்த கரையில் அமைந்துள்ள தங்களது குடிலுக்குள் நுழைந்தான். பாயை எடுத்துக் கொண்டு விறு விறுவென நீரின் மேல் நடந்து அவன் திரும்பி வந்தான்.

இரண்டாவது துறவி எழுந்தான். 'என்னுடைய உள்ளாடையைக் காயப் போட மறந்து விட்டேன்' என்று சொன்ன படி அமைதியாக நீரின் மேல் நடந்து சென்று அவ்வாறே திரும்பி வந்தான்.

இவர்கள் இருவரையும் அவதானித்த மூன்றாவது இளந்துறவி தன்னுடைய தவ வலிமையையும் பரிசோதிக்க நினைத்தான்.

'நீங்க இரண்டு பேரும் என்னை விட அதிகம் வலிமை கொண்டவர்கள் என்பதையா எனக்குக் காட்டுகிறீர்கள்... இதோ பாருங்கள்... நானும் நடந்து காட்டுகிறேன்' என்று சத்தமாகச் சொல்லி விட்டு வேகமாகத் தண்ணீரில் காலை வைத்தான்.

அந்தோ பரிதாபம்!

நீருக்குள் விழுந்தான் அவன்.

நீருக்குள் இருந்து எழுந்து நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் நீருள் மூழ்கினான். அவன் மீண்டும் மீண்டும் முயற்சித்தான். ஒவ்வொரு முயற்சியின் போதும் அவன் நீருக்குள் மூழ்கினான்.

இதை முதலாம் இரண்டாம் துறவிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரண்டாவது இளந்துறவி முதலாவது துறவியிடம் கேட்டான்:-

'எந்த எந்த இடத்தில் கற்கள் இருக்கின்றதன நாம் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா?'

நீதி-
அரைகுறைத் துறவிகள் இப்படித்தான். ஆழம் புரியாமல் காலை வைத்துவிடுவார்கள்!

Tuesday, March 19, 2013

பொதுபலசேனா அடக்கி வாசிக்க வேண்டும்!


நாட்டின் நன்மை கருதி பொது பலசேனா அடக்கி வாசிக்க வேண்டும்.

- ஆசியன் ட்ரிபியூன்


Bodu Bala Sena to tone down its stance on Muslims - BBS interview with Asian Tribune

Bodu Bala Sena has agreed to make public announcement that - ‘Bodu Bala Sena will be in no way responsible for creating a situation of religious discrimination in this country.
Mr. Dilantha Witharanage

This was agreed upon by Mr. Dilantha Wirharnage, the coordinator and the only lay committee member of the Bodu Bala Sena.

Chief of Bhodu Bala Sena is Ven. Kirana Vimalajothi Thera. Secretary of Bodhu Bala Seana is Ven. Galagadatthea Gnanasara Thera. Other executive committee members are Ven. Haputhalea Paghgasara Thera, Ven. Vitharandheniyea Nandha Thera and Dilantha Vithanage (Lay Member).

Bodu Bala Sena has been told not to be the cause for any allegations by the international community as the main cause for religious disharmony and discrimination in the country.

Since of late, they have taken a battle against the Muslims regarding the halal food issue and this has created much cause for religious disharmony in the country.

Religion is a subject of private belief of an individual. Unfortunately not only in Sri Lanka, but world over religion has become a hot political subject. Islam and cross are state symbols in many countries.

Even earlier Mahavansa made a virtue of killing in deference of Buddhism, but Buddhism values human life as being the one and only condition from which nibhana is attainable.

Unfortunately in Sri Lanka allegations are surfacing, that since of late Buddhists are grudgingly trying to propagate Buddhism in the country at the cost of the religious beliefs of the minority communities.

It became clearly evidenced that after the defeat of the Liberation Tigers of Tamil Eelam – 19th May 2009, several Buddha’s statutes have been erected in Vanni where no Buddhists live.

Similarly many Buddhists statutes are being erected in Colombo Roads which are being used not only by the Buddhists but by all those who professed different religious beliefs. Many are of the view that these are seen as practicing religious discrimination in the country where multi- religious, multi-ethnic groups live.

Latest is the attack on the religious beliefs of the Muslims. They have been challenged on their food practices and their religious sentiments have been unnecessarily tampered with.

These attacks had brought about the ire of nearly 50 Muslim countries in the world and last time almost all the Muslim countries - Saudi Arabia, Kuwait, Qatar, Mauritania, Maldives Islands, Indonesia, Bangladesh supported Sri Lanka against the US resolution.

For the 22nd session of the UN Human Rights Council, there are 13 Muslim countries and their support is very crucial for Sri Lanka. But if Bodu Bala Sena continues to irritate Muslims in Sri Lanka, it would be difficult for Sri Lanka to count the support of the Muslim countries.

Asian Tribune brought it to the notice of Bodu Bala Sena and appealed to them to not to be a party to the allegation of religious discrimination in the country.

Asian Tribune contacted Dilantha Wirharnage, the coordinator and the only lay committee member of the Bodu Bala Sena and appealed to him to refrain from involving in any attacks on the minorities religious beliefs.

Given below the excerpts of the interview Asian Tribune had with Mr. Dilantha Witharanage:

Asian Tribune : What is happening in Sri Lanka?

Mr. Dilantha Witharanage: In what sense?

Asian Tribune: Regarding - Bodu Bala Sena- Muslims’ – halal foods, while the international community is watching very intensively the unfolding drama in the country.

Mr. Dilantha Witharanage: It is a very complicated issue and answering your question is all about a very complex situation here, anyhow, I can speak only on behalf of Bodu Bala Sena.

Asian Tribune: Kindly tell us about the position and involvement of Bodu Bala Sena in the present complex situation?

Mr. Dilantha Witharanage: I don’t think, things are moving in the right direction. As an organization - Bodhu Bala Sena does not want to have any communal disturbances or any communal disharmony or anything of that nature. But for some reasons, whatever we have demanded that were taken up by some other groups – it can be Sinhalese groups, Muslims groups and so on.

We were talking about rights of the Buddhist Sinhalese in this country, preserving the Sinhala Buddhist culture in this country. We never wanted to tamper with any other people’s rights.

But for some reasons or other, some extremists’ groups and some fundamentalists’ groups both Muslims, as well as Sinhalese – I blame primarily Muslims, because they are unnecessarily creating tension in this country.

Also I have to blame media as they are also not reporting things in a responsible manner. I think what we are preaching here is to develop the country and to have peace and ethnic harmony here. Unfortunately lot of things are happening and they are happening not in the right direction.

Look at the Facebook’s posts by different groups. We request authorities to take stern actions against those anti-social elements. For example some have sent SMS to various people in the country stating that Bodu Bala Sena –(with our telephone numbers, address and everything given), that there was in 1915 Muslims attacking the Sinhalese and the one hundred year celebrations around the corner and Sinhala Buddhist should take action against Muslims. This was completely wrong. We never sent such SMS to people.

But such SMS messages are circulating in the country. We have complaint to the authorities about this and we must find out who are at the bottom of all these mischievous condemnable activities.

At the same time, unethical posters using all the filthy words and vulgar languages are now available on the Facebook. I think that Government should take serious action against them. I personally met last time our President with the Buddhist monks in a meeting and raised this issue that authorities should take serious measures to stop this.

Asian Tribune: When did you last met Sri Lankan President?

Mr. Dilantha Witharanage: I think you know about the meeting we had with Sri Lanka President, I can’t come up with the exact date. Bodu Bala Sena group had a two hour discussion with him. In that meeting we also requested, the Inspector General Police who was also there, to take actions against those anti-social elements, because those were unethical practices.

Asian Tribune: I wish to draw your attention that the country is facing a big problem. Do you know anything about that?

Mr. Dilantha Witharanage: That is about Geneva?

Asian Tribune: Including about discrimination of religion in Sri Lanka? We reliably learnt such clause is introduced due to Bodu Bala Sena showing discrimination to Muslims.

Mr. Dilantha Witharanage: No, that is completely wrong.

Asian Tribune: You say that it was completely wrong but international community thinks otherwise –

Mr. Dilantha Witharanage: We challenge the international community to come up with any incidents of Bodu Bala Sena’s involvement of any such attacks on Muslim places of worships or on any Muslim persons.

Asian Tribune: But there are already reports available that you have attacked Muslim places of worship as well as on Muslim people.

Mr. Dilantha Witharanage: No – I flatly deny this.

Asian Tribune: Even I have carried those news reports.

Mr. Dilantha Witharanage: You mean to say about attacks by Bodu Bala Sena?

Asian Tribune: Of course … by Bodu Bala Sena.

Mr. Dilantha Witharanage: No it is completely wrong and I deny it. It is false information. I will challenge you or anyone about it.

Asian Tribune: Don’t challenge me I am only a journalist and I only report facts as it evolves. Any how I will ask anybody to make a statement that Bodu Bala Sena was never involved in any such incidents.

There is an allegation that Bodu Bala Sena has put the country in a big dilemma. The international community doesn’t believe you or me, but they allege that Bodu Bala Sena is bringing about religious discrimination in this country. And also you are trying to sideline and get rid of the Muslims of this country.

Monday, March 18, 2013

சிறுகதை நூல் வெளியீட்டு விழா பகுதி - 2


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “விரல்ளற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. நிகழ்வுகளின் புகைப்படங்களின் இரண்டாம் பகுதி.


பிரதி பெறும் அஸ்ஜயன் வாஹித்


பிரதிபெறும் இலக்கிய ஆர்வலர் ஷரீப் 


பிரதிபெறும் கமலதாசன் சுப்பையா
எழுத்தாளர்


பிரதிபெறும் இர்ஷாத் ஹூஸைன்
நாடக இயக்குனர், கலைஞர்


பிரதிபெறும் ஞா.பாலச்சந்திரன்
நிர்வாக ஆசிரியர் - “ஞானம்” சஞ்சிகை


பிரதிபெறும் கவிஞர் யாழ் அஸீம்


பிரதிபெறும் “சமூகஜோதி” ரபீக்


பிரதிபெறும் முல்லை முஷ்ரிபா
கவிஞர், ஒலிபரப்பாளர்


பிரதிபெறும் புஷ்பராணி சிவலிங்கம்
(இல.ஒலி.கூட்.தாபனம்)

Sunday, March 17, 2013

பல சேனாவின் குறைகேள் அதிகாரி




(தொலைபேசி அழைப்பு வருகிறது)

கு. அ:- ஹலோ....

கிராமத்தான்:- ஆ.... ஹலோ... குறைகேள் அதிகாரி காரியாலயங்களா மஹத்தயா?

கு.அ:- ஆமா... சொல்லுங்க...

கிராமத்தான்:- நான் வவ்வால்பிட்டியவிலிருந்து பேசுறன்...

கு.அ:- என்னது? வவ்வால் பிட்டியவா? அது இலங்கையிலயா இருக்கு?

கிராமத்தான்:- அதுதானே சொல்லுறது.. அரசாங்க அதிகாரிகளும் இப்பிடித்தான் கேட்குறாங்க.. நீங்களும் இப்படித்தான் கேக்குறீங்க..

கு.அ:- ஆ... சரி.. சரி சொல்லுங்க.. சொல்லுங்க..

கிராமத்தான்:- இந்த ஊரு மஹத்தயா... பிஸ்ஸாகமயிலிருந்து 7 கட்;டை. என்ட சொந்த ஊரு பிஸ்ஸாகம

கு.அ: உங்க பெயரென்ன?

கிராமத்தான்:-  சானக்க ராவக்க!

கு.அ:- சரி... இப்போ வவ்வால்பிட்டியவிலிருந்து பேசுறிங்க... சரியா?

கிராமத்தான்:- அந்தா.. அது சரி.

கு.அ:- வவ்வால்பிட்டியவில் எத்தனை குடும்பங்கள் இருக்கு?

கிராமத்தான்:- ஒரு முன்னூறு மட்டு..

கு.அ:- நல்லது... இப்ப எதுக்கு எடுத்தீங்க..?

கிராமத்தான்:- என்னண்டா மஹத்தயா... நான் எந்த நாளும் காலையில எட்டு மணிக்கு பிஸ்ஸாகமயிலிருந்து வவ்வால் பிட்டிக்கு புஸ் பைசிக்கிள்லதான் போவன்..

கு.அ:- சரி..

கிராமத்தான்:- அங்கே ஒரு பேக்கரியில வேல செய்யுறன்! பத்துமணிக்கு வேலை தொடங்கி பணிஸ், ரஸ்க், பாண் எல்லாம் நான்தான் போடுறது!

கு.அ:- முதலாளி முஸ்லிம் ஆளா?

கிராமத்தான்:- இல்லை மஹத்தயா... சிங்கள ஆள்தான்!

கு.அ:- முஸ்லிம் குடும்பம் எத்தனை இருக்கு அங்கே?

கிராமத்தான்:- ஒருத்தரும் கிடையாது!

கு.அ:- தமிழ்க் குடும்பம்..

கிராமத்தான்:- கிடையவே கிடையாது....! இது தனிச் சிங்களக் கிராமம் மஹத்தயா? வறுமையான மக்கள்!

கு.அ:- மாட்டிறைச்சிக் கடை இருக்கா?

கிராமத்தான்:- அதுதானே மஹத்தயா... பாருங்க... அதுவும் இல்லை!

கு.அ:- பன்றி இறைச்சிக் கடை?

கிராமத்தான்:- இருக்கு மஹத்தயா... இரண்டு கடை!

கு.அ:- சரி.. நீங்க பேக்கரில வேல செய்யுறீங்க... இனி...?

கிராமத்தான்:- வேலை இரவு 8.00 மணி வரை போகும். காலையில் விற்க வேண்டிய பாண் போட்டுக் கொடுக்கணும். அதை இறக்கி வச்சிட்டு வீட்டுக்கு வரக்குள்ள எப்பிடியும் இரவு 9.30 ஆகிடும்...

கு.அ:- சரி... உங்கட பிரச்சினை என்ன?

கிராமத்தான்:- முழுநாளும் வேலதானே மஹத்தயா... ஒரே உடம்பு வலியாயிருக்கும்!

கு.அ:- அதை எங்களுக்கிட்ட சொல்லிச் சரிவராது.. டாக்டரைப் பார்த்து...

கிராமத்தான்:- இல்லை மஹத்தயா... ஒரு காப்போத்தல் போட்டா சரியாகிடும்..

கு.அ:- (சிரிப்பு) இனி... உங்க பிரச்சினை என்ன?

கிராமத்தான்:- வவ்வால் பிட்டியவில் சாராயக் கடை இல்லை. பிஸ்ஸாகமயில இருக்கு. ஆனா கடையை இரவு எட்டு மணிக்குப் பூட்டி விடுறாங்க... நீங்கதான் கொஞ்சம் சொல்லி பத்து மணிவரைக்குமாவது திறந்து வைக்க ஏற்பாடு பண்ணனும்...!

(போன் துண்டிக்கப்படுகிறது...)

கிராமத்தான்:- ஹலோ... ஹலோ... ச்சே... யாராலயும் ஒரு பிரயோசனமும் கிடையாது!

Saturday, March 16, 2013

கிழக்கு மாகாண சபையில் பொதுபல சேனாவுக்கு அமீர் அலி சாட்டை



இன்று 'ஹலால்' சம்பந்தமாக இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு ஓர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் கௌரவ தலைவி அவர்களேஇ முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் வரையறையோடு வாழ வேண்டிதொரு சமூகம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக 'புனித குர்ஆன்' என்கின்ற நூல் இருக்கின்றது.

அந்நூலில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள், வாழ்க்கை, அவன் உணவு உண்பது எப்படி, ஏனையவர்களோடு நடந்து கொள்வது எப்படி,  அயலவர்களோடு நடந்து கொள்வது எப்படி, அந்நிய உறவுகளோடு நடந்து கொள்வது எப்படி, அரச அதிகாரிகளோடு நடந்து கொள்வது எப்படி, அரசனோடு நடந்துகொள்வது எப்படி,  ஒரு சிறுபான்மையாக இருக்கின்ற பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,  நாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒட்டு மொத்த தெளிவினை கூறுகின்ற நூலாக முஸ்லிம்கள் அதனை நம்புகின்றார்கள்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் 'அல் குர்ஆன்' ஐ பற்றி பிரச்சினை ஒன்று வருகின்ற போது யாரும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த 'அல் குர்ஆனால்தான் கூறப்படுகின்றது  நாங்கள் எவ்வாறான உடைகள் அணியவேண்டும், எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் எவ்வாறான உணவை நாங்கள் தேடிக்கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும் வரையறையோடு அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் முஸ்லிம் ஒருவன் உண்ண வேண்டிய உணவு 'ஹலால்' என்று கூறப்படுகின்றது. 'ஹலால்' என்பது 'ஆகுமாக்கப்பட்ட உணவு' இதன் வரைவிலக்கணம் மிக நீண்ட தூரம் பேசுகின்ற வரைவிலக்கணம். 'அந்த உணவை வாங்குவதற்கு அவனுடைய உடல் உழைப்பினால், நியாய பூர்வமாக உழைக்கப்பட்ட பணத்தை கொண்டு வாங்கியிருக்க வேண்டும். தடுக்கப்பட்ட உணவாக இருக்க கூடாது அவ்வாறு கூறப்படுகின்றது'. இதை 'ஹலால்' என்று நாங்கள் கூறுவோம்.

அதேபோன்று 'ஹராம்' என்று ஒன்று இருக்கின்றது. இவை மனித குலத்திற்கு தடுக்கப்பட்ட விடயங்கள். விஷேடமாக முஸ்லிம் சமூகத்திற்கும், உலகத்தில் உள்ளவர்களுக்கும் தடுக்கப்பட்டவையாக 'குர்ஆன்' கூறுகின்றது.

'குர்ஆன்' என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரைக்கப்பட்ட நீதி புத்தகம் அல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதொரு நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சாசனம். அந்த சாசனத்தை கூடுதலாக முஸ்லிம்கள் ஏற்று அவர்களின் திருமறையாக, அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக அதனை ஏற்றுக் கொண்டு நேசிக்கின்றார்கள்.

இந்த திருமறையில்தான் ('குர்ஆன்') 'ஹலால், ஹராம்' பற்றி கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறான உணவு உண்ணப்பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு நாடுகளிலும்இ ஒவ்வொரு திட்டங்கள் காணப்படும். அங்கு உணவு தயாரிக்கின்ற முறைமை, அவர்களுடைய நடை, உடை பாவனைகள், 'ஹராம் ஹலால்' உணவில் மாத்திரம் அல்ல. நாங்கள் அணிந்திருக்கின்ற ஆடையில் 'ஹலால் ஹராம்' இருக்கின்றது. இந்த விடயத்தில் 'ஹலால்' ஆன பணத்தில் வாங்கப்பட்டதா? உண்மையான உழைப்பின் மூலம் பெறப்பட்டதா?.... என்பது போன்ற சட்ட முறைப்படி நடந்து கொள்கின்ற வழிமுறைகளையும்,  மதத்தை பின்பற்றுகின்ற வழிமுறைகளையும் இஸ்லாமியர்கள் 'ஷரிஅத்' என்று கூறுவார்கள்.

அந்த 'ஷரியா' சட்டத்தின் படி நாங்கள் நடந்து கொள்கின்றோமா, திருமணம் செய்கின்றோமா, பிள்ளை பெறுகின்றோமா, அந்த பிள்ளைகளை 'ஷரியா' சட்டத்தின் படி வளர்க்கின்றோமா, இல்லை என்றால்,  அது எங்களுக்கு 'குர்ஆன்' இல் கூறப்படுகின்றது அதற்கு தண்டனை இருக்கின்றது என்று. அயலவர்கள்; எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சரி, 'அயலவன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்'. அவன் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், பறங்கியராக இருக்கலாம் அவர் உண்ணாமல் கஸ்டத்தில் இருக்கின்ற போது நீங்கள் உண்ணாதீர்கள். உங்களது வீட்டில் வாசனையோடு உண்ணுகின்ற பொழுது எவ்வளவு தூரத்திற்கு உங்களது வீட்டின் அந்த வாசனை செல்லுமோ, அத்தனை வீட்டிற்கும் நீங்கள் திருப்திப்படுத்துகின்ற ஆத்மாவாக இருக்க வேண்டும் என்று 'குர்ஆன்' கூறுகின்றது.

இதன் அடிப்படையில்தான் 'ஹராம் ஹலால்' என்பது தவிர்க்கப்பட்டவை, ஆகுமாக்கப்பட்டவை என்ற விடயம் வருகின்றது. எப்பொழுதும் இந்த 'குர்ஆன்' ஐ முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

கௌரவ தலைவி அவர்களே...

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் தொழில்துறைகள், அவர்கள் ஆடை அணிதல், அவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் உணவு நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரியாத விடயம் அல்ல.

இந்த சபையில் இருக்கின்ற கௌரவ தமிழ், சிங்கள் முஸ்லிம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும் இது இன்று நேற்று தொட்டு வந்ததல்ல. எப்பொழுது நாம் ஒரு இஸ்லாமியனாக பிறக்கின்றோமோ அன்றிலிருந்து 'குர்அன்' சட்டம் எங்களுக்கு ஆரம்பமாக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் எமது பெற்றோர்களால் சொல்லித் தரப்படுகின்றது. அதன் பிறகு எங்களுடைய  மௌலவிகளாலும், உலமாக்களாலும் கூறப்படுகின்றது. இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு நரகத்தில் வேதனை இருக்கின்றது. இதை செய்வீர்கள் என்றால் உங்களுக்குத் சொர்க்கத்தில் நல்ல விடயங்கள் காத்துக் கொண்டிருக்கினனத என்று கூறுகின்றாhர்கள்.

இந்த நாட்டில் இருக்கின்ற, உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனை நம்புகின்றார்கள்.

நாங்கள் 'ஷரியா' சட்டத்தை நிறைவேற்றுகின்ற போது 'ஹலால்இ ஹராம்' ஐ பேணி நடக்கின்ற பொழுது ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக வாழ அவனுக்கு கிடைக்குமென்று கூறினால்,  அவர் இந்த உலகத்தில் மாத்திரமல்ல இன்னுமொரு உலகம் இருப்பதாக அதில் எங்களுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கின்ற அந்த செய்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். நாங்கள் மரணம் நிச்சயம் என நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றவாகள்;. இவ்வாறான காலகட்டத்தில்தான் நாட்டில் அவசரமாக முளைத்திருக்கின்ற ஒரு பிரச்சினை 'ஹலால் ஹராம்'. 'ஜமியத்துல் உலமா' என்கின்ற ஓர் நிகழ்வோடு கூடிய பிரச்சினை.

'ஜம்மியத்துல் உலமா' என்பது நாட்டில் இருக்கின்ற அஸ்கிரிய, மல்வத்த பீடம் போன்று முஸ்லிம் சமூகத்துக்கென்று இருக்கின்ற ஒரேயொரு சபை. நாட்டில் இருக்கின்ற உலமாக்கள் இஸ்லாமிய மதத் தலைவர்களை உள்ளடக்கிய, நிரந்தரமான ஓர் சபையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த சபைக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்ற போது ஷரிஆ என்கின்ற 'குர்ஆன்'ல் கூறப்பட்ட சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

அந்த சட்டத்தில் பிரச்சினைகள், ஏற்படுகின்ற பொழுது 'ஜம்மியத்துல் உலமா' குறித்த விடயம் இஸ்லாத்திற்கு முரணானது, குர்ஆனுக்கு முரணானது என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையன்றி ஆயுதத்தை எடுங்கள் பயிற்சி பெறுங்கள் அதைச் செய்யுங்கள், சிங்களவரை அடியுங்கள், தமிழர்களை இழிவுபடுத்துங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடையுங்கள் என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையாக நீங்கள் எப்பொழுதும் கண்டிருக்க முடியாது.

சிறுகதை நூல் வெளியீட்டு விழா - பகுதி 1


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற “விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது எனது சிறுகதை நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள்


நிகழ்ச்சியை கிராஅத்துடன் ஆரம்பித்து வைத்த கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் செல்வன் ஜஹ்ஸன்


தமிழ்த்தாய் வாழ்த்து - திரு. ப.க. மகாதேவா


வரவேற்புரை - கொழும்பு டீ.எஸ்சேனாநாயக்க கல்லூரி மாணவன் அஹ்ஸன் அலி


தலைமையுரை - கவிஞர் அல் அஸூமத் அவர்கள்.


வாழ்த்துரை -எம்.எம். பீர்முகம்மத் அவர்கள்
செயலாளர்
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை


நூல் பற்றிய கருத்துரை
எழுத்தாளர் மு.தயாபரன் அவர்கள்


நூல் பற்றிய கருத்துரை
ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷார்ரஃப்


முதற்பிரதி பெறும் புரவலர்
அல்ஹாஜ் ஹாஷிம் உமர் அவர்கள்


பிரதம அதிதி உரை
முன்னாள் அமைச்சரும் இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான
சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள்.

Friday, March 15, 2013

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?



ஹலாலை சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்று சகல பௌத்த மதபீடங்களும் தெரிவிப்பதாக ஒரு செய்தி இன்று வெளியாகியுள்ளது.

ஹலால் என்பது மனித வாழ்வை நெறிப்படுத்தும் அம்சங்களையும் கொண்டது என்ற விளக்கம் மீள மீள வழங்கப்பட்ட பின்னரும் கூட பன்றியின் சினையம்சங்கள் கொள்ளாதவை மட்டும்தான் ஹலால் என்ற நிலையில் மட்டும் நின்று சிந்திக்கிறார்கள் என்றால் அவர்கள் புரிந்துகொள்ளத் தயாரில்லை என்பதையே அது எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இல்லை, அவர்களுக்குப் புரிகிறது என்றால் இது வேண்டும் என்றே மேற்கொள்ளப்படும் விசமத்தனம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கண்ணியத்துக்குரிய தேரர்களே,

பௌத்தம் சொல்லும் பஞ்ச சீலங்களில் ஒன்று (ஐந்த ஒழுக்கங்கள்) இது.

பானாதிபாதா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

பிராணிகளை உணவுக்காக முஸ்லிம்கள் மட்டுமல்ல பௌத்தர்களும்தான் கொல்லுகிறார்கள். முஸ்லிம்கள் உணவுக்காகக் கொல்லும் மாடுகள் மட்டும் உங்கள் கவனத்துக்கு வருவதென்ன?

அதை விடுங்கள்... பௌத்த தேசம் எனப் பெருமையடித்துக் கொள்ளுகின்ற இந்தத் தேசத்தில் எத்தனை மனிதக் கொலைகள் நடைபெறுகின்றன? வாழைக் குலை திருடுபவன் பிடிபட்டு விடுகிறான். சில மனிதக் கொலைகள் இன்று வரை கண்டுபிடிக்கப்படாமலே இருக்கின்றனவே! இந்த மனிதக் கொலைகளுக்கெதிராக நீங்கள் என்றாவது குரல் எழுப்பியது உண்டா? இது பௌத்த தேசத்துக்கே இழுக்கு என்று நீங்கள் இதுவரை ஏன் பொங்கி எழவில்லை? ஒரு கூட்டறிக்கை விடவில்லை?

மற்றொரு ஒழுக்கம் இப்படிச் சொல்கிறது.

காமேசு மிச்சாசாரா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருக்கும்  பயிற்சி விதியை ஏற்றுக்கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களாக தென்பகுதி அரசியல்வாதியொருவர் விபசாரத்தை சட்டபூர்வமாக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இலங்கையில் 40,000 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் அவர் கணக்குச் சொல்கிறார். இது பௌத்த ஒழுக்கத்துக்கு இழுக்காகத் தெரியவில்லையா? கொழும்பில் இரவு பகலாக நடைபெறும் கசினோக்களில் நடப்பது என்ன உன்று உங்களுக்குத் தெரியாதா? சீனா, தாய்லாந்து, கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விலைமாதர் நடமாடும் இந்தக் கசினோக்களால் பௌத்த சீலம் கெடுவது பற்றி, கலாசாரம் சீர் குலைவது பற்றி உங்களுக்கு ஏன் கவலை ஏற்படவில்லை.

இது இன்னொரு ஒழுக்கம்.

சுரா-மேரயா-மஜ்ஜா-பமா தத்தானா வேரமணி சிக்கா-பதம் சமாதியாமி.
போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்க்கும் பயிற்சி விதியை ஏற்றுக் கொள்கிறேன்.

உலகில் மடாக்குடியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நமது பௌத்த நாடும் ஒன்று என்ற தகவல் அண்மையில் வெளியாகியிருக்கிறது. எவ்வளவு பெருமை பார்த்தீர்களா நமது நாட்டுக்கு? தெருக்குத் தெரு சாராயக் கடைகளால் நிரம்பி வழிகிறது நமது பௌத்த தேசம். விமானத்தில் நமது நாட்டுக்குள் நுழையுமொருவன் விசாவைப் பெற்றுக் கொண்டு நிமிர்ந்தவுடன் கண்ணில் தெரிவது சாராயக் கடைதான். அதைக் கடந்துதான் அவன் தனது அடுத்த விடயத்துக்கு வரவேண்டும்.

இதுவெல்லாம் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் ஏன் பேசுவதில்லை? குடியால் எத்தனை குடும்பங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியாமலா இருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதிருக்கும் நீங்கள் இந்த நாட்டில் வெகு அற்பத் தொகையினராக வாழும் மக்களது உணவில் எந்த நியாயத்தின் அடிப்படையில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த முயல்கிறீர்கள். நாட்டையும் கலாசாரத்தையும் மனித ஒழுக்க விழுமியங்களையும் பௌத்த பண்பாட்டையும் அழிக்கும் இவ்வாறான விடயங்களில் பேசாமடந்தைகளாக இருக்கும் நீங்கள் ஒரு சிறுபான்மை இனத்தின் உணவின் மீதும் உடையின் மீதும் அதிகாரம் செலுத்த முனைவது எந்த வகையில் தர்மமாகும்?

மேற்குறித்த பௌத்த ஒழுக்கங்களை முஸ்லிம்களாகிய நாங்கள் மதிக்கிறோம்.

சுட்டிக் காட்டிப்படவை விலக்கப்பட்டவை - ஹராம் - ஹலால் அல்ல - என்கிறோம்.

நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?

Saturday, March 9, 2013

வேளையில் வீசுங் காற்று!


ஆள நினைத்தும் வாழ நினைத்தும்
ஆடிய மனிதரெலாம் - ஒரு
கால நொடிதனில் காணாதாகினர்
கதைகள் நீயறிவாய்

அடக்க முயன்றும் அடைக்க முயன்றும்
அடங்காதிருந்தவரைப் - பிறர்
முடக்கி வீழ்த்திய முழுவரலாறும்
முடிந்து போனதில்லை

தடியை எடுத்தவன் தண்டல்காரனாய்த்
தன்னை நினைப்பதுண்டு - அவன்
தடுக்கி வீழ்ந்து தலைவெடித்தழிந்த
தனை யார் மறுப்பதுண்டு

மன்னாதி மன்னர் மாட்சிமை கொண்டோர்
மண்ணாய்ப் போய்விட்டார் - இனி
இன்னார் வந்து இடுக்கண் தரினும்
அன்னார் அழிந்திடுவார்

சூரியன் வந்து சுடுவதனால்தான்
சந்திரன் வருவதுண்டு - இந்தப்
பாரில் இதுபோல் பலகதை சொல்லப்
பழங்கதை நிறையவுண்டு

அவலை நினைத்தே உரலை இடிப்பதில்
ஆவது ஏதுமுண்டோ - தினம்
கவலை கொண்டு காலம் கழிப்பதில்
கடமை முடிவதுண்டோ?

நாளையை நினைத்து நடுங்கும் நண்பா
நெஞ்சில் உரங்கொள்ளுவாய் - இது
வேளையில் மட்டும் வீசுங்காற்று
விளங்கி உளங்கொள்ளுவாய்!

(மே 2002ல் எழுதப்பட்ட கவிதை - என்னைத் தீயில் எறிந்தவள் கவிதை நூலிலிருந்து)

விரல்களற்றவனின் பிரார்த்தனை - 2


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்படட “விரல்களற்றவனின் பிரார்த்தனை” என்ற எனது சிறுகதை நூல் பற்றி ஊடகவியலாளர் எஸ்.எம்.எம். முஷார்ரஃப் அவர்கள் நிகழ்த்திய கருத்துரையின் ஒலிவடிவம்.




பகுதி - 1





பகுதி - 2




பகுதி - 3

(புகைப்படம்- பொன்னுத்துரை - ஒலிப்பதிவு - முஸ்தீன்)

Wednesday, March 6, 2013

பொதுபலசேனாவில் ஓர் அங்கத்துவம்!



இலக்கியத்தைப் பிரதானப்படுத்தியும் சமூகவியல் மற்றும் தெளிவு பெறவேண்டிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காகவும் பிரதான நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு நானும் இன்னும் இரண்டு சகோதரர்களும் ஒரு கலந்துரையாடலை நடத்தினோம். இந்தக் கலந்துரையாடல் இரண்டு தினங்களில் நடைபெற்றன.

நாங்கள் கலந்துரையாடலில் கவனம் செலுத்திய ஓர் அம்சம் முஸ்லிம் பெண்களின் உடை பற்றியது. பர்தா, நிகாப், புர்கா, ஜில்பாப், ஹிஜாப் என்றெல்லாம் பேசப்படும் உடைகளில் இஸ்லாம் வரையறுக்கும் உடை எவ்வாறானது என்பது பற்றிய தெளிவான, பொதுமக்களை மையப்படுத்திய கலந்துரையாடலைப் பகிரங்கமாக நடத்த வேண்டும் என்று எண்ணினோம். இதற்குக் காரணம் இப்போது இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களில் ஒரு சாரார் முகம் மூடி அணிவதால் ஒரு சிக்கல் தோன்றும் என்று ஓர் உணர்வு எமக்கு இருந்தது.

மொத்த நிகழ்ச்சித் திட்டத்தையும் பற்றிக் கொஞ்சம் மூத்த புத்திஜீவிகளிடம் கலந்துரையாடிய போது அவர்கள் தயக்கம் காட்டினார்கள். 'இந்த விடயங்களை நீங்கள் பேச ஆரம்பித்தால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்' என்றும் உங்களை 'நூதனவாதிகள்' என்றோ 'வழிதவறியோர்' என்றோ வசைபாடுவது மட்டுமன்றி சில வேளை 'உங்கள் மீது ஜிஹாத் செய்ய வேண்டும் என்றும் கூட ஒரு கூட்டம் கிளம்பும்' என்று எச்சரித்தார்கள்.

என்ன பிரச்சினை வந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தோடு நாம் முயன்ற போதும் நிகழ்வை நடத்துவதற்கான வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் எதிர்பார்த்த பிரச்சினை இன்று விஸ்வரூபமெடுத்து நம்முன்னால் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

இந்த விடயமாக மூத்த புத்தி ஜீவிகள் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன.

இன்றைய முஸ்லிம் எதிர்ப்பு என்பது திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக எனக்குத் தோன்றவில்லை. சிறுபான்மை எதிர்ப்பு என்பது காலாகாலமாக இருந்து வருவதுதான். ஆனால் அந்த எதிர்ப்பும் வெறுப்பும் தூண்டிவிடப்பட ஒருவகையில் நாமும் காரணமாக இருந்திருக்கிறோமோ என்ற ஒரு சந்தேகம் எனக்கு உண்டு.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்புப் புறநகர் ஒன்றில் உள்ள சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பிரதான வீதிக்கு வந்த போது ஒரு சிறிய ட்ரக் வண்டி யூ டேர்ன் எடுத்தது. அந்த ட்ரக் வண்டி சந்தையில் நான் நின்றிருந்த போது இறைச்சிக் கடைக்கு முன்னால் நின்றிருந்தது. இறைச்சிக் கடையில் இறைச்சியை இறக்கி விட்டுப் பிரதான வீதிக்கு வந்து வேகமாக யூ டேர்ன் எடுத்த போது அந்த ட்ரக்கிலிருந்து இரத்தமும் நீரும் கலந்த ஒரு கலவை சலார் என பிரதான தெருவெங்கும் தெறித்துச் சிதறிற்று. அந்த நீர்க் கலவையின் அளவு குறைந்தது ஐந்து கலன்களாவது இருக்கும். இந்தக் காட்சி என்னை என்னவோ செய்தது.

எனது முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கருகில் மற்றொரு முஸ்லிம் நபர் பெரியதொரு வீடுகட்டினார். அந்த வீட்டுக்கு அருகே ஒரு பெரும்பான்மை நண்பரின் வீடு. வீடுகட்டிய நபரின் தந்தை பிரதேசத்தின் மிகப் பழைய நபர். எல்லோருடனும் சகஜமாகப் பழகும் போக்குடையவர். புதிய வீட்டுக்கு முன்னால் தெரு இருந்தது. அருகேயிருந்த பெரும்பான்மை நண்பரின் வீட்டுக்கு அருகாமையிலும் ஒழுங்ககை இருந்தது. அதாவது கட்டப்பட்ட வீட்டுக்கு இரண்டு இடங்களால் நுழையலாம். மகன் வீட்டுக்குக் குடிவரும் தினத்துக்கு முன் தினம் தந்தையார் ஒரு மாட்டைக் கொண்டு வந்து அறுத்துப் பகிர்ந்தார். கழிவுகளை பெரும்பான்மை நபரின் வீட்டுக்கு அருகேயுள்ள ஒழுங்கையால் இழுத்து வீசினார். இரண்டு தினங்களாக அந்த ஒழுங்கையில் நாற்றம் அடிக்கத்தொடங்கியது. நாய்கள் எலும்புகளுக்குச் சண்டையிட்டன. அந்தப் பெரும்பான்மை நபர் இந்த விடயத்தையிட்டுக் கவலைப்பட்டு எனது நண்பரிடம் சொல்லியிருந்தார்.

பொதுபலசேனா பிரச்சினை கிளறிய ஆரம்பக் கட்டத்தில் ஒரு மதகுரு 'புதிது புதிதாகப் பள்ளிவாசல் கட்டும் இவர்கள் ஏன் கல்விக்கூடங்களைக் கட்டுவதில்லை... வறியவர்களுக்கு உதவாமல் 50, 100 என்று ஏன் மாடுகளை அறுக்கிறார்கள்' என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

இந்தக் குறிப்பை எனது முகநூல் பக்கத்தில் இட்டிருந்தேன். பலரும் ஒட்டியும் வெட்டியும் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள். அதில் ஒரு பதிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. 'குர்பான் கொடுப்பது முஸ்லிம்களது கடமை. அதை யாரும் தடுக்க முடியாது' என்றவாறு ஒரு கருத்துப் பதியப்பட்டிருந்தது. என்னைப் பொறுத்த அளவில் பல்லின நாடான இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இலங்கையில் - இந்த வார்த்தைகளைச் சொல்ல இரண்டே இரண்டு பேருக்கு மாத்திரம்தான் சக்தியுண்டு. ஒருவர் இந்நாட்டின் ஜனாதிபதி. மற்றவர் இந்த நாட்டின் பிரதம நீதியரசர்.  ஆனால் இந்தக் கருத்தைப் பதிவிட்ட முஸ்லிம் சகோதரர் ஒரு சட்டத்தரணி என்பதுதான் துயரம்.

நாம் எவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கிறோம் உன்ற உணர்வு இல்லாமல், நமது சகோதர இனத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற உணர்வு இல்லாமல் இப்படித்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பொதுபலசேனா முன்வைக்கும் விடயங்கள் பொய்யானவையாக பிழையானவையாகவும் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் சாதாரண முஸ்லிம் ஒருவனுக்குத் தெரியாத வஹாபி, ஸலபி பிரச்சினைகளை முன் வைத்து அவர்கள் பேசுவதன் மூலம் அமைப்பு ரீதியான, பிரிவுகள் ரீதியான உள்குத்துக்களால் ஆளை ஆள் காட்டிக் கொடுக்கும் முஸ்லிம்களாக நாம் மாறியிருக்கிறோம். இன்றைய நிலையில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இயக்க ரீதியான முரண்பாடுகளையும் பிரிவினையையும் ஆளை ஆள் வசைபாடுவதையும்தான் நான் பார்க்கிறேன்.

Tuesday, March 5, 2013

விரல்களற்றவனின் பிரார்த்தனை - 1


கடந்த 03.03.2013 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்ட “விரல்களற்றவனின் பிரார்த்தனை” சிறுகதை நூல் பற்றி எழுத்தாளர் நண்பர் மு.தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒலிவடிவம்.



பகுதி - 1



பகுதி - 2