Monday, September 27, 2010

சுதாராஜின் ‘உயிர்க் கசிவு’





என் மனக் கணக்கு

சுதாராஜ் என்ற படைப்பாளி பற்றியோ அவரது சிறுகதைகள் பற்றியோ பத்து நிமிடத்துக்குள் சொல்லி முடிப்பது என்பது தாமரைக் குளத்து நீரைத் தண்ணீர்ச் சொம்பில் தருவதற்குச் சமமாகும்.

இலங்கையில் தமிழில் சிறுகதை எழுதுவோர் தொகை திடீரென அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு சிறு கதையை எழுதி அனுப்பினால் அது பிரசுரம் காண ஆகக் குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளின் நோக்கம் இலக்கியம் வளர்ப்பதல்ல. இலக்கியத்தையும் ஓர் அம்சமாக அவை இணைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பிரதான நோக்கம் வியாபாரம் என்பதால் தெரிவுகளைக் கவனத்தோடு செய்வதாகச் சொல்ல முடியவில்லை. அதாவது அதி சிறந்தவற்றை மட்டும் பிரசுரிப்பதில்லை. சாதாரண கதைகளும் இடம்பெறுகின்றன. இந்தச் செயற்பாடு பலரை வளர்த்து விட்ட போதும் பத்திரிகையில் கதை பிரசுரமாகிவிட்டால் தாங்கள் ஒரு ‘பிரபல’ நிலையை எய்தி விட்டதாகச் சிலர் மயங்கிக் கிடக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தமிழில் நிறையக் குறைப் பிரசவங்களும் குப்பைகளும் நிறைய ஏதுவாகி விடுகிறது. எவ்வாறாக இருப்பினும் வெகுஜனப் பத்திரிகைகளின் இலக்கியப் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

Sunday, September 26, 2010

குரல் வழிக் கவிதைகள்


“கவிதைப் புத்தகங்களை யாராவது எனக்குத் தந்தால் அவற்றை முன்னால் வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். திறக்க மாட்டேன். அந்தக் கவிதைப் புத்தகம் என்னை என்ன செய்யுமோ என்ற அச்சம். சில சமயம் கவிதைப் புத்தகம் - அதனுடைய அற்புதமான படைப்புத் தன்மை என் எழுத்தை ஊமையாக்கி விடும். சில சமயங்களில் அதன் வெற்றுத் தன்மை கோபத்தை ஏற்படுத்தும். கவிதையைப் படிக்கிறத்துக்கு முன்னால நான் தயங்கித்தான் படிக்கிறேன்.”

கவிஞர் இன்குலாப் இவ்வாறு ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

கவிஞர் அல் அஸ_மத் அவர்கள் நூல் வெளியிடுவது தெரியும். அந்த நூலின் பின்புற அட்டையில் அவரைப் பற்றி நான்தான் எழுதியிருக்கிறேன். புத்தகம் அச்சிட்டு முடிந்ததும் ஒரு பிரதியை எனக்குத் தந்தார். பெற்றுக் கொண்டேன். திறந்து கவிதைகள் அமைந்துள்ள முறை, புத்தகத்தின் அழகிய கட்டடைப்பு, பின்புற அட்டையில் நானே தெரிவு செய்த அவரது படம் எல்லாவற்றையும் ரசித்தேன். “நூலுக்கு நீங்கள்தான் நயவுரை வழங்குகிறீர்கள்” என்றார். அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

தீர்க்க வர்ணம்


ஓர் இரசனைக் குறிப்பு

- தாஸிம் அகமது -

அஷ்ரஃப் சிஹாப்தீனின் தேடலின் ஆழத்தையும் நிறையத் தகவல்களையும் உள்ளத்தைக் கவரும் எழுத்து நடையையும் முன்னிறுத்திக் கொண்டு நம் முன் வந்தருக்கிறது தீர்க்க வர்ணம் என்ற அவரது பத்தி எழுத்துத் தொகுப்பு நூல். தினகரன் வாரமஞ்சரியில் ஏறக்குறைய பதினாறு மாதங்களாகத் தொடராக அவர் எழுதி வந்த போது பலர் பத்திரிகையைக் கையிலெடுத்ததும் முதலில் இதனைப் படித்து வந்ததை நான் அறிவேன்.

தமிழில் இதுவரை அறியப்பட்ட பத்தி எழுத்துக்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்பானவையாகவே இருந்து வந்துள்ளன. இன்னும் சிலர் இலக்கியம், பொது விடயங்கள் என எழுதி வந்திருந்த போதும் ஒரு நூலாகத் தொகுப்பதற்கான சாதக நிலையும் தகவல்களும் கொண்டவையாக அவை இருக்கவில்லை. தீர்க்க வர்ணம் நூலில் இடம் பெற்றுள்ள தகவல்களும் தனி நபர் விடயங்களும் சம்பவங்களும் எழுத்து நடையும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. காலத்தையும் தாண்டி நின்று பேசவல்லதாக இவரது பத்திகள் இருப்பதால் அவை நூலுருவாக வருவதற்கு வாய்ப்பாகப் போய் விட்டது.

கூடு கட்டத் தெரியாத குயில்கள்

ஒரு ரசனைக் குறிப்பு

ஒரு படைப்பாளி தனது படைப்பை வெளிப்படுத்தப் பயன்படுத்தியருக்கும் மொழியானது ஒரு தேர்ந்த வாசகனைத் திருப்திப்படுத்துமாக இருந்தால் அப்படைப்பு ஐம்பது வீதம் வெற்றி பெற்றதாகி விடுகிறது. சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிற நிலையை எட்டுமாக இருந்தால் அப்படைப்பு முழு வெற்றியை நோக்கியிருப்பதாகக் கூறலாம்.

இந்த இரண்டு நிலைக்குமான பிரிகோட்டுக்கு மத்தியில் சில கதைகளும் பிரிகோட்டுக்கு மேலும் கீழுமாகச் சில கதைகளும் ‘கூடுகட்டத் தெரியாத குயில்கள்’ என்ற மருதூர் ஏ. மஜீத் அவர்களின் அண்மையில் வெளி வந்த சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

1979ல் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ வெளிவந்த போது அதன் வாசம் முழு இலங்கையிலும் பின்னர் தமிழகத்திலும் பரவியிருந்ததைப் பலர் மூலம் அறிய முடிந்தது. அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்த ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ என்கிற கதையானது வேறு சிலருக்கும் பின்னாளில் கதைகளுக்கான சார்புக் கருவாக மாறியிருந்ததை ஒரு மூத்த படைப்பாளி மூலம் நான் அறிய வந்தேன்.

Thursday, September 23, 2010

பாவலர் பஸீல் காரியப்பர்

பாவலர் பஸீல் காரியப்பர்

கவிதைகளும் நினைவுகளும்

இரண்டாயிரத்து ஆறு பெப்ரவரி 16ம் திகதி அந்தி சாயும்; வேளை எனக்கு அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. மிகத் தெளிவாக ஒலித்த அந்தக் குரல் சொன்னது.... “நான் பஸீல் காரியப்பரின் மகள் பேசுகிறேன். வாப்பா மௌத்தாகிப் போயிட்டாங்க... ‘நான் மௌத்தாகினால் இன்னாரிடம் சொல்லி மரண அறிவித்தலைக் கொடுக்கச் சொல்லுங்கள்’ என்று சொல்லி உங்களது தொலை பேசி இலக்கத்தைத் தந்திருந்தாங்க வாப்பா...”

அந்தச் செய்தி தந்த அதிர்வில் அதற்கு மேல் பேச வார்த்தையற்று கையில் ரிசீவரைப் பிடித்தபடி உறைந்து போயிருந்தேன். உணர்வு வந்த போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் பல்வேறு உணர்வுகளாலும் சிந்தனைகளாலும் அலைக்களிக்கப்பட்டேன். மிகப் பிடித்தமானதும் மிகத் தேவையானதும் மிக முக்கியமானதுமான எதையோ இழந்து விட்டதாக மனது அவஸ்தைப் பட்டது. ஐந்து நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மரண அறிவித்தலில் இடம் பெற வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். தொடர்பு கொள்ளச் சாத்தியப்பட்ட அனைத்து இலக்கிய நண்பர்களுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் செல்லப் படியிறங்கினேன்.

Wednesday, September 8, 2010

‘தீர்க்க வர்ணம்’


அஷ்ரஃப் சிஹாப்தீனின்
‘தீர்க்க வர்ணம்’
ஒரு வெட்டு முகம்

- கலைவாதி கலீல் -

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘தீர்க்க வர்ணம்’ என்ற நூல் என் கரம் எட்டியது. ‘தினகரன்’ வாரமலரில் அவர் வாராவாரம் எழுதி வந்த பத்தி எழுத்துக்களின் தொகுப்புத்தான் இந்நூல். 236 பக்கங்களைக் கொண்ட 68 பத்திகளைக் கொண்ட இக்கனதியான பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்தி ((Colomn) நூலின் மூலம் மூன்று விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே பெறுமானம் மிக்க கவிதைகளையும் ஓரிரு சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனால் வெகு நேர்த்தியாகப் பத்திகளையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பிரதானமான ஒன்று. இரண்டாவதாக செம்மையான தமிழ் மொழி உச்சரிப்புடன் கம்பீரமான - அதே வேளை மென்மையான - ஒலிவாங்கிக்கேற்ற குரல்வளம் கொண்ட அறிவிப்பாளராக மட்டுமே; பெரும்பாலோரால் அறியப்பட்ட அஷ்ரஃப் சிஹாப்தீனின் இலக்கிய மீள் பிரவேச வெற்றி உலா. மூன்றாவதாக, வெகு சிரமதி;தின் மத்தியில் ஒரு கவிதைச் சஞ்சிகையை வெளிக் கொண்ர்ந்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தலைவிதியின் படி தொடர்ச்சியாக வெளியிட முடியாத நிலையிலும் கூட, அடிக்கடி நூல்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்ற தற்றுணிவும் ஆளுமையும்.

வேறு சில காரணங்கள் இருப்பினும் அவையெல்லாம் சிறியவைகளே என்பது என் கருத்து.

இரு நூல்கள் வெளியீட்டு விழாக் காட்சிகள்






29.07.2010 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடந்த தீர்க்க வர்ணம் மற்றும் ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாக் கட்சிகள்

கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.உனைஸ் பாரூக், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அதிதிகளாகக் கலந்த சிறப்பித்தனர். புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்