Tuesday, May 31, 2011

வரலாற்றுப் புகழ் பெற்ற கந்தூரி? (மலேசிய இலக்கிய மாநாடு)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 09

மலேசியாவில் நடந்து முடிந்த - இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - என்ற பெயரில் நடத்தப்பட்ட - 20 வீத இலக்கியமும் 40வீத அரசியலும் 40 வீத தனிநபர் மகத்துவம் நிலைநாட்டலும் என்ற நோக்கில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அநேகமாகவூம் நாடு திரும்பி விட்டார்கள்.

இலங்கையிலிருந்து சென்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரைத் தவிர மற்றையோர் யார் என நாம் அறிந்திருக்கவில்லை. 50 வீதமானோர் இலக்கியம் என்றால் கால் வீசை என்ன விலை என்று கேட்பவர்கள். மற்றும் 30 வீதமானோர் வியாபாரம் மற்றும் சுற்றுலா நோக்கில் சென்றவர்கள். இலக்கிய ஆர்வமுள்ள பொதுவான நமக்கு அறிமுகமான சிலரும் சென்றிருக்கிறார்கள் என்பதை அவர்கள் நம்முடன் தொடர்பு கொண்ட பிறகுதான் அறிய வந்தோம்.

நம்மோடு தொடர்பு கொண்ட அந்தக் குறிப்பிட்ட நபர்களில் ஊடகத்துறை சம்பந்தப்பட்டோரும் உள்ளனர். மலேசியர் மிகவும் சிறப்பாக உபசரித்தனர் என்று சொன்ன இவர்கள் இலங்கைக் குழுவினர் தமது நலக் குறித்துக் கவனிக்கவில்லை என்று மிகவும் கோபப்பட்டார்கள். இணையத்தில் அல்ல பத்திரிகைகளில் எழுதினால்தான் இவர்களது முகமூடி கிழியும் என்றும் சொன்னார்கள்.

மலேசியர் தம்மைச் சிறப்பாக உபசரித்தனர் என்று சொன்ன இவர்கள் அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. தம்மைக் கவனிக்காத இலங்கைக் குழுவை கிழி கிழியெனக் கிழிக்க வேண்டுமாம். அதுவும் அவர்கள் சிக்கல் பட்டமைக்காக நாம் பத்திரிகையில் எழுத வேண்டுமாம். அதாவது அவர்களுக்காக நாம் எழுத வேண்டுமாம். எழுத முடிந்த அவர்கள் எழுதமாட்டார்கள். நாம்தான் எழுத வேண்டும்.

தமக்கு அதை எழுதத் தைரியமும் இல்லை. தம்மை அடையாளம் காட்ட விருப்பமும் இல்லை. எவ்வளவவு கேவலமான மனோ நிலை இது. எல்லோரையும் விட ஆபத்தானவர்கள் இவர்கள்தாம். இவ்வாறு சொன்னவர்களுக்கு நாம் சொன்ன பதில் ‘குழுவில் உள்ள எந்தவொரு நபருடனும் நமக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. என்ன நடக்கும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். சிக்கலில் மாட்டிக் கொண்து நாம் அல்ல... நீங்கள் மாட்டியிருந்தால் நீங்களே எழுதுங்கள்’ என்பதுதான்.

படம் பார்க்கலாம் வாங்க!

உண்மைக் கதைகளின் தொகுப்பு நூலான “ஒரு குடம் கண்ணீர்” வெளியீட்டு விழா கடந்த 28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. 


இடமிருந்து வலமாக - நான் அதாவது நூலாசிரியர், ஹாஜி ஹாஷிம் உமர், தலைமை வகித்த ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன், சிங்கப்புருக்கான இலங்கை உயர்ஸ்தானிகரும் முன்னாள் அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரஃப், கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர்.



முதற் பிரதி



சிறப்புப் பிரதி

Sunday, May 29, 2011

தண்டனை

பகுதி - 1

மௌனத்தின் புன்னகை என்ற நிகழ்ச்சித் தொடரில் இடம் பெற்ற மற்றொரு நாடகம் இது. இந் நாடகத்தின் தலைப்பு - தண்டனை.

பகுதி - 2

ஏனைய பதிவுகளைப் படிப்பதில் உள்ள ஆர்வத்தை நான் முதலில் வலையேற்றம் செய்த நாடகத்தைக் கேட்பதில் எனது தளத்துக்கு வரும் வாசகர்கள் காட்டவில்லை என்று உணரக்கூடியதாக இருக்கிறது. அநேகர் இந்தப் பாத்திரங்களில் தம்மைக் கண்டு நாணுகிறார்களா என்று ஒரு சந்தேகமும் எனக்குண்டு. அரை மணிநேரம் மினக்கெட்டுக் கேட்க அவர்களுக்கு அவகாசம் இல்லையோ என்றும் நினைக்கிறேன்.

பகுதி - 3

நாடகத்தில் சினிமா நடிகைகளை நடிக்கவிட்டால் ஒரு வேளை ஆர்வத்துடன் கேட்டுப் பின்னூட்டம் போடுவாய்ங்களோ.....?

இரத்தத்தை உறைய வைக்கும் கதைகள்


28.05.2011 அன்று கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழாவில் “ஞானம்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவருமான தி.ஞானசேகரன் அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை.

அஷ்ரப் சிஹாப்தீனின் நூலான “ஒரு குடம் கண்ணீர்” ஈழத்து இலக்கியச் செல்நெறியில் ஒரு முக்கியமான இலக்கிய ஆவணம். ஈழத்து இலக்கியம் இதுவரை சந்தித்த நூல்களை விட இந்த நூல் உள்ளடக்கத்தில் வித்தியாசமானது. உருவச் சிறப்பு வாய்ந்தது.

உலகின் சகல தர்மங்களும் மீறப்பட்ட அதர்மங்கள், அநியாயங்கள், அத்துமீறல்கள், ஆகிவற்றுள் சிக்குண்டு, சித்திரவதைகள், ஜீவமரணப் போராட்டங்களில் சீரழிந்துபோன அப்பாவி மக்களின் கதைதான் இந்த ‘ஒரு குடம் கண்ணீர்’. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து முடிந்த அல்லது நடந்து கொண்டிருக்கிற மனிதவதையின் கதை இது.

இத்தகைய பொருள்கொண்ட கவிதைகள் சிலவற்றை “பாலஸ்தீனக் கவிதைகளாக பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தந்திருக்கிறார். அதேபோன்று பேராசிரியர் சிவசேகரம் தந்திருக்கிறார். வேறும் சிலரும் தந்திருக்கலாம்

இங்கே அஷ்ரப் தருவது கவிதைகள் அல்ல. கதை வடிவிலுள்ள ஆவணங்கள். ஆவணமாகவும் இலக்கியமாகவும் தன்னை வெளிப்படுத்தும் கதைகள். ஒரு சிறுகதையோ என மயக்கம் தருமளவுக்கு இலக்கியப் பெறுமானம் வாய்ந்த ஆவணங்கள்

இந்தக் ஆவணங்கள் யாவும் உண்மைக் கதைகள். இந்தக்கதைகளை வாசிக்கும்போது எமக்குப் பெரும் மனக் குமுறல்களும் பெரும் சோகங்களும் ஏற்படுகினறன. இக்கதைகள் இரத்தத்தை உறைய வைக்கின்றன. இந்தக் கதைகளில் அஷ்ரப் எவ்விதமான கற்பனையையும் கலந்து விடவில்லை. ஆனால் அவை சொல்லப்படும் முறையில் சம்பவங்கள் அமைக்கப்பட்ட முறையில் அவை இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்று விடுகின்றன.

இங்கேதான் அஷ்ரப் தான் ஒரு கைதேர்ந்த எழுத்தாளன் என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

Friday, May 27, 2011

இலக்கிய தர்பார் (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 08.05

முற்குறிப்பு

20007ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநாடே இஸ்லாமிய தமிழ் இலக்கியம் அரசியலுக்கு அடிமைப்பட வழிகோலியது என்று நாம் ஏற்கனேவே சொல்லியிருக்கிறோம். அந்த அடிப்படையில் அம்மாநாடு பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளும் நமது தளத்தில் இடம்பெற்று வருகின்றன. அந்த மாநாட்டின் செயலாளராகவிருந்த ஹிதாயத்துல்லாஹ் இலங்கை இணைப்பாளர்கள் மீது வைத்த குற்றச் சாட்டுகளுக்கு டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் கொடுத்த பதிலறிக்கையைத் தந்திருந்தோம்.

இது தவிர, சமநிலைச் சமுதாயம் இதழில் மலேசியப் பார்வை என்ற தலைப்பில் திரு மலையாண்டி அவர்களும் இலங்கைப் பார்வை என்ற தலைப்பில் நானும் இந்தியப் பார்வை என்ற தலைப்பில் மரியாதைக்குரிய அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்களும் கட்டுரைகள் எழுதியிருந்தோம். திரு மலையாண்டி அவர்களின் கட்டுரை ஏற்கனவே நமது தளத்தில் இடப்பட்டு நீங்கள் படித்திருப்பீர்கள்.

இங்கே அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் “இலக்கிய தர்பார்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இடம் பெறுகிறது. கட்டுரையின் நீளம் கருதி சில பகுதிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதற்காக மரியாதைக்குரிய நண்பர் அப்துல் அஸீஸ் பாக்கவி அவர்கள் என்னைக் குறை சொல்லமாட்டார் என்பது எனது நம்பிக்கை.

இதைத் தொடர்ந்து எனது “இலங்கைப் பார்வை” கட்டுரையின் சில பகுதிகளும் ஆகஸ்ட் 2007 இதழில் இக்கட்டுரைகள் பற்றி தமிழ்நாட்டு வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களும் மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய தொடர் கட்டுரைகளுடே இடம் பெறும்.
------------------------------------------------------------------------------------------------------

இலக்கிய தர்பார்

இலக்கிய மாநாடுகள் இனி தமிழகத்தில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று என்னைப் போன்றவர்கள் கருதிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் பெயரில் ஒரு மாநாடு நடந்து முடிந்த விட்டது என்பதில் மகிழ்ச்சிதான். மாநாட்டுக்கான முன்னேற்பாடுகளில் காணப்பட்ட லட்சணங்களை வைத்து இம்மாநாட்டில் குளறுபடிகள் மலிந்து கிடக்க வாய்ப்புண்டு என்ற ஒரு தயாரிப்பு மனநிலையில் சென்ற எனக்கு மார்க்க அறிஞர் அரங்கை ஏற்பாட்டாளர்கள் புறக்கணித்ததைத் தவிர்த்து மற்ற அரங்குகள் எப்படியோ நடந்தேறிவிட்டதில், குறிப்பாக கலைஞர் கலந்து கொண்ட நிகழ்வில் அரங்கு நிறைந்து காணப்பட்டதில் அப்பாடா ஒரு வழியாக இலக்கிய மாநாடு முடிந்து விட்டது என்ற திருப்தி எனக்கும் ஏற்பட்டது.

ஆனால் மாநாடு நடைபெற்ற விதம், ஆற்றப்பட்ட பணிகள் மன நிறைவு என்ற அடிப்படையில் அல்லது ஓர் இலக்கிய மாநாட்டின் வரையறைக்குள் சிக்காத நன்மைகள் என்று வேறு எந்த அலகையாவது வைத்துக் கொண்டு அலசினோம் என்றால், அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாடு ஒரு தோல்விதான்.

அத்தி பூத்தாற் போல் நடைபெறுகிற அனைத்துலக இலக்கிய மாநாடுகள் இலக்கியச் செழுமையையும் இனிய நினைவுகளையும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்பது அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுடைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை மாத்திரமல்ல, ஓர் அனைத்துலக மாநாட்டிற்கான இலக்கணத்தையும் சிதறடித்துவிட்ட மாநாடாக இம்மாநாடு அமைந்து விட்டது. மூன்று நான் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட ஒருவர் கூட தங்களது அதிருப்தியை வெளியிடாமல் செல்லவில்லை என்பது ஏழாம் மாநாட்டின் பொதுப் பண்பு. எங்காவது ஓர் ஊரில் ஷரீஅத் மாநாடோ, தப்லீக் இஜ்திமாவோ நடந்தால் இம்மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் அதை ஒரு முறை போய்ப் பார்த்து விட்டு வரவேண்டும் என்றுபேசிய போது அதை மறுக்க முடியவில்லை.

இந்த அனைத்துலக மாநாடு வெற்றி பெற்றதா? தோல்வியடைந்ததா, என்று அலச வேண்டிய நேரத்தில் ‘இதயங்கள் இணைப்புக்கு இலக்கியம்’ என்ற முத்திரை வாசகம் இந்த மாநாட்டுக்குப் பொருந்துமா என்றொரு பெரிய பட்டிமன்றம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அந்த வகையில் இந்த மாநாடு தோல்வி மாநாடு மட்டுமல்லாமல் தொல்லை மாநாடாகவும் ஆகிப் பலருக்கு வேதனை அளித்தது.

ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நடத்தப்படுவதாக, ஜாம்பவான்களால் தம்பட்டம் அடிக்கப்பட்ட மாநாடு ஒரு மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான முன்னுதாரணமாகி விட்டது. அந்த முன்னுதாரணம் சென்னையில் நடைபெற்ற ஓர் அனைத்துலக மாநாட்டில் நடந்து விட்டது என்பது தமிழக முஸ்லிம்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் புரவலர்களுக்கும் ஏற்பட்ட தலைக்குனிவு.

இதைப் புரிந்தும் உணர்ந்தும் கொள்ள வேண்டியது, இதன் தோல்விக்கான காரணிகளை ஆராய வேண்டியது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வாழ வேண்டும், வளர வேண்டும் என்று நினைக்கின்ற இலக்கியவாதிகள், புரவலர்களது கடமையாகும். இனிவரும் மாநாடுகளில் அத்தகைய தவறுகள் நிகழாமல் கவனித்துக் கொள்ள அது உதவும்.

மாநாட்டின் தோல்விக்கு முதன்மையான காரணம், இலக்கிய ஆர்வத்தை விடமேலோங்கியிருந்த தனியாவர்த்தன மனப்போக்கும் சுயவிளம்பரச் சிந்தனையுமேயாகும். அலட்சிய மனப் போக்கும் பாரபட்ச உணர்வும் இதன் துணையாகச் சேர்ந்து கொள்ள, மாநாடு ‘களை’ கட்டிக் கொண்டு விட்டது. இஸ்லாம் என்ற சமய அடையாளம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கிராஅத் ஓதியதற்கு அடுத்த படியாக பர்வீன் சுல்தானாவின் பர்தாவில் வெளிப்பட்டது. வெல்டன்!

மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட விதமும் அதன் உள்ளடர்த்தியும் மாநாட்டின் தோல்விக்கு எடுத்துக் காட்டத் தகுந்த போதுமான ஒரே உதாரணமாகும்.

ஓர் அனைத்துலக மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்ட போதும் புரியவில்லை. அது பிரசுரமாகவும் தரப்படவில்லை. அடுத்த நாள் பத்திரிகையிலும் வரவில்லை. மாநாடு குறித்துப் பக்கம் பக்கமாக வினக்கம் எழுதிய ஏற்பாட்டாளர்கள், ஒரு மாநாடு அதன் தீர்மானங்களால் மதிப்படைகிறது, அத்தீர்மானங்கள் வெற்றி பெறுவதில்தான் அது உயிர் வாழ்கிறது என்ற தத்துவத்தை எப்படி அறியாமல் போனார்கள்?

வெத்து அறிக்கைகள் வெளியிடுவதற்கு அல்லது தன்னிலை விளக்கப் பேட்டிகளை அச்சேற்றுவதற்கு முயற்சி எடுத்தவர்கள், மாநாடு முடிந்து ஒரு மாதமாகிவிட்ட சூழ்நிலையில் - இன்று வரை அத்தீர்மானங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை. அவர்களது அறிக்கைகளையும் விளம்பரங்களையும் வெளியிட்ட பத்திரிகைகள் கூட அத்தீர்மானங்களை வெளியிடவில்லை. ஒரு வேளை இந்த மாநாடு பேராளர்களுக்கு மட்டும்தான் என்று அறிவித்தது போல தீர்மானமும் கலைஞருக்கு மட்டும்தான் என முடிவு செய்து விட்டார்களா என்பதும் தெரியவில்லை.

Thursday, May 26, 2011

அப்பாவி ஆடுகளும் சில அனகொண்டாக்களும்


“இவருதான் ‘கருவிழி’ பிரகலாதன்” என்றார் என்னுடன் நடந்து கொண்டிருந்த இந்திய நண்பர்.


அங்கு ஒரு திருவிழாவுக்குப் போல் மக்கள் கூடியிருந்தார்கள். என்னுடன் இலங்கையைச் சேர்ந்த மற்றும் இரண்டு நண்பர்களும் வந்தி ருந்தார்கள். அவர்களில் ஒருவர், எதையோ தேடித் தனித்துச் சென்று விட, நானும் மற்றைய நண்பரும் இந்திய நண்பருடன் நடந்து கொண்டி ருக்கும் போது எதிர்ப்பட்ட நபரைத்தான் எமக்கு இந்திய நண்பர் அறிமுகம் செய்தார்.

அவரை அறிமுகம் செய்ததும் நான் மலர்ந்தேன். ‘கருவிழி’ வெளியீடாக வந்த இரண்டு நூல்களை நான் படித்திருந்தேன். இந்தியாவுக்குச் செல்லுமுன் கடைசியாக இலங்கையில் நான் படித்த புத்தகங்களில் ஒன்று அவர்கள் வெளியிட்டது. இரண்டும் நல்ல நூல்கள். அவை இரண்டுமே புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் படைப்பாளி அதாவது புலம் பெயர்ந்தபின் படைப்பாளிகளானவர்கள் எழுதியவை. முதற் புத்தகத்தின் அமைப்பும் கட்டுமானமும் குறித்துச் சிலாகித்தேன். நான் கதைக்கக் கதைக்க ‘அப்பிடியா’ என்று சிரித்துக் கொண்டார்.

பிரகலாதன் கழுத்தில் தற்கொலை அங்கி மாதிரி ஒரு பை தொங்கியது. ஒரு படைப்பாளியாக அல்லது விடய ஞானம் உள்ளவர் போலத் தோற்றம் இருந்தது. சிரித்துப் பேசினார். சிலர் குறுக்கறுக்கும் போது அவர் அவர்களுக்குத் தலையை ஆட்டிக் கையசைத்து விடை கொடுத்தார். பக்கத்தில் இரு இளைஞர்கள் அவரிடம் எதையோ கதைக் கக் காத்திருந்தார்கள். எனக்கும் நண்பருக்கும் தனது விசிட்டிங் கார்ட் தந்தார். நாங்கள் நாடு திரும்புவதற்குள் வந்து சந்திப்பதாகவும் அப்போ துதான் ஆறுதலாகக் கதைக்கலாம் என்றும் சொன்னார். தனது அலை பேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். நாங்கள் பிரிந்தோம்.

Tuesday, May 24, 2011

அப்போதே சொன்னோம்! (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் - 08


அந்த நாட்களில் வரும் சினிமாப்படங்களில் படம் ஆரம்பித்ததிலிருந்து சண்டைக்காட்சிகள் இடம் பெறுவதுண்டு. நடிகர்கள், படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட கலைஞர்கள் பட்டியல் போய்க் கொண்டிருக்கும் போதே இந்தச் சண்டைக் காட்சிகள் இடம் பெறும். இவ்வாறான படங்களைப் பார்க்கும் அந்தக் கால விடலைகளும் வேறு பொழுது போக்கற்றவர்களும் “எழுத்தோடக்குள்ளேயே அடி” என்று தமது பட விமர்சனத்தை ஆரம்பிப்பார்கள்.

குப்பப் பிச்சை ராவுத்தர் முகம்மது இக்பால் குழுவினர் மலேசியாவில் இலக்கிய மாநாடு என்ற பெயரால் நடத்திய விழாவுக்கு இலங்கையிலிருந்து சென்றவர்களது பாடும் ‘எழுத்தோடும் போதே அடி’ என்ற நிலைக்கு வந்திருப்பது திரும்பி வந்தவர்களின் கருத்துக்களிலிருந்து தெரிகிறது.

ஹமாட் நிறுவனத்தில் விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இலங்கைக் குழு இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்ததும் அங்கு தங்கம் விலை ஏறுவது போல் - எயார் ஏசியா நிறுவனத்தின் விலை மதிப்பின் படியாம்! - ஏறியதும் கடைசியில் ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணம் செய்யக் கூடிய கட்டணத்தில் சாப்பாடு கட்டிக் கொண்டு போக வேண்டிய விமானத்தில் விமானச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டது பேசப்பட்டதும் நாமறிந்ததே. குறிப்பிட்ட பாரம் (கொண்டு செல்லும் பொருட்களின்) இருக்குமானால் அதற்கு வேறு தொகை செலுத்த வேண்டும் என்ற நிலையில் மேலதிகமாக அதற்குரிய பணமும் ஹமாட் நிறுவனத்துக்குச் செலுத்தபட்டிருந்ததாம்.

ஆனால் விமான நிலையத்துக்குச் சென்ற போது பொருட்களுக்கான பணம் செலுத்தும் படி மலேசியயப் பயணம் மேற்கொள்ளப்பட்டோர் கேட்கப்பட்டார்களாம். எதிர்பாராத இந்த அறிவிப்பால்தான் ‘எழுத்தோடும் போதே அடி’ நிலை ஆரம்பமாகியிருக்கிறது. அப்படியாயின் ஹமாட் நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்ட பொருட்களுக்கான அதாவது பாரத்துக்கான பணம் விமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டடிருக்கவில்லை என்று அர்த்தமாகிறது. இந்த விடயத்தில் இலங்கை ஏற்பாட்டுக் குழு பாராமுகமாக இருந்திருக்கிறது.

Monday, May 23, 2011

கனியும் மொழி


தமிழ் கூறும் நல்லுலகில் கனிமொழியின் கைதுதான் இப்போதைக்குப் பிரபலம். ஒரு முறை அவரது இலக்கியம் பற்றிய நேர்காணல் ஒன்றைப் படித்தேன். நீங்கள் கருணாநிதியின் மகள் இல்லையென்றால் இலக்கியத் துறையில் இந்தளவு கவனிப்புக்குள்ளாகியிருப்Pர்களா என்று ஒரு கேள்வி. அதற்கு அவர் நேரடியாகச் சொல்லியிருந்த பதில் ‘இல்லை’ என்பதுதான். எனக்கு அது பிடித்திருந்தது.


அதே கவனக் குவிப்புதான் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும். இன்று ஊடகங்கள் அனைத்திலும் முக்கியச் செய்தியாகியிருக்கிறார் கனிமொழி. இணையங்களிலும் கைத்தொலைபேசிகளிலும் ஏராளமான தமாஷான பின்னூட்டங்களும் குறுஞ்செய்திகளும் உலாவுகின்றன. அவ்வாறான ஒரு மின்னஞ்சல் இது.

விசாரணை

அதிகாரி - எதுக்கு ஒங்களக் கொண்டு வந்து வச்சிருக்கம்னு தெரியுமா?

கனி - தெரியலீங்க...

அதி - கலைஞர் டீவிக்கும் உங்களுக்குமுள்ள தொடர்பு என்ன...?

கனி - அது அப்பா பேர்ல அதாவது தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர் கலைஞர் பேர்ல நடக்குற டீவி... நான் மானாட மயிலாட புறோக்றாம் நடக்கக்குள்ள பார்க்கப் போவேங்க... என்னமா ஆடுவாங்க....

அதி - சரத்குமார் அங்கு என்ன செய்கிறார்...?

கனி - நம்ம ராதிகாட ஹஸ்பன்ட் சரத்குமார்தானே... அவரு நடிச்ச படங்கள் கலைஞர் டீவில போடுவாங்க... நானும் பார்த்திருக்கேன்...

Sunday, May 22, 2011

அடங் கொக்க மக்கா!


ஹலோ....



ஹலோ.....


நான் அஷ்ரஃப் சிஹாப்தீன் பேசுறேன்...


ஆ.... சுகமா இருக்கீங்களா....


ம்... இருக்கேன்... நான் எடுத்தது என்னன்டா... நம்ம புதுப்புத்தகம் ஒன்னு வருகுது...


ஓ... தெரியுமே... பார்த்தேன்...


எங்க பார்த்தீங்க....


ஏன் ஃபேஸ் புக்குல போட்டிருந்தீங்க...


சரி... நீங்களும் வந்தா நல்லா இருக்கும்... இரண்டு மணி நேரத்துல வெளியீட்ட முடிச்சிரலாம்னு இருக்கன்.


அது நல்லது...


கட்டாயம் எதிர் பார்க்கிறேன்... வந்துருங்க....


சரி.... அது எத்தினையாம் தேதி?


28ம் திகதி... பின்னேரம்... கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில்...


ஓகே... ஓகே....


சரி ... வச்சிடவா...


கொஞ்சம் இருங்க... என்ன புத்தகம்.. அது?


கதைப் புத்தகம்.... உண்மைக்கதைகள்!


ஓஹ்.... எத்தினை பக்கம்?


25 கதைகள்... கிட்டத்தட்ட 250 பக்கம்....


அடே... பெரிய புத்தகந்தான்... தொடர்ந்து எழுதிக்கிட்டே இருக்கீங்க...


இலக்கியவாதிகளுக்கு படிக்காம எழுதாம இருக்கேலாதானே.....


எத்தினை இன்விடேசன் அடிச்சிங்க...?


இருநூறு மட்டுல... 150 போஸ்ட் பண்ணிட்டேன்... அநேகமா எல்லாரும் வாறதாச் சொல்லியிருக்காங்க...


புத்தகத்துட தலைப்பைச் சொல்லல்லியே நீங்க...


அதான் ஃபேஸ் புக்கில பார்த்திருப்பீங்களே....


பார்த்தன்தான்... மறந்து போச்சி... ஹி.... ஹி....


ஒரு குடம் கண்ணீர்.......


அந்த மாதிரித் தலைப்பு! அட்டைப்படம் நல்லா இருக்கு.... நீங்க... நல்லா எழுதுவீங்கதானே...... நீங்க அழைச்சி வராம உடுவாங்களா...


தாங்ஸ்... வச்சிரவா.....


ஆ.... ஹலோ.... ஹலோ...... ஹல.. ஹலோ...


ஓம்... ஓம்..... என்ன?


ஒரு முக்கியமான விசயம். இப்பதான் ஞாபகம் வந்துச்சி....


என்ன.......?


சனிக்கிழம பின்னேரம்தானே விழா....


ஓம்.... ஓம்....


வெரி சொறி.... மகனை டொக்டருக்கிட்ட காட்ட அப்பொயின்ட்மன் வச்சது இப்பதான் ஞாபகம் வருகுது...!


...........................................


ஹலோ.... ஹலோ.......................... ஹல... ஹல.... ஹலோ............


சலார் என்று ஒரு சத்தம்... தடார் என்று ஒரு சத்தம்.....


ஒன்று போன் விழுந்து சிதறியது... மற்றது நான் விழுந்தது!

Thursday, May 19, 2011

மலேசியாவில் நடக்கும் இலங்கையர் மாநாடு?


இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் - 07

அரசியல் இலக்கிய விழா


கிட்டத்தட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீடக் கூட்டம் மலேசியாவில் நடக்கிறதோ என்று நினைக்குமளவு அக்கட்சி சார்ந்தவர்கள் கலந்து கொள்ளும் குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவினர் நடத்தும் இலக்கிய (?) விழா நாளை கோலாகலமாக ஆரம்பமாகிறது.

குப்பப் பிச்சை முகம்மது இக்பாலும் இலக்கியவாதிகளை விட அரசியல்வாதிகளுக்கு முக்கியமளித்துச் செய்பட்டதை அவர் இலங்கைக்கு வந்து நடந்து கொண்ட முறை நமக்கு உணர்த்தி நிற்கிறது. அவர் அல்லது அவரது குழுவினரது தேர்வு இலக்கியத்தை முன்னிலைப்படுத்தியதாக இருக்கவில்லை. இலக்கியத்தை அரசியலாக்கிய கவிக்கோ, இதாயத்துல்லா ஆகியோரை இந்தியா சார்பாக முன்னிலைப்படுத்தியுள்ளார். இலங்கையில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அவரது கட்சியையும் முன்னிலைப்படுத்தியுள்ளார்.

இலக்கியம் வேறு எங்கோ கிடக்கிறது. அதைச் சமாளிப்பதற்காக இலவச விமானச் சீட்டுக்களைக் கொடுத்துப் பேராசிரியர்கள் சிலரை அழைப்பித்துக் கொண்டுள்ளார். ஆக இலக்கியத்தின் பேரால் யார் யாரோ இலகுவான வழியில் தம்மை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.

குப்பப் பிச்சை முகம்மது இக்பால் குழுவுக்கு உற்சாகம் அளிப்பதற்காக கௌரவ அமைச்சர் அவருக்கு முன்னாலேயே தெரிவித்த படி மூன்று விமானம் நிறைத்து ஆட்கள் செல்லவில்லை. இலங்கைக் குழுவின் செயலாளர் ஜனாப் முத்து மீரானிடம் சொன்னது போல் 250 பேரும் கூடச் செல்லவில்லை. 170 பேர்தான் என்கிறார் இந்தக் குழுவின் தலைவர். இதில் அரசியல்வாதிகள், வியாபாரிகள், சுற்றுலாச் செல்பவர்கள் என்று பலவிதமானோர் அடக்கம். இந்த விழாவினை நடத்துவோர் கூட இந்திய வம்சாவழியினர்தாம். இந்தியாவிலிருந்து 65 பேரளவில்தான் செல்வதாக நமக்கு அறியக் கிடைத்தது. அதிலும் பத்துப் பேருக்கு மேற்பட்டோர் இலவச விமானச் சீட்டு வழங்கப்பட்டோர். மாநாடு முடிந்து திரும்பி வந்த பிறகு இலக்கியவாதிகள் தொகை நமக்குத் தெரிந்து விடும்.

இவ்வாறு அரசியலும் சிலரது தனிப்பட்ட சுயநலமும் முன்னிலைப்படுத்தப்படுவது இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைப் பெரும் ஆபத்தில் கொண்டு வந்து விடும் என்பதுதான் கவலையளிக்கிறது. அரசியல்வாதிகளுக்குக் கூஜாத் தூக்குவதன் மூலம் தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள நினைக்கும் அரை வேக்காட்டு இலக்கியவாதிகள் இந்த விழாவில் பிடித்து வரவுள்ள புகைப்படங்களை வைத்து இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் போல செய்யப் போகும் அலப்பறை தாங்க முடியாமல் இருக்கப் போகிறது...

ஆனால் போலிகள் தோலுரிக்கப்பட உண்மை வாழும்...

அரசியல் கொள்கைகள்

இவ்விழாவில் அரசியல்வாதிகளும் அரசியலும் முன்னுரிமை பெறும் நிலையில் அந்த அரசியலோடு உடன்பாடற்ற மலேசியரின் நிலை என்னவாக இருக்கும் என்றும் நோக்க வேண்டியுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வதேச ரீதியான கவனத்தில் இலங்கை இருந்து வரும் நிலையில் இலங்கை கௌரவ அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மலேசிய விழாவில் சிறப்பிடம் பெறுகிறார்கள். கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்மையில் ஐ.நாடுகளின் அறிக்கையில் சந்தேகம் தெரிவித்திருந்தார்.



அரசில் அங்கம் வகிக்கும் கௌரவ அமைச்சர்கள் பொதுப் பிரச்சினைகளில் அரசு சார்பான நிலைப்பாட்டில் இருந்தேயாக வேண்டும். இதே போல கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்கிறார் என்று அறிய வருகிறோம். எமது அதிமேதகு ஜனாதிபதியின் வாழ்த்தை இவ்விழாவுக்கு அவர் தெரிவிக்கவும் கூடும்.

இலங்கைத் தமிழ் மக்களின் போராட்டம் குறித்து அவதானம் கொண்ட சை. பீர் முகம்மது போன்ற படைப்பாளிகளும் இந்த விழா நடத்தும் குழுவில் அங்கத்துவம் பெற்றிருப்பதை அறிய வருகிறோம். இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களை இவரைப் போன்றவர்கள் இந்த நிகழ்வில் எவ்வாறு எதிர் கொள்வார் என்பது கவனித்தலுக்குரியது.


சை. பீர்முகம்மது அவர்கள் ஏப்ரல் 2009 - காலச் சுவடு இதழில் கருணா அம்மான் பற்றி எழுதியிருந்த கட்டுரையை நாமும் படித்தோம். அதே கருணா அம்மான் இணைந்திருக்கும் இலங்கை அரசில்தான் மலேசிய விழாவில் கலந்து கொள்ளும் எமது கௌரவ அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளார்கள்.

காலச் சுவடு இதழில் சை.பீர் முகம்மது எழுதியிருந்த கட்டுரையை நீங்களும் படித்துப் பாருங்கள்...
----------------------------------------------------------------------------------------------------------
கட்டுரை


காட்டிக்கொடுக்கும் கருணா
ஒரு போராளி துரோகியான கதை

சை. பீர்முகம்மது

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிளையா நீங்க....?

பகுதி - 1

(முதற்பகுதியை நீங்கள் சொடுக்கிப் பதினாறு நொடிகளின் பின்னர் நாடகத்தை நீங்கள் கேட்கலாம்.)

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் ‘மௌனத்தின் புன்னகை’ என்த தலைப்பில் வானொலி நிகழ்ச்சியொன்றினை கிழக்கின் பிறை எப்.எம். வானொலி ஊடே ஒலிபரப்பியது. ஒலிபரப்பப்பட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதான அங்கமாக நாடகங்கள் அமைந்திருந்தன. பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளை வெவ்வேறு கோணங்களில் இந்நாடகங்கள் படம் பிடித்துக் காட்டின.

பகுதி - 2

இந்த நாடகங்களில் பங்கு கொண்ட ஒரு கலைஞன் என்ற வகையில் எனது வலைத்தள வாசகர்களுடனும் இவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்பி இவற்றை இங்கு பதிவேற்றம் செய்கிறேன்.

இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது “மௌனத்தின் புன்னகை“ என்ற ஒரு நாடகம். வலையேற்ற வசதிக்காக இந்நாடகத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளேன்.

இந்நாடகங்களுள் நான் தேர்ந்தெடுத்தவற்றை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

பகுதி - 3

இந்நாடகங்களை எனது வலைத் தள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கிய தயாரிப்பாளர் எம்.சி. ரஸ்மின் மற்றும் இந்நாடகத் தயாரிப்பில் முழு மூச்சாகச் செயற்பட்ட ஏ.எல். ஜபீர் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

நாங்கள் வாசகர்களாகிய உங்களிடம் நாடகங்கள் பேசும் விடயங் குறித்த கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

எல்லோரும் நன்றாயிருக்கப் பிரார்த்திப்போம்!

Wednesday, May 18, 2011

விவாதத்தின் பக்கங்கள்


பின்வரும் அனுவம் கலந்த சிந்தனைக்குரிய வார்த்தைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனது மின்னஞ்சலுக்கு ஒர நண்பரால் அனுப்பப்பட்டவை. இணையத்திலிருந்து இவை சுடப்பட்டிருக்கலாம். வாசிக்க ரசனையைத் தருகின்றன என்பதால் உங்களுடன் இவற்றைப் பகிர்ந்து கொள்ளுகிறேன்.


வெற்றிக்கான திறப்பை நீங்கள் கண்டடைகின்ற வேளை யாரோ பூட்டை மாற்றிவிடுகிறார்கள்.

தவறு விடுவது மனிதனின் இயல்புதான். ஆனால் மன்னிப்பது கம்பனியின் நியதி இல்லை.

வெற்றியை நோக்கிய பாதை....? அது எப்போதும் திருத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

மதுபானம் எந்தப் பிரச்சினையையும் தீர்ப்பதில்லை. ஆழ்ந்து சிந்தித்தால் பால் கூட அப்படித்தான்.

நாம் மிகவும் ஆசை கொள்ளும் விடயங்கள் ஒன்றில் அதிக பணப்பெறுமதியுடையதாக இருக்கிறது அல்லது சட்டவிரோதமானதாக இருக்கிறது.

பணம் சேர்ப்பதற்காக எல்லோரிடமும் திட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வெற்றி தரக்கூடியனவாக இல்லை.

நமது கரங்களிலிருந்து தவறி விழும் ஏதாகிலுமொன்று இலகுவில் அதை எடுத்துக் கொள்ள முடியாதபடியான இடத்தை நோக்கி உருண்டு போய் விடுகிறது.

வேளைக்கே பாதைக்கு வந்தால் பஸ் தாமதமாக வருகிறது. தாமதமாகப் பாதைக்கு வந்தால் பஸ் மேலும் தாமதமாக வருகிறது.

ஒரு முறை ஏதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்கி வந்த பிறகுதான் தெரியவருகிறது, பல இடங்களில் அதே பொரும் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையாகியிருப்பது.

இரண்டு வரிசைகளில் ஒன்றில் நீங்கள் நிற்கும் போது அடுத்த வரிசை வேகமாக நகர்கிறது.

வீட்டு அழைப்பு மணியும் உங்களது கைடயக்கத் தொலைபேசி மணியும் எப்போதும் நீங்கள் குளியலறையி;ல் இருக்கும் போதே ஒலிக்கிறது.

நாளைக்குப் பரீட்சையென்று இருக்கும் நிலையில் இன்றிரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

காற்றின் பொறுப்பற்ற செயலால் புகைப்பவரின் சிகரட் புகை புகைப்பழக்கமற்ற ஒருவரின் முகத்தை நோக்கியே செல்கிறது.

எல்லா விவாதங்களுக்கும் மூன்று பக்கங்கள் இருக்கின்றன. உனது பக்கம். எனது பக்கம். மற்றது நியாயத்தின் பக்கம்.

மதுபானம் பல விடயங்களைப் பாதுகாக்கிறது. ஆனால் அவ்விடயங்களில் கண்ணியம் உள்ளடங்குவதில்லை.

முட்டாளுடன் வாதிட்டுக் கொண்டிருக்காதே. பொது மக்கள் இலகுவில் வித்தியாசத்தைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.

நீ சரியாக இருக்கும் போதெல்லாம் அதை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால் தவறு விடும் போது அதை யாரும் மறப்பதுமில்லை.

நீ ஒரு தனித்துவமான நபர்தான். எல்லாரையும் போல.

நன்றாகச் சொல்லப்பட்டதை விடவும் நன்றாகச் செய்யப்பட்டதே சிறந்தது.

விடாமுயற்சி இருக்குமாக இருந்தால் வழியொன்று திறக்கவே செய்யும். பணம் இருக்குமாக இருந்தால் பல வழிகள் திறக்கும்.

எல்லோருக்கும் சொர்க்கத்துக்குச் செல்லும் ஆசை இருக்கிறது. ஆனால் யாருக்கும் மரணிப்பதற்கு விருப்பம் இல்லை.

















Tuesday, May 17, 2011

2007 சென்னை மாநாட்டினூடாக மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.03

2007 சென்னை மாநாட்டைச் சொதப்பிய ஏற்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை இணைப்பாளர்களைக் குறை சொல்லி விட்ட அறிக்கைக்கு இணைப்பாளர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் விடுத்த பதிலறிக்கை இது. தினக்குரல் பத்திரிகையில் 22 ஜூன் 2007ல் வெளியான பகுதி - பகுதி 1 எனவும் 23ம் திகதி வெளியான பகுதி - பகுதி 2 என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி - 01


ஒரு சர்வதேச மாநாட்டைத் திட்டமிடுவதற்குத் தெரியாமல் நடத்திவிட்டு இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையிலும் கூடத் தன்னிலை விளக்கமளிக்கும் பரிதாபம் சகோதரர் ஹிதாயத்துல்லாவுக்கு நேர்ந்திருக்கிறது.

அவரது அறிக்கை சோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய்களால் ஆனது என்பதை இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டோர் தெளிவாக விளங்கிக் கொண்டுள்ளதால் அவரது நியாயங்கள் இலங்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை முதலில் அவருக்கும் அவருடைய இலங்கை ‘பினாமி’களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அவரது அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களின் உண்மைத் தன்மையை அம்மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவன் என்ற முறையில் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

இலங்கை ஒருங்கிணைப்பாளர்களில் இரு பிரிவுகளாகப் பிரிந்து தாங்களாகவே இலங்கைப் பத்திரிகைகளில் தனித் தனி அறிக்கை வெளியிட்டிருந்தனர் என்று ஹிதாயத்துல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.

என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் நண்பர் எஸ்.முத்துமீரானையும் ஒருங்கிணைப்பாளர்களாக அவர் நியமித்திருந்தனர். எனக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனுக்குமான கடிதத்தை எனது முகவரிக்கே அனுப்பியிருந்தனர். இந்த நியமனம் நடக்குந் தருணத்தில் எஸ். முத்துமீரான் சென்னையில் இருந்தார். அவரது கடிதம் அங்கு வைத்தே வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வந்த எஸ்.முத்துமீரான் தினகரன் பத்திரிகையில் இது குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தன்னுடன் சேர்த்து என்னையும் அஷ்ரஃப் சிஹாப்தீனையும் ஒருங்கிணைப்பாளர்களாக மாநாட்டுகட் குழுவினர் நியமித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

எங்களுக்கான கடிதம் வந்த போது மாநாட்டுக்குச் செல்ல விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி கொடுத்தோம். எஸ். முத்துமீரான் கிழக்கில் இருந்தார். நாங்கள் கொழும்பில் இருந்தோம். விபரம் கோரியவர்களிடம் அவர்களின் வசதிக்கேற்ப அவரையோ எங்களையோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தோம். தொலைக் காட்சிப் பேட்டிகளின்போதும் வானொலிப் பேட்டிகளின் போதும் நானும் அஷ்ரஃப் சிஹாப்தீனும் இதையே பிரஸ்தாபித்தோம்.

Monday, May 16, 2011

அப்போ அது நீங்கதானா...?

ஆதி மனிதன் ஆதம் மரங்களின் நலன்களைக் கவனிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். முதற் பெண்மணி (அதாங்க... ஏவாள் என்றும் ஹவ்வா என்றும் அழைக்கப்படும் நமது ஆதித்தாய்) குகைக்குள் பொருட்களைச் சரி செய்து சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு குழந்தையின் அழு குரல் கேட்டது. தாய்ப்பாசம் பொங்க வெளியே ஓடிவந்து பார்த்த போது ஒரு குழந்தை நிர்வாணமாக நிலத்தில் கிடந்து அழுதுகொண்டிருந்தது.

முதல் மனிதனையும் முதற் பெண்மணியையும் அவர்களது பிள்ளைகளையும் வழிகேட்டில் ஆழ்த்த சாத்தானால் அனுப்பப்பட்ட சாத்தானின் பிள்ளை அது என்பது அவருக்குத் தெரியாது. அக்குழந்தை அழுகையை நிறுத்தும் வரை அதன் மீது அன்பு பொழிந்து ஆதரவளித்தார். முதல் மனிதர் வீட்டுக்கு வந்த போது அக்குழந்தையைக் கண்டார். அவருக்கு விசயம் புரிந்தது. அக்குழந்தையை எடுத்துச் சென்று ஆற்றில் எறிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.

அடுத்த நாள் ஆற்றங்கரையருகே சென்ற சாத்தான் ‘என்னருமைப் புதல்வனே நீ எங்கிருக்கிறாய்’ என்று சத்தமிட்டான். ‘இதோ இங்கிருக்கிறேன்’ என்றவாறு அந்தக் குழந்தை ஆற்று நீரிலிருந்து வெளியே வந்தது. ‘ஆதம் வரும் வரை ஆற்றங் கரையில் காத்திரு’ என்று அக்குழந்தைக்கு உத்தரவிட்டுச் சாத்தான் மறைந்த போனான். அவ்வழியே வந்த ஆதம் சாத்தானின் குழந்தையைக் கண்டு அதை எடுத்து நெருப்பில் இட்டார். அக்குழந்தை சாம்பராகும் வரை காத்திருந்து விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இரண்டாம் நாள் அவ்விடத்துக்கு வந்த சாத்தான் மகனை அழைத்தான். ‘இதோ இருக்கிறேன்’ என்றவாறு எரிந்த இடத்திலிருந்து அக்குழந்தை வெளிவந்தது. ‘ஆதம் வரும் வரை இங்கேயே இரு’ என்று மீண்டும் உத்தரவிட்டு மறைந்தான் சாத்தான்.

மாலை அவ்வழியே வந்த ஆதம் தான் அழித்தொழித்து விட்டதாக நினைத்த சாத்தானின் குழந்தை அங்கேயிருப்பதைக் கண்டார். அவருக்கு கட்டுக்கடங்காத கோபம் உண்டாயிற்று. கோபத்துடன் முதற் பெண்மணியிடம் சொன்னார், ‘இதை அழிக்க ஒரேயொரு வழி இக்குழந்தையை நாம் சாப்பிட்டு விடுவதுதான்!’ அப்படியே நடந்தது.

அடுத்த நாள் சாத்தான் வந்தான். ‘என் அருமை மகனே எங்கிருக்கிறாய்?’ என்று கேட்டான். இரண்டு உடல்களிலிருந்து இரண்டு குரல்கள் வெளிவந்தன. ‘அருமைத் தந்தையே நான் இங்கிருக்கிறேன்... நிம்மதியாய்..!’ சாத்தான் சொன்னான், ‘மிகவும் நல்லது. அதுவே எனக்;கும் வேண்டியது!’

அன்றிலிருந்து நல்ல குணங்களுடன் மனிதன் பிறந்தாலும் கொஞ்சம் சாத்தானின் குணவியல்புகளும் கூடவே இருந்து வருகின்றன!

Source: Rushdi al Ashhab, Popular Stories from Palestine. Published by the Arab Studies Society, Jerusalem, 1987.

என்னமாய்ச் சுத்துறாங்கையா... (இஸ்லாமிய இல. விழா. மலேசியா)


மலேசியாவில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தும் குழு, மலேசியா வாழ் இஸ்லாமிய பெருங்குடி மக்கள், ஏனைய நாடுகளில் வாழும் முஸ்லிம் இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் கவனத்துக்கு.....

இன்று காலை எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு தவிப்புக் கடிதம் இது.

-----------------------------------------------------------------------------------------------------------

16.05.2011


அன்புள்ள நண்பர் அஷ்ரப் சிகாப்தீனுக்கு,

கானாமல் போனவர்கள் கவிதை நுலினூடாக உங்களை அறிந்து, பின்னர் யாத்ரா இதழினூடாக உங்கள் எழுத்துகளை இரசித்து தற்போது face book மூலமாக உங்களுடன் நண்பனான இணைந்த முகைதீன்சாலி,

உங்கள் வாயில் சீனியள்ளிப் போட வேண்டும். என்னவொரு தீர்க்க தரிசனமான முறையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள் என்பதனை சற்று நாளிகைக்கு முன்பாகத்தான் என்னால் நேரடியாக உணர முடிந்தது.

முதலில் என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் அரசியல் ரீதியான முரண்பாடு காரணமாகவும் உங்களை முன்னிலைப்படுத்தவில்லை என்ற காரணத்திற்காகவுந்தான் நீங்கள் அவ்வாறு எழுதுகின்றீர்கள் என்று நான் நினைத்திருந்தேன். அது எவ்வளவு பிழையான நினைப்பு என்பதனை இப்போது நிதர்சனமாக உணர்ந்து கொள்கிறேன்.

ஒரு வேளை உங்களின் கட்டுரைகளை முதலில் இருந்தே நான் வாசித்திருந்தால் மலேசியா செல்வதற்கு பத்தாயிரம் ரூபாய் முற்பணத்தை கட்டாமலேயே விட்டிருப்பேன். என்ன செய்வது அண்மையில்தானே உங்களை face book மூலமாக நண்பணாக அடைந்தேன். அதன் பின்னர்தான் கடைசி இரண்டு கட்டுரைகளையும் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

பத்திரிகையில் வெளிவந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு சம்மந்தமான அறிவிப்பை பார்த்து இலக்கியம் மீதுள்ள காதலினால் மாநாட்டிற்கு செல்வதற்கு விண்ணப்பித்தேன். கூடவே மாநாட்டு கவியரங்கில் கவிதை வாசிக்கும் எண்ணத்தில் கவிதை ஒன்றையும் அனுப்பியிருந்தேன்.

முதலில் பேராளர் விண்ணப்பம் வந்தது. பின்னாளில் ஒரு சனிக்கிழமை பின்னேரம் நான் எனது சொந்த ஊரான காத்தான்குடியில் இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘நான் உ.இ.த.மா இலங்கை ஏற்பாட்டுக் குழுவிலிருந்து பேசுகிறேன். உங்கள் கவிதை கிடைத்தது. அச்சிலிருந்ததை வாசித்தோம் நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் அனுப்பிய இறுவட்டிலிருந்து உங்கள் கவிதையை வாசிக்கமுடியவில்லை. ஏனென்றாள் நீங்கள் தட்டச்சு செய்திருக்கம் எழுத்துரு(font) எங்கள் கணினியில் இல்லை ஆகவே வேறொரு இறுவட்டை திங்கற்கிழமை கிடைக்கக் கூடிவாறு அனுப்பமுடியுமா? எனக் கேட்டார்.

நான் பேந்தப்பேந்த விழித்ததுதான் மிச்சம் எவ்வாறு ஒரு நாளைக்குள் இறுவட்டை அனுப்பமுடியும்? இந்த நவீன உலகில் எழுத்துருவுக்கா பஞ்சம்?

சரி மாநாட்டில் கவிதை வாசிக்க அவ்வளவு சீக்கிரம் நமக்கு சந்தர்ப்பம் கிடைத்திடுமா என என்னை நானே நொந்து கொண்டு காத்திருந்தேன். பத்தாயிரம் ரூபாவை ஹமாட் இன்டர்நெஷனலில் கட்டி சிலிப்பை அனுப்புமாறு சேர்குலர் வந்தது. பணத்தை வங்கியில் கட்டி ரசீதை நிறுவணத்திற்கு அனுப்பி பயணத்தை உறுதி செய்தேன்.

பின்னர் பாஸ்போட்டை கேட்டிருந்தார்கள். இரண்டாயிரம் செலவு செய்து கொழும்பு சென்று மத்திய கிழக்கு பாஸ்போட்டை 5000 ரூபாய் கட்டி சகலநாடுகளுக்குமான பாஸ்போட்டாக மாற்றி நிறுவனத்திடம் கொடுத்த போது 1030 ரூபாய் விசாவிற்கு கேட்டார்கள். ஆனால் விசாவில் 500 ரூபாய்தான் அடித்திருக்கிறார்கள் என்பது வேறு விடயம்.

Saturday, May 14, 2011

நூர்ஜஹான் மர்சூக் - ஓர் இசைப் புள்ளி

இலங்கையில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களுக்கு உள்ளது போலவே பாடல் மற்றும் இசைத்துறையுடனான ஒரு தொடர்பு முஸ்லிம் சமூகக் குழுமத்துக்கும் இருந்து வந்திருக்கிறது. தான் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களிலுமே அச்சமூகம் அக்கறை காட்டாது வாழ்ந்து வருகின்ற காரணத்தால் இத்துறையிலான அதன் வரலாறு முன் பக்கங்களும் நடுப்பக்கங்களும் கிழிக்கப்பட்ட ஒரு சுவையான நாவலைப் போல ஒரு மூலையில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

ஏடறியாத, எழுத்தறியாத நமது பாட்டன்மாரும் பாட்டிகளும் வாய் திறந்தால் தமிழை அமுதமாகக் கொட்டியதை கதை கதையாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தென் கிழக்கின் பார்வைப் புலனற்ற மீரா உம்மாவின் பாடல்களை நான் சிறுவனாக இருந்த போது பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன். றபான் இசை எழுப்பியபடி இஸ்லாமிய கீதங்களையும் நமது பழந்தமிழ் இலக்கியங்களையும் இசைக்கும் பாவாமாரை இன்றும் நாம் நாட்டின் தலைநகரிலும் கூடக் காண்கிறோம். ரஸ_லே கரீம் (ஸல்) அவர்களையும் நம்பிக்கை மிகுந்த இறையடியார்களையும் போற்றிப் பாடிய அறபுப் பாடல்களை தெவிட்டாத ராங்களில் இசைக்கும் விற்பன்னர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். நம்முன்னோர் அளித்த இலக்கியச் செல்வங்களான தலைப் பாத்திஹாவும் பெண் புத்தி மாலையும் இன்னும் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பெண்களின் குரவை ஒலி கேட்கும் சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்த போதும் அவசியமாயின் ஒரு மாபெரும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது போல் சிரமம் எடுத்து அதனைக் கேட்டு ரசிக்கிறோம். களிக்கம்பு எனப்படும் குறும் பொல்லடியின் போது அவர்கள் உடம்பை வளைத்து சுழன்று நகர்வதையும் அவர்களது கைகளில் இருக்கும் பொல்லுகள் பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு இணையும் லாவகமும் திறந்த வாயை மூடாதபடி பார்த்துக் கொண்டிருக்க நம்மைக் கட்டுப்படுத்தி விடுவதை நாம் அனைவரும் கண்டு வந்திருக்கிறோம். இக்கலையைப் பழக்குவதற்காக நூற்றுக் கணக்கான இலக்கியப் பாடல்களை மனனம் செய்திருந்த அண்ணாவிமாரைப் பற்றியும் நாம் அறிவோம்.

இவ்வாறான பாரம்பரியங்களின் பின்னணியில் பல நூறு பாடகர்களும் பாடகிகளும் தோன்றி மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கியிருக்கிறார்கள். சிலர் வாய்ப்பும் வசதியும் முயற்சியும் கவனிப்பும் சித்திக்காமல் சுவடே இல்லாது மறைந்து போயிருக்கிறார்கள். சிலர் இத்துறையில் வெற்றி பெற்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சீட்டுக் கிழிந்தது! (கவிக்கோவும் மலேசிய இஸ். இல. விழாவும்)



இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.02

நீங்கள் சந்தித்த கர்வமும் பெருமையும் மிக்க மனிதர் பெயரைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டால் கவிக்கோ அப்துல் ரகுமான் என்று தயக்கமே இல்லாமல் சொல்லுவேன். அவருடனான அனுபவங்கள் அப்படி அமைந்து விட்டது. இலங்கைக்கு வந்தால் நன்றாகப் பேசிக் கதைப்பார்.

இந்தியாவில் எந்தவொரு இடத்தில் கண்டாலும் காணாத மனிதரைப் போல் சென்று விடுவார். நீங்கள் அருகில் சென்று ஸலாம் சொல்லுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்து விட்டுத்தான் பதில் சொல்லுவார். அதுவும் வேண்டா வெறுப்புடன். அவர் எக்கடி நடந்து கொள்வார் என்பதை குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் அன் கோ இலங்கையில் கலந்து கொண்ட கூட்டத்திலும் பகிரங்கமாக நான் சொல்லிக் காட்டினேன்.

2007 சென்னை மாநாட்டில் பழக்கமுள்ள எங்களை மட்டும் அல்ல, யாரையும் அவர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர் சில வேளை தாயின் வயிற்றில் பிறக்காமல் வானத்திலிருந்து வந்திறங்கிய தேவதூதன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று கூட நான் அவ்வப்போது சிந்திப்பதுண்டு.

அது கிடக்கட்டும். இவர் எந்த விடயத்தில் சம்பந்தப்பட்டாலும் அங்கு ஒரு ஒழுங்கற்ற நிலை உருவாகி விடும் என்று நான் ஏற்கனவே குப்பப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் ஒரு தகவல் அதற்கு அணி சேர்த்திருக்கிறது. அதுதான்... திமுக.. தன் திண்ணையைக் காலி செய்திருப்பது! கவிக்கோ 2007 மாநாட்டை நடத்திய பின் கலைஞரைத் துதிபாடி வக்பு வாரியத் தலைமையைப் பெற்றுக் கொண்டார். ஏற்கனவே நடந்த மாநாடுகளில் கவிக்கோ ஒரு தமிழறிஞராகவே கலந்த கொண்டுள்ளார். 2007ம் ஆண்டு மாநாட்டில் ஒரு பதவியைப் பெறும் நோக்கத்தைக் கொண்டே புகுந்து விளையாடினார் என்று சென்னையில் அவ்வேளை நண்பர்கள் நமக்குச் சொன்னார்கள். கலைஞர் கதை நேற்று தமிழகத்தில் முடிவடைந்து விட கவிக்கோவின் சீட்டும் கிழிகிறது. இந்தப் பதவியை கவிக்கோவுக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் கலைஞர் சில வேளை தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திக்கலாம்!

இஸ்லாமிய இலக்கியக் கழகம் கவிக்கோ, இதாயத்துல்லாஹ் அன்கோவின் பிடிக்குள் இருக்கிறது என்பது நீங்கள் தெரிந்ததே. தமிழ் நாடு தேர்தல் சமயத்தில் இவர்கள் இருவரும் கெப்டனும் கலைஞரைச் சந்தித்துப் படத்துக்குப் போஸ் கொடுக்கும் அழகைப் பாருங்கள்.


அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடா? இழிக்கிய மாநாடா?

முன் குறிப்பு-

இந்தப் பதிவு ஏற்கனவே இடப்பட்டுப் பலரால் படிக்கப்பட்டது. கடந்த இரண்டு தினங்களுக்குள் சர்வதேச ரீதியாக ப்ளாகரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக காணாமல் போயிருந்தது. ப்ளாகரில் பதிவிடும் பலருக்கும் இந்நிலை ஏற்பட்டிருந்தது. ப்ளாகர் நிறுவனம் அப்பதிவுகளை மீண்டும் தர முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது. அது வரும் போது வரட்டும். இப்போதைக்குப் படிக்காதவர்கள் படித்துப் பல்லைக் கடித்து இன்புறட்டும் என்று இதை மீள்பதிவிடுகிறேன்.

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06.01

மாலை நேரத் துவக்க நிகழ்ச்சிக்கு நாங்கள் மலேசிய பாரம்பரிய உடையணிந்து சென்று சேர்ந்தோம். எங்கள் நாட்டு அமைச்சர் டத்தோ ஜி.பழனிவேலுவும் துவக்க விழாவில் கலந்து கொண்டார். அவரோடு இந்திய, இலங்கை அமைச்சர்களும் துவக்க விழாவில் பேசினார்கள்.

மாநாடு எந்த நோக்கத்திற்காக கூட்டப்படுகிறது என்பதை அழகாக மாநாட்டு மேடையில் எழுதி வைத்திருந்தார்கள். ‘இதயங்களின் இணைப்புக்கு’ இந்த மாநாடு என்ற வரிகள் மேடையில் ஒய்யாரமாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. இறுதி வரை அங்கு எந்த இணைப்பும் இல்லை, பிணைப்பும் இல்லை என்பதை இங்கு நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

துவக்க விழாவிலேயே இந்த மாநாடு எப்படி நடக்கப் போகிறது என்பதை ஏற்பாட்டாளர்கள் கோடிட்டுக் காட்டி விட்டார்கள். அவர்கள் மேடையில் அடித்த கூத்திற்கு இணை ஏதுமில்லை. எவரை முன்னிறுத்துவது? எவருக்கு முதல் நிலை? யார் அமைச்சர், யார் பிரமுகர் என்ற எந்த விவஸ்தையும் இல்லாமல் அவர்கள் ஆள்மாற்றி, பெயர் மாற்றி அமைச்சர்களின் மரபுகளை மாற்றிக் கூப்பிட்டு பொன்னாடைகள் அணிவித்தார்கள். (இலக்கிய மாநாடு என்பதற்குப் பதில் அனைத்துலக பொன்னாடை போர்த்தும் மாநாடு என்று கூடப் பெயர் வைத்திருக்கலாம். முதலிலிருந்து இறுதி வரை எது நடந்ததோ இல்லையோ போர்வைகள் போர்த்துவது மட்டும் இறுதி நாள்வரை நிறுத்தவே இல்லை. அதைக் கூட ஒழுங்கில்லாமல் சொதப்பி இருந்தார்கள்.)

இந்தியர்கள் என்றால் நேரத்தின் அருமை தெரியாதவர்கள் என்ற வழக்கு வழி உலகெங்கும் நிலவுகிறது. அதை அப்படியே மெய்ப்பித்தார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கருத்தரங்கு ஆரம்பமானது. மாலை நான்கு மணியிலிருந்து அரங்கில் அமர்ந்திருப்பவர்களின் நிலைமையைப் பற்றி யாரும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. அதன் பிறகு நல்ல பேச்சாளர்களை பேச வைத்தாலும் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை. ஒரு நல்ல நிகழ்ச்சியை முற்றிலும் அப்படியே வீணடித்தார்கள். மனம் நொந்து போய்த் தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அடுத்த நாள் புதுக் கல்லூரிக்குச் சென்றோம். துவக்க நிகழ்ச்சி என்னவோ நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு எந்த ஆய்வரங்கம் எங்கு நடக்கிறது என்ற விபரப் பலகையோ ஒழுங்கான வழிகாட்டுதலோ இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள் பேராளர்கள். கடுமையான வெய்யில் ஒரு புறம். ஆய்வரங்கங்களைத் தேடும் பணி மறுபுறம். வழிகாட்டுவதற்கு ஒரு சில தொண்டூழியர்களைக் கூட அவர்கள் நியமிக்காதது கண்டு வேதனைப்படுவதா அல்லது குற்றம் சுமத்துவதா என்று தெரியவில்லை. கடமைக்காக எதையோ செய்து விட்டுப் போனார்கள்.

விருந்தோம்பல் என்பது மருந்துக்குக் கூட இல்லை. பேராளர்களை ஒரு பொருட்டாகக் கூட அவர்கள் மதிக்கவில்லை. இத்தனைக்கும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் - அவர்கள் அத்தனை பேரையும் பள்ளிப் பிள்ளைகளை விடவும் மோசமாக நடத்தினார்கள். வெப்பம் தகிக்கும் அறைகளில் அடைத்து ஒன்றரை மணி நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வாசித்து முடிக்க நிர்ப்பந்தித்தார்கள். கேள்வி கேட்கவும் விளக்கம் பெறவும் அறவே வாய்ப்புத் தராமல் முடித்தார்கள்.

மதிய உணவு பற்றிக் கேட்க வேண்டாம். அத்தனை பேரும் ஒரே நேரத்தில் ஆட்டு மந்தைகளைப் போல் அந்தக் கல்லூரியின் தங்கும் விடுதிக் கேன்டீனில் அடைத்து உணவு தர முயன்றார்கள். அங்கிருந்த நிலைமையைப் பார்த்த போது இது சாப்பாட்டுக்குரிய இடமா அல்லது இலவசச் சாப்பாடு பெறும் போர்க்களமா என்று எண்ணத் தோன்றியது. என்னுடைய வாழ்நாளில் பல உள்நாட்டு வெளிநாட்டு மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளேன். இது போன்ற ஒன்றை நான் பார்த்ததில்லை. உணவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பேராளரும் (ஆண்கள் - பெண்கள்) உட்கார்ந்து உண்ணக் கூட இடமில்லாமல் மரத்துக்கு மரம் தாவி (நிழல் தேடி)க் கொண்டிருந்தார்கள். பலர் நின்று கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

Thursday, May 12, 2011

ஒசாமா நானாவும் ஒபாமா தம்பியும்!

தொலைபேசி சிணுங்குகிறது....



ஹலோ... ஒபாமா தம்பியா....

ஓஹ்... யாரு... ஒசாமா நானாவா... ஹலோ நானா... நல்ல்லா இருக்கீங்களா...

எனக்கென்னடாம்பி குறை... நான் நல்லாயிருக்கேன்... அது சரி இப்ப ரொம்பக் குளுகுளுன்னு இருக்குமே...

ஹி.... ஹி.....

அப்போ இந்த முறை எலக்ஷன்ல வெண்டுறுவியாடாம்பி.....

அப்பிடித்தான் நானா நெனக்கேன்....

அல்லாஹ் காப்பாத்தட்டும்... அதுல இருந்துதான் என்ன செய்யப் போறீங்க.. சும்மா பொம்ம மாதிரி தலையாட்டிக்கிட்டு இருக்கிறதத் தவிர..

சும்மா பகிடி பண்ணாதிங்க நானா....

அது சரி என்னப் போட்டுத்தள்ளின கேஸ்ல ஆயிரக்கணக்கான ஓட்டை இருக்குதுடாம்பி...

தெரியும் நானா....

அந்த போட்டோ ஷொப் வேலய எனக்கிட்ட பாரந் தந்திருந்தா நம்ம பயலுகளப் போட்டு இன்னும் நல்லாச் செய்து தந்திருப்பனே...

இவனுங்க ஒண்ணுங் கேக்க மாட்டேனுங்கிறாங்க நானா...

ஒங்களப் பாத்தா பாவமா இருக்கு. அது சரி என்னைப் போட்டுத்தள்ள வந்த ஹெலியில ஒண்ணு விழுந்து நொருங்கிச்சாமே... ஒருத்தனும் சாகல்லயா... ஒடஞ்ச ஹெலியிட துண்டு துணியையெல்லாம் லொறியில ஏத்திக்கிட்டுப் போறதப் பார்த்தேன்... அதப்பத்தி ஒருத்தரும் பேசல்ல பாத்தீங்களா?

ஓம் நானா... நீங்க வேற ஆளக்கீளப் போட்டு விசயத்தை வெளியே இழுத்து விடாதீங்க.. இப்பவே குடல் வெளியே வாற மாதிரி ஒவ்வொருத்தன் குடையுற குடைச்சல் தாங்க முடியல்ல...

Wednesday, May 11, 2011

பிரச்சினைக்கு எந்த றானா வரும்?

புத்தக வெளியீட்டுக்கு அழைப்பதற்காக கிண்ணியா அமீர் அலியை நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அமீர் அலி விகடமான பேர்வழி என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சில வேளைகளில் நாம் எழுதிக் கொண்டிருக்கும் போது சொற்களில் ர, ற - ல,ள,ழ பேதங்களில் சந்தேகம் ஏற்பட்டு விடுவது வழக்கம். இது படிப்பாளிகளுக்கும் அனுபவஸ்தர்களுக்கும் கூடப் பொதுவானதுதான்.

யாரோ ஒரு நண்பர் கிண்ணியா அமீர் அலியிடம் ஒரு பொழுதில் அவசரமாகத் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு எந்த றானா வரும் என்று கேட்டிருக்கிறார். அவரது உச்சரிப்பு - “ர” வுக்கும் “ற”வுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கும்.

அமீர் அலி சொன்ன பதில் என்னவெனில் - பிரச்சினை பெரியது என்றால் பெரிய றானாவைப் போடு. சின்னதென்னால் சின்ன ரானாவைப் போடு!

நான் அமீர் அலியைத் தொடர்பு கொண்ட போது ஒரு கதையை எழுதுவதில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்ன அவர், சுவாரஷ்யத்துக்கு எந்த சானா வரும் என்று கேட்டார்.

சுவாரஸ்யம் அதிகம் என்றால் எனது பெயரை எழுத நான் பயன்படுத்தும் வட “ஷ” வையும் சாதாரணமானது என்றால் பாம்பு “ஸ” - ஸானாலையும் போடுங்கள் என்றேன்!

கைத் தொலைபேசியை மூடிய போதும் கூட அமீர் அலி சிரித்துக் கொண்டிருப்பது கேட்டுக் கொண்டேயிருந்தது.

அது சரிதான்.... அதுக்கு எதுக்கு ஒபாமா படம் என்று கேட்பீர்கள். அவுக சிரிச்சா நாமும் சிரிக்கத்தானே வேணும்....!

Tuesday, May 10, 2011

ஒரு குடம் கண்ணீர்

எதிர்வரும் 28.05.2011 அன்று பி.ப. 4.30க்கு வெளியிடப்படவிருக்கும் எனது புதிய நூல்.
















நூல்பற்றி.....

ஒரு சிறு கதையோ என்று மயங்குமளவு இச்சம்பவங்களுடன் நடை பயிலும் எழுத்துக்களின் அழகு யதார்த்தத்தின் அவலங்களா கற்பனையா என்ற மருட்சிக்குள் எம்மை ஒரு கணம் இட்டுச் செல்வது உண்மை.


ஆனால் இவை கற்பனைகள் அல்ல. கற்பனையையும் தோற்கடிக்கும் இரத்தத்தை உறைய வைக்கும் உண்மைகள். துயரத்தையும் உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் இலக்கியப் பதிவுகள் இவை.

இவை அனைத்தையும் தாண்டி இந்நூல் ஓர் ஆவணம் என்பதை யும் மறுப்பதற்கில்லை. இந்த நூற்றாண்டின் கொடுமைகளின் ஒரு பகுதியை இது மக்களுக்குச் சொல்கிறது. இலக்கியமாகவும் ஆவணமாக வும் தன்னை வெளிப்படுத்தும் இந்நூல் தமிழில் ஒரு முன்னோடி முயற்சி யாக இருக்கக் கூடும்.

எமது காலத்தின் உலக அரசியல், ஜனநாயகம், புதிய உலக ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பில் இந்நூல் ஏற்படுத்தும் தாக்கமும் எழுப்பும் கேள்விகளும் மனிதர்கள் என்ற ரீதியில் பதில் தருவதைக் கட்டாயப்படுத்துகின்றன.

கடந்த ஐம்பது வருட கால வரலாறும் அதற்கு முற்பட்ட வரலாறும் விட்டுச் சென்றுள்ள பிரச்சினைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எமக்கு நினைவு படுத்துவதே இந்நூலின் மிகப் பெரிய பங்களிப்பாகும்.

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ்

கோ கிழிக்கும் கோடுகள் (மலேசிய இஸ். தமிழ். இல. விழா)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 06

மெல்லப்போ....

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் களை கட்ட ஆரம்பித்த பின்னர் மாநாடுகளை அரசியல்வாதிகள் ஆக்ரமிக்கும் நிலையை எனது கட்டுரைகளில் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.


2002ம் ஆண்டு கொழும்பில் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆதரவுடன் நடந்த மாநாடு அரசியல் கலப்பற்றதாகவே நடந்தது என்பதைக் கலந்து கொண்ட அனைவரும் அறிவீர்கள். கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் ரீதியாகச் செயல் படுமாறு எந்த ஒரு நிலையிலும் எம்மைக் கோரவில்லை என்பதை அந்த மாநாட்டுக் குழுவின் செயலாளர் என்ற வகையில் எந்தவொரு நிலையிலும் உறுதிபடச் சொல்லுவேன்.

ஆனால் அந்த மாநாட்டு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் கட்சி பிளவு பட்டது. அது தனிக் கதை. அது குறித்து யாத்ரா 18வது இதழில் மாநாடு பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் ஒரு பந்தியில் குறிப்பிட் டுள்ளேன். அக்கட்டுரையை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிவேற்றம் செய்ய லாம் என்றிருக்கிறேன்.

அரசியல் தூக்கலான மாநாடாக அது நடத்தப்படவில்லை என்ற போதும் அதை வைத்து வேறு யாரும் புகழ் பெயர் பெறுவது கௌரவ அமைச்சருக்கு சந்தோசமான விடயமாக அமையவில்லை என்பதைப் பின்னால் நடந்த எல்லா நிகழ்வுகளிலும் நாம் உணர்ந்தே வந்துள்ளோம். ஆனால் அவரே யறியாமல் அவரை எந்த அளவுக்குப் பெருமைப்படுத்த இயலுமோ அதை இதய சுத்தியோடு நாம் செய்து வந்திருக்கிறோம்.

2007ம் ஆண்டு சென்னை மாநாடு பற்றிய இலங்கை இணைப்பாளர்கள் ஏற்பாடு செய்த கூட்டம் கொழும்புத் தமிழ்ச்சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்ற போது கவிக்கோ அப்துல் ரகுமானும் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் இதாயத்துல்லாவும் வருகை தந்திருந்தனர். இலங்கையிலிருந்து யாரைக் கௌரவம் செய்யப் போகிறீர்கள் என்று அவர்கள் வினவிய போது அங்கு அமர்ந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

அந்த அமைதியின் அர்த்தம் என்னவெனில் - பச்சையாகச் சொல்வது என்றால் -தமது பெயரை யாராவது சொல்ல மாட்டானா என்ற எதிர்பார்ப்புத்தான். சூழலை உணர்ந்த கொண்ட நான் எழுந்து, 2002ல் உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்திய பெருமைக்குரிய ரவூப் ஹக்கீம் அவர்களையும் தமிழில் ஐந்து காப்பியங்கள் எழுதியவரும் (இப்போது ஏழு) இஸ்லாமிய இலக்கியச் செற்பாடுகளில் தொடரந்து ஈடுபட்டு வருபவருமான டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீனையும் கௌரவியுங்கள் என்று முடித்தேன். இந்த இடத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களின் சகோதரரும் எனது நண்பருமான ரவூப் ஹஸீர், எஸ்.எச்.எம். ஜமீல், ஜூனைதா ஷெரிப், என்.எம். அமீன், தாஸிம் அகமது போன்ற இன்னும் பலர் இருந்தார்கள்.

இக்கால கட்டத்தில் எனது சகோதரர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்தவர்களில் ஒருவராக இருந்தார். நான் அவரது அமைச்சில் கடமை செய்து வந்தேன்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அரசியல் வேற்றுமை காட்டி சகோதரர் ரவூப் ஹக்கீமை இருட்டடிப்புச் செய்யவோ பேசாது விடவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் தயாராக இல்லை என்பதைத்தான். நாம் நெஞ்சுக்கு நேர்மையாக இவ்விடயத்தில் செயற்பட்டு வந்துள்ளோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். எனது சகோதரர் அரசியல்வாதியே தவிர நான் இல்லை. இலக்கியவாதிகளுடனும் இலக்கிய ஆர்வலர்களுடனும் ஒன்றித்து இருக்கவும் செயல்படவும் விரும்பியவனாகத்தான் இருந்து வருகிறேன் என்பதையே வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாநாட்டின் போது வெளியிடப்பட்ட அனைத்து நூல்களையும் நீங்கள் படித்துப் பாருங்கள். அவற்றில் அனைத்திலும் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களது பெயரை நாம் பெருமையுடன் பொறித்து வைத்திருக்கிறோம்.

Saturday, May 7, 2011

மலேசிய இலக்கிய விழாவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம்

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும் - அங்கம் 05.06


புகைப்படக் கூட்டம்

குப்பப்பிச்சை இக்பால் நடத்தும் மலேசிய இலக்கிய விழாவுடன் சம்பந்தப்பட்ட நேற்று நடத்தப் படவிருந்து ஒத்திப் போடப்பட்ட இலங்கைக் கூட்டம் இப்போதுதான் முடிவடைந்த நிலையில் இது எழுதப்படுகிறது.

கட்சித் தலைமையகத்தில் நடந்த (மலேசியர் கவனிக்கவும்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் நடந்த இன்றைய கூட்டத்தில்தான் கௌரவ அமைச்சர் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததாக அறிந்தோம். இலவச விமானச் சீட்டுக்களுக்குரியோர் அழைக்கப் பட்டிருந் தார்கள் போல் தெரிகிறது. அநேகமாக விமானச் சீட்டுக்கள் இன்று அமைச்சரால் வழங்கப்பட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கும். அமைச்சர் வரும் வாய்ப்பைப் புகைப்படம் எடுக்காமல் தவற விடவே மாட்டார்கள் குழுவினர். நாளை காலை அநேகமாக தினகரன் பத்திரிகையில் நீங்கள் ஆகக் குறைந்தது அந்தப் படங்களை அல்லது படங்களில் ஒன்றைக் காணலாம். தவறினால் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் காண முடியும்.

கட்டுரைகள் படிப்போரும் உரை நிகழ்த்தும் கலாநிதி அனஸ் அவர்களும் கவிதை படிப்போரும் இன்று சமூகமளித்திருக்க வாய்ப்புண்டு. குழுவில் உள்ள இரண்டொருவர் தவிர்ந்த ஏனையோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள் என்று நம்பகமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. புகைப்படத்தைப் பார்த்தால் தெரிநிது விடும்.

குழுவில் உள்ள சிலர் சற்று முன்னதாகக் கட்டம் கட்டமாகப் புறப்பட்டுச் செல்வதாகத் தெரிகிறது. ஹாஷிம் உமர் வேறாகவும் நண்பர் நிலாம் ஹாஜி பாயிக் அவர்களுடன் வேறாகவும் செல்வதாக அறியக் கிடைக்கிறது. செயலாளரைக் கைவிட்டு விட்டு அவரது ஆசிரியரும் இணைப்பாளருமான மருதூர் மஜீதும் கௌரவ ஹஸன் அலியும் தனித்து முன்னரே செல்கிறார் களாம். மற்றவர்களின் பயணத்தை விட இவர்களது பயணம் சற்று அவதானிக்கத் தக்கது. அனேகமாக மருதூர் மஜீத் தனக்கும் கவிதை படிக்க ஒரு வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக கௌரவ ஹஸன் அலி மூலம் வேண்டு கோள் விடுக்கலாம் என்பது நமது எதிர்வு கூறல். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

அல்லது ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் திட்டமாக இருக்கலாம். காயல்பட்டணத்தில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் கௌரவ. ரவுப் ஹக்கீமை முன்னிலைப்படுத்துவான் வேண்டி பேராசியரர் சாபி மரைக்காரை மடக்கு வதும் ஒரு நோக்கமாக இருக்கக் கூடும். (மலேசிய விழாவைப் போலவே அதையும் அரசியலாக்கும் திட்டம்)

(குழுவில் உள்ள மருதூர் ஏ மஜீத், எஸ்.எச்.எம்.ஜமீல், தாஸிம் அகமது ஆகியோர் ஒரு அரங்கிலாவது தலைமை, நோக்கர் என்று ஏதாவது ஒன்றில் குந்தாமல் விடவே மாட்டார்கள் என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை ஞாபகப்படுத்துகிறோம்.)

காத்தான்குடியிலிருந்து அநேகமான வர்த்தகர்கள் இக்குழுவில் செல்ல இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நிந்தவூரைச் சேர்ந்தவர்கள். மூன்று நாள் இலவச உணவு, தங்கலோடு நான்காம் நாள் தமது வர்த்தகத்தை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களோடு அவர்கள் ஏறிவிடுவார்கள். இவர்களுக்குத்தான் அந்த விழாவில் இலக்கிய விளக்கம் வழங்கப்படவிருக்கிறது.

தலைப்புகள் ஜாக்கிரதை!

மாதமொரு முறை ஒரு பத்தி எழுதும்படி எனக்கு அறிமுகமான ஓர் இலக்கிய இளவல் என்னைக் கேட்டுக் கொண்டார்.

அந்தப் பத்திரிகை ஓர் அமைப்பினால் வெளியிடப்படுகிறது. இளவலுக்கு இலக்கியப் பக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. முஸ்லிம் சமூகம், இஸ்லாம் என்றெல்லாம் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றும் பொதுவாக இலக்கியம் பற்றி எழுதுமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரே நேர் கோட்டில் பத்திகளை எழுத முடியாது. வாசகர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும். எனவே எனது முதலாவது பத்தியை ‘சுனாமி’ என்ற தலைப்பில் எழுதினேன். பத்தித் தொடருக்கு வேறு ஒரு வித்தியாசமான தலைப்புக் கொடுத்திருந்தேன். அதாவது அந்தப் பிரதான தலைப்பின் கீழ் வெவ்வேறு அம்சங்கள் குறித்து மாதம் ஒரு முறை எழுதலாம் என்பது எனது எண்ணம். அது அங்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று அறிந்தேன். அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

அதே பத்தி, தினகரனில் ‘தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பில் நான் எழுதிய பத்தித் தொடரில் பிரசுரமானதும் அவை தொகுக்கப்பட்டுப் புத்தகமானதும் அநேகர் அறிந்த செய்தி.

குறித்த மாதப் பத்திரிகையை இரண்டு மாதங்கள் கழித்துத் திறந்த போது எனது பத்திக்கு நான் என்ன பிரதான தலைப்புக் கொடுத்திருந்தேனோ அதை தலைப்பில் அந்தப் பத்திரிகையில் கடமை புரியும் மற்றொரு இளவல் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்!

எழுத வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. தலைப்பு வைப்பதில் தடுமாற்றம் உண்டு. அதைச் சிலர் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நல்ல தலைப்புக்களும் சிலரைக் கிளர்த்தி விடுவதும் உண்டு.

ஏதாவது ஒரு விடயம் பற்றி எழுதும் எண்ணம் இருந்தால் அதை இன்னொருவருக்கு முன் கூட்டியே சொல்லக் கூடாது என்று ஒரு மூத்த படைப்பாளி எனக்கு அறிவுரை பகர்ந்தார். எழுதப்பட வேண்டிய அந்த விடயம் பற்றிய தகவல் அறிந்து கொள்ளும் நோக்குடன் யாருடனாவது கதைக்க நேர்ந்தாலும் அதைத்தான் அடுத்து எழுதப் போகிறேன் என்று சொல்லி விடக் கூடாது.

எதையாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதை எழுதுவது என்பது தட்டுப்படாது. நாம் எடுத்துக் கொடுத்து விட்டால் அதை வைத்து விளாசி விட்டு ஒரு பொன்னாடைக்குத் தயாராகி விடுவார்கள்.

Thursday, May 5, 2011

நீங்க நினைச்சா நடக்காதா?

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை எழுதப்படவில்லை.

தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட சில கட்டுரைகளும் நண்பர் என்ற வகையில் சிலரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளும் சில சிறப்பு மலர்களில் இடம் பெற்றுள்ளன.

பத்திரிகைகள், சஞ்சிகைகளில் ஆங்காங்கு அவ்வப்போது சிற்சில குறிப்புகள் உள்ளனவே தவிர அவை ஒருமுகப்படுத்தப்படவில்லை.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய வரலாற்றினை ஒரு நூலாக எழுதி வெளியிட்டு விட வேண்டும் என்று 2002ம் ஆண்டு எமது எண்ணத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டின் போது ஒரு முயற்சியை மேற்கொண்டோம்.

அதை எழுதும் பொறுப்பை மூத்த எழுத்தாளரும் சிறந்த ஆய்வாளருமான கவிஞர் ஏ.இக்பால் அவர்களிடம் ஒப்படைத்திருந்தோம்.

இது ஒரு பாரிய பொறுப்பு. குறுகிய கால அவகாசத்துள் அதைச் செய்து முடிக்க முடியவில்லை. அதன் முதலாம் அத்தியாத்தை அவர் எழுதியிருந்தார். அதனை எப்படியாவது பூரணப்படுத்தி நூலாகக் கொண்டு வர வேண்டும் என்பதால் அந்த அத்தியாயத்தை நாம் வெளிக் கொணரவில்லை.

இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இன்று ஒரு வெற்றுக் கொண்டாட்டத்துக்கான விடயமாகவும் சிலர் தமக்கொரு கனவான் தனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களைக் கூட்டும் ஒரு காணிவேல் ஆகவும் மாறிக் கொண்டு வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே இந்நிலையிலிருந்து சற்று மாறுபட்டுச் செய்தாக வேண்டிய முயற்சிகளில் இறங்குவது அவசியம் என்று கருதுகிறோம்.

இந்த முயற்சியை எமது இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் மீண்டும் ஆரம்பிக்கின்றது. கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தலைமையில் இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய வராற்றினை எழுதுவதற்கான ஏற்பாடுகளை நாம் ஆரம்பம் செய்திருக்கிறோம்.

Wednesday, May 4, 2011

பிறப்பிலேயே முடமெனில்... (மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 05.05
குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் தலைமையில் மலேசியாவில் நடைபெறும் இலக்கிய விழா பற்றி அங்கிருந்து இரண்டு முக்கிய தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

01. மாண்புமிகு மலேசியப் பிரதமர் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளதாக அறியக் கிடக்கிறது. இதை விடவும் முக்கியமான ஒரு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அவருக்குப் பதிலாக ஓர் அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.

02. பிற்காலத்தில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் மார்க்க அறிஞர் அரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெறுவதுண்டு. மலேசிய விழாவில் அப்படி ஓர் அரங்கு ஏற்பாடு செய்யப்படாத காரணத்தால் மலேசிய மார்க்க அறிஞர்கள் இவ்விழாவுக்கு வருவதில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஒரு செய்தி பரவலாகப் பேசப்படுகிறதாம்.

கவிக்கோ நெறியாளர் என்ற பெயரில் புகுந்து விளையாடிய சென்னை 2007ம் ஆண்டு மாநாட்டில் மார்க்க அறிஞர் அரங்கு நிகழ்ச்சி நிரற்படுத்தப்பட்டிருந்த போதும் அது நடைபெறவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

01. தமிழ்நாடு ஜமாஅத்தே உலமாவின் தலைவர் ஓ.எம்.அப்துல் காதர் பாக்கவி அவர்களுக்கு முறையான விதத்தில் அழைப்பு வழங்கப்படவில்லை என்றும் அவருக்குரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றும் நாம் அறிய வந்தோம். அதனால் அவர்கள் மாநாட்டுக்கு வருகை தரவில்லை.

02. மார்க்க அறிஞர் அரங்குக்கு முன்னால் நடைபெற்ற அரங்கை மார்க்க அறிஞர் அரங்கை நடத்துவதற்குக் காலம் இடம் கொடுக்காத வகையில் திட்டமிட்டு நீட்டிக் கொண்டு சென்றார்கள். இதனால் அங்கு வந்திருந்த ஏனைய ஆலிம் பெருந்தகைகள் மன வேதனையோடு வெளியேறியதைக் கண்டோம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களுக்கும் பின்னணியில் ஒருசெய்தி இருந்தது. மாநாட்டு ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெறும் போது மார்க்க அறிஞர் அரங்கு என்ற ஒன்று அவசியமே இல்லை என்று கவிக்கோ விடாப் பிடியாக இருந்துள்ளார். ஆனால் பலரின் கருத்து வேண்டும் என்று இருந்தமையால் அவரால் ஏதும் செய்ய முடியாமல் போகவே அந்த அரங்கு நடக்க விடாமல் சகல ஏற்பாடுகளையும் கச்சிதமாக நடத்தி முடித்துவிட்டார் என்றே அங்கு பலர் நமக்குச் சொன்னார்கள்.

இந்த அடிப்படையில் குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் பலரது கருத்தையும் சகட்டுமேனிக்குக் கேட்டுக் கொண்ட போதும் கவிக்கோவின் எண்ணங்களையும் ஏற்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தனது திட்டமிடுதலை மேற்கொண்டுள்ளார் என்பதை இப்போது மேற்கண்ட செய்தி மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

கவிக்கோவை முன்னிலைப்படுத்த வேண்டும் அவர் சொல்படி நடந்து விட வேண்டும் என்பதற்காகவே இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளை நடத்தி அனுபவப்பட்ட அவரது ஆப்த நண்பர்களில் ஒருவரும் எந்தத் தேசத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடந்தாலும் மலேசியாவுக்கான இணைப்பாளராக ஹாஜி முகம்மது இக்பாலைச் சிபார்சு செய்து மக்கள் முன் கொண்டு வந்தவருமான ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் போன்றவர்களை குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

கள்ளப் பூனைகளின் கதை

அங்கம் - 01
(யாவும் கற்பனை)

ஒரு பெரிய காட்டில் ஒரு கடுவன் பூனை வாழ்ந்த வந்துச்சாம். அந்தக் கடுவனுக்கு எப்போதும் அங்குள்ள பூனைகளில் தான்தான் சிறந்தவன் என்று மற்றவர்களை ஏமாற்றி நம்ப வைத்துக் கொண்டு வந்ததாம். காலம் போகப் போக புகழ் மங்கிவிடும் என்பதை உணர்ந்த அந்தக் கடுவன் பூனை உலகத்தில் எல்லாப் பூனைகளையும் தன் காலடிக்குக் கொண்டு வந்து தனது பெருமையைப் பறைசாற்றும் ஆசை வந்ததாம்.


கடுவன் பூனை காலாதிகாலமாகக் கஞ்சப் பூனை. ஊரார் கோழியறுத்து உம்மா பெயரில் கத்தமோதும் பூனை. தனது பணமும் செலவழியாமல் தன் புகழையும் பரப்ப கடுவன் ஒரு திட்டம் தீட்டியது.

ஒவ்வொரு இனத்திலுமுள்ள தலைமைப் பூனைகளை அழைத்து நாம் நமது கௌரவத்தை வளர்க்க வேண்டும். உலகத்திலுள்ள அத்தனை பூனைகளும் நம்மை வியந்து பார்க்க வேண்டும். இதன் மூலம் நமது காட்டின் பெருமை பேசப்படும் என்று சொல்லி அதற்கான திட்டத்தையும் சொன்னது.

நாம் கொஞ்சம் பெருச்சாளிகளை அடித்து எல்லா நாடுகளிலும் உள்ள முள்ளுப் பூனை, கள்ளப் பூனை, நொள்ளப் பூனை, நொண்டிப் பூனை, சண்டிப் பூனை, சாம்பல் பூனை, வெள்ளப் பூனை, வெட்டிப் பூனை எல்லாற்றையும் நமது காலடிக்கு அழைத்து சிங்கத்தையும் பிரதம அதிதியாக அழைத்து ஒரு விருந்து வைப்போம் என்று சொன்னதாம்.

தமது கோவணத்தை உருவித் தலைப்பாகை கட்ட நினைக்கும் கடுவன் பூனையின் கள்ளத்தனம் தெரியாமல் அந்தப் பூனைகள் காசாக் கொட்டிச்சிதுங்களாம்.

Tuesday, May 3, 2011

நன்றி சிறிதெனினும்....

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள்... உங்களுக்கு விருப்பமான அணிக்கு உற்சாகமளிக்க கை தட்டி ஊக்கப்படுத்துகிறீர்கள். நீங்களும் மகிழ்ச்சியடைகிறீர்கள்...


ஒரு பேச்சாளர் நன்றாகப் பேசுகிறார். மகிழ்ந்து அவ்வப்போது கைதட்டி நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறீர்கள்...

கவியரங்குக்குச் செல்கிறீர்கள். இலக்கிய நயமும் பொருட் செறிவும் மிக்க வசனத்துக்குக் கரவோசை எழுப்புகிறீர்கள். இதில் உங்களுக்கும் மகிழ்ச்சி. கவிஞருக்கு உற்சாகம்.

ஒரு நண்பரின் அல்லது உறவினரின் வீட்டுக்குச் செல்கிறீர்கள். இருப்பதைக் கொண்டு உபசரிக்கிறார்கள். அது வடையாக, கேக்காக, பழமாக, வட்டிலப்பமாக எதுவாகவும் இருக்கலாம். விடை பெறும் போது என்ன செய்கிறீர்கள்.... நன்றி சொல்வீர்கள். அது ஒரு நன்றியுள்ள மனிதனின் நல்ல பண்பு என்பதில் என்னுடன் உடன்பாடு காண்பீர்கள்.

விருந்துக்குச் சென்றால் மகிழ்ச்சியில் அல்லது அந்த விருந்தை நமக்காகத் தயார் செய்த அந்த வீடடுக்கார அம்மாவின் உழைப்புக்கு நன்றி சொல்ல விடை பெறும் வேளை அவரை அழைத்து விசேட நன்றி சொல்வீர்கள்.

டூப் விடுறானுங்களாம்!


சந்தேகங்கள்

01. இவ்வளவு பெரீய்ய பயங்கரவாதியக் கொன்னு கடல்லயா போடுவாங்க...
எங்களுக்கும் காட்டவாணாமா... நாங்க பார்க்க வேணாமா...?

02. பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்த அதே முகம்தானா அந்தாளுக்கு?
கொஞ்சமாவது விதியாசம் இருக்கக் கூடாதா...?

03. பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்த புகைப்படத்துல சாய்ஞ்சி இருந்தமாதிரியே
அந்தாளக் கொலை செஞ்ச பிறகும் இருப்பாரா...?

04. உங்க புகைப்படத்தில இருக்கிற அந்தாள் போட்டோவுல நரைச்ச மயிரெல்லாம்
குறைஞ்சிருக்கே... அவருக்கு மட்டும் இளமை திரும்பிக்கிட்டே இருந்திச்சா?

05. பேசக்குள்ள அவர் உதடுகள் இருந்த கோணத்திலதானா கொல்லும் போதும்
இருக்கும். இல்லாம.. “நாங்க உன்னக் கொல்லப் போறம்... போட்டோவுல
இருக்கிறமாதிரியை வாயைத் திறந்து வச்சிக்கோ“ என்று சொல்லிக்
கொன்னாங்களா?

06. கொல்லப்படும் ஒரு மனிதனின் உயிர் போகும் நேரம் முகத் தோற்றத்தில்
மாற்றம் நிச்சயமானதுங்கோ.... இவரு ஆகாயத்தில் இருந்த வந்தாரா?

07. சுட்டுக் கொன்னதுன்னுதானே சொன்னாங்க... முகத்துல புல்டோஸர்
விட்டமாதின்னா இருக்கு...?

08. சரி ... கொன்னுட்டதாகவே வச்சுக்குங்க... இப்பிடியெல்லாம் கேள்வி வர்ர
மாதிரி கேனத்தனமாவா நடந்துக்குவீங்க...

கொன்னுட்டாங்கையா....

பின் லாடனைக் கொன்னுட்டாங்கயாமே... ஏங்க அந்தாளக் கொலை செஞ்சாங்க... அந்தாளு யாரையாவது சுட்டதை யாராச்சும் கண்டாங்களா... குண்டு போட்டதைக் கண்டாங்களா... யார் யாரோ சொன்னதுக்கெல்லாம் போய் யார் யாரையோவெல்லாம் கொலை செய்றது சரிங்கிறீங்களா நீங்க...


அப்போ அந்தாளு ஏன் ஒளிஞ்சு திரிஞ்சான்னு கேட்பீங்க... கொல்லத்தான் தேடுறானுங்கன்னா.. வாங்க மச்சான் இங்கேதான் இருக்கேன்... ஒரு தேத்தண்ணியக் குடிச்சிட்டு அப்புறம் கொல்லுங்கன்னு எவனாச்சும் சொல்வானா என்ன?

நாய்க்கு எந்த இடத்தில அடிபட்டாலும் காலத் தூக்கிற மாதிரி எங்கே குண்டு வெடிச்சாலும் இந்தாள் பேரையே சொல்லிக்கிட்டிருந்தாங்க...

உலகத்துல அதி மோசமான பயங்கரவாதி இந்தாள்தான்னு அமெரிக்கா சொல்லிக்கிட்டேயிருந்திச்சு. தேடுற பட்டியல்லயும் இந்தாளத்தான் முதல்ல வச்சிருந்துச்சு... இப்போ ஆளைப் போட்டாச்சு... ஏங்க.. இனி உலகத்துல ஒரு இடத்திலயும் குண்டே வெடிக்காதா? அமெரிக்கா சொன்ன மாதிரி பார்த்தா இனிமேல் எல்லாப் பயங்கரவாதமும் முடிவுக்கு வந்திரணுமே... ஏங்க வந்துடுமா...

Monday, May 2, 2011

உன்னை வாசிக்கும் எழுத்து

-விம்பமும் விளிம்பும்


- சலனி -
 
 
அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒரு விருந்தாகத் தந்திருப்பது இவருடைய மொழிபெயர்ப்பு நூல் - ஜமால் ஜூமாவின் ‘உன்னை வாசிக்கும் எழுத்து.’ நீண்ட கவிதையின் தமிழாக்கம். நூலுக்கான தலைப்பின் தேர்வு நன்றாக உள்ளது. அதைவிட அட்டைப்படம், உள்நுழையும் போது ஆயிரம் அர்த்தங்களைக் கற்பிக்கும் ஓவியத் தேர்வு என்பன மனதைக் கவருகின்றன. மொழிபெயர்ப்பு மிக அரிதான, அதே நேரம் பாரியதொரு பணி.



நாம் எல்லோரும் புத்தகம்
சலிப்பு
தினமும் அதை வாசிக்கிறது

நண்பர்கள் இல்லாத மனிதர்களும்
புத்தகங்களே
அவை
வாசகர் ஒருவரைப் பெற்றுக்கொள்ளாதவை

என்கிற வருடலான வரிகளோடு தொடர்கிறார் ஜமால் ஜூமா. ஈழத்து இலக்கியப் பரப்பு சில மொழிபெயர்ப்புகளையே அதனது சுயம், அழகு என்பனவற்றுடன் உள்வாங்கியிருப்பதைக் காண்கிறோம். இதன் ஆரம்ப வரவுகளாக பலஸ்தீனக் கவிதைகள், பாலை என்பனவற்றைக் குறிப்பிட வேண்டும். பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்திட வேண்டும் என்ற பாரதியின் கனவைக் கன்னி முயற்சியாகத் துவக்கியிருக்கிறார் கவிஞர் அஷ்ஃப்.

இங்கு மொழிபெயர்ப்பு தொடர்பான அண்மைய கருத்தாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். வெறுமனே பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டு கவிதையை சமூக பிரக்ஞையின் அளவு கோலாகக் கொள்ள முடியுமெனின் இந்தக் கருத்துக்கள் உதவக் கூடும்.

Sunday, May 1, 2011

சாணிக்கதை - 2

குளிர் மிகுந்த காலப் பகுதியில் ஒரு சிறு பறவை தெற்கு நோக்கிப் பறக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத குளிரில் நடுக்கமுற்றுப் பறக்க முடியாமல் ஒரு பெரிய வயல் பகுதிக்குள் விழுந்தது. குளிரில் நடுங்கியபடி அசையப் பலமின்றிக் கிடந்த அந்தச் சின்னக் குருவியின் மீது அவ்வளியே வந்த மாடு சாணமிட்டது.


தன் மேல் சூடாக விழுந்த சாணத்துக்குள் கிடப்பது குருவிக்குக் கதகதப்பாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் சற்று நேரத்தில் குருவி பாட ஆரம்பித்தது.

அவ்வழியே வந்த ஒரு பூனை சாணத்துக்குள்ளிருந்து ஒரு குருவியில் பாடல் ஒலியைக் கேட்டது. அந்தச் சாணக் கும்பலுக்குள் இருந்த குருவியைப் பிடித்து வெளியே எடுத்துச் சாப்பிட்டது.
கதையில் பெறப்படும் நீதிகள்:-

1. உன்னை விமர்சிப்பவன், திட்டுபவன் எல்லாம் உனது எதிரி அல்ல.

2.வில்லங்கம் மற்றும் பிரச்சினைகளிலிருந்து விடுவிப்போரெல்லாம் உனது நண்பர்களும் அல்லர்.

3. தப்பான இடத்துக்குள் நீ சுகமாக இருக்கிறாய் என்றால் வாயைப் பொத்திக் கொண்டிருக்க வேண்டும்.
 
Morals of the story:


(1) Not everyone who shits on you is your enemy.

(2) Not everyone who gets you out of shit is your friend.

(3) And when you’re in deep shit, it’s best to keep your mouth shut!