Monday, May 12, 2014

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பிராந்திய மாநாடு


இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகமும் அனுராதபுர கலை, இலக்கிய வட்டத்தினரும் இணைந்து அனுராதபுரத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பிராந்திய மாநாடு ஒன்றை நடத்துவது குறித்த முதலாவது கலந்துரையாடல்
கட்டுக்கெலியாவ முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று 11.05.2014 அன்று நடைபெற்றது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத் தலைவர் “காப்பியக்கோ” டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையிலான குழுவில் ஆய்வகத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன், கவிஞர் அல் அஸூமத், சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


அனுராதபுரம் சார் இலக்கியவாதிகள் மூத்த எழுத்தாளரும் கவிஞரும் கல்வியியலாளருமான அன்பு ஜவஹர்ஷா தலைமையில் கலந்து கொண்டார்கள். கெகிராவ ஸஹானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், ஏ.ஏ. பஸான், மிஹிந்தலை பாரிஸ், எம்.பி. நவ்பர், எம்.எம்.ஏ. சுபஹான் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.


மாநாட்டில் அனுராதபுரம் சார் கடந்தகால, நிகழ்கால இலக்கியமுயற்சிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதுடன் ஏனைய பிரதேசங்கள் சார் இலக்கியவாதிகளது பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.



இவ்வாறான ஒரு முய்ற்சியை செயற்பாட்டுக்குள்ளாக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தவர் நாச்சியாதீவு பர்வீன் ஆவார். இரு அணிகளுக்குமான இணைப்புப் பாலமாக தொடர்ந்தும் அவர் செயற்பட வேண்டும் என்ற கருத்து இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கலந்துரையாடல், எவ்வாறாயினும் எச்சிரமம் வரினும் கைவிடாமல் இந்நிகழ்வை நடத்தி முடிப்பது என்ற மூத்த படைப்பாளி அன்பு ஜவஹர் ஷா அவர்களது உறுதியான வார்த்தையுடன் கலந்துரையாடல் நிறைவுக்கு வந்தது.