Wednesday, June 13, 2012

நீதியரசர் அப்துல் வஹாப் சாஹிப் மறைந்தார்!




பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத் தலைவரும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் சிறந்த பன்னூலாசியரியரும் தேர்ந்த திறனாய் வாளரும் தெளிந்த கட்டுரையாசிரியரும் நிறைந்த கல்வியாளரும், சீரிய எழுத்தாளரும் அரிய பணிகள் ஆற்றிய சமுதாயச் சேவையாளருமாகிய நீதியரசர் மாண்பமை அல்ஹாஜ் எம். அப்துல் வஹாப் இன்று (13.06.2012) புதன் கிழமை) காலை மாரடைப்பால் வபாத்தானார்.


மேற்குறித்த தகவல் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் செயலாளர் பேரா. சே.மு.மு. முகமதலி அவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். அப்துல் வஹாப்சாஹிப் அவர்களது மறைவுச் செய்தி முதலில் எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் மலேஷியாவிலிருந்து சகோதரர் ஹாஜி ஏவி.எம். ஜாபர்தீன் அவர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

(எனது நூல் வெளியீட்டின்போது - பேரா. சேமுமு.முகமதலி, பெரியார்தாசன் அப்துல்லாஹ், அப்துல் வஹாப் சாஹிப், பேரா. அப்துல் ரஸாக், கலைமாமணி உமர், அஷ்ரஃப் சிஹாப்தீன், ஹாஜி ஏவி.எம்.ஜாபர்தீன், அப்துல் அஸீஸ் பாக்கவி - இடமிருந்து வலமாக)

கடந்த வருடம் சென்னையில் நடந்த எனது “ஒரு குடம் கண்ணீர்” நூல் வெளியீட்டு விழாவுக்கு அப்துல் வஹாப் சாஹிப் அவர்கள் தலைமை வகித்தது நூலையும் வெளியிட்டு வைத்ததை மறக்க முடியாது. இஸ்லாமிய இலக்கியம் சார் விடயங்களில் அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இயங்குவோரிடமிருந்து தன்னைத் தவிர்த்துக் கொண்டு அவர் சமுதாய நலன்கருதி உழைத்தோருடன் இணைந்திருந்தார்.

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துடன் இணைந்த சகோதர இலங்கை அமைப்பான இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் என்ற வகையிலும் தனிப்பட்ட வகையிலும் அன்னாரின் மறைவால் கவலையுற்றிருக்கும் அன்னாரின் குடம்பத்தினருக்கும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு சுவர்க்கத்தை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 comments:

சுஹைதா ஏ.கரீம் said...

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைகி ராஜியூன் . ..

Lareena said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

அருளாளன் அல்லாஹ் அவரின் பணிகளைப் பொருந்திக்கொண்டு, அவரது மண்ணறை வாழ்வைப் பிரகாசமானதாய் மாற்றியருள்வானாக!