Sunday, February 24, 2013

திப்பு சுல்தானின் மனிதாபிமானம்


திப்பு சுல்தானின் மனிதாபிமானம் என்ற கவிதை நாடகம் கடந்த 29.01.2013 அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. 

கல்வியமைச்சினால் 2009ல் நடத்தப்பட்ட தமிழ்த் தினப் போட்டிகளில் இடம் பெற்ற முஸ்லிம் நாடகப் போட்டிக்காக இந்நாடகம் எழுதப்பட்டது.  கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுத் தேசிய ரீதியில் இந்நாடகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

2011ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் இந்நாடகம் மேடையேற்றப்பட்டுப் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.  டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவர்களே இதனை நடித்தார்கள்.

பின்னர் ஒலிபரப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு வானொலி அறிவிப்பாளர்களால் நடிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. 

இந்நாடகத்துக்கான வரலாற்றுத் தகவல் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய “தீரன் திப்பு சுல்தான்” காவியத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது.




நாடகம் பகுதி - 1


நாடகம் பகுதி - 2



நாடகம் பகுதி - 3



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

அருமை! மாஷா அல்லாஹ்! அருமையான பிரதிக்குத் தமது அற்புதமான குரல்களால் உயிரூட்டிய கலைஞர்களுக்கு சபாஷ்!