Saturday, June 8, 2013

எயார் இந்தியா!



படிக்கு முன் படிக்க வேண்டிய குறிப்புகள்

01. குறிப்புகளை வாசிக்காமல் சம்பவத்தைப் படிக்க வேண்டாம். அப்படிப் படித்துப் புரியவ்லலை என்றால் நாம் அதற்குப் பொறுப்பல்ல.

02. இச்சம்பவம் எயர் இண்டியா என்ற தலைப்பில் அமைந்திருந்த போதும் நாடுகளின் பெயர்களில் நடத்தப்படும் எல்லா விமான சேவைகளுககும் பொருந்தும்.

03. இது இணையத்தில் கிடைத்த சம்பவம். சுட்டுத் தமிழுக்கு மாற்றம் செய்துள்ளேன். தமிழுக்கு மாற்றும் போது பொருத்தமான வாக்கிய அமைப்பைத் தர முயள்றிருக்கிறேன். சம்பவம் அப்படியே தரப்படுகிறது.

இனிக் கதைக்கு வாருங்கள்.........

சுரிந்தர் சிங் மாமா பொம்பே செல்வதற்கு விமானத்தில் ஏறினார். அவரது வாழ்வில் அவர் மேற்கொள்ளும் முதலாவது விமானப் பயணம் அது.

விமானப் பணிப்பெண் பயணிகளுக்கு என்ன உணவு தேவை என்று கேட்டுக் குறிப்பெடுத்தபடி வந்து கொண்டிருந்தாள். அந்த விமானத்தில் பயணிக்களுக்கு வழங்கப்படும் நீராக இருந்தாலும் அதற்குரிய பணத்தை விமானத்திலேயே செலுத்த வேண்டும்.

சுரிந்தர் மாமாவிடம் வந்த பணிப்பெண் 'உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டாள்.

'இதோ பார் பெண்ணே... நான் சாப்பாடு கட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். எனது பெயரில் உணவுக்கோ நீர் ஆகாரத்துக்கோ நீ  பற்றுச் சீட்டு எழுதி விடக் கூடாது' என்று பதில் சொன்னார்.

பணிப் பெண் பதிலைக் கேட்டுச் சற்று அதிர்ந்து பின் சமாளித்துப் புன்னகைத்தபடி அகன்றாள்.

சற்று நேரத்தில் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. சாப்பிட ஆயத்தமானார்கள்.

சுரீந்தர் மாமா தனது உணவுப் பொதியை எடுத்துப் பிரிக்க ஆரம்பித்தார்.

சுரீந்தர் மாமாவுக்குப் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்திருந்தவர் ஓர் nஅமரிக்க வரலாற்றுப் பேராசிரியர். எல்லோரும் விமானத்தில் வழங்கும் உணவை உண்ணுகையில் தமது அயல் பயணி வீட்டுச் சாப்பாட்டுப் பொதியைப் பிரித்தது அவருக்கு ஓர் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அவர் சுரீந்தர் மாமாவிடம் கேட்டார்:-

'மன்னிக்கணும்... அது என்ன?'

சுரீந்தர் மாமா 'லஸ்ஸி' யை ஒரு பிளாஸ்டிக் போத்தலில் கொண்டு வந்திருந்தார்.

'மில்க் ஒஃப் இண்டியா!'

- மாமா பதில் சொன்னார்.

அவர் கொண்டு வந்திருந்த சப்பாத்தியை உண்ண ஆரம்பித்தார் சுரீந்தர் மாமா!

'இதற்கு என்ன பெயர்?'

-அமெரிக்கர் கேட்டார்!

'இதுதான் வீற் (Wheat) ஒப் இனண்டியா!'

சுரீந்தர் மாமா பெருமை பொங்கச் சொன்னார்.

அதை உண்டு முடிந்ததும் உருண்டையாகவும், சதுரமாகவும் அவர் கொண்டு வந்திருந்த இனிப்புப் பதார்தத்தை எடுத்து அதில் சிலதை அமெரிக்கருக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்டார்.

'அட நன்றாக இருக்கிறதே... இது என்ன?'

'இதுதான் ஸ்வீற் ஒப் இண்டியா...'

- சொல்லி விட்டு அமெரிக்கரைப் பார்த்துப் புன்னகைத்தார் மாமா!

பயணிகள் உண்டு முடித்து ஆசவாசத்துடன் இருக்கைகளில் சாய்ந்தார்கள். அப்போது சுரீந்தர் மாமாவிடமிருந்து,

'ப்பூ.....................ர்ர்ர்ர்ர்..........ப்..' என்று ஒரு சத்தம் வந்தது.

அதிர்ந்த அமெரிக்கர் சுரீந்தர் மாமாவைப் பார்த்து அது என்ன சத்தம் என்று கேட்டார்!

மாமா சிரித்துக் கொண்டே செர்ன்னார்...

'எயர் இண்டியா....!'

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: