Showing posts with label Unnai vasikkum eluthu - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label Unnai vasikkum eluthu - ashroff shihabdeen. Show all posts

Monday, May 2, 2011

உன்னை வாசிக்கும் எழுத்து

-விம்பமும் விளிம்பும்


- சலனி -
 
 
அஷ்ரஃப் சிஹாப்தீன் ஒரு விருந்தாகத் தந்திருப்பது இவருடைய மொழிபெயர்ப்பு நூல் - ஜமால் ஜூமாவின் ‘உன்னை வாசிக்கும் எழுத்து.’ நீண்ட கவிதையின் தமிழாக்கம். நூலுக்கான தலைப்பின் தேர்வு நன்றாக உள்ளது. அதைவிட அட்டைப்படம், உள்நுழையும் போது ஆயிரம் அர்த்தங்களைக் கற்பிக்கும் ஓவியத் தேர்வு என்பன மனதைக் கவருகின்றன. மொழிபெயர்ப்பு மிக அரிதான, அதே நேரம் பாரியதொரு பணி.



நாம் எல்லோரும் புத்தகம்
சலிப்பு
தினமும் அதை வாசிக்கிறது

நண்பர்கள் இல்லாத மனிதர்களும்
புத்தகங்களே
அவை
வாசகர் ஒருவரைப் பெற்றுக்கொள்ளாதவை

என்கிற வருடலான வரிகளோடு தொடர்கிறார் ஜமால் ஜூமா. ஈழத்து இலக்கியப் பரப்பு சில மொழிபெயர்ப்புகளையே அதனது சுயம், அழகு என்பனவற்றுடன் உள்வாங்கியிருப்பதைக் காண்கிறோம். இதன் ஆரம்ப வரவுகளாக பலஸ்தீனக் கவிதைகள், பாலை என்பனவற்றைக் குறிப்பிட வேண்டும். பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் பெயர்த்திட வேண்டும் என்ற பாரதியின் கனவைக் கன்னி முயற்சியாகத் துவக்கியிருக்கிறார் கவிஞர் அஷ்ஃப்.

இங்கு மொழிபெயர்ப்பு தொடர்பான அண்மைய கருத்தாடல்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். வெறுமனே பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டு கவிதையை சமூக பிரக்ஞையின் அளவு கோலாகக் கொள்ள முடியுமெனின் இந்தக் கருத்துக்கள் உதவக் கூடும்.