Showing posts with label kalvettu megazine - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label kalvettu megazine - ashroff shihabdeen. Show all posts

Friday, September 30, 2011

இலக்கியச் சந்திப்பும் “கல்வெட்டு“ சஞ்சிகையும்


இடமிருந்து வலமாக கவிஞர் ஜின்னாஹ் சரிபுத்தீன், யுனுஸ் கே. றஹ்மான், அல் அஸூமத், நான், இவள் பாரதி, நடிகர் வெற்றி


கடந்த 15.07.2011 அன்று சென்னை வியாசர்பாடியில் கவிஞர் ஜலாலுத்தீன் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். காயல்பட்டினம் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு முடிந்ததும் சென்னையில் தங்கியிருந்த தமக்கு அறிமுகமான இலங்கைப் படைப்பாளிகளையும் சென்னை சார்ந்த சில படைப்பாளிகளையும் ஒருங்கிணைப்பதும் கருத்துப் பரிமாறுவதும் இச்சந்திப்பின் நோக்கமாக அமைந்தது.


வியாசர்பாடியில் உள்ள தமது சகோதரிக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தார் கவிஞர் ஜலாலுத்தீன். கவிஞர் அல் அஸ_மத், டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், டாக்டர் தாசிம் அகமது, நான், யூனுஸ் கே. ரஹ்மான், பதுருஸ்ஸமான் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டோம்.


சென்னை புத்தகக் கடையொன்றில் தமக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்கினார் தாசிம் அகமது. இலங்கை முஸ்லிம்களால் தமிழ் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டு அப்புத்தகக் கடைப் பெண் கேட்டதாகச் சொல்லிக் கவலைப்பட்டார் தாசிம் அகமது.


கவிஞர் சொர்ணபாரதி, நடிகர் வெற்றி, இவள் பாரதி மற்றும் நமக்கு ஏற்கனவே அறிமுகமாயிராத சில இலக்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். மாலை 6.00 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் முதலில் அறிமுகம் இடம் பெற்றது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றியும் தமது இலக்கியச் செய்பாடுகள் பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் பொதுவான கலை, இலக்கியக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இது அமைந்தது.