Friday, December 20, 2013

எல்லாவற்றுக்கும் பிறகு...


- Gகோரன் சிமிக் (பொஸ்னியக் கவிஞர்)

எனது தாயாரின் உடலை
அடக்கம் செய்து விட்டு
ஷெல்கள் மழையாகப் பொழிகையில்
மையவாடியை விட்டு ஓடிய பிறகு

சுருங்கிய முரட்டுத் துணியில் 
எனது சகோதரனை 
திரும்பக் கொண்டு வந்த போது
அவனது எஞ்சிய உடைமைகளை 
இராணுவத்தினரிடம்
ஒப்படைத்த பிறகு

நிலக்கிடங்கை நோக்கி ஓடும்
கிலியூட்டும் எலிகளுடன் 
சேர்ந்து ஓடும்
எனது குழந்தைகளின் கண்களில்
சுவாலைகளைக் கண்ட பிறகு

பயத்தில் நடுங்கிய ஒரு மூதாட்டியை
அடையாளம் கண்டு
அவளது முகத்தை
ஒரு கந்தல் துணியால் 
துடைத்து விட்ட பிறகு

தனது காயத்திலிருந்து வழியும் குருதியை
தெருமுனையில் அமர்ந்து
நக்கிக் கொண்டிருக்கும்
பசியுற்ற ஒரு நாயைக் கண்ட பிறகு

இவை அனைத்தையும் மறந்திருக்க -
வெறுமையானதும் உற்சாகமற்றதுமான
செய்தியறிக்கையைப் போல
ஒரு கவிதை எழுத விரும்பினேன்

அந்த வேளை
தெருவில் சிலர் என்னைக் கேட்டார்கள் -

'அக்கறையற்ற செய்தியாளரைப் போல
எதற்காக நீ
கவிதை எழுதுகிறாய்?'

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: