Friday, August 9, 2013

அழகு பிறையும் ஆலிம்ஷாவும்!


ஹஸ்ரத்:- டேய்... இங்க வா!

இளைஞன்: - என்ன ஹஸ்ரத்

ஹஸ்ரத்:- நீ இன்டர் நெற் பாக்குறியா?

இளைஞன்:- ஆமா... இப்ப அதெல்லாம் பார்க்காம யாருதான் இருக்காங்க...!

ஹஸ்ரத்:- நாசமாப் போச்சி! ஷைத்தான்... ஷைத்தான்... அது ஷைத்தான்டா! இரு.. இரு.. ஒங்க வாப்பாக்கிட்டத்தான் செல்லோணும்...

இளைஞன்:- வாப்பாதான் கிழமைக்கு நூறு ரூபாத் தருவாரு... ரீசார்ஜ்ஜூக்கு..

ஹஸரத்:- ஏன்ட அல்லாஹ்வே... சமூகமே ஹறபாய்ப் போய்க்கிட்டிருக்கு... பேஸ் புக்கும் போவியா?

இளைஞன்:- பேஸ் புக் போகாம இப்ப எவனாவது இருக்கானா? எவ்வளவு கெதியான, சுருக்கமான ஊடகம் அது... ஊர் ஒலகத்துல நடக்கிறத்தை ஒரு சிற்றிடிங்லயே பாத்துரலாம்...

ஹஸ்ரத்:- அப்போ இன்னைக்கு என்ன பார்த்தாய்?

இளைஞன்:- பிறைக் குழப்பம் சம்பந்தமா கிண்ணியா நெற்ல அ.இ.ஜ.உக்கு இரண்டு பக்கம் பதில் கொடுத்திருக்காங்க...

ஹஸ்ரத்:- லெட்டர் ஹெட் கலர்ல இல்ல பார்த்தியா?

இளைஞன்:- பார்த்தன். லெட்டர் ஹெட்டை கலர்லதான் அடிக்கோணுமெண்டு சட்டமில்லையே ஹஸரத்!

ஹஸ்ரத்:- ஆனா இரண்டாம் பக்கம் சீல் கலர்ல இருக்கு! பார்த்தியா... அறிக்கை முடியிற இடத்துல யாரும் கையெழுத்துக் கூட வைக்கல்ல... அப்ப இது சத்துராதி வேலதானே.. பொய்தானே.. ஏமாத்துத்தானே!

இளைஞன்:- அது எனக்குத் தெரியாது. கிண்ணியா ஜம்இய்யா தலைவர் பேசுற வீடியோவ வேற போட்டிருக்காங்க....

ஹஸ்ரத்:- அதுவும் ஸ்மூத்தா ஓடுதில்லை பார்த்தியா... என்னமோ ஒரு கேம் உட்டிருக்கானுங்க... இப்பிடி எத்தினை கேமை எத்தினை பேச் செய்திருக்காங்க.. உனக்குத் தெரியாதா?

இளைஞன்:- மொத்தமா எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தா நல்லா விளங்குது... துண்டு துண்டாப் பார்த்தாலும் தெளிவா விளங்குது...

ஹஸ்ரத்:- என்னன்னு?

இளைஞன்:- கேம் அடிக்கிறது கிண்ணியாக்காரனுங்க இல்லைன்னு..

ஹஸ்ரத்:- அடேய் எதிர்த்தா பேசுறாய்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத ராஸ்கல்ஸ்!

இளைஞன்:- சும்மா போங்க ஹஸ்ரத்... ஒளிவு மறைவா பண்ணினா இப்பிடி நோண்டியாகத்தான் முடியும்!சுத்துமாத்துச் செய்யாதவன் எதையும் மறைச்சுச் செய்ய மாட்டான்.. வார்த்தைக்கு வார்த்தை முரண்பட மாட்டான்... வாய் நிறையப் பொய்யும் புரட்டும். மத்தவங்களுக்கு மட்டும் இஸ்லாமும் சட்டமும் பேசுவீங்க.. பெரிசா சொல்ல வந்துட்டீங்க...!







இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

சூப்பரோ சூப்பர்! :)