Showing posts with label malysia Islamc tamil literary conf - 2011. Show all posts
Showing posts with label malysia Islamc tamil literary conf - 2011. Show all posts

Friday, April 15, 2011

மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா - 2011

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 04

மலேசிய இலக்கிய விழா பற்றிய ஏராளமான சுவையான தகவல்கள் அவ்வப்போது கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்லி விடாமல் அவ்வப்போது சொல்லுவதே நன்றாக இருக்கும் என்பதால் சிலவற்றைத் தவிர்த்து சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது வலைத் தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்களாக என்னை இணையத்தில் தேடும் சிலரும் வலைத் தளம் வைத்திருக்கிறேன் என்று அறிந்த சிலருமே வந்து போனார்கள். மலேசிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா பற்றிய கட்டுரை பதிவு செய்யப்பட்டதிலிருந்து தினம் சராசரி 40க்கும் 60க்கும் இடைப்பட்ட தொகையினர் உலகம் பூராகவுமிருந்து வந்து படித்துச் செல்கிறார்கள். எனது மூன்றாவது கட்டுரை வெளியாகியதிலிருந்து மூன்று வாரங்கள் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகளில் விழா பற்றிய கட்டுரை இரண்டாம் இடத்தில் இருந்தமை அதற்குச் சான்றாகும். அக்கட்டுரை இன்னும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரையாகவே தொடர்கிறது. நான்காவது கட்டுரை வருகிறது என்று இடப்பட்ட முன்னறிவித்தலைக் கூட இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை 57 பேர் படித்திருக்கிறார்கள்.

மௌன ஓட்டம்

எனது கட்டுரைகள் பதிவிடப்பட்டதிலிருந்து இலங்கைக் குழுவினருக்குள் ளேயிருந்து எனக்கு யாரோ ஒருவர் தகவல் தருவதாக ஆளுக்காள் சந்தேகிக்கத் தொடங்கி விட்டது போல் தோன்றுகிறது. மூன்றாவது கட்டுரைக்குப் பின்னர் இந்த இறுக்கம் இன்னும் கூடி விட்டதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவ்விழாவுக்குச் செல்லும் பேரார்வத்துடன் இருப்பவர்களும் கூட எதுவும் புரியாத நிலையில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதே தங்களுக்குத் தெரியவில்லை என்றும் குறித்த நபர்களுக்குத் தொலைபேசியில் அழைத்தாலும் கூடப் பதில் தருகிறார்களில்லை என்று சிலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள்.

இந்த விழா சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஒரு புதிய கைப்பேசி இலக்கம் பத்திரிகைகளில் தரப்பட்டிருந்தது. அந்த இலக்கத்துக்கோ தனிப்பட்ட இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டாலும் கூட பதில் கிடைப்பதாயில்லை என்று மூத்த எழுத்தாளர் எஸ்முத்துமீரான் ஒருமுறை குறிப்பிட்டார்.

அப்படி ஏன் இவ்விடயங்களை இரும்புக் கோட்டைக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நமக்குக் கேள்வி எழுவது நியாம்தானே! இதில் ஒளிப்பதற்கு எதுவுமே இல்லை. மூன்று கட்டுரைகளுக்கும் இரண்டு கவிதைகளுக்கும் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி விமானக் கட்டணத்தை அறிவிப்பது. இவற்றை ஒளித்து மறைக்க வேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயமிருக்கும். அப்படியானால் பொதுவாகக் கோரப்பட்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் ஒதுக்கி விட்டுத் தாங்களாகவே குறித்த நபர்களைத் தேர்ந்தெடுத்து விட்டார்களா என்ற சந்தேகம் கட்டுரை, கவிதை எழுதியனுப்பியவர்களுக்கும் நமக்கும் வருவது தவிர்க்க முடியாததுதான்.