Wednesday, March 30, 2011

நிகழ்வுக்கேற்ற நிறம்

இணையத் தோப்பின் இலவசக் கனிகள் - 1




  1. முன்னொரு காலத்திலே கடல் வணிகம் செய்யும் கப்பலில் ஒரு கெப்டன் இருந்தார். அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவர் எதிரிகளை எதிர் கொள்வதில் ஒரு துளிதானும் பயம் அற்றவர்.
ஒரு நாள் கடற் பயணத்தின் போது கொள்ளைக்காரர்களின் கப்பல் ஒன்று தம்மை நோக்கி வருவதை கெப்டன் ப்ராவோவின் அதிகாரிகள் கண்டனர். அவர்கள் அவசர அவசரமாக கெப்டனிடம் ஓடிச் சென்று விடயத்தைச் சொன்னார்கள். கடும் கோபம் கொண்ட கெப்டன் அவர்களை நோக்கி, “எனது சிகப்புச் சட்டையைக் கொண்டு வாருங்கள்!” என்று ஆக்ரோஷமாகச் சத்தமிட்டார். உடனடியாக அவரது உதவியாளர்களில் ஒருவன் அதைக் கொண்டு வந்து கொடுத்தான். அதை அணிந்து கொண்ட கெப்டன் தனது கப்பல் அதிகாரிகளுடனும் வீரர்களுடனும் கொள்ளைக்காரர்கள் வந்த கப்பலை எதிர் கொண்டு அவர்களைத் துரத்தியடித்தனர்

மற்றொரு நாள் கொள்ளைக்காரர்களின் இரண்டு கப்பல்கள் அவர்களை நோக்கி வந்தன. அப்போதும் கெப்டன் ப்ராவோ தனது சிகப்புச் சட்டையை அணிந்து அவர்களை எதிர் கொண்டு தோல்வியடையச் செய்தார்.

அன்று பிற்பகல் கப்பல் மேற்தளத்தில் எல்லோருமாகக் கூடிப் பல்வேறு கதைகளையும் பேசி மகிழ்ந்திருக்கும் வேளை உதவியாளர்களில் ஒருவன் “கடற்கொள்ளைக்காரர்களுடன் சண்டைக்குச் செல்லும் போது ஏன் சிகப்புச் சட்டையை அணிந்து கொள்கிறீர்கள்?” என்று கெப்டனிடம் கேட்டான்

“சண்டை நடக்கையில் நான் காயப்பட்டுவிட்டால் எனது இரத்தம் சிந்தப்படுவதைக் கண்டு ஏனையோர் மனந்தளர்ந்து விடாமல் தொடர்ந்து பயமின்றிப் போராட வேண்டும் என்பதற்காகவே சிகப்புச் சட்டையை அணிந்து கொள்கிறேன்” என்று பதிலளித்தார் துணிச்சல் மிகுந்த கெப்டன்.

அடுத்த நாட் காலை ஒன்று இரண்டல்ல, கடற்கொள்ளைக்காரர்களில் பத்துக் கப்பல்கள் கெப்டன் ப்ராவோவின் கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்தன. உதவியாளர்கள் கெப்டனிடம் ஓடிச் சென்று விடயத்தைச் சொல்லி விட்டு அவரது வழமையான உத்தரவுக்காகக் காத்திருந்தான்.

அவர் மெதுவாகச் சொன்னார்:-

“எனது ப்ரௌன் நிறக் காற்சட்டையை எடுத்து வாருங்கள்!”
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: