Sunday, September 18, 2011

அப்சல் குருவும் ஊடகங்களின் ஊத்தை ஆட்டமும்


ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டதாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள மூவர் நிரபராதிகள் என்று இன்று உரத்த குரல் எழுப்பப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டும் வருகின்றன.

இந்த வேளை ஏற்கனவே தூககுத் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கும் அப்ஸல் குரு பற்றியும் அவருக்கு எந்த அடிப்படையில் தூக்குத் தீர்க்கப்பட்டது என்பதையும் பற்றி யாரும் பேசுவதாக இல்லை.

அப்ஸல் குரு பற்றிய தகவல் வினவு இணையத் தளத்தில் வெளியாகியிருக்கிறது. மூன்று சிறு பகுதிகளாக அமைந்த அந்தத் தகவலில் முதலாவது பகுதியை மட்டும் இங்கு தருகிறேன்.

ஆனால் முழுத் தகவலையும் படிப்பதன் மூலம் இவரது பிரச்சினையை புரிந்து கொள்ள முடியும். மீதிப் பகுதியைப் படிக்கக் கூடியவாறு வினவு இணையத் தளத்தின் தொடுப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
----------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே,


திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடிக்கிறது. காங்கிரசு அரசு அதற்கு ஒத்தூதுகிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். ஒரு வேளை அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும். இதற்காக மட்டும்தான் ஆளும் வர்க்கங்கள் கொஞ்சம் தயங்குகின்றன. ஆனால் காஷ்மீரத்திற்கு வெளியே இது மக்கள் போராட்டமாக பரிணமிக்கவில்லை என்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும், வேதனைப்பட வேண்டும். பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் அப்சல் குருவின் நியாயத்திற்காக தங்களது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்

வினவு
--------------------------------------------------------------------------------------------------
மீதியையும் படிப்பதன் மூலமே முழுத் தகவலையும் புரிந்து கொள்ள முடியும். அதற்கான தொடுப்பு இதோ
http://www.vinavu.com/2011/09/17/afzal-statement/
--------------------------------------------------------------------------------------------------
நன்றி - வினவு இணையத்தளம்


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: