Monday, September 12, 2011

ஊடகமாவது தமிழாவது....





இவ்வருடம் வெளிவந்துள்ள சட்டக் கல்லூியின் நீதி முரசு மலருக்கு நான் எழுதிய ஊடகமும் தமிழும் என்ற கட்டுரையை “தானாய் அழியும் தமிழ்“ என்ற தலைப்பில் எனது வலைத் தளத்தில் இட்டிருந்தேன்.

ஒலிபரப்புத் துறை சார்ந்தவர்கள் இக்கட்டுரை குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். பொதுவாகவே பின்னூட்டங்கள் பத்து வரிகளுககு மேற்படுவதில்லை. ஆனால் இங்கு சற்று விரிவாகவே பேசியுள்ளார்கள்.

சகோதரர் ரஸ்மின் மேலும் இது குறித்து எழுதுமாறு தனிப்பட்ட முறையில் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். இவ்விடயம் தொடர்பாக ஒலிபரப்பாளர்களும் நேயர்களும் அவதானத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது என்னை மகிழ்ச்சிப் படுத்தியது.

அவர்களது கருத்துக்களை ஒரு பதிவாக இங்கு இட்டிருக்கிறேன். இது குறித்து மேலும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இக்கட்டுரைக்குத் தலைப்புத் தந்து என்னை எழுதத் தூண்டிய நீதி முரசு இதழாசிரியர் மேனகா கந்தசாமிக்கு எனது நன்றிகள்.
--------------------------------------------------------------------------------------

மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன. இது உங்களுடைய விமர்சனம்.. அதேபோல் நீங்கள் உங்களின் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் ஒரு சில வாக்கியங்களின் இலக்கணம் சரியா என்பதை எனக்கு விளக்கி வைப்பீர்களா? ....தொலைக் காட்சி அலைவரிசையொன்றில் செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது .......மொழிப் பாவனை ஆகியன கடந்த காலங்களில் பலராலும் விமர்சனத்துக்குள்ளாகிருக்கிறது இவ்வாறு சுட்டிக்காட்டுவது என் அறியாமைக்காக... குறை பிடிப்பதற்காக அல்ல...


By Junaid M Haris - SLBC on தானாய் அழியும் தமிழ் on 9/3/11
...................................................................................................................................................

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்திகளுக்கிடையில் “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திகள்” என்று அறிவிப்பாளர்கள் காலாதிபாலமாகச் சொல்லி வருகிறார்கள். இலக்கணப்படி “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பவை” என்று வர வேண்டும். இதை மறைந்த மூத்த செய்தியறிவிப்பாளரும் தயாரிப்பாளருமான ஜோர்ஜ் சந்திரசேகரிடம் ஒரு முறை கேட்டேன். “செய்திகள்“ ஒரு நிகழ்ச்சி என்ற அடிப்படையிலேயே இவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கம் தந்தார். அந்த அடிப்படையிலேயே “செய்திகள் ஒளிபரப்பாக ஆரம்பித்தது“ என்று நான் இக்கட்டுரையில் எழுதியிருக்கிறேன். நன்றி.


By ASHROFF SHIHABDEEN on தானாய் அழியும் தமிழ் on 9/4/11
...............................................................................................................................................
 

Congrats! Your story titled 'தானாய் அழியும் தமிழ்' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 3rd September 2011 12:07:02 PM GMT ... Here is the link to the story: http://ta.indli.com/story/545740 Thanks for using Indli Regards, -Indli


By ASHROFF SHIHABDEEN on தானாய் அழியும் தமிழ் on 9/4/11
..................................................................................................................................................
 
சேர் நீங்கள் சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மை முரண் படுவதற்கு ஒன்றுமே இல்லை. நான் பார்த்தவர்களில் அநேகமானவர்கள் இந்தத் தவறைச் செய்கிறார்கள்... பணயக் கைதியை பயணக் கைதி என்று தான் உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன்.. அது ம்டடுமல்லாம்ல் விவாகரத்து இதை எப்படி சொல்கின்றார்களென்றால், விவகாரத்து.. இதை யெல்லாம் யாருகிட்ட போய் சொல்றது..? பார்த்து வாசிப்பதைக் கூட அதன் பொருளுணராமல் சொதப்புவர்களை.... என்ன பண்ணுவது..? இவர்களை எப்படி அறிவிப்பாளர்கள் வரிசையில் சேர்ப்பது..? மொழியை அறியாதவர் அதாவது வேற்று மொழி பேசுபவர் ஒருவர் பிழைவிட்டால்.. சொன்னவிசயம் புரிந்து தானே என்று சொல்லி சமாதானப்படுவதில் தப்பில்லை..ஆனால் நாள்முழுக்க தமிழையே பேசும் ஒருவர் இந்த மாதிரி பிழைவிட்டால் சொன்ன விசயம் புரிந்ததுதானே என்று சொல்லி தலையாட்டிக் கொள்வது தான் தமிழுக்கு பெருமையா..? “ஹலோ... யார் பேசுகிறீர்கள்.... என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.... யார் யாருக்காகவெல்லாம் பாடல் விரும்பிக் கேட்கிறீர்கள்...?” என்ற கேள்விகளோடு ஓர் அறிவிப்பாளன் பணி முடிந்து விடுகிறது. " சரியாகச் சொன்னீர்கள் சேர்....நீங்கள் சொன்ன மாதிரி இது ஒரு அறிவிப்பாளன் என்ற போர்வைக்குள் இருந்து செய்யத் தேவையில்லை. 5 வயது பிள்ளை கூட இதைச்சரியாகவே பண்ணும்.. 5 பாடல்களை ஒலிபரப்பிவிட்டு அறிவிப்பாளன் என்று சொல்லிக்கொண்டு பண்ணுகிற பந்தா தாங்கவும் முடியல..சகிக்வும் முடியல.சில நேரங்களில் எரிச்சல் கூட வரும்... அறிவுபூர்வமான விசயங்களையோ.. ஆக்கபூர்வமான விசயங்களையோ ஆளுமையை வளர்க்கும் விசயங்களையோ இவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது.. மூளைக்கு வேலை இல்லாது.. தானும் அசையாது.. தன் கதிரையும் அசையாது, உட்கார்ந்து பாடல் போடுவதில் இவர்கள் என்ன திருப்தி தான் கண்டார்களோ..? தொழிலாக எது செய்தாலும் அதில் திருப்தி இருக்க வேண்டும்.நாளு பேருக்கு எதையோ பண்ணினோம் என்ற சந்தோசம் இருக்க வேண்டும. இங்கு எதுவும் இல்லை . தான் வளருவதும் இல்லை.. மற்றவர்களை வளர விட்டதும் இல்லை.....( நானும் ஒரு வானொலியில் தான் வெலை பார்க்கிறென்.. ஆனால் பாடல்களை ஒலிபரப்பி அறிவிப்பாளர் , தொகுப்பாளர் என்ற போர்வைக்குள் என்னை அடையாளம் காட்டுவதில் ஒரு சதவீதம் கூட எனக்கு உடன்பாடு இல்லை. ம்ட்டுமல்லாமல் என்னை நானே மழுங்கடித்துக் கொண்டு, என்னுடைய ஆக்கத்திறனை, அறிவுத்திறனை தூங்கப்போடுவதிலும் கண்டிப்பாக நான் உடன்படப் போவதில்லை. இதை நான் ஏன் சொல்கின்றேனென்றால்........“‘ஹலோ ....யார் பேசுகிறீர்கள்..???? இந்த ரகத்திற்குள் நான் இல்லை என்று சொல்லி ஆக வேண்டும்...) ”கடந்த காலங்களில் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை மூத்தோர் இன்றும் நினைத்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பொருள் இருந்தது, ரசனை இருந்தது, தமிழ் இருந்தது. இன்று இவற்றில் எதாவது எஞ்சியுள்ளதா என்பதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” சேர் சொல்ல வேண்டிய விசயங்களை காயப்படாமல் சொல்லியிருக்கிறீங்க.. கண்டிப்பாக..இதில் உள்வாங்க வேண்டிய விசயங்கள் நிறையவே இருக்கின்றது..உச்சரிப்பில் என்பக்கமாகக் கூட நிறைய தவறுகள் என்னை அறியாமலே என்னுடன் ஒட்டி இருப்பது எனக்குத் தெரியும்.. இதை வாசித்தபின் சரி பண்ணிக் கொள்வதில் சிரமம் எதுவும் இல்லைஎன்று நினைக்கிறேன்..காரமான ஒரு ஆக்கம் படித்ததில் மகிழ்ச்சி....பதிவுக்கு நன்றி...


By Shaifa Begum on தானாய் அழியும் தமிழ் on 9/4/11
.........................................................................................................................................................
 
தற்கால ஊடகங்களில் தமிழ் படும் பாடு குறித்ததான உங்கள் ஆக்கம் மிகவும் பயனுள்ளது . நீங்கள் குறிபிட்டது போல "செய்திகள்", பண்பியல் ஊடகங்களை பொறுத்த வகையில் பலதரப்பட்ட தொகுப்புகளின் ஒட்டுமொத்த நிகழ்ச்சியாக கொள்ளப்படுவது (கொல்லப்படுவது), ஒளி, ஒலிபரப்பில் கோட்பாட்டு நியதியாக சில முரண்பாடுகள் திணிக்கபடுவது போன்ற சங்கடங்களின் மத்தியில் சில ஊடகவியலாளர்கள் முழி பிதுங்கி நிற்பதை தங்கள் அறியாததா?!


By Shylaja.M.Ponnambalam on தானாய் அழியும் தமிழ் on 9/6/11
.........................................................................................................................................................
 
சகோதரன்அஷ்ரப் சிஹாப்தீன் ஒரு முக்கியமான ஒரு விடயத்தின் மீதான அவதானத்தை தூண்டியிருக்கின்றார்.இன்றைய காலத்தில் தமிழ் ஒலிபரப்பு முகங்கொடுத்துள்ள இந்த மொழிநெருக்கடிக்கு மிக முக்கயமான காரணம் மொழியை அசட்டை செய்தல்.சமகாலத்தில், வானொலியில் மொழித்தூய்மை என்பது ஒரு காலாவதியான ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது. மொழியைப் பாதுகாத்தல், வளர்த்தல், வளமூட்டல், இலகுபடுத்தல் என்பனவற்றில் வானொலிக்கு உள்ள கடப்பாடு பெரும்பாலும்  கவனமிழந்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.ஒலிபரப்புக்குப் பொருத்தமான மொழியை வரையறுக்கும் பல ஆய்வுகள் வெளிநாட்டு வானொலி நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய ஆய்வுகள் இலங்கையில் வானொலி மொழிதொடர்பாக ஆண்டாண்டு காலமாக பேசும் எந்த ஒருவராலும் மேற்கொள்ளப்படவில்லை. மொழிவிடயத்தில் முன்னோர் கொதிப்படையும் அளவுக்கு ஒலிபரப்பு மொழி தொடர்பான எந்தவிதமான கோட்பாட்டு ரீதியான கருத்தியல்களையும் அவர்களால் முன்வைக்கவில்லை. இந்நிலையில் அஷ்ரப் சகோதரனின் கட்டுரை சிறந்த ஒரு ஆரம்பகமாக அமைகின்றது.
 
இந்த இடத்தில், நண்பன் ஹாரிசின் கருத்திற்கு சகோதரன் அஷ்ரப் தந்திருக்கும் விளக்கம் சில விடயங்களை எழுத வேண்டும் என்று என்னைத் தூண்டியது.செய்தி அல்லது செய்திகள் என்ற விடயத்தில் ஜோஜ் கொண்டிருந்த நிலைப்பாடு சில மேலதிக வாசிப்பினை வேண்டி நிற்பதாகவே தோன்றுகின்றது. ஆங்கிலத்தில் ஒரு செய்தியோ பல செய்திகளோ பொதுவாக இரண்டையும் குறிப்பதற்கு News என்ற சொல்லே பயன்படுகின்றது. இது ஒரு உயர்திணைச் சொல் அல்ல என்பதால் ஆங்கிலத்தைப் பின்பற்றி செய்தி என்ற சொல்லை தமிழில் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், தமிழிலும் செய்தி என்ற பயன்பட வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. செய்தி மற்றும் செய்திகள் என்ற இருவேறுபட்ட சொற்களும் மிகத் துல்லியமான அர்த்த வேறுபாட்டோடு இன்று தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பல செய்திகளைக் குறிப்பதற்கு எந்த ஒரு ஊடகமும் செய்தி என்ற ஒருமைச் சொல்லைக் கையாழ்வதில்லை. செய்திகள் என்ற பெருவாழக்கான சொல்லை அப்படியே கொள்வதில் தவறில்லை. மொழி பெருவழக்கான நிலையில் (Language mainstreaming )  சுமார் 8 தசாப்தங்கள் சென்ற நிலையில் மீண்டும் செய்தி என்ற சொல்லைப் பயன்படுத்துவது அர்த்தமுள்ள ஒன்றாக இருக்காது.சகோதரர் ஜோஜ் சொன்ன விதியைப் பின்பற்றியிருந்தால் செய்திகள் என்ற சொல்லுக்குப் பதிலாக செய்தி என்ற சொல்லைத்தானே பயன்படுத்தியிருக்க வேண்டும்.
 
அஷ்ரப் சகோதரர் பல ஆண்டுகள் செய்திகள் என்றுதான் வாசித்தும் இருக்கின்றார்.ஹாரிஸின் இரண்டாவது கருத்திற்கு சரியான பதில் வழங்கப்படவில்லை என்று தோன்றுகின்றது. ஒலிபரப்பு மொழியியல் அல்லது இலக்கண ரீதியான விளக்கம் வழங்குவதாக இருந்தால் இதனை எண்வழு என்று சொல்லாம். சமகால ஒலிபரப்பில் எண், இடம், காலம், பால், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல வழுக்களை நாம் இன்று அவதானித்து வருகின்றோம்.நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது அல்லது கேட்டுக் கொண்டிருப்பவை ஆகிய தொடர்களைப் பயனப்டுத்துவது தொடர்பாக இங்கு குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் உள்ள சிக்கல் மிகவும் இலகுவானது. கேட்டுக் கொண்டிருத்தல் என்ற சொல் நேயர்கள் வானொலிக்கு தொடர்ச்சியாக செவிமடுப்பதைக் குறிக்கின்றது. இதனை ஒரு செயற்பாட்டைக் குறிக்கும் தொழிற்பெயராகவே நோக்க வேண்டியுள்ளது. இதனை ஒரு செயற்பாடு சார்ந்த வினைச் சொல்லாக அல்லது தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரு செயலைக் குறிக்கும் ஒன்றாகவே பார்க்கலாம். அவ்வாறிருந்தால், நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது என்பது பெரும்பாலும் பெருந்தும்.தவிர, கேட்டுக்கொண்டிருப்பது என்ற சொல், நேயர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் அம்சங்களின் வகைப்பாட்டையோ, உள்ளடக்கத்தையோ குறித்து பயன்படவில்லை.
 
ஒரு நிகழ்ச்சிக்குள் பல அம்சங்கள் இருந்தாலும் அவற்றைக் குறிப்பதற்கென்று ஒரு நிகழ்ச்சி இருக்கும். உதாரணமாக செய்தி, பொங்கும்...புனல், கதம்பமாலை, இளைஞர் இதயம், மாணவர் மன்றம், இரவின் மடியில் போன்ற நிகழ்ச்சிகளின் பெயர்களைக் குறிக்கலாம். இந்த நிகழ்ச்சிகளுக்குள் பல அம்சங்கள் இருந்தாலும் அவை ஒரு பெயரினால்தான் வழங்கப்படுகின்றன. எந்த ஒரு அறிவிப்பாளரும் நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பவை கதம்பமாலை என்றோ, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பவை இரவின் மடியில் என்றோ சொல்வதில்லை.நான் மிகவும் பணிவோடு சொல்வதாக இருந்தால், நான் மற்றும் சகோதரன் அஷ்ரப் அடங்கலாக அனேகர் ஒலிபரப்பு மொழியியலில் மிகவும் சிறிய பகுதிகள் பற்றியே இன்னும் பேசிக்கொண்டிருக்கின்றோம். வானொலி மொழியியல் என்பது உச்சரிப்பு, அல்லது ழ,ள, ன, ண, வேறுபாடு சார்ந்தது மாத்திரமல்ல. ஒலிபரப்பு மொழியியலில் இவை மிகவும் சிறிய பதிகு மாத்திரமே. சகோதரன் அஷ்ரின் கட்டுரைக்கு சிறிய தொடக்கத்தை வழங்கும் நோக்கில் பொதுவான நோக்கில் ஒலிபரப்பு மொழியியல் உள்ளடக்கும் வேறும் சில பகுதிகளின் பட்டியலைத் தரலாம் என்று கருதுகின்றேன்.  
 
  I.            இலக்கண வழு மற்றும் வானொலி மொழிப்பாவனை – உரையாடல், சஞ்சிகை நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள்..                            
  II.            கிழைமொழிகளும் ஒலிபரப்பு மொழியும்                           
 
 III.            பொதுத்தராதர மொழியை வரையறுத்தல்                           
 
 IV.            செய்திமொழி                             
 
V.            வானொலிப் பிரதிகளும் வாக்கியவியலும்                           
 
 VI.            ஒலியியல்                         
 
VII.            சொல்லியல்                       
 
 VIII.            வானொலித் தொடர்பாடலும் மொழியும்இன்னும் பல அம்சங்கள் இதில் உள்ளடங்கலாம். சகோதரர் அஷ்ரபின் இந்த பதிவினை தொடர்ச்சியாக நாம் கொண்டு செல்லாம். எந்த இடத்தில் மொழி அசட்டை செய்யப்படுகின்றதோ அந்த சந்தர்ப்பங்கள் தொடர்பான நமது கருத்துக்களை இதில் பதிவு செய்யலாம். ஒரு காலத்தில் இத்தகைய பதிவுகள் ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்காவது பயன்படும்.   
 
 M C RasminDirector/CEOSri Lanka Development Journalist Forum (SDJF)9, Dudley Senanayake Mavatha, Colombo - 08
Mobile – +94 773 66 75 30
.................................................................................................................................................
 
அறிவிப்பாளர்/எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே!
 
தங்களால் எழுதப்பெற்ற தானாய் அழியும் தமிழ் என்னும் கட்டுரையைப் படித்தேன். புலம் சிலிர்த்தேன். ஏன்?. இன்று உலகெங்கிலும் உள்ள தனியார் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அநியாயத்திற்கு நடைபெறும் உலகத்தின் முதல் மொழியாம் என் தமிழ் மொழியின் கொலையினைக் குறித்து மிக யதார்த்தமான நிஜங்களை சில பேரின் கண்களுக்காவது காட்சிப்படுத்தி கண்டு திருந்தி கொள்ளட்டும்: திருத்திக்கொள்ளட்டும் என்ற மகோன்மத மனப்பான்மையில் உருவாகியுள்ள கட்டுரையைப் படித்திடும் ஒரு வாய்ப்பை வழங்கியமைக்காக எங்கள் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருவாளர். அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களுக்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.


ஓரளவு ஒழுங்காகத்தான் இருந்தது தமிழ்.இத்தனை தூரம் பாரிய அழிவுப்பாதையை நோக்கிப் பயணிக்கவில்லை தமிழ். எப்போது? தொலைக்காட்சிகளும் வானொலிகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது வரை. என்றைக்கு இந்த ஊடகங்களை நடத்திக்கொள்ள தனியாருக்கு அனுமதியளிக்கப்பட்டதோ அன்று தான் தமிழுக்கு பிடித்தது தடிமன். அன்றிலிருந்து தடிமன் உருவெடுத்து வளர்ச்சியுற்று காய்ச்சலாக மாறி பின்னர் டைபாயிடாக மாறி பின்னர் அதிலிருந்தும் கிளைவிட்டு பல்வேறு உருவகங்களில் நர்த்தனமாடி தீர்த்து இறுதியாக காசநோயாக தோற்றமளித்துக்கொண்டிருக்கிறது. இந்த காசநோய் எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படுமா? அல்லது தனது வாரிசுகளைக் காற்றினூடே தூவிச்சென்று கொண்டேயிருக்குமா? இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வைத்தியத்தைத் தான் தாங்கள் சுட்டிக்காட்டுகின்றீர்கள். ஆனால் நோய் பீடித்திருக்கும் ஊடகங்களோ அதனால் எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நாங்கள் இருமி இருமி நச்சுக்கிருமிகளைப் பரப்பிக்கொண்டே தான் இருப்போம். எங்களோடு சேர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் அவர்களும் அவர்களது சந்ததியினரும் தலை தூக்க வழியின்றி அழிந்து நாசமாய் போகட்டும் என்று நல்ல மனதுடன் அல்லவா சேவை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த கட்டுரையை எத்தனை அன்பர்கள் உங்களது வலைத்தளத்தில் பார்வையிட்டு தம்மைத் திருத்திக்கொள்ளப்போகின்றார்கள். பத்திரிகைகளோ, வானொலிகளோ, தொலைக்காட்சிகளோ, இணையதளங்களோ இன்ன பிற ஊடகங்களோ சுத்தமான தமிழில் நாம் வழங்கினால் எங்கே நமது வருவாய் பாதிக்கப்பட்டு விடுமோ படிப்பதற்கோ, பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ, ஆளில்லாமல் போவிடுமோ என்ற (நற்சிந்தனையில்) தங்களுக்குள்ளேயே ஒரு வளையத்தை அமைத்துக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு மீதமின்றி இத்தலைமுறையிலேயே நாசப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு தமிழ்த் தாய்க்குப் பிறக்கும் சிசுக்களுக்கு இலைவிட்டு, மலர் விட்டு, கனிவிட்டு என அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் துணை நின்று, பேச்சு கற்றுக்கொடுத்து, நல்ல பழக்க வழக்கங்களை, புத்திமதிகளைக் கூறி வளர்க்கும் தாய் தம் குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகள் தமிழ் பேசாது போய்விடுமா?அடுத்ததாக ஆசிரியர் பொறுப்பிலிருக்கும் ஊடகங்கள் அத்தமிழை வளர்க்கும் அரும்பணியை ஆற்றவேண்டும். தமக்குத் தாமே எல்லை அமைத்துக்கொள்வதை இனி வருங்காலங்களிலேனும் விட்டொழிக்க வேண்டும். இல்லையெனில் நம் தமிழ் அதல பாதாளத்தில் விழுந்து மாய்ந்து போகும். ஒரு காலத்தில் டைனோசர் என்ற ஒரு பாரிய மிருகம் இருந்ததாக நாம் கேட்டும் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பெற்ற எலும்புக்கூடுகளைப் பார்த்தும் படங்களிலும் பார்த்தும் அறியக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோமோ அதே நிலை தான் இன்னும் சில வருடங்களில் தமிழுக்கும். ஊடகங்களே உணர்ந்து செயலாற்றுக. தொன்மையான இனிய மொழியாம் எம் தமிழ் மொழியைப் புதை குழிக்குத் தள்ளாது காத்திடுக.

தானாய் அழியவில்லை தமிழ். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே மெய். காலத்தே பயிர் செய் என்பதைப்போல் காலத்திற்கேற்ற கட்டுரை.பாராட்டுக்கள் எழுத்தாளர் அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே!

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுவே என் கருத்து.இதற்கும் எத்தனை பேர் வரிந்து கட்டிக்கொண்டு ஆர்ப்பரிக்கப்போகின்றார்களோ? யாமறியோம் பராபரமே!

கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.

(இலங்கை வானொலி நேயர்)
.........................................................................................................................................................

எமது சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களே!தங்களது “ தானாய் அழியும் தமிழ்“ கட்டுரையையும் அக்கட்டுரைக்கு நான் எழுதிய கருத்துக்களையும் வெளிநாட்டு வானொலி ஊடகவியலாளர் ஒருவருக்கு நகல் எடுத்து எனது மின்னஞ்சலின் ஊடாக அனுப்பிவைத்தேன். கட்டுரையை அறிவிப்பாளர் ஒருவர் ஏறத்தாழ முக்கால் மணித்தியாலத்திற்கும் மேலாக என்னிடம் மிக ஆர்வமாக படித்துக் காண்பித்ததோடு மட்டுமின்றி தங்களின் பல கருத்துக்களுக்கு உடன்பட்டார்.இவ்வளவு சமாச்சாரங்கள் இருக்கின்றதா? என்று தனது ஆச்சரியத்தினையும் அவர் பகிர்ந்துகொண்டார். மட்டுமல்லாது இதனை தனது சக அறிவிப்பாளர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.விளம்பரங்களை வழங்கவிருக்கும் சில நிறுவனத்தார் ஏன் சுத்தத் தமிழில் சிலர் அறிவிப்புச் செய்கிறீர்கள் என்றும் இலங்கையைச் சார்ந்தவர்களே உங்கள் வானொலியில் அறிவிப்பாளர்களாக ஏன் உள்ளனர்? மற்ற நாட்டினரையும் உங்கள் வானொலியில் அறிவிப்பாளர்களாக பணியமர்த்தலாமே என்ற ஆதங்கத்தினையும் அந்நிறுவனத்தார் வெளிப்படுத்தியதாகவும் தனது வருத்தத்தினையும் என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் எங்கள் மூத்த அறிவிப்பாளர்கள் திரு.பி.எச்.அப்துல் ஹமீத் அவர்களும் திரு.அஸ்ரஃப் சிகாப்தீன் அவர்களும் ஊடகங்களில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கின்றனரோ அதை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள முன் வந்தாலும் விளம்பரம் என்ற போர்வையில் சில நிறுவனத்தார் தடம் புரள வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர் என்ற எனது ஆதங்கத்தையும் நான் முன் வைக்கத்தவறவில்லை.இப்போது இல்லையெனினும் தங்களின் அறிவுரைகளை வருங்காலங்களில் படிப்படியாக கடைபிடிக்கவிருப்பதாகவும் (பின்னர் என்பது எவ்வளவு தூரம் நிச்சயம் என்பதை நானறியேன்)நம்பிக்கையளித்துள்ளார்.அறிவிப்பாளர் அவர்களே எனது கருத்துக்களைத் தாங்களே கருத்துப்பகுதியில் வெளியிட்டிருந்தால் நான் எனது கருத்தினை இணைத்து அனுப்பவேண்டியதிருக்காது அல்லவா? கன்னியாகுமரி, சகாதேவன் விஜயகுமார்.(இலங்கை வானொலி நேயர்)

By shenbagam on தானாய் அழியும் தமிழ் on 9/10/11


 
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: