Tuesday, October 2, 2012

முஸல்மான் கதை - 1



பகல் 12.45. கொளுத்தும் வெய்யில்!

சமந்தா தியேட்டர் சந்திக்கும் ஒருகொடவத்தைச் சந்திக்கும் இடைப்பட்ட பேஸ்லைன் வீதி!

ஒரு பக்கத்தில் மூன்று வழிப் போக்குவரத்து நடந்த போதும் வாகன நெரிசலில் அசைய முடியாதவாறு தெரு இறுகிப்போய் இருந்தது.

மூன்று வரிசை வாகனங்களுக்கு இடையே முச்சக்கர வண்டிக்காரர் ஏற்படுத்தியிருந்த நான்காவது வரிசையில் நான்காவது முச்சக்கர வண்டிக்குப் பின்னால் நான் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தேன்.

மதிய வெய்யில் மண்டையைப் பிளந்தது. கழுத்துக்குள் வியர்வையும் புழுதியும் ஏற்படுத்திய நமைச்சல் வேறு.

பதினைந்து நிமிடங்கள் ஒரேயிடத்தில் தரித்து நின்ற வாகனங்கள் சற்று நகர ஆரம்பித்தன.

ஏனைய வாகனங்களை முந்திப் போய்விடலாம் என்று நின்ற நான்காவது வரிசை இதோ நகரப் போகிறது அதோ நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் நான்.

ஆனால் அந்த வரிசை மட்டும் நகரவில்லை.

மூன்று நிமிடங்கள் தாமதித்து விட்டுத் தாங்காமல் கலிமாச் சொல்லியபடி அருகே போன ஒரு கண்டைருடன் ஒட்டி உரசி மோட்டார் சைக்கிளை முன்னால் எடுத்து நகர்ந்தேன்.

மூன்று முச்சக்கர வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவற்றுக்கு முன்னால் நின்ற நான்காவது முச்சக்கர வண்டியில் ஒருவர் சாவகாசமாக கொழும்புத் தமிழில் கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். முச்சக்கர வண்டியின் எஞ்சின் இயங்கிக் கொண்டிருந்தது.

அவரைத் திரும்பிப்பார்த்தேன்.

ஒரு மோசமான வாகன நெரிசலில் ஏனைய வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமோ பாதையில் அளெகரியமான நடந்து கொண்டிருக்கிறேன் என்ற நினைப் போ இல்லாமல் கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். நான் தாண்டி வந்து விட்டேன்.

சொல்ல மறந்து விட்டேன்.

அவரது வண்டியின் பின் கண்ணாடியில் இஸ்லாத்தின் தாரக மந்திரமான “லாயிலாஹ இல்லல்லாஹ்” அரபு மொழியில் வெள்ளை நிற ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குக் கீழ் சவூதி அரேபிய வாள் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

Lareena said...

வெட்கக்கேடுதான் போங்கள்! :(

Masoon said...

ivarkal eppathan tirunthuvankaloa

Masoon said...

ya allah