Tuesday, November 27, 2012

கடவுளின் விசிறி




ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சியில் இருந்தபோது நடந்த கதை இது!

புஷ்ஷின் மனைவி லோரா மரணமடைந்து மேலுலகம் போனார்.

அங்கு கடவுளின் உதவியாளர் ஒருவர் நின்றிருந்த இடத்தில் மூன்று பெரிய கடிகாரங்கள் இருந்தன.

“இதெல்லாம் என்ன கடிகாரங்கள் மாதிரித் தெரியுது.. இது எதுக்கு?

- லோரா கேட்டார்.

“இவை வாழ்க்கைக் கடிகாரங்கள்... உலகத்தில் வாழுகின்ற எல்லோருக்கும் இங்கே இப்படி ஒரு தனிக் கடிகாரம் இருக்குது... ஒருத்தர் ஒரு பொய் சொன்னால் அதன் கரங்களும் ஒரு முறை அசையும்!”

“ஓஹ் அப்படியா.. இது யாருடைய கடிகாரம்?”

லோரா ஒன்றை நோக்கிக் கை நீட்டிக் கேட்டார்.

“அதுவா.. அது மதர் தெரஸாவுடையது. அது இதுவரை நகரவேயில்லை. அதன் அர்த்தம் என்னவென்றால் அவர் ஒரு போதும் பொய் சொல்லவேயில்லை!”

“அப்படியென்றால் அது யாருடையது...?”

அடுத்த கடிகாரத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

“அது அபிரஹாம் லிங்கனுடையது... இரண்டேயிரண்டு முறைதான் அசைந்தது. அதாவது வாழ் நாள் முழு்க்க லிங்கன் இரண்டேயிரண்டு பொய்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறார்.”

“அப்போ ஜோர்ஜின் (தனது கணவரின்) கடிகாரம் எங்கேயிருக்கு?”

லோராவின் முகத்தை அமைதியாகப் பார்த்து விட்டு உதவியாளர் சொன்னார்-

“அதுவா.. அது கடவுளின் அறைக்குள் இருக்கிறது?”

“ஏன் அப்படி? அதில் என்ன விசேஷம்?”

“கடவுள் அதைத்தானே தனது சீலிங் ஃபேனாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்.”


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Lareena said...

:D :D :D

இது எல்லா அரசியல்வாதிகளுக்குமே பொருந்திவரும் Sir.