Friday, April 24, 2015

தேவையற்றவை!


கவிஞர் காஜல் அகமட் ஈராக்கின் கிர்குக் நகரில் குர்து இனத்தில் பிறந்தவர். கவிஞர், ஊடகவியலாளர், சமூக ஆய்வாளர். ஐந்து நூல்களை எழுதியுள்ளார். குர்திஸ்தானி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் குர்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். அவரது கவிதை இது!

எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
இணைவின் புதிய சகாப்தமோ
அது கலையும் புதிய உதயமோ தேவையில்லை

நானே அதிசயமான ஒரு பூவாயிருப்பதால்
எனக்கு மலர்களெதுவும் தேவையில்லை
எனக்கு முத்தங்கள் தேவையில்லை

உண்மையான முஷ்டியுள்ளதால்
ஒரு பிடியை நான்; வைத்திருக்க வேண்டும்

திருமண சகாப்தமோ
விவாகரத்து உதயமோ தேவையில்லை
என்றைக்குமே விதவையாகத் தேவையில்லை

எனக்கு முத்தங்கள் தேவையில்லை
அன்போடு இணைந்திருப்பதால்
நான் ஒரு தியாகியாக மாறுவேன்

சவப் பெட்டி மீதோ
என் மீது - பிணத்தின் மீதோ
எனக்குக் கண்ணீர் தேவையில்லை

அனுதாபத்துக்காக செர்ரிச் செடியை
எனது புதைகுழி வரை இழுத்துவரத்தேவையில்லை
மலர்களோ முத்தங்கனோ தேவையில்லை
கண்ணீரோ துயரமோ தேவையில்லை

கொண்டு வந்தது எதுவுமில்லை
பற்றியிருந்ததும் எதுவுமில்லை
தேசியக் கொடியில்லாத தேசம் போல
ஒரு குரலற்ற தேசம் போல
நான் மரணித்து விடுகிறேன்

நான் நன்றியுடையவள்
எனக்கு எதுவும் தேவையில்லை
எதையும் ஏற்கப் போவதுமில்லை!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: