Saturday, June 27, 2015

தெரிந்திருப்பதும் தெரிவிப்பதும் - சில அவதானங்கள்1



Ash. Affan Abdul Haleem (Naleemi)

இஸ்லாமிய ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்களை மிகச் சுருக்கமாகச் சொல்லும் முழுமையான சட்ட விதியொன்றிருக்கின்றதுஇ நலவுகள் அடையப்பெறுவதை உறுதி செய்வதும் அவற்றைப் பூரணப்படுத்துவதும் கெடுதிகள் களையப்படுவதை உறுதிப்படுத்துவதும் அவற்றை முடியுமான அளவு குறைப்பதும் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இரண்டு நலவுகளில் மிகச் சிறந்த நலவை அடைந்து கொள்வதும் இரண்டு கெடுதிகளில் மிகப் பாரதூரமான கெடுதியைத் தவிர்ந்து கொள்வதும் இந்த விதியோடு சம்பந்தப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். அதே போன்று ஒரு நலவை அடைந்து கொள்வதை விட ஒரு கெடுதியை தவிர்ப்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் முன்னுரிமைப்படுத்தப்படுகின்ற அம்சம் என்பதும் இவற்றோடு சம்பந்தப்பட்ட ஒரு விதியாகும்.

தஃவாக் களத்தில் இருக்கின்ற தாஇகள் அனைவரும் இந்த விதிகளுக்குட்பட்டு தமது பணியை முன்னெடுக்கின்ற போது தஃவா களம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அடிப்படை விதிகள் மீறப்படுகின்ற போது களமும் மனிதர்களும் மானங்களும் சீரழிக்கப்படும் என்பதில் சந்தேகங்கள் கிடையாது.

அந்த வகையில் தாஇகள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஓர் அம்சம்தான் மக்களிடம் தாம் எத்திவைக்கும் விடயங்கள் பற்றியதாகும். ஒரு தாஇ மார்க்கம் சார்ந்தஇ ஏனைய துறைகள் சார்ந்த சகல விடயங்களைப் பற்றிய அறிவையும் பெற்றிருப்பது மிகச் சிறந்ததும் கட்டாயமானதுமாகும். ஆனாலும் தனக்குத் தெரிந்த அனைத்தையும் மக்களுக்கு எத்திவைக்க வேண்டிய தேவை இருக்கின்றதா என்று பார்க்கின்ற போது அங்கு மேற்கூறிய விதிகள் பற்றிய தெளிவுடனேயே எத்திவைத்தல் என்ற பணியை ஒரு தாஇ செய்ய வேண்டியிருக்கின்றது.

தஃவா களம் என்பது எத்திவைப்பவர்களுக்கிடையிலான போட்டியல்லஇ மாற்றமாக மிகச் சரியானதை மிகச் சரியான முறையில் மிகப் பொருத்தமான சந்தர்ப்பத்தில் யாருக்கு எத்திவைக்க வேண்டுமோ அவர்களுக்கு எத்திவைப்பதாகும். அதனைத்தான் அல்குர்ஆன் ''மிகத் தெளிவான எத்திவைத்தல்'' என்று வர்ணிக்கின்றது.

எனவே தாஇகள் தாம் வைத்திருக்கும் சகல விதமான அறிவுகளிலும்இ தகவல்களிலும்இ கருத்துக்களிலும் எதனை சமூகத்துக்குச் சொல்வது என்பதை மேற்சொன்ன விதிகளின் ஒளியில் நின்று சிந்தித்து முடிவெடுத்தே சொல்ல வேண்டும்.

இல்லாத போது நலவுகள் தவிர்க்கப்பட்டு கெடுதிகள் அடையப்படுவது தஃவா களத்தில் சர்வசாதாரணமாகி விடும். அத்தகைய நிலையை தஃவா களத்தில் பல போது அவதானிக்க முடியுமாக இருக்கின்றது.

🔹அறிந்திருந்தால் சொல்லத்தான் வேண்டுமா?!

ஒருவன் ஒரு விடயத்தை அறிந்து வைத்திருந்தால் கட்டாயம் அதனை சொல்லியே ஆக வேண்டும் என்ற கடப்பாடு மார்க்கத்தில் கிடையாது. அதனை சொல்வதற்கு முன்னர் குறித்த விடயம் உண்மையா பொய்யா?இ சரியா பிழையா?இ இதனை சொல்வதால் ஏற்படும் விளைவு அதிகம் நன்மையைத் தரக் கூடியதா அல்லது தீமையைத் தரக் கூடியதா?இ இதனை சொல்லாமல் விடுவதனூடாக ஏற்படும் தீமை சொல்வதால் ஏற்படும் தீமையை விடக் கூடியதா குறைந்ததா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற ஒரு நலவு இல்லாமல் போய் விடுமா? அல்லது இன்னுமொரு நன்மை தரக்கூடிய விடயம் உருவாக்கப்படுமா?இ இதனை சொல்வதால் ஏற்கனவே இருக்கின்ற தீமை இன்னும் அதிகரித்து விடுமா அல்லது குறைந்து விடுமா?... என்பன போன்ற இன்னோரன்ன கேள்விகள் கேட்கப்பட்டு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கத்துக்கு மாறுபடாத வகையில் அந்த எத்திவைத்தல் இருக்கும்.

அது மாத்திரமல்ல குறித்த விடயத்தைச் சொல்வதால் நன்மை ஏற்படுமா தீமை ஏற்படுமா என்ற விடயம் மார்க்கத்தின் அளவுகோல்களுக்கேற்பவே தீர்மானிக்கப்படவும் வேண்டும்இ மாற்றமாக தனிநபர்களின் மனோ இச்சைக்கும் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கும் ஏதுவானதாக அந்தத் தீர்மானம் அமையவும் கூடாது.

🔹தூதரின் வாழ்விலிருந்து சில ஆதாரங்கள்

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ''அடியார்கள் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் அவனை இபாதத் செய்வதும் அவனுக்கு யாதொன்றையும் இணை கற்பிக்காதிருப்பதுமாகும். அல்லாஹுத் தஆலா அடியார்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை யாதெனில் தனக்கு எதிலும் இணை வைக்காத யாரையும் தண்டிக்காமலிருப்பதாகும்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த முஆத் (ரழி) அவர்கள் ''நான் மக்களுக்கு இந்த நன்மாராயத்தை எத்திவைக்கட்டுமா?'' என்று கேட்டார்கள்இ அதற்கு நபியவர்கள் ''வேண்டாம் அவ்வாறு எத்திவைத்தால் அவர்கள் சோர்வடைந்து சோம்பேறிகளாகி விடுவார்கள்'' என்று கூறினார்கள். (புகாரிஇ முஸ்லிம்).

இங்கே மிக மிக முக்கியமான விடயமொன்றை பகிரங்கமாக எத்திவைக்க வேண்டாம் என்று நபியவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன?. இந்த செய்தி மக்களை சென்று சேர்வதனூடாக மனிதர்கள் அமல்களில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டு ஈமான் மட்டும் போதுமானது என்று முடிவெடுத்துக் கொண்டு சோம்பேறிகளாக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தைத் தவிர நிச்சயமாக வேறெந்தக் காரணமும் கிடையாது.

கஃபாவை உடைத்து மீண்டும் இப்றாஹிம் (அலை) அவர்கள் கட்டிய அத்திவாரத்தின் மீது அதனைக் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தும் அதனால் சமூகத்தில் ஏற்படக்கூடும் என்று நபியவர்கள் கருதிய பாரதூரமான விளைவுகளின் காரணமாக அந்த ஆசையைக் கூட தன் மனைவி ஆயிஷா (ரழி) அவர்களிடம் மாத்திரமே பகிர்ந்து கொண்டார்கள் நபியவர்கள்.

🔹தோழர்களின் வாழ்விலிருந்து

நபியவர்களிடமிருந்து மிக அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டுக் கொண்ட ஸஹாபிதான் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள். ஆனால் அவர்கள் இப்படிச் சொல்கின்ற ஒரு செய்தியை இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள். ''நான் நபியவர்களிடமிருந்து இரண்டு பாத்திரங்கள் நிறைய அறிவைப் பெற்றுப் பாதுகாத்திருக்கிறேன். அவற்றில் ஒன்றைப் பொறுத்த வரையில் அதனை நான் பரப்பியிருக்கிறேன்இ அடுத்ததைப் பொறுத்தவரையில் அதனை நான் பரப்பினால் இந்தக் கழுத்து துண்டாடப்பட்டு விடும்'' என்பதே அந்த செய்தியாகும்.

நபியவர்களுக்குப் பிந்திய காலத்தில் ஏற்படக்கூடிய பித்னாக்கள் பற்றிய அறிவிப்புக்களையே அவர்கள் எத்திவைப்பதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்கள். ஏனெனில் நேரடியாக அமல் செய்வதற்கு வழிகாட்டல்கள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றிய அந்த அறிவிப்புக்களை எத்திவைப்பதனூடாக தனக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டால் தான் நபியவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட அனைத்து முஸ்லிம்களினதும் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டல்கள் அடங்கிய ஹதீஸ்களை எத்திவைக்க முடியாமல் போய்விடுமே என்ற அச்சமே அத்தகைய ஒரு முடிவுக்கு அவர்களை வரச்செய்தது.

நபியவர்களின் ஹதீஸ்களை ரிவாயத் செய்தல் என்ற நன்மையையும்இ அந்த ரிவாயத்களின் உள்ளடக்கம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் ஏற்படும் பாதகங்களையும் நிறுத்துப் பார்த்து தனக்குத் தெரிந்த பல ஹதீஸ்களை அறிவிக்காமல் அந்த ஸஹாபி தவிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

''என்னுடைய இந்த இரண்டு செருப்புக்களையும் எடுத்துச் செல்லும் அபூ ஹுரைராவேஇ இந்த சுவருக்குப் பின்னால் உறுதியான உள்ளத்தோடு லா இலாஹ இல்லல்லாஹ் என்று சான்று பகர்பவருக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லும்'' என்று நபியவர்களால் அனுப்பப்பட்ட அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் உமர் (ரழி) அவர்களிடம் அடிவாங்கிக் கொண்டு நபியவர்களிடம் திரும்பிச் செல்கிறார். நபியவர்கள் உமரிடம் காரணம் கேட்ட போதுஇ இதனைச் சொன்னால் மனிதர்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள்இ எனவே சொல்லாமலிருப்பது சிறந்தது என்று உமர் (ரழி) அவர்கள் கூற நபியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இது முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

🔹தாபிஈன்களிடமிருந்து

இடையர்களைக் கொலை செய்த உரைனா வாசிகளை கொலை செய்யுமாறு நபியவர்கள் சொன்ன செய்தியை ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபிடம் அறிவித்த அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களை இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் கண்டிக்கிறார்கள். ஏற்கனவே ஹஜ்ஜாஜ் கொலை செய்வதில் பிரபலமானவன்இ அவனுக்கு இந்த ஹதீஸை சொல்வதனூடான அவன் தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ள வழி செய்து விட்டீர்கள் இந்த ஹதீஸை ஹஜ்ஜாஜுக்கு அறிவிக்காமலிருப்பது வாஜிபாகும்இ என்று இமாம் ஹஸனுல் பஸரீ அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்கு சொன்னவுடன் தான் செய்த செயலையிட்டு அனஸ் (ரழி) அவர்கள் மிகுந்த கைசேதப்பட்டார்கள்.

🔹அற்புதமான கருத்துக்கள்

''மனிதர்களுடன் அவர்களது அறிவுத் தரத்துக்கேற்ப பேசுங்கள்இ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?'' என்று அலீ (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''நீங்கள் ஒரு சமூகத்தில் அவர்களது அறிவுத் தரத்துக்கு எட்டாத விடயங்களைப் பேசும் போது ஃபித்னாக்கள் தான் உருவாகும்'' என்று இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்.

''ஒரு சிறந்த தாஇ என்பவன் ஒரு கைதேர்ந்த சமையற்காரனைப் போன்றவன்இ அவன் எப்படி யார் யாருக்கு என்ன வகையான ருசியுள்ள உணவு பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சமைப்பானோ அதே போன்றுதான் ஒரு தாஇ எந்தெந்த சமூகத்துக்கு என்னென்ன விடயங்களை எப்படி எப்படி எத்திவைக்க வேண்டும் என்ற அறிவுள்ளவனாக இருப்பான்'' என்று வஹப் இப்னு முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

🔹இறுதியாக...

தஃவா என்பது மின்பர்களில் நின்று கொண்டு தெரிந்த அனைத்தையும் உச்சஸ்தாயில் கொட்டுவதல்லஇ கண்ட அனைத்தையும் கேட்ட அனைத்தையும் அப்படி அப்படியே பச்சையாகச் சொல்வதுமல்லஇ அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சுவதில்லை என்ற கோஷத்தோடு சமுதாய நலன்கள் பற்றிய எவ்வித அக்கறையுமின்றி வீராப்புப் பேசுவதுமல்லஇ முன்முடிவுகளையும்இ வெறுப்புக்களையும்இ காழ்ப்புணர்வுகளையும்இ சொந்தக் கோபதாபங்களையும் கீபோர்டில் விரலோடி இணையத்தில் காட்சிப்படுத்துவதுமல்ல.

இவற்றுக்கெல்லாம் பின்னால் ஷரீஅத்தின் அடிப்படை நோக்கங்கள் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன. மஸ்லஹாஇ மகாஸித் என்ற சொற்களைக் கொண்டே மஸ்லஹாக்களும் மகாஸித்களும் துண்டு துண்டாய் சிதைக்கப்படுகின்றன. சத்தியமான வார்த்தைகள் முழங்கப்படுகின்றனஇ ஆனால் அசத்தியமான விளைவுகள் நாடப்படுகின்றன.

விளைவு அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதாக பெயர் போடப்பட்டு மார்க்கத்துக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


எதுவெல்லாம் பெரும்பாலானவர்களுக்குப் புரியாதோ அவை பேசப்படுகின்றனஇ எழுதப்படுகின்றன. அவற்றைப் பேசாதவர்கள் எழுதாதவர்கள் படு பயங்கரமான ஆளுமைக் கொலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒரு செய்தி சமூகத்துக்குப் பிரயோசனமானதா இல்லையா என்று பார்க்கப்படுவதற்குப் பதிலாக தன்னுடைய மேதாவித் தனத்தை படம் போட்டுக் காட்டி விட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு தாஇக்கு என்னென்ன தெரியும் என்பது அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடைப்பட்ட விடயம்இ ஏனெனில் அறிவை அல்லாஹ்வுக்காக மட்டுமே தேட வேண்டும். எனக்குத் தெரியும் என்று தம்பட்டம் அடிப்பதற்குத்தான் ஒருவனுக்கு அறிவு பயன்படுகின்றது எனின் அவன் ''அல்லாஹ்வுக்காக மாத்திரம் கற்கப்பட வேண்டிய கல்வியை உலக நோக்கம் ஒன்றுக்காகக் கற்பவன் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான்'' என்ற ஹதீஸை மனதில் இருத்திக் கொள்ளட்டும்.

ஒரு தாஇ தனக்குத் தெரிந்ததிலிருந்து தான் அறிந்ததிலிருந்து எதனை எத்திவைக்க வேண்டும் யாருக்கு எத்திவைக்க வேண்டும் எப்படி எத்திவைக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு தஃவாவின் ஆரம்ப அரிச்சுவடி. அதனை அறியாதவர்கள் குட்டையைக் குழப்பும் வேலையைச் செய்யாமல் ஒதுங்கியிருப்பது அவர்களுக்கும் சமூகத்துக்கும் தஃவா களத்துக்கும் செய்கின்ற மிகப் பெரும் சேவையாகும்.

ஒவ்வொரு விடயத்தையும் சொல்வதற்கு ஓரிடமிருக்கின்றதுஇ ஒரு நேரமிருக்கின்றதுஇ யாரிடம் சொல்ல வேண்டும் என்ற வரையறை இருக்கின்றது. அதனை அறிந்து புரிந்து பணி செய்கின்றவர்களாக அல்லாஹுத் தஆலா எம்மனைவரையும் ஆக்கியருள்வானாக!

ஆமீன்

2015.06.08

(நளீமிக்களுக்கிடையிலான வட்ஸ்அப் குறூப்பில் பகிரப்பட்டது. சகோதரருக்கு நன்றி)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: