Saturday, June 29, 2019

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர்..


 சுனந்த தேசப்பிரிய


ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­த­லா­னது இலங்கை சமூக அர­சி­யலில் பாரி­ய­தொரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அன்று வெடித்த குண்­டு­களின் அதிர்ச்சி இலங்­கையில் ஓயாத அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

பாது­காப்பு தொடர்­பாக சோடிக்­கப்­பட்டு வரும் கதை­யா­டல்­களால் பொது­வாக நாடே பீதியில் உறைந்­து­போ­யுள்­ளது. இதில் குறிப்­பாக முஸ்லிம் சமூ­கமே வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மனி­தா­பி­மா­னமே வெட்கித் தலை­கு­னி­யு­ம­ள­வுக்கு முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான வன்­முறை அர­சியல் கலா­சாரம் ஒன்று நாட்டில் தலை­தூக்கி யுள்­ளது.

ஜேர்மன் நாட்டை அத­ல­பா­தா­ளத்தில் தள்­ளிய பாஸி­ச­வா­தி­க­ளுக்­கெ­தி­ராக அந்­நாட்டில் தலை­யெ­டுத்த எதி­ரி­களை அடக்­கு­வ­தற்கு பாஸிஸ்­டு­க­ளாலும் இதே பாணி­யி­லான வெறித் தன­மான அடக்­கு­மு­றை­களே கையா­ளப்­பட்­டன. இலங்­கை­யிலும் இன்று இதே நிலையே உரு­வா­கி­யுள்­ளது. இந்த காட்­டு­மி­ராண்டிக் குழுவின் பின்னால் இட­து­சா­ரி­களும் ஜன­நா­ய­க­வா­தி­களும் துணை­போய்க்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவர்கள் தேசத்­து­ரோ­கிகள் என்று இப்­போதே இனம்­கா­ணப்­பட்­டுள்­ளார்கள்.

எந்தக் குற்­றச் செயலும் புரியாத டாக்டர் ஷாபியை தூக்­கி­லி­டும்­ப­டி­யான போராட்­டங்கள் ஆங்­காங்கே முடுக்கி விடப்­பட்­டுள்­ளன. இரத்­தி­ன­பு­ரியில் எத்­த­கைய முறைப்­பா­டு­க­ளு­மின்றி இரண்டு முஸ்லிம் வாலி­பர்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட சிங்­கள வாலி­பரை ஐந்து நிமி­டங்­களில் விடு­விக்­கும்­படி பௌத்த பிக்கு ஒருவர் பொலி­ஸுக்கு சவால் விடுத்­துள்ளார். அவ்­வாறு வெளி­வி­டு­வ­தற்குக் கோரி­யி­ருப்­பது கொலை செய்­வ­தற்­கென்றே குறித்த வாலி­பரின் தந்தை கூறி­யி­ருக்­கின்றார். சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் ரதன தேர­ருக்­காக வீதியில் இறங்கி திரண்­டி­ருந்தோர் முஸ்லிம் வாலி­பர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

முஸ்லிம் சமூ­கத்தால் சிங்­கள சமூ­கத்­திற்கு பேரா­பத்து விளை­விக்­கப்­ப­டு­வ­தாக போலிப்­பி­ர­சா­ரமே இது­வ­ரையும் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­துள்­ளது. மல­டாக்கும் வில்லைஇ கருத்­தடை போன்ற பீதி­யூட்டும் பிர­சா­ரமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தது. அதன் உச்ச கட்­ட­மாக சிங்­கள பௌத்த தாய்­மார்கள் 4000 பேர் மகப்­பேறு கிடைக்­காத வண்ணம் மல­டாகச் செய்­துள்­ள­தான பொய் முறைப்­பா­டுகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. இது மற்­று­மொரு கறுப்பு ஜுலைக்குத் தூப­மிடும் நாச­காரச் செய­லாகும். 1983 ஆம் ஆண்­டி­லி­ருந்து இன்­று­வ­ரையும் சமூக விரோத காடையர் கூட்ட பரம்­ப­ரை­யொன்று இருந்து வரு­வ­தையே இது உணர்த்­து­கி­றது. கறுப்பு ஜுலையின் விப­ரீத விளை­வுகள் குறித்து சிங்­கள சமூகம் இது வரையும் சுய­வி­சா­ரணை செய்யத் தவ­றி­யதன் விளைவே இதற்குக் கார­ண­மெ­னலாம். இலங்கை மக்கள் இதற்கு முன்னர் கண்­டி­ராத அள­வுக்கு இன மத வெறி தலைக்­கேறி மதம் சமூகம் என்று மக்கள் துரு­வங்­க­ளாக்கப் பட்­டுள்­ளனர்.

இதனால் நாட்டின் இன்­றைய சமூக அர­சியல் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தடுப்­ப­தற்கு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களும் எடுக்கத் தவ­றிய பொலிஸ்இ இப்­போது முஸ்லிம் விரோத நிறு­வ­ன­மாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றது.

அதி முக்­கி­யத்­துவம் வாய்ந்த பௌத்த வழி­பாட்­டி­டங்­க­ளுக்குத் தாக்­குதல் நடத்த இருப்­ப­தாக தகவல் கிடைத்­தி­ருந்தால் பொலி­ஸாரும் அரச உயர்­மட்­டத்­தி­னரும் வேறு வித­மாகச் செயற்­பட்­டி­ருப்­பார்­க­ளல்­லவா? பொலிஸார் சிறு­பான்­மை­யினர் விட­யத்தில் பார­பட்­ச­மா­கவே நடந்து வந்­துள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் நீர்­கொ­ழும்பு குளி­யாப்­பிட்­டி­யி­லி­ருந்து வாரி­யப்­பொல வரையில் பர­விய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­களை முன்­னரே தடுத்து நிறுத்­து­வ­தற்கு அரசு எத்­த­கைய நட­வ­டிக்­கை­களும் எடுக்கத் தவ­றி­யுள்­ளது. அது மட்­டு­மல்லஇ இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சாட்­சிக்­க­மைய மனி­தா­பி­மா­ன­மற்ற வன்­மு­றை­யா­ளர்­க­ளுக்கு பொலி­ஸாரும் துணை போன­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் குளி­யாப்­பிட்டி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட குழப்­பக்­கா­ரர்கள் நால்வர் பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் பணிப்பின் பேரில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு விடு­தலை செய்­யப்­பட்­டோரும் இணைந்தே பொலிஸார் பார்த்­தி­ருக்­கையில் குளி­யாப்­பிட்டி பள்­ளி­வாசல் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

கப்பல் சுக்கான் சின்னம் பொறிக்­கப்­பட்ட ஆடை­யுடன் காணப்­பட்ட மகி­யங்­க­னையைச் சேர்ந்த பெண்இ சிங்­கள யுவ­தி­யென்றால் பொலிஸார் எவ்­வாறு செயற்­பட்­டி­ருப்­பார்கள்? சின்னம் தொடர்பில் தெளிவு ஏற்­பட்ட பின்னர் விடு­வித்­தி­ருப்­பார்கள் அல்­லவா? மினு­வாங்­கொ­டையில் காட்டு மிராண்­டி­களால் படு­கொலை செய்­யப்­பட்ட முஸ்லிம் நபர் மர­ணத்­துடன் போரா­டிக்­கொண்­டி­ருந்த நிலையில் காட்­டு­மி­ராண்­டி­க­ளுடன் பொலி­ஸாரும் கூடவே அவரின் உடலை தரை­வ­ழியே இழுத்துச் சென்­றார்­க­ளல்­லவா? அந்­நபர் ஒரு சிங்­க­ள­வ­ராக இருந்தால் பொலிஸார் இப்­படி நடந்து கொள்­வார்­களா?

இலங்­கையில் முஸ்­லி­மாகப் பிறப்­பது பெருந்­த­வறு என்று எண்ணுமளவுக்கு முஸ்லிம் என்­பதால் இம்­சைக்­குள்­ளாகும் சம்­ப­வங்கள் தொட­ரவே செய்­கின்­றன.

முஸ்லிம் பெண்­க­ளுக்கு புர்­கா­வையும் நிகா­பையும் தடை­செய்த அர­சாங்கம் அதனைத் தொடர்ந்து சகல அரச பெண் ஊழி­யர்­களும் சிங்­கள பெண்­ம­ணிகள் அணியும் சாரி உடுத்து வேலைக்கு வர வேண்டும் என்று பணிப்­புரை விடுத்­துள்­ளது. அரச நிறு­வ­னங்­க­ளுக்கு வரும் சகல பெண் ஊழி­யர்­களும் சாரி அணிந்தே வர வேண்டும் என்றும் சுற்­று­நி­ருபம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அதனால் எழுந்த எதிர்ப்­பினால் அந்த சுற்­று­நி­ரு­பமும் வாரிச்­சு­ருட்­டப்­பட்­டது? இதி­லி­ருந்து நாம் விளங்­கிக்­கொள்­வது முஸ்­லிம்­களை மட்டம் தட்­டு­வ­தற்­காக எல்லா வழி­க­ளிலும் எத்­தனம் நடக்­கி­றது என்­ப­துதான் தெளிவு.

தற்­போது இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு சட்ட ரீதி­யாக அநீதி இழைக்கும் முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. டாக்டர் ஷாபி ஆளு­நர்­க­ளாக இருந்த ஹிஸ்­புல்லாஹ் அஸாத் சாலி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுத்தீன் ஆகி­யோருக் கெதி­ராக பொலிஸார் நடந்­து­கொள்ளும் முறை­மையை இதற்கு உதா­ர­ண­மாகச் சுட்டிக் காட்­டலாம். சாட்­சிகள் ஏதும் இல்­லாமல் அடிப்­ப­டை­வா­தி­களின் கோஷங்­க­ளுக்­காக வேதான் இவர்கள் விட­யத்தில் பொலிஸார் செயல்­ப­டு­கி­றார்கள். ஷாபி கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் தான் அவ­ருக்­கெ­தி­ரான முறைப்­பா­டுகள் குறித்து கோரிக்கை விடுக்­கின்­றனர். இதே போன்­றுதான் மேற்­படி அர­சி­யல்­வா­தி­களுக் கெதி­ரான முறைப்­பா­டு­க­ளையும் கேட்டு கால அவ­காசம் வழங்­கு­கி­றார்கள். உலகில் எந்­த­வொரு ஜன­நா­யக நாடு­க­ளிலும் காணப்­ப­டாத புது­மை­யான சட்ட முறை­மையே இங்கு கையா­ளப்­ப­டு­கி­றது.

பல்­வேறு முறைப்­பா­டு­களும் சுமத்­தப்­படும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ளர்­க­ளான ஹேம­சிரி பெர்­ணாந்து கோதா­பய ராஜபக் ஷ ஆகி­யோரை கைது செய்து முறைப்­பா­டு­களைத் தெரி­விக்­கும்­படி கோரிக்கை விடுக்­கா­தது அவர்கள் சிங்­கள பௌத்­தர்கள் என்­ப­த­னாலா?

முஸ்லிம் விரோத அர­சி­யலின் உச்­ச­பட்ச சட்டத்தை ரதன தேரரின் உண்­ணா­வி­ரதம் வெளிப்­ப­டுத்­தி­யது. ரத்ன மற்றும் ஞான­சாரர் போன்ற அடிப்­ப­டை­வாத பிக்­கு­களும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்ஜித்தும் சிங்­கள பௌத்த அர­சியல் வாதி­யான சம்­பிக்க ரண­வக்க உள்­ளிட்டோர் ஒன்­று­பட்டு முஸ்லிம் அர­சியல் வாதி­க­ளுக்­கெ­தி­ராக எழுப்­பிய கோஷத்­திற்கு ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் அடிமைப் படும் நிலை ஏற்­பட்டு விட்­டது. அர­சாங்­கத்தின் இத்­தோல்­வியை தனிப்­பட்ட ரீதியில் முஸ்லிம் அர­ச­ியல்­வா­தி­களால் வெற்­றி­கொள்ள முடிந்­துள்­ளது. கட்சி வேற்­றுமை பாராது அவர்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு அர­சாங்­கத்­தி­லி­ருந்து பத­வி­களைத் துறந்­ததன் மூலம் வெற்­றி­வாகை சூடி­யுள்­ளனர்.

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக தாக்­குதல் நடத்­தியோர் எத்­த­கைய தரா­த­ரமும் பாராது தண்­டனை வழங்க உரிய நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டியும் அர­சி­யல்­வா­திகள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஒரு மாதத்­திற்குள் விசா­ரணை நடத்தி தீர்த்து வைக்­கும்­ப­டியும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­திற்கு தம் செய்­தியை எத்தி வைத்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் பலம்­வாய்ந்த இஸ்­லா­மிய நாடு­களின் அமைப்பும் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்டு இவர்­க­ளது கோரிக்­கைக்கு உரம் சேர்த்­துள்­ளது.

பித்துப் பிடித்த சிங்­கள பௌத்த அர­சி­யல்­வா­தி­களால் தூண்­டப்­படும் முஸ்லிம் விரோதப் போக்­கினால் பெரு­ம­ளவில் முஸ்­லிம்கள் மீதான கல­வரம் வெடிக்­கு­மானால் சர்­வ­தேச ரீதியில் இலங்கை மிகவும் பாரிய நஷ்­ட­ஈட்டை செலுத்­த­வேண்டி வரும். சுமார் பத்து இலட்சம் இலங்­கையர் மத்­திய கிழக்கு நாடு­களில் பணி­பு­ரிந்து வரு­கின்­றனர். இந்­நாட்­டுக்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­த­ரு­வதில் இதுவே பிர­தான பங்கு வகிக்­கி­றது. அத்­துடன் ஜெனீவா மனித உரி­மைகள் கவுன்­ஸிலில் இலங்­கைக்கு ஏற்­க­னவே உள்ள அவப்­பெயர் மேலும் சீர் கெட்டுப் போவ­தற்கும் இது வழி­வ­குத்­து­விடும்.

தேசிய ரீதியில் இந்­நாட்டில் முஸ்­லிம்கள் மூன்­றா­வது சமூ­க­மாக இருந்து எத்­தனை இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்? வன்­முறைக் கொடு­மைகள் மட்­டு­மல்லஇ முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களில் நுகர்­வுக்­கான தடை ஹலால் சான்­றிதழ் இல்­லா­ம­லாக்கல் பர்­தா­வுக்­கான தடை முஸ்லிம் சர்­வ­க­லா­சாலை மாணவ மாண­வி­க­ளுக்­கான விடு­திகள் வழங்­காமை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­படும் முஸ்­லிம்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­தத்­திற்கு உடந்­தை­யா­ன­வர்கள் என்று ஊட­கங்கள் ஊடாக புகைப்­ப­டத்­துடன் காட்­சிப்­ப­டுத்தல் முஸ்லிம் வைத்­தி­யர்­களை நாடாது சிங்­க­ள­வர்­களைத் தடுத்தல் – இத்­த­கைய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து வரும் சமூகம் தொடர்ந்தும் தலை­கு­னிந்து கொண்­டி­ருக்­குமா?

இந்­நாட்டு முஸ்லிம் மக்கள் பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்­க­வில்லை. அத்­துடன் சஹ்ரான் ஹாஷிமின் தீவி­ர­வாதம் தொடர்­பாக முஸ்­லிம்­கள்தான் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்தை இந்­நாட்டு முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து பிடுங்­கி­யெ­றி­வ­தற்குஇ சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களின் குரல்­க­ளுக்கு தலை­சாய்ப்­பதன் மூலம் சாதித்­து­விட முடி­யாது.

முஸ்­லிம்­க­ளுக்கு சமமான அந்தஸ்தை வழங்கிஇ அவர்களும் உரிமையோடு வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலமே சாதிக்கவேண்டும்.

விடயம் இவ்வாறிருக்கையில் முஸ்லிம்களுக்கு சமஉரிமைஇ பாதுகாப்பு வழங்குவதில் ஜனாதிபதி சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறவே தவறியுள்ளனர். ராஜபக் ஷ ரதன தேரர் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கி நிலைமையை மேலும் உக்கிரமடையவே வழிசெய்கின்றனர். முஸ்லிம் எதிர்ப்பு மேலும் பற்றியெரிவதற்கு ரதனஇ ஞானசாரஇ மெல்கம்இ சம்பிக்க ஆகிய நால்வரும் மேலும் எண்ணெய் வார்த்து ஜனாதிபதி தேர்தலிலே கண் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையேயான சமநிலை மற்றும் நேர்மைப் பண்புகளை நிலைநாட்ட வேண்டிய சவாலையே இன்று இலங்கை எதிர்கொண்டுள்ளது. இனவாதஇ வன்முறை அரசியல் தோற்கடிக்கப்படவேண்டும். இவற்றிலிருந்து நாம் வெற்றி கொள்ளத் தவறுவோமானால் நாடு என்ற வகையில் இலங்கையும் படுநாசத்தில் தள்ளப்படும்.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது எவரது அரசியல் களியாட்ட வண்டியிலோ அல்லது பென்ஸ் வண்டியிலோ ஏறுவதா? அல்லது எங்களுக்கென்ற சுயாதீன வண்டியொன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதா?

(From Face book page of AL Thavam)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: