Showing posts with label அமீர் அலி. Show all posts
Showing posts with label அமீர் அலி. Show all posts

Saturday, March 16, 2013

கிழக்கு மாகாண சபையில் பொதுபல சேனாவுக்கு அமீர் அலி சாட்டை



இன்று 'ஹலால்' சம்பந்தமாக இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைக்கு ஓர் பிரேரணை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் கௌரவ தலைவி அவர்களேஇ முஸ்லிம்களை பொறுத்த வரையில் அவர்கள் வரையறையோடு வாழ வேண்டிதொரு சமூகம். அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக 'புனித குர்ஆன்' என்கின்ற நூல் இருக்கின்றது.

அந்நூலில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவனுடைய நடவடிக்கைகள், வாழ்க்கை, அவன் உணவு உண்பது எப்படி, ஏனையவர்களோடு நடந்து கொள்வது எப்படி,  அயலவர்களோடு நடந்து கொள்வது எப்படி, அந்நிய உறவுகளோடு நடந்து கொள்வது எப்படி, அரச அதிகாரிகளோடு நடந்து கொள்வது எப்படி, அரசனோடு நடந்துகொள்வது எப்படி,  ஒரு சிறுபான்மையாக இருக்கின்ற பொழுது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,  நாங்கள் பெரும்பான்மை சமூகமாக இருந்தால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒட்டு மொத்த தெளிவினை கூறுகின்ற நூலாக முஸ்லிம்கள் அதனை நம்புகின்றார்கள்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் 'அல் குர்ஆன்' ஐ பற்றி பிரச்சினை ஒன்று வருகின்ற போது யாரும் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. அந்த 'அல் குர்ஆனால்தான் கூறப்படுகின்றது  நாங்கள் எவ்வாறான உடைகள் அணியவேண்டும், எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும் எவ்வாறான உணவை நாங்கள் தேடிக்கொள்ள வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற அனைத்தையும் வரையறையோடு அழகாக கூறப்பட்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில் முஸ்லிம் ஒருவன் உண்ண வேண்டிய உணவு 'ஹலால்' என்று கூறப்படுகின்றது. 'ஹலால்' என்பது 'ஆகுமாக்கப்பட்ட உணவு' இதன் வரைவிலக்கணம் மிக நீண்ட தூரம் பேசுகின்ற வரைவிலக்கணம். 'அந்த உணவை வாங்குவதற்கு அவனுடைய உடல் உழைப்பினால், நியாய பூர்வமாக உழைக்கப்பட்ட பணத்தை கொண்டு வாங்கியிருக்க வேண்டும். தடுக்கப்பட்ட உணவாக இருக்க கூடாது அவ்வாறு கூறப்படுகின்றது'. இதை 'ஹலால்' என்று நாங்கள் கூறுவோம்.

அதேபோன்று 'ஹராம்' என்று ஒன்று இருக்கின்றது. இவை மனித குலத்திற்கு தடுக்கப்பட்ட விடயங்கள். விஷேடமாக முஸ்லிம் சமூகத்திற்கும், உலகத்தில் உள்ளவர்களுக்கும் தடுக்கப்பட்டவையாக 'குர்ஆன்' கூறுகின்றது.

'குர்ஆன்' என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரைக்கப்பட்ட நீதி புத்தகம் அல்ல. இந்த உலகத்தில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானதொரு நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சாசனம். அந்த சாசனத்தை கூடுதலாக முஸ்லிம்கள் ஏற்று அவர்களின் திருமறையாக, அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாரமாக அதனை ஏற்றுக் கொண்டு நேசிக்கின்றார்கள்.

இந்த திருமறையில்தான் ('குர்ஆன்') 'ஹலால், ஹராம்' பற்றி கூறப்பட்டிருக்கின்றது. எவ்வாறான உணவு உண்ணப்பட வேண்டும் இதற்கு ஒவ்வொரு நாடுகளிலும்இ ஒவ்வொரு திட்டங்கள் காணப்படும். அங்கு உணவு தயாரிக்கின்ற முறைமை, அவர்களுடைய நடை, உடை பாவனைகள், 'ஹராம் ஹலால்' உணவில் மாத்திரம் அல்ல. நாங்கள் அணிந்திருக்கின்ற ஆடையில் 'ஹலால் ஹராம்' இருக்கின்றது. இந்த விடயத்தில் 'ஹலால்' ஆன பணத்தில் வாங்கப்பட்டதா? உண்மையான உழைப்பின் மூலம் பெறப்பட்டதா?.... என்பது போன்ற சட்ட முறைப்படி நடந்து கொள்கின்ற வழிமுறைகளையும்,  மதத்தை பின்பற்றுகின்ற வழிமுறைகளையும் இஸ்லாமியர்கள் 'ஷரிஅத்' என்று கூறுவார்கள்.

அந்த 'ஷரியா' சட்டத்தின் படி நாங்கள் நடந்து கொள்கின்றோமா, திருமணம் செய்கின்றோமா, பிள்ளை பெறுகின்றோமா, அந்த பிள்ளைகளை 'ஷரியா' சட்டத்தின் படி வளர்க்கின்றோமா, இல்லை என்றால்,  அது எங்களுக்கு 'குர்ஆன்' இல் கூறப்படுகின்றது அதற்கு தண்டனை இருக்கின்றது என்று. அயலவர்கள்; எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சரி, 'அயலவன் பசித்திருக்க நீங்கள் உண்ணாதீர்கள்'. அவன் சிங்களவராக இருக்கலாம், தமிழராக இருக்கலாம், பறங்கியராக இருக்கலாம் அவர் உண்ணாமல் கஸ்டத்தில் இருக்கின்ற போது நீங்கள் உண்ணாதீர்கள். உங்களது வீட்டில் வாசனையோடு உண்ணுகின்ற பொழுது எவ்வளவு தூரத்திற்கு உங்களது வீட்டின் அந்த வாசனை செல்லுமோ, அத்தனை வீட்டிற்கும் நீங்கள் திருப்திப்படுத்துகின்ற ஆத்மாவாக இருக்க வேண்டும் என்று 'குர்ஆன்' கூறுகின்றது.

இதன் அடிப்படையில்தான் 'ஹராம் ஹலால்' என்பது தவிர்க்கப்பட்டவை, ஆகுமாக்கப்பட்டவை என்ற விடயம் வருகின்றது. எப்பொழுதும் இந்த 'குர்ஆன்' ஐ முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

கௌரவ தலைவி அவர்களே...

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள், அவர்களின் தொழில்துறைகள், அவர்கள் ஆடை அணிதல், அவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் உணவு நடவடிக்கைகள் உங்களுக்குத் தெரியாத விடயம் அல்ல.

இந்த சபையில் இருக்கின்ற கௌரவ தமிழ், சிங்கள் முஸ்லிம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும் இது இன்று நேற்று தொட்டு வந்ததல்ல. எப்பொழுது நாம் ஒரு இஸ்லாமியனாக பிறக்கின்றோமோ அன்றிலிருந்து 'குர்அன்' சட்டம் எங்களுக்கு ஆரம்பமாக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் எமது பெற்றோர்களால் சொல்லித் தரப்படுகின்றது. அதன் பிறகு எங்களுடைய  மௌலவிகளாலும், உலமாக்களாலும் கூறப்படுகின்றது. இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் உங்களுக்கு நரகத்தில் வேதனை இருக்கின்றது. இதை செய்வீர்கள் என்றால் உங்களுக்குத் சொர்க்கத்தில் நல்ல விடயங்கள் காத்துக் கொண்டிருக்கினனத என்று கூறுகின்றாhர்கள்.

இந்த நாட்டில் இருக்கின்ற, உலகத்தில் இருக்கின்ற ஒட்டு மொத்த முஸ்லிம்களும் இதனை நம்புகின்றார்கள்.

நாங்கள் 'ஷரியா' சட்டத்தை நிறைவேற்றுகின்ற போது 'ஹலால்இ ஹராம்' ஐ பேணி நடக்கின்ற பொழுது ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக வாழ அவனுக்கு கிடைக்குமென்று கூறினால்,  அவர் இந்த உலகத்தில் மாத்திரமல்ல இன்னுமொரு உலகம் இருப்பதாக அதில் எங்களுக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் என்கின்ற அந்த செய்தியோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். நாங்கள் மரணம் நிச்சயம் என நம்பிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றவாகள்;. இவ்வாறான காலகட்டத்தில்தான் நாட்டில் அவசரமாக முளைத்திருக்கின்ற ஒரு பிரச்சினை 'ஹலால் ஹராம்'. 'ஜமியத்துல் உலமா' என்கின்ற ஓர் நிகழ்வோடு கூடிய பிரச்சினை.

'ஜம்மியத்துல் உலமா' என்பது நாட்டில் இருக்கின்ற அஸ்கிரிய, மல்வத்த பீடம் போன்று முஸ்லிம் சமூகத்துக்கென்று இருக்கின்ற ஒரேயொரு சபை. நாட்டில் இருக்கின்ற உலமாக்கள் இஸ்லாமிய மதத் தலைவர்களை உள்ளடக்கிய, நிரந்தரமான ஓர் சபையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த சபைக்கு எவ்வாறான பிரச்சனைகள் வருகின்ற போது ஷரிஆ என்கின்ற 'குர்ஆன்'ல் கூறப்பட்ட சட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும்.

அந்த சட்டத்தில் பிரச்சினைகள், ஏற்படுகின்ற பொழுது 'ஜம்மியத்துல் உலமா' குறித்த விடயம் இஸ்லாத்திற்கு முரணானது, குர்ஆனுக்கு முரணானது என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையன்றி ஆயுதத்தை எடுங்கள் பயிற்சி பெறுங்கள் அதைச் செய்யுங்கள், சிங்களவரை அடியுங்கள், தமிழர்களை இழிவுபடுத்துங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களை உடையுங்கள் என்ற வழிகாட்டலை கூறுகின்ற சபையாக நீங்கள் எப்பொழுதும் கண்டிருக்க முடியாது.