உறக்கம் கொள்ளவில்லை!
உறங்கினேன், எகிப்து கண்முன்னால் விரிந்தது...
அலை கடலென மக்கள் திரளும் எதிரணியின் தாக்குதலும் நடைபெறுவதாகக் குட்டிக் குட்டியாகச் செய்திகள் கசிகின்றன.
மீண்டும் கலாநிதி முர்ஸி அவர்கள் பதவிக்கு வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஒரு செய்தி பேசுகிறது.
ஒரு வருடம் கூட நிறைவடையாத இஹ்வான்களின் ஆட்சி, தசாப்தங்களின் கனவு என்பதைச் சில கற்றுக் குட்டிகள் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இஹ்வான்களையும் இஸ்லாத்தையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் இஹ்வான்களைக் கோரமாகக் கொன்று புதைத்து விட்டு அமெரிக்கக் கனவான்களாக ஆட்சி நடத்தியதே எகிப்தின் வரலாறு.
கப்றுகளுக்குள் புதைக்கப்பட்ட குமுறல்களதும் அடக்கி வாசிக்கப் பணிக்கப்பட்ட இதயங்களதும் பெரு மூச்சுதான் ஒரு குறுகிய கால இஹ்வான்களின் அரசு.
எகிப்தும் அதன் மக்களும் எனது தேசத்தையும் அதில் வாழும் ஒரு மனிதனையும் எனது அயலானையும் விட முக்கிமானவர்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு இஸ்லாமியனும் சர்வதேசத்தின் பிரஜை என்ற அடிப்படையில் எகிப்து பற்றியும் ஒரு கவனத்தைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக இறை நீதியே ஆள வேண்டும் என்ற அழகிய கனவோடு வாழ்க்கை முழுவதுமாகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அறிஞர் பெருமக்களும் இறை நம்பிக்கையாளர்களும் காலங் காலமாக வஞ்சிக்கபட்டே வந்தார்கள் என்பதையும் கொலையுண்டு வந்தார்கள் என்பதையும் சர்வதேச முஸ்லிம் உம்மத் எங்ஙனம் மறக்கவியலும்?
அறபுத் தேசங்களில் இடம் பெற்று வரும் மாற்றங்களால் தமது நலன்கள் ஆபத்தை நோக்கி நகர்வதைத் தெளிவாகக் கண்டு கொண்ட மேற்குக்கு இம்முறை வியர்க்கவில்லை. அது நடுங்கத் தொடங்கி விட்டது.
எதிர்காலத்தில் ஆழ வேரூன்றிய அராபியத்தை இன்னும் பகிரங்கமாக அழித்தொழிப்பதில் அது தனது முழுச் சக்தியையும் செலவிடும்.
குறுகிய கால ஆட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளாக நேரிட்டமைக்கு பலநூறு காரணங்களை ஒவ்வொருத்தர் சொல்ல முடியும். கலாநிதி முர்ஸி மட்டுமல்ல, அவருக்குப் பக்க பலமாக நின்ற இஹ்வான்களும் நேராகவோ மறைமுகமாகவோ தங்களது ஹிக்மத்துகள் மூலம் அரசைக் கொண்டு நடத்தத் திட்டமிட்டது சரியாக இருக்கலாம். நியாயமாக இருக்கலாம். அதுவே சரியானதும் நேர்மையானதும் இஸ்லாமிய வழிகாட்டல் என்றும் கருதியிருக்கலாம்.
ஆனால் பகைவன் எத்தகையவன் என்ற கணிப்பீட்டுக்கு அவர்கள் சரியான மொழியில் பதில் தரவில்லை. அதாவது பகைவனின் மொழியில் அவனுக்குப் புரியும் மொழியில் இஹ்வான் அரசு பதிலளித்திருக்க வேண்டும்.
அரசை ஏற்றுக் கொண்ட பிறகு எல்லா எதிரிகளுக்கும் (அரசியல் எதிரிகள் உட்பட) மன்னிப்பு வழங்கிக் கருணை புரிந்தது மாபெரும் தவறு என்பதையே நான் அழுத்தியுரைக்க விரும்புகிறேன்.
விரும்பியோ விரும்பாமலோ நாம் வாழ்வதெல்லாம் மேற்கத்தேயங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே என்பதை எந்தப் புத்தி ஜீவியும் மறுக்கப் போவதில்லை. அவ்வாறான ஓர் உலகத்தில் அரசியல் நடத்துவது என்பது - அது இஸ்லாமிய அரசாக இருந்த போதிலும் - அதே பாணியிலான ஆட்டத்தோடு ஆரம்பிக்கப்பட வேண்டியது என்பதே எனது கருத்தாகும்.
இன்னும் சரியாகச் சொல்வதானால் அரசியல் எதிரிகள் ஒழித்துக் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதை இன்னும் அழகாகச் சொல்வதானால் எவன் எவனெல்லாம் மேற்கின் அடிவருடியாக இருக்கிறானோ அவன் மீது ஓர் வலையை விரித்து வைத்திருந்திருக்க வேண்டும். ஆபத்தானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், இஸ்லாமியப் பேரரசின் நலனை விட, சொந்த நாட்டின் நலனை விடத் தனதும் தனக்குப் பக்க பலமாக மேற்கும் இருக்கும் என்று கருதியவர்களைப் போட்டுத் தள்ளி விட்டு மறுவேலை பார்த்திருக்க வேண்டும். ஆகக் குறைந்தது பத்துப் பதினைந்து பேரைப் பிடித்து உள்ளே போட்டு வைத்திருந்திருக்க வேண்டும்.
ஆபத்தானவர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை நெடுங் கயிற்றில் விட்டு வைத்திருந்ததன் பலனாக நூற்றாண்டுக் கனவு நொடிக்குள் முடிவுக்கு வந்துவிட்டது.
நாளையே கலாநிதி முர்ஸி மீண்டும் பதவிக்கு வந்து விடலாம். அல்லது பலநூறு கொலைகளுக்குப் பிறகு இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் இன்னொரு பகுதி நிறைந்த பிறகு வேறொரு இஹ்வான் சகோதரர் பதவிக்கு வரலாம்.
எதிரிக்கான பாஷையைக் கற்றுக் கொள்ளாமல் அவனுக்குப் பதிலடி கொடுத்த படி அரசு செய்யவில்லை என்றால் காலம் முழுவதும் இஹ்வான்களின் கபுர்களால் எகிப்தின் புகழ்பூத்த நிலம் நிறைவதைத் தடுக்க யாராலும் முடியாது.
என்னுடைய கருத்தோடு யாரும் முரண்படலாம். என்னைத் திட்டலாம். எனக்கு இஸ்லாம் போதிக்க வரலாம். ஆனால் எனது கருத்தில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.
ஏனெனில் அழிக்கப்பட்ட அல்லது முடித்து வைக்கப்பட்ட அழகிய கனவின் நனவாதலை ஆழ அவாவி நின்றவர்களின் நானும் ஒருவன்!