Showing posts with label ஒரு குடம் கண்ணீர். Show all posts
Showing posts with label ஒரு குடம் கண்ணீர். Show all posts

Thursday, May 23, 2013

பாக்கிஸ்தான் போன பயங்கரவாதி!



எனது பெயர் முராத் குர்னாஸ். நான் ஜேர்மனியின் பிரமன் நகரைச் சேர்ந்தவன். எனது பெற்றோர் துருக்கிய வம்சாவழியினர். எனது தந்தையார் மேர்சிடஸ் தொழிற்சாலையில் கடமை புரிகிறார். நான் பிறந்து வளர்ந்து வாழ்வதெல்லாம் ஜேர்மனியில்தான்.

 2001ம் ஆண்டு நான் ஒரு துருக்கியப் பெண்ணைத் திருமணம் செய்தேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் இஸ்லாம் பற்றிய போதிய அறிவு எனக்கு இருக்கவில்லை. எப்படித் தொழுவது என்று கூட எனக்குத் தெரியாது. இஸ்லாம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற் பட்டது. ஏனெனில் தெரிந்து கொண்டால்தான் பள்ளிவாசலுக்குச் சென்று என்னால் தொழ முடியும். பிரமனில் உள்ள இஸ்லாமிய இயக் கத்தில் விசாரித்த போது அவர்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லுமாறு எனக்குச் சிபார்சு செய்தார்கள். நான் பாக்கிஸ்தானுக்குச் செல்வதெனத் தீர்மானித்தேன். ஆனால் அதை எனது குடும்பத்தாரிடம் நான் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் நிச்சயமாகச் சொல்கி றேன்|எனது தாய் என்னை அனுமதித்திருக்கவே மாட்டார்.

இந்தப் பயணத்தை நான் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தப் பயங்கரம் நடந்தது. அமெரிக்க உலக வர்த்தக மையத் தாக்குதலைத்தான் சொல்கிறேன். உண்மையில் என்னை மிகவும் திகைப்படையச் செய்த சம்பவம் அது. உலக வர்த்தக மையத் தாக்குதலுக்கும் எனது பயணத்துக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதால் நான் திட்டமிட்டபடி பாக்கிஸ்தான் நோக்கிப் புறப்பட் டேன். ஆனால் அப்போது அப்பயணத்தை நான் மேற்கொண்டிருக்கக் கூடாது என்பது இப்போதுதான் புரிகிறது.

அங்கு சில வாரங்கள் தங்கி எனது விடயங்களை முடித்துக் கொண்டு ஜேர்மனி திரும்புவதற்காக பஸ்ஸில் வந்து கொண்டிருந் தேன். பாதையில் ஒரு வழமையான பரிசோதனைத் தடை இருந்தது. அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. நான் அமர்ந்திருந்த ஆசனத் தருகே இருந்த யன்னல் கண்ணாடியைத் தட்டி 'இவன்தான்' என்று ஒரு பாக்கிஸ்தானியப் பொலிஸ்காரன் சொல்வது கேட்டது. பொலிஸார் என்னை பஸ்ஸிலிருந்து வெளியே இறக்கியெடுத்தனர். எப்படி இது நிகழ்ந்தது என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. சில வேளை பாக்கிஸ்தானியருடைய உடல் தோலை விட எனது தோல் சற்று வெளிச்சமானதாக இருப்பதால் அவர்கள் என்னை வேறுபடுத்தி அடையாளப்படுத்தினார்கள் போலும்.

எனது பயணத்தைத் தடை செய்து என்னை அமெரிக்கப் படையினரிடம் பாக்கிஸ்தானியப் பொலீஸார் கையளித்தனர். இதற்குச் சன்மானமாக பாக்கிஸ்தானியப் பொலீஸாருக்கு அமெரிக்கத் துப்பாய்வுத் துறை 3000 டாலர்களைக் கொடுத்ததாக நான் அறிய வந்தேன். அமெரிக்கப் படையினர் என்னை விமானத்தில் ஆப்கானிஸ் தானின் கந்தஹார் நகரிலுள்ள அவர்களது தளத்துக்குக் கொண்டு வந்தார்கள். அங்கு ஏற்கனவே களச் சண்டையில் பிடிபட்டோருடன் என்னை அடைத்து வைத்தார்கள். எனக்கு அவர்கள் வழங்கிய இலக்கம் 53. நான் அடைக்கப்பட்டிருந்த சிறை குளிரினால் உடல் சில்லிடக் கூடிய இடமாக இருந்தது.

ஒரு நாள் இரவு ஓர் அலறல் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது. போர்வையொன்றால் முகம் மறைக்கப்பட்ட ஓர் இளைஞ னின் தலையில் ஒரு தடித்த கட்டையினால் அடித்துக் கொண்டிருந் தார்கள். அந்தக் கூக்குரலில்தான் நான் எழும்பியிருக்க வேண்டும். அவனது வயிற்றில் உதை விழுந்தது. சரியாக எண்ணிப் பார்த்தேன்| அவனைச் சுற்றி ஏழு அமெரிக்கப் படை வீரர்கள் சூழ்ந்து நின்று தாக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலை அந்த இளைஞன் இறந்து விட்டான்.

அவர்கள் தினமும் என்னிடம் விசாரணை நடத்தினார்கள். எனது உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சிச் சித்திரவதை செய்தார்கள். அவர்கள் பின்வரும் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டார்கள். 'ஒஸாமா பின் லேடன் எங்கேயிருக்கிறார்? நீ அல்கயீதா இயக்கத்தைச் சேர்ந்தவனா அல்லது தலிபான் இயக்கத்தைச் சேர்ந்தவனா?' அப்போதெல்லாம் 'நான் ஒஸாமா பின் லேடனைக் கண்டது கிடை யாது| அல்கயீதாவைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது' என்று பதில் கூறி வந்தேன். 'நான் புறப்பட்டு வந்ததிலிருந்து பாக்கிஸ்தானி லேயே இருந்தேன்' என்பதைத் தெளிவாக விளக்கிச் சொன்னேன்.


'நீங்கள் கேட்கும் எதைப் பற்றியும் நான் அறியாதவன். உங்க ளுக்கு அவசியமாயின் ஜேர்மனியில் எனது முகவரியைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய எல்லா விபரங்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்' என்று அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களோ பைத்தியம் பிடித்தவர்களைப் போலத் திரும்பத் திரும்ப அதே வினாக்களைத் தொடர்ந்து கேட்டுத் தாக்கினார்கள்.

எனது இரு கைகளையும் பின்னால் கட்டி விட்டு அதிலேயே இன்னொரு கட்டுப் போட்டு உயரத்தில் தொங்க விட்டார்கள். அதாவது பின்னால் கட்டப்பட்ட எனது கரங்களினாலேயே எனது உடற் பாரத்தைச் சில வேளை நாட் கணக்காக நான் தாங்க வேண்டி யிருந்தது எனக்கு நிகழ்ந்த பெருங் கொடூரமாகும். உடலுக்குக் குறுக் காகக் கட்டித் தொங்க விடப்பட் டிருந்த ஓர் இளைஞனை ஒரு நாள் கண்டேன். இன்னொரு முறை ஊதிப் பெருத்த நீல நிறமான ஓர் உருவத்தையும் நான் கண்டேன். உடலில் ஆங்காங்கு வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருந்தன. அநேகமாக அது ஐஸ் கட்டிக ளில் வளர்த்தப் பட்டுக் கொல் லப்பட்ட ஓர் உடலாக இருக்கும் என்று நினைத்தேன்.