திடுக்கிட்டு எழுந்த போதுதான் தான் கண்டது கனவு என்பது உறைத்தது அவனுக்கு. ஆனால் அவன் சிந்தை பெருங் குழப்பத்தில் இருந்தது.
ஒன்றும் தோன்றாத நிலையில் எழுந்து அமர்ந்திருந்த நிலையில் கைகளைக் கூப்பி மெதுவாகத் தனக்குள் பாடத் தொடங்கினான்...
பொன்னார் மேனியனே... புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொண்டையணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே...
மனசு லேசானது போல் இருக்க மெல்லச் சாய்ந்து உறங்கிப் போனான்.
கடந்த சில வாரங்களாக கிறீஸ் மேன் பற்றிய செய்திகளை அவன் ஆர்வத்துடன் படித்து வந்தான். இதற்குள் இருக்கும் சூட்சுமம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது பேராவலாக இருந்தது. எல்லாப் பத்திரிகைகளிலும் கிறீஸ்மேன் பற்றிய செய்திகள் இடம் பிடித்திருந்தன.
எதற்காக இந்தச் செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பது பற்றிய வாய்வழிக் கதைகள் பத்திரிகைச் செய்தி களை விட முக்கியமாக இருந்தது அவனுக்கு. அவற்றை மனதுக்குள் பட்டியல் போட்டபடி அவன் உறங்கிய போதுதான் அந்தக் கனவை அவன் கண்டான்.
அவன் கண்ட கனவாவது -
