Showing posts with label theerka varnam ashroff shihabdeen. Show all posts
Showing posts with label theerka varnam ashroff shihabdeen. Show all posts

Wednesday, September 8, 2010

‘தீர்க்க வர்ணம்’


அஷ்ரஃப் சிஹாப்தீனின்
‘தீர்க்க வர்ணம்’
ஒரு வெட்டு முகம்

- கலைவாதி கலீல் -

அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய ‘தீர்க்க வர்ணம்’ என்ற நூல் என் கரம் எட்டியது. ‘தினகரன்’ வாரமலரில் அவர் வாராவாரம் எழுதி வந்த பத்தி எழுத்துக்களின் தொகுப்புத்தான் இந்நூல். 236 பக்கங்களைக் கொண்ட 68 பத்திகளைக் கொண்ட இக்கனதியான பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்தி ((Colomn) நூலின் மூலம் மூன்று விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே பெறுமானம் மிக்க கவிதைகளையும் ஓரிரு சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனால் வெகு நேர்த்தியாகப் பத்திகளையும் எழுத முடிந்திருக்கிறது என்பது பிரதானமான ஒன்று. இரண்டாவதாக செம்மையான தமிழ் மொழி உச்சரிப்புடன் கம்பீரமான - அதே வேளை மென்மையான - ஒலிவாங்கிக்கேற்ற குரல்வளம் கொண்ட அறிவிப்பாளராக மட்டுமே; பெரும்பாலோரால் அறியப்பட்ட அஷ்ரஃப் சிஹாப்தீனின் இலக்கிய மீள் பிரவேச வெற்றி உலா. மூன்றாவதாக, வெகு சிரமதி;தின் மத்தியில் ஒரு கவிதைச் சஞ்சிகையை வெளிக் கொண்ர்ந்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தலைவிதியின் படி தொடர்ச்சியாக வெளியிட முடியாத நிலையிலும் கூட, அடிக்கடி நூல்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்ற தற்றுணிவும் ஆளுமையும்.

வேறு சில காரணங்கள் இருப்பினும் அவையெல்லாம் சிறியவைகளே என்பது என் கருத்து.