Wednesday, February 22, 2012

“யாத்ரா“ வருகிறது...!


‘யாத்ரா’ - 20 இதழ் வெளிவருகிறது.

புத்தாயிரத்தின் முதல் தமிழ்க் கவிதை இதழ் என்ற பெருமையுடன் தமிழ்க் கவிதை இதழாக 2000ஆம் ஆண்டிலிருந்து ‘யாத்ரா’ வெளிவர ஆரம்பித்தது. 19 இதழ்கள் வரை கவிதை இதழாக வெளிவந்த ‘யாத்ரா’, 20வது இதழிலிருந்து கலை, இலக்கியச் சஞ்சிகையாக வெளிவருகிறது.

20வது இதழில் முல்லை முஸ்ரிபா, எஸ்.போஸ், கிண்ணியா எஸ். பாயிஸா அலி, காத்தநகர் முகைதீன் சாலி, ஃபஹீமா ஜஹான், கிண்ணியா ஏ.எம்.எம். அலி, எஸ்.மதி, வெலிமட ரபீக், நியாஸ் ஏ.சமத், ஜெஸீம், எம்.ரிஷான் ஷெரீப், இளைய அப்துல்லாஹ், நீலா பாலன், பி.அமல்ராஜ் ஆகியோரது கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.

அல் அஸூமத் எழுதிய ‘அலையழிச்சாட்டியம்’, ஜயந்த ரத்னாயக்க எழுதிய ‘வெள்ளைப்பாம்பு’ (மொழிபெயர்ப்பு) ஆகிய சிறுகதைகளும் அறிவிப்பாளர் ஏ.எல். ஜபீர் எழுதிய ‘டாக்டர் மாப்பிள்ளை’ நாடகமும் இவ்விதழில் உள்ளன. ராஜா மகளின் ‘பனிக்கட்டியாறு’ தீரன் ஆர்.எம். நெஷாத்தின் ‘கொல்வதெழுதல்’ ஆகியன இவ்விதழில் பிரசுரமாகியுள்ள பத்தி எழுத்துக்கள்.

‘அறுவடைக் கனவுகள்’ நாவல் பற்றி பஸ்லி ஹமீதும் ‘சிறுவர் உளவியலுக்கூடாக சிறுவர் இலக்கியம் - ஓர் அவதானக்குறிப்பு’ என்ற தலைப்பில் மறைந்த கவிஞர் ஏ.ஜீ.எம். ஸதக்காவும்,’ஈழத்து முஸ்லிம்களால் பாடப்பட்ட தமிழ்க் கவிதைகளில் பெண்ணியம் - அணுகுமுறைகள்’ என்ற தலைப்பில் சி.ரமேஷூம் ‘கம்பநாடன் கற்றுத் தந்த காட்சிப்படுத்தல்’ எனும் தலைப்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் எழுதிய கட்டுரைகளுடன் ‘நவீன அறபுக் கவிதை - தரிசனமும் எதார்த்தமும்’ என்ற தலைப்பில் அறபுமொழிப் பேராசிரியர் :பஸ்ஸாம் பிரங்கியே எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது.

இவை தவிர ஆசிரியரின் ‘உள்ளந் திறந்து’ என்ற தலைப்பிலான நான்கு பக்கக் கடிதம், ‘அஜமியின் அஞ்சறைப் பெட்டி’ என்ற பல்சுவைப் பகுதியும் இடம் பிடித்துள்ளன.

96 பக்கங்களில் வெளிவரும் ‘யாத்ரா’வின் தனிப் பிரதி ஒன்றின் விலை, 100.00ரூபாய்கள். சந்தாதாரராக விரும்புவோர் 500.00 ரூபாவுக்கான குறுக்குக் கோடிடப்பட்ட காசோலையை ‘யாத்ரா’ முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ‘யாத்ரா’ இதழ்களை மொத்தமாகப் பெற்றுப் பிரதேச இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் பகிர்ந்துதவ விரும்புவோர் ஆசிரியருடன் 0777 303 818 என்ற இலக்கத்துடனோ நிர்வாக ஆசிரியருடன் 0771 877 876 என்ற இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளலாம். ‘யாத்ரா’வின் மின்னஞ்சல் முகவரி: ashroffshihabdeen@gmail.com
25.02.2012 அன்றிலிருந்து பின்வரும் புத்தகக் கடைகளில் ‘யாத்ரா’ கிடைக்கும்.

இஸ்லாமிக் புக் ஹவுஸ் - 77, தெமடகொட றோட், கொழும்பு -9

பூபாலசிங்கம் புத்தகசாலை - 202, செட்டியார் தெரு, கொழும்பு -11


பின்வரும் இடங்களிலும் ‘யாத்ரா’வை வாசகர்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்விடங்களுக்கு சஞ்சிகை அனுப்பப்பட்டதும் திகதி இதே பதிவில் தெரிவிக்கப்படும்.

லக்கி புக்ஸ் - 5/2, கெலி ஓய ஷொப்பிங் கொம்ப்ளக்ஸ், தவுலகல றோட், கெலி ஓய

இன்போ டெக் சிஸ்டம் - எம்.பி.சி.எஸ்.றோட், ஓட்டமாவடி.

-------------------------------------------------------------------------------------------------------

‘யாத்ரா’ - 21 வது இதழுக்கான படைப்புக்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்களும் 20வது இதழ் பற்றிய உங்கள் கருத்துக்களும் தாமதமின்றி வந்தடையுமானால் உரிய வேளை சஞ்சிகையைக் கொண்டு வர இலகுவாக இருக்கும். வெளிநாடுகளிலுள்ள வாசகர்கள் சஞ்சிகையைப் பெற்றுக் கொள்ள ‘யாத்ரா’ மின்னஞ்சல் முகவரியடன் தொடர்புறுமாறு கேட்கப்படுகிறார்கள்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

3 comments:

IT from Shibly said...

வாழ்த்துக்கள் ஐயா..அருமையான பழ விடயங்கள் இதழில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது .முயற்சி தொடர வாழ்த்துக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்ப நன்றிங்க !

Lareena said...

மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! பல்சுவையோடு பவனி வரப்போகும் யாத்ராவுக்கு முன்கூட்டியே சந்தாப் பணத்தை அனுப்பிவைக்க வேண்டியதுதான் வாசகராகிய நமது தலையாய கடன் என் நினைக்கின்றேன்.