Tuesday, June 19, 2012

யாத்ரா - 21



யாத்ரா - 21 
ஆசிரியர் தலையங்கம்

தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரம் ஆறப் போடப்பட்ட போதும் இன்னும் இலங்கை வாழ் முஸ்லிம் சமுதாயத்தின் மனங்களில் அது நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது.

தேசத்தின் சட்டம் பெரும்பான்மைக்கு ஒரு விதமாகவும் சிறுபான்மையின ருக்கு ஒரு விதமாகவும் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சிந்திப்பவர்களும் அமைதியான வாழ்வை விரும்புபவர் களுமான பெரும்பான்மையினரே ஏற்றுக் கொள்கிறார்கள்.

சிறுபான்மைச் சமூகமொன்றின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை அல்லது அலட்சியம் போன்ற காரணிகளால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கை இரத்தத்தில் குளித்து எழுந்திருக்கிறது.

ஒரு சிறுபான்மையின் போராட்டம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு, மற்றொரு சிறுபான்மையின் மத உணர்வை உரசிப்பார்ப்பதானது வெற்றியாளர் ஒரு போராட்டத்தின் தோல்வியின் மீது எழுந்து நின்று எக்காளமிட்டுச் சிரித்து அவமதிப்பதற்கு ஒப்பானது.

இரண்டு சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற ஒரு நாட்டில் ஒரு சமூகம் தனது போராட்டத் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்க, மற்றொரு சிறுபான்மை சீண்டப்படுவதானது இரண்டு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ’அடங்கியிருக்க’ விடுக்கப்படும் பெரும்பான்மையினரின் செய்தியாகவும் கொள்ளப்படலாம்.

பெரும்பான்மையின் வல்லமையைப் பறைŒõற்றுவதற்கும் பெருமையை எடுத்துக் கூறுவதற்குமாகச் சொல்லப்படும் இந்தச் செய்தி இரண்டு சிறுபான்மைச் சமூகங்களையும் ஒரே புள்ளியில் என்றாவது ஒருநாள் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பதைப் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் அவதானிக்க வேண்டும்.

அதன் விளைவுகள் சுபீட்சம் நிறைந்த, ஆசியாவின் அதிசயம் என்ற அழகிய கனவைப் பகற்கனவாகவே மாற்றிவிடலாம்.

இன்னொரு கால் நூற்றாண்டு இலங்கை இரத்தம் சிந்துமாக இருந்தால் நமது அடுத்த பரம்பரை இலங்கையை ஒரு சோமாலியாவாகவே தரிசிக்கும் துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விடக்கூடும்.
------------------------------------------------------------------------------------------------------------


இதழில் இடம்பெற்றுள்ளவை

கவிதை
கிளர்வாதை ..............................................  ஆதித்தன்

என் மனக் குருவிகள் ............................. எஸ்.நளீம்

வென்று வருவோம் விரை ................. லுணுகல ஸ்ரீ

விடை காற்றினில் வீசிடுதே ............. பொப் டிலான் - தமிழில் - மணி

குறுங்கவிதைகள் ...................................

மனசு பற்றிய இரண்டு கவிதைகள் . கிண்ணியா நஸ்புல்லாஹ்

விடையில்லா வினாக்கள் ................  கவிமணி எம்.எச்.எம்.புகாரி

ஜமீல் கவிதைகள் ..................................

கட்டுரை
இணையத்தளங்களில் நிரம்பி வழியும் கவிதைகள் ............ நிந்தவூர் ஷிப்லி
பெண் பற்றிய புனைவு ...............................  லரீனா அப்துல் ஹக்

சிறுகதை
அணில் ......................................................   ஆர்.எம்.நௌஷாத்

சேட்டைக்காரக் கறுப்புப் பெண் .....   அனுஷ்க திலகரட்ண - தமிழில் - ரிஷான் ஷெரீப்

பத்தி
வள்ப்புப் பிள்ளைகள் .................... ............ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

பனிக்கட்டியாறு ..........................................  ராஜாமகள்

புள்ளி
யாழ் அஸீம்; ................... ...........................   அஷ்ரஃப் சிஹாப்தீன்

நெடுங்கதை
ஆசிரியம் ................................... ...............  மருதமுனை மஜீத்

நாடகம் 
பறக்கும் சிறகுகள் .................................. சில்மியா ஹாதி

அரசியல்
எதிர்கால அரசியலில் சிறுபான்மைக் கட்சிகள் -கருத்துக்கள்

இணையம்
பின்நவீனத்துவம் ....................................... ஈகரை

செய்தி 
இலங்கையராதல் ......................................

அஞ்சலி
மருதமுனை மஜீத்
ஷேக்கோ
ராஜேஸ்வரி சண்முகம், நூறானியா ஹஸன்,
சண்முகம் சிவலிங்கம், ஏ.ஆர்.ஏ.அஸீஸ்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: