Showing posts with label அக்குறணை. Show all posts
Showing posts with label அக்குறணை. Show all posts

Monday, October 13, 2014

சிறப்புரை - “தோழியர்“ நூல் வெளியீடு



கடந்த 11.10.2014 சனிக்கிழமை பிற்பகல் அக்குறணை மத்திய கல்லூரி மண்டபத்தில் நடந்த சகோதரர் நூருத்தீன் எழுதிய “தோழியர்” நூல் வெளியீட்டு விழாவில் நான் ஆற்றிய உரை இது.

நிகழ்வுக்குப் பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் தலைமை வகித்தார். அஷ்ஷெய்க் உஸதாத் எம்.ஏ.எம். மன்ஸூர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

எழுத்தாளரும் கவிஞருமான லறீனா அப்துல் ஹக் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். அவரது முயற்சியிலும் லஃபீஸ் ஷஹீத், ஒமர் ஷரீப் ஹஸன் மற்றும் அஸன்பே வாசகர் வட்டத்தின் உதவியுடனும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.