Showing posts with label காயல்பட்டினம். Show all posts
Showing posts with label காயல்பட்டினம். Show all posts

Friday, November 4, 2011

கலக்கல் காயல்பட்டினம் - 5


உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - காயல்பட்டினம்

அங்கம் - 5

சேவைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்ட பதினைந்து பேரில் இருவர் இலங்கையர், ஒருவர் மலேசியர். இந்தியர்களில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிஞர் சீர்காழி இறையன்பனார் ஆகியோரும் அடங்குவர். பன்னூலாசிரியர் மானா மக்கீன், என். எம். அமீன் ஆகியோர் இலங்கைசார்பிலும் டத்தோ இக்பால் மலேசியா சார்பிலும் இவ்விருது வழங்கப் பெற்றார்கள்.



விருது பெறும் என்.எம். அமீன்

அதே போல் பதிறைந்து பேருக்குத் தமிழ் மாமணி விருதுகள் வழங்கப்பட்டன. மலேசியா சார்பில் புலவர் ப.மு. அன்வர், இலங்கை சார்பில் கவிஞர் ஏ. இக்பால், கவிஞர் அல் அஸ_மத், அஷ்ரஃப் சிஹாப்தீன் ஆகியோர் இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். ஏனைய பதினொருவரில் திருமல் மீரான் பிள்ளை, திருவை அப்துல் ரகுமான், பர்வீன் சுல்தானா ஆகியோர் அடங்குவர்.



விருது பெறும் கவிஞர் அல் அஸூமத்

மலேசிய சார்பில் விருது வழங்கப்பட்ட இருவரும் வருகை தந்திருக்கவில்லை. அவற்றை அவர்கள் சார்பில் இக்பாலிடம் பணிபுரியும் பிதாவுல்லாஹ் பெற்றுக் கொண்டார்.



விருது பெறும் அஷ்ரஃப் சிஹாப்தீன்

கவிஞர் ஏ. இக்பால் வருகை தந்திருக்காத காரணத்தால் அவருக்குரிய விருதை அவர் சார்பில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பெற்றுக் கொண்டார்.