Showing posts with label Bullshit story - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label Bullshit story - ashroff shihabdeen. Show all posts

Thursday, April 21, 2011

சாணிக் கதை - 1

மரத்தின் நிழலில் இளைப்பாறியபடி ஒரு மாடு நின்றிருந்தது. அங்கு வந்த வான்கோழி அந்த மாட்டுடன் பேச ஆரம்பித்தது.

எனக்கு இந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஏறி நின்று பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கான சக்திதான் என்னிடம் இல்லை என்று வருத்தப்பட்டு வான்கோழி மாட்டிடம் சொன்னது.

அப்படியா! நீ ஏன் எனது சாணத்தில் கொஞ்சம் கொத்திச் சாப்பிடக் கூடாது. நான் இயற்கைப் புல்லை அல்லவா உண்கிறேன். அதில் சத்துப் பொருள் இருக்கும்தானே என்று மாடு சொன்னது.

வான் கோழி மாட்டின் சாணத்தில் கொஞ்சம் கொத்தித் தின்றது. தின்று முடிந்ததும் தனக்கு ஓரளவு சக்தி வந்தது போல் தோன்ற மரத்தின் அடியில் உள்ள கிளையில் ஏறிக் கொண்டது.

இரண்டாம் நாள் வான் கோழி இன்னும் கொஞ்சம் மாட்டுச் சாணத்தைக் கொத்தித் தின்றது. அன்று அது இரண்டாவது கிளையை எட்டிப் பிடித்தது. வான்கோழிக்கு உற்சாகம் பிறந்தது.

நான்காம் நாள் மாலை வான்கோழி மேல் கிளைக்குத் தாவிப் பெருமைப்பட்டுக் கொண்டது. உயரத்தில் இருந்து கீழே பார்ப்பது அபூர்வமான அனுபவமாக உணர்ந்தது.

அந்த வழிவே வந்த வேட்டைக்காரன் கண்ணில் பட்டது வான்கோழி. எந்தச் சலனமும் இல்லாமல் அதன் மீது அம்பை எய்து அதை வீழ்த்தினான்.

நீதி: தப்பான முறையில் உயரச் செல்லலாம். ஆனால் அதில் நிரந்தரமாகத் தரிக்க முடியாது.
 
Moral of the story: Bullshit might get you to the top, but it won’t keep you there.