Showing posts with label Palestine. Show all posts
Showing posts with label Palestine. Show all posts

Thursday, August 21, 2014

பிஞ்சுகளின் நெஞ்சங்களில் தஞ்சமடைந்தவன்!


முகம்மத் அல் அரீர் தனது குழந்தையுடன்

- ரீஃபாத் அல் அரீர் -
தமிழில் - அஷ்ரஃப் சிஹாப்தீன்
-------------------------------------------

எனது சகோதரர் முகம்மத் அல் அரீர் தனது வீட்டில் இருக்கும் போது இஸ்ரேலிய வான்படைத் தாக்குதலால் உயிரிழந்தான். 31 வயதான அவன் இரண்டு பிள்ளைகளின் தந்தை.

மூன்று தினங்களாக இரத்தம் வெளியேறி இறந்தானா அல்லது வெடி குண்டின் அதிர்வினால்  அல்லது அதன் சப்தத்தினால் இறந்தானா அல்லது இடிபாடுகளுள் சிக்கி இறந்தானா அல்லது இவையெல்லாம் சேர்ந்து அவன் மரணிக்கக் காரணமாய் அமைந்தனவா என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.

உண்மை என்னவெனில் நான் என் சகோதரன் முகம்மதை இழந்து விட்டேன்!

நான்கு வயதுடைய ரனீம், ஒரு வயது நிரம்பிய ஹம்ஸா ஆகிய அவனுடைய அழகழகான இரண்டு பிள்ளைகளும் தங்களது தந்தையை நிரந்தரமாகவே இழந்து விட்டனர். எங்களுடைய ஏழு வீடுகள் கொண்ட மாடி வீட்டையும் நாங்கள் இழந்து விட்டோம்.

நாலடுக்கு மாடிகள் என்ன... ஆயிரக் கணக்கான மாடிகள் இப்போது இங்கு அழிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் என்றைக்குமே கண்டிராத கொடூர ஆக்கிரமிப்பின் சாட்சிகளாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எங்களது பெற்றோரின் பிள்ளைகளுக்குள் நான் இரண்டாவது நபர். ஒரு பெண், நான் ஆண்களுக்குப் பிறகு ஐந்தாவதாகப் பிறந்தவன் முகம்மத். எனது பழைய ஞாபகங்களுக்குள் முகம்மத் பிறந்த நிகழ்வு மறக்க முடியாதது. அப்போது எனக்கு நான்கு வயது.

எனது சகோதரனுக்கு முகம்மத் என்று பெயர் வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்ட போது நான் அழுது ஆகாத்தியம் பண்ணி அதை மறுத்தேன். 'அவனுக்கு முகம்;மத் என்று பெயர் வைக்கக் கூடாது, ஹம்தா என்றுதான் பெயர் வைக்க விரும்புகிறேன்... ஆம் ஹம்தா!'

அவனை யாராவது முகம்மத் என்று அழைத்தால் எனது முழு மூச்சையும் பலத்தையும் ஒன்று திரட்டிக் கோபத்தில் சத்தமிடுவேன். எனது எதிர்ப்புக் கணக்கில் கொள்ளப்படாமல் அலட்சியம் செய்யப்படும் வரை நான் அப்படித்தான் நடந்து கொண்டேன். பிறகு பலரும் அவனை ஹம்தா என்றும் அழைக்கத் தொடங்கினார்கள். இந்தச் சொல்லும் முகம்மத் என்ற பெயரைச் சார்ந்ததுதான்! எல்லோரும் அவனை ஹம்தா என்று அழைக்கத் தொடங்கினார்கள். ஆனால் எனது கோபத்தைச் சட்டை செய்யாமல் எனது தந்தையார் மட்டும் அவனை முகம்மத் என்றே அழைத்து வந்தார்.

எப்போதும் ஹம்தாவின் நலனே எனது நோக்கமாக இருக்கும். அவன் எனக்கு மட்டும் சொந்தமானவன் போல... இன்னும் சொல்வதானால் அவனது பெயர் ஹம்தா என்று நிரந்தரமாக அழைக்கப்பட வேண்டும் என்றும் அவனை எனது மகனைப் போலவும் பார்த்துக் கொண்டேன்.

1983ல் பிறந்த ஹம்தா தயக்க சுபாவம் கொண்டவனாக இருந்த போதும் நகைச்சுவை உணர்வுள்ளவனாகவும் துணிவுள்ளவனாகவும் இருந்தான். அதிகமாகவும் அமைதியாக இருக்கும் ஹம்தா பேச ஆரம்பித்து விட்டால்  அவனை மிஞ்ச முடியாது.

2000 ம் ஆண்டு உருவான இன்திபாதாவின் போது அவனுடைய வாழ்வில் உண்மையான ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவனது பாடசாலை நண்பர்கள் இஸ்ரேலியர்களால் கொல்லப்பட்ட போது மரண ஊர்வலத்தை முன் நின்று நடத்தும் பிரதான பாத்திரத்தை அவன் வகித்தான்.

மக்கள் தொடர்பாடலில் பட்டம் பெற்ற ஹம்தாவுக்கு பொது மக்களை அணுகும் முறை கைவரப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்திபாதா நடந்து கொண்டிருந்த போது காஸாவில் எங்கு சென்றாலும் 'ஹம்தா உங்கள் சகோதரனா?' என்று என்னிடம் கேட்குமளவு அவன் பிரபல்யம் பெற்றிருந்தான்.

உள்ளார்ந்த ஆச்சரியத்துடனும் ஒரு புன்னகையுடனும் தலையசைப்பேன். இவனை இந்த அளவுக்கு வேகம் கொள்ளச் செய்தது எது என்று எனக்குள் நானே கேட்டுக் கொள்வேன். தயக்க சுபாவமுள்ள எனது சகோதரன் ஜெரூசலத்திலும் ஷூஜாஇய்யாவிலும் பலஸ்தீனின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்யவும் வழி நடத்தவும் உயிர்த்தியாகிகளின் மரண ஊர்வலங்களை ஏற்பாடு செய்யவும் கவிதை நடை ஆர்ப்பாட்ட வார்த்தைகளை உரத்து ஒலிக்கவும் துணிந்து விட்டான் என்பதைப் பின்னர் உணர்ந்து கொண்டேன்.

பதினான்கு சகோதர உறவுகளுக்குள்ளும் தனித்தன்மை வாய்ந்தவனாகவும் படைப்பூக்கம் கொண்டவனாகவும் ஹம்தா விளங்கினான். 20 வயதை அடைந்ததும் அவனில் பெரும் மாற்றங்களையும் இயங்காற்றலையும் நான் கண்டேன். பொதுமக்கள் முன் லாகவமாகப் பேசும் அவனது திறன் காஸாவின் அல் அக்;ஸா தொலைக்காட்சியினால் நடத்தப்படும் 'நாளைய தலைமுறையை நோக்கி' நிகழ்ச்சியில் வரும் 'கார்க்கோர்' என்ற குறும்பு மிக்க கோழியின் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தது.

Wednesday, July 16, 2014

பெத்லஹேம் லூஸியாவின் கதை!


முகம்மத் குத்ர்

எனது பெயர் லூஸியா. நான் பலஸ்தீனக் கிறிஸ்தவப் பெண். நான் ஐந்து குழந்தைகளின் தாய். மூத்ததின் வயது 17. இளையதின் வயது 5. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் அமைதியின் நகர் எனவும் அமைதி அரசரின் நகரம் எனவும் புகழ் பெற்ற பெத்தலஹேம் நகரில் வசித்து வருகிறேன்.

எனது கணவரான மைக்கேல் ஒரு நல்ல மனிதர். நல்ல கணவர். மட்டுமன்றி ஒரு நல்ல தந்தையாகவும் இருந்தார்;. தச்சுத் தொழிலில் ஈடுபட்டுக் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மிகச் சிக்கலான காலப் பிரிவிலும் அமைதிக்காக உழைத்ததோடு மாத்திரமின்றி மனித குலத்தின் பாவங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த யேசு பிரான் ஒரு தச்சுத் தொழிலாளியாக இருந்தார் என்பதை அவர் அதிகம் விரும்புகிறவராக இருந்தார். இங்கு பிரச்சினைகள்; நிறைந்த போதிலும் எப்போதும் யேசு பிரான் புனிதராகவே எங்களது புனித பூமியில் மதிக்கப்பட்டார். ‘ஷெல்’களும் துப்பாக்கி ரவைகளும் கொண்டு இஸ்ரேலியப் படையினர் எமது பகுதியைத் தாக்க ஆரம்பித்து விட்டால், மைக்கேல் பைபிளைக் கையிலெடுத்துக் கொண்டு அவசர அவசரமாக எங்களை ஒன்று கூட்டி விடுவார். நாம் எல்லோரும் இணைந்து பிரார்த்திப்போம்.

இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதும் பலமாகச் சிரிப்பதும் வசைமொழிகளால் எங்களைத் தூஷிப்பதும் அடிக்கடி எங்களது காதில் விழும், யூதரல்லாதோரை அவர்கள் மிக்க இழிவானவர்கள் என்று கருதுகிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எனது மைக்கேலை இழந்தேன். சுகவீனமுற்ற தனது தாயைப் பார்ப்பதற்காக ஜெரூஸலத்தினூடாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரை ஒரு யூதக் குடியேற்றவாசி சுட்டுக் கொன்று விட்டான். அன்றிலிருந்து கடும் வேலை, பசி, நோய், பட்டினி இவற்றைத் தவிர வேறு எதையும் நான் அறியமாட்டேன். எனது பிள்ளைகளுக்கு உணவுக்காகவும், உடைகளுக்காகவும் மருத்துவத் தேவைகளுக்காகவும், பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காகவும் என்னிடமிருந்த பெறுமதியுள்ள அனைத்தையும் விற்றுத் தீர்த்து விட்டேன். என்னிடம் தொழில் நுட்ப அறிவோ பயிற்சியோ கிடையாது. ஆனால் வீடுகளைச் சுத்தம் செய்யத் தெரியும். எனவே எமது அயலவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணிப் பெண்ணாக மாறிவிட்டேன்.

எனது அயலவர்களும் என்னைப் போன்றே கஷ்டப்படுபவர்கள் தாம். ஆனாலும் இன்று வரை உணவு, உடை, பணம் என அவர்கள் தான் எனக்கு உதவுகிறார்கள். எனது வேலை கடுமையானதும் என்னை எனது பிள்ளைகளிடமிருந்து தூரப்படுத்துவதுமாக இருக்கிறது. கவலையுடன் அவர்களைப் பிரிந்து நான் உழைக்க வேண்டிருக்கிறது. மைக்கேல் சொல்வதை நான் இன்று வரை ஞாபகப் படுத்திக் கொள்கி றேன். அவர் சொல்வார், ‘பரவாயில்லை... கிறிஸ்து எம்முடன் இருக்கிறார்... அவர் எங்களைப் பார்த்துக் கொள்வார்...’ நான் எனது சகோத ரிக்கு நன்றியுடையவளாக இருக்க வேண்டும். அவள் எனக்காக தனது பாடசாலைப் படிப்பைக் கைவிட்டு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்கிறாள். அவளை இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும்.

எனது உடற் பாரமும் அளவும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினமும் மிகவும் களைப்படைந்து கொண்டே வருகிறேன். எனது இளைய இரண்டு பிள்ளைகளும் நீண்ட நாட்களாக இருமல் மற்றும் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். அதனால் அடிக்கடி முழு இரவும் நான் விழித்திருக்க வேண்டியவளாயிருக்கிறேன். இது மிகவும் சிரமமான ஒரு வழக்கமாக மாறி விட்டது. ஆனால் எனக்குள்ள ஒரே ஒரு ஆறுதல் எனது முஸ்லிம் அயலவர்கள்தான். அவர்கள் எனது வீட்டைச் சுத்தம் செய்தும் கழுவி யும் தருகிறார்கள். அடிக்கடி உணவு சமைத்தும் தருவதுண்டு.

சேர்ச்சுக்குப் போகும் அளவுக்கு எனது உடலில் சக்தி கிடை யாது. ஆனால் போதகர் இப்பக்கம் வருவதுண்டு. ஓர் இரவு நான் வீடு ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சத்தமும் அதைத் தொடர்ந்து பாரியதொரு குண்டு வெடிச் சத்தமும் கேட்டது. எனது இதயமே ஒரு கணம் நின்று விட்டது. நான் கிட்டத்தட்ட மூர்ச்சையாகும் நிலையை அடைந்து விட்டேன். ‘ஆண்டவரே.... அது எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது.... எனது பிள்ளைகளாக இருக்கக் கூடாது...’ என்று என்னையறியாமல் சொல்லிக் கொண்டேயிருந்தேன். நான் எப்படி ஓடினேன் என்று எனக்கே தெரியாது. என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாமல் ஓடினேன். எப்படியோ எனது வீடுவரை வந்து சேரக் கூடிய பலத்தை வரவழைத்துக் கொண் டேன். ‘ஓ... யேசு பிரானே.... எல்லாம் வல்ல ஆண்டவரே.....’

Thursday, July 10, 2014

பலஸ்தீனம் விடுதலையாகும்!



மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

பலஸ்தீன் விடுதலையாகும்
இஸ்ரவேலர்கள் எவ்வளவு முயன்றாலும்
பலஸ்தீனத்தை அவர்களால்
வெல்ல முடியாது
நாம் அதனுடன் ஒன்றியிருக்கிறோம்
கற்கள் கொண்டே போராடுவோம்
ஒரு போதும் பலஸ்தீனைக் 
கைநழுவ விடமாட்டோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

யுத்தம், வருத்தம் மற்றும்
சோதனைச் சாவடிகளற்று
அது விடுதலையாகும்!
இஸ்ரவேல் எழுப்பிய மதில்
ஒரு நாள் விழும்
நொறுங்கித் தூசாகும்
துயரமோ, 
இழந்த வீடகள் பற்றிய கவலையோ
இருக்காது!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எமது நிலத்தை மீளப் பெறுவோம்
ஒலிவ் மரங்கள், மலைகள் மற்றும்
எவற்றைக் கொண்டிருந்தோமோ
அவையனைத்தையும் மீளப்பெறுவோம்!
எமதுகடலை, நகரங்களை
மீள அடைவோம்
இஸ்ரவேலியர் எதைச் செய்தாலும்
பரவாயில்லை
நாங்கள் ஒன்றிணைந்து
அமைதியை மீண்டும் கொணர்வோம்!

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

அழுத்தம், தலைவலி,
இன்னும் இதுபோன்ற எல்லாச்
சிக்கல்களிலிருந்தும் விடுதலையாவோம்
என்னனால் புரிந்து கொள்ள முடியாதிருப்பது
இவ்வளவு வெறுப்பு ஏன் என்பதையே
உள்ளதைப் பகிர்ந்து
நாம் ஏன் ஒன்றாக வாழ முடியாது?
எப்படிப் பகிர்வதென்று
சிலர் புரிந்து கொள்ளாதிருக்கிறார்கள்
புரிந்து கொண்டால்
ஒரு யுத்தம் இருக்காது என்பதை
அவர்கள் அறிவார்கள்

மலைகள் முதல் கடல்கள் வரை
பலஸ்தீனம் விடுதலையாகும்!

எவ்வளவுதான் கொடுமைப் படுத்தினாலும்
விலக்கி நடந்தாலும்
நாங்கள் வெல்வோம்! விடுதலையாவோம்!!

ஒரேயொரு பலஸ்தீன்!

நீங்கள் நிகழ்த்தவுள்ள
மிகப் பெரும் படுகொலைகளுக்கு முன்பு
சிறவர்கள் பாடலிசைப்பர் -
‘சுதந்திர பலஸ்தீன்” பற்றி
காலத்தைப் பின்னோக்கிச் சென்று
ய+தர்களாகிய உங்களுக்கு  
நடந்தது என்ன என்று பாருங்கள்!

பலஸ்தீனை விடுதலையாக்குவோம்
நீங்கள் விரும்பினாலும் சரி,
விரும்பாவிட்டாலும் சரியே!

- JEANINE SWALIM