Showing posts with label islamic tamil literature malaysia conference - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label islamic tamil literature malaysia conference - ashroff shihabdeen. Show all posts

Friday, April 29, 2011

ஏரோப்பிளேன் பறக்குது பார் மேலே.... (இஸ்லாமிய தமிழ் இலக்கிய மலேசிய மாநாடு)

இலங்கைக் கூட்டமும் பின்னணி அரசியலும்  - அங்கம் 05

எனது ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதற்கு முன்னர் வெளியிடப்பட்டாக வேண்டிய தகவல்கள் நிறையவே கிடைத்துள்ளன. எனவே ஐந்தாவது கட்டுரையில் அவற்றைக் குறிப்பிட்டு விட்டு ஆறாவது கட்டுரையை ‘எக்ஸ்குளுஸிவ்’ கட்டுரையாக மாற்றலாம் என்று எண்ணுகிறேன். அதையும் எழுதி முடிப்பதற்குள் வேறும் குறிப்பிட்டாக வேண்டிய விடயங்கள் கிடைக்குமாயின் அது ஏழாவது கட்டுரையாக மாற்றம் பெறவும் நேரலாம்.

முகமறியா நண்பர்கள் சிலர் கட்டுரைகள் மிகவும் நீண்டவையாக இருக்கின்றன. ஒரு கட்டுரையை இரண்டாகப் பிரித்துத் தந்தால் படிப்பதற்கும் படி எடுப்பதற்கும் இலகுவாக இருக்கும் என்று பேசுவதாகத் தகவல் ஒன்று காதுக்கு எட்டியது. அது என்னமோ தெரியவில்லை, குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாடு பற்றி எழுத ஆரம்பித்தால் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே செல்கிறது. இருந்த போதும் இனிமேல் எழுதப்படவுள்ள கட்டுரைகளில் ‘எக்ஸ்கு@ஸிவ்’ கட்டுரை தவிர்ந்த ஏயைவற்றுக்கு நண்பர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ஏரோப் பிளேன் பறக்குது பார் மேலே...

குப்பைப் பிச்சை முகம்மது இக்பால் மாநாட்டுக்கான நாள் நெருங்க நெருங்க அதற்காக இலங்கையிலிருந்து செல்லவிருப்பவர்கள் போவதா, இல்லையா என்ற மனப் போராட்டத்தில் இருப்பதை உணர முடிகிறது. இந்த நிலை ஏற்பட முதல் காரணம் விமானச் சீட்டின் விலை.

29.03.2011 அன்றைய திகதியிடப்பட்ட இ.குழு, பேராளர்களாகக் கலந்து கொள்ள விரும்புவோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் 29,500 ரூபாய் முதல் 34,000 ரூபாய் வரை குறிப்பிட்டிருந்ததையும் வேறு ஒரு நபர் 85 பேருக்கு மேல் பயணம் செய்வதாயின் 19,000 ரூபாய்க்கு விமானச் சீட்டுப் பெறலாம் என்று குழுச் செயலாளரிடம் சொன்னதையும் அதை அவர் கணக்கெடுக்கவில்லை என்று அந்நபர் தெரிவித்ததையும் குறிப்பிட்டிருந்தேன். பின்னர் அது பற்றி ஆராய்வதாகவும் 19,000 ரூபாயக்குப் பயணம் செய்யும் வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கதைகள் உலாவின.