Showing posts with label kaatruveli - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label kaatruveli - ashroff shihabdeen. Show all posts

Saturday, April 23, 2011

காற்றுவெளியிலிருந்து ஒரு கடிதம்

முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன்) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பிரித்தானியாவில் ஈழத்து நூல்களின் கண்காட்சிகளை நடாத்துவதில் முழுக்கவனம் செலுத்தி வரும் இவர் காற்றுவெளி என்ற இலக்கிய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

அவரிடமிருந்து வந்த ஒரு வேண்டு கோள் கடிதம் இது. இதில் இரண்டு முயற்சிகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. மறைந்த எழுத்தாளர்கள் பற்றிய தகவல்களை நூலாக்குவது. இது ஒரு முக்கிய பணி என்பதில் ஐயமில்லை. சிலர் இருட்டுக்குள்ளேயே இருந்து மறைந்து போயுள்ளார்கள். அவர்களைப் பற்றிய விபரங்களை எழுதி வருங்காலத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டியது நமது கடமை. நாம் அதைச் செய்தால் நமக்காக யாராவது அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடுவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு அமுதனுக்கு நாம் கை கொடுக்கலாம்.

மற்றது படைப்பாளிகள் பட்டியல். விருப்பமுள்ளவர்கள் அனுப்பி வைக்க முடியும். நானும் அவரும் ஒரு பட்டியலில் இருப்பதா என்ற ஈகோ உள்ளவர்கள் தம்மைப் பற்றித் தனியான புத்தகத்தைத் தாமே வெளியிட்டுக் கொள்ளலாம்.

இனி- அமுதனின் கடிதம் உங்கள் கவனத்துக்கு.....