Showing posts with label maruthuvam - ashroff shihabdeen. Show all posts
Showing posts with label maruthuvam - ashroff shihabdeen. Show all posts

Thursday, April 7, 2011

மருந்தற்ற மருத்துவம்

இணையத் தோப்பின் இலவசக் கனிகள் - 2




பெண்ணொருவர் மருத்துவம் பெறுவதற்காகவைத்தியசாலைக்குச் சென்றார். அவ்வேளை இளம் ஆண் வைத்தியர் ஒருவர் மருத்துவச் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்.


அப்பெண்மணியை மூன்று நிமிடங்கள் பரிசோதித்த அவ்வைத்தியர் அப்பெண்மணி கர்ப்பம் தரித்திருப்பதாக அப் பெண்ணிடம் சொன்னார். இதைக் கேட்ட அப் பெண் அறையிலிருந்து வெளியேறி சத்தமிட்டு அலறியபடி நடைக் கூடத்தில் ஓடினாள். நடைக் கூடத்தில் அவளை எதிர் கொண்ட சற்று மூத்த வைத்தியர் அவளை நிறுத்தினார். என்ன நடந்தது என வினவிவிட்டு அப்பெண்ணை வேறு ஓர் அறையில் அமைதியாக உட்காரப் பணித்தார்.

நேரே இளம் வைத்தியர் இருந்த அறைக்கு வந்த அவர்,
“என்ன செய்கிறாய் நீ... அப் பெண்மணியின் வயது 69. அவளுக்கு நான்கு பிள்ளைகளும் ஏழு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். அவளிடம் போய் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று சொல்லியிருக்கிறாய்” என்று சொல்லி விட்டுக் கொபமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.

மூத்த வைத்தியரின் பேச்சைச் சட்டை செய்யாமல் தனது அறையிலிருந்த அறிவித்தற் பலகையில் எதையோ எழுதியபடியிருந்த இளம் வைத்தியர் தனது பார்வையை விலக்காமல் மூத்த வைத்தியரிடம் கேட்டார்,

“அவளது விக்கல் இன்னும் நிற்கவில்லையா?”