அன்புக்குரிய - கமலாம்பாள் கபே மற்றும் சோனகர் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு,
இந்தக் கடிதம் தங்கள் இருவரிடமும் ஒரே கோரிக்கையை விடுப்பதற்காக எழுதப்படுகிறது என்பதால் தனிக் கடிதமாக தங்களுக்கு அனுப்பப்படவில்லை. கடிதத்தைப் படித்து முடித்ததும் தனிக் கடிதத்துக்கு அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
எனது காரியாலயத்துக்கு அண்மையில் ஒரு சிறிய இடைவெளித் தூரத்தில் தங்களது கடைகள் அமைந்திருப்பதால் தங்களது கடைகளுக்கு அவ்வப்போது தேனீர் அருந்தவும் சிற்றுண்டி மற்றும் ஆகாரம் சாப்பிடவும் தனியாகவும் சிலவேளை நண்பர்களுடனும் வந்து செல்லும் தங்களது முக்கியமான நுகர்வோரில் நானும் ஒருவன்.
தங்களது கடைகளில் விற்கப்படும் பருப்பு வடைகள் வௌ;வேறு நிறங்களில் இருப்பதை நான் அவதானிப்பேன். புதிய வடை மஞ்சள் நிறமாகவும் ஒருநாள் பிந்தி மீண்டும் பொரிக்கப்பட்டது பொன்னிறமாகவும் இருநாட்கள் பிந்தி மீண்டும் அதாவது மூன்றாவது முறையாகப் பொரிக்கப்பட்டவை கபில நிறமாகவும் இருக்கும் என்று என்னுடன் சேர்ந்து வடை சாப்பிட்ட நண்பர் ஒருவர் ஒருநாள் எனக்குச் சொன்னார். இருந்தாலும் பொன்னிறமாக இருக்கும் வடை சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கிறது.
இந்தக் கடிதம் தங்கள் இருவரிடமும் ஒரே கோரிக்கையை விடுப்பதற்காக எழுதப்படுகிறது என்பதால் தனிக் கடிதமாக தங்களுக்கு அனுப்பப்படவில்லை. கடிதத்தைப் படித்து முடித்ததும் தனிக் கடிதத்துக்கு அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
எனது காரியாலயத்துக்கு அண்மையில் ஒரு சிறிய இடைவெளித் தூரத்தில் தங்களது கடைகள் அமைந்திருப்பதால் தங்களது கடைகளுக்கு அவ்வப்போது தேனீர் அருந்தவும் சிற்றுண்டி மற்றும் ஆகாரம் சாப்பிடவும் தனியாகவும் சிலவேளை நண்பர்களுடனும் வந்து செல்லும் தங்களது முக்கியமான நுகர்வோரில் நானும் ஒருவன்.
தங்களது கடைகளில் விற்கப்படும் பருப்பு வடைகள் வௌ;வேறு நிறங்களில் இருப்பதை நான் அவதானிப்பேன். புதிய வடை மஞ்சள் நிறமாகவும் ஒருநாள் பிந்தி மீண்டும் பொரிக்கப்பட்டது பொன்னிறமாகவும் இருநாட்கள் பிந்தி மீண்டும் அதாவது மூன்றாவது முறையாகப் பொரிக்கப்பட்டவை கபில நிறமாகவும் இருக்கும் என்று என்னுடன் சேர்ந்து வடை சாப்பிட்ட நண்பர் ஒருவர் ஒருநாள் எனக்குச் சொன்னார். இருந்தாலும் பொன்னிறமாக இருக்கும் வடை சாப்பிடச் சுவையாகத்தான் இருக்கிறது.
