Ur words r rubbish. stop writin. dnt b a fool
இன்று பி.ப. சரியாக 2.07க்கு எனது கைத் தொலைபேசிக்கு வந்த குறுஞ் செய்தி இது. இந்தச் செய்தி 077 1131397 என்ற இலக்கத்திலிருந்து வந்திருந்தது.
இவர் யார்? எதற்காக என்னை எழுத வேண்டாம் என்கிறார்? பத்திரிகை, சஞ்சிகைகளில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? இணையங்களில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்கிறாரா?
நான் எழுதுவது எனது சுதந்திரம். என்னைக் கட்டுப்படுத்தும் இந்தக் கைப்பிள்ளை யார்? எனது சொற்கள் குப்பை என்கிறார்! இருந்து விட்டுப் போகட்டும். இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? குப்பையைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும். அவர் மாநகர சபைக் குப்பை வண்டியில் வேலை செய்பவரா? அல்லது ‘குப்பை’ களோடு நெருங்கிய உறவு உள்ளவரா?
எனது எழுத்துக் குறித்த சிலாகிப்புக்களையே இது வரை நான் சந்தித்து வந்துள்ளேன். அவையே மேலும் மேலும் நான் எழுதுவதை உற்சாகப் படுத்துகின்றன. எனது வலைப்பூவைச் சராசரியாகத் தினமும் 60 பேர் முதல் 120 பேர் வரை உலகம் முழுவதிலுமிருந்து படிக்கிறார்கள். அது குப்பை என்றால் இப்படி இரவிலும் பகலிலும் படித்துக் கொண்டா இருப்பார்கள்?
எழுதுவது முட்டாள் தனம் என்றால் எழுதுபவர்கள் எல்லோரும் முட்டாள்களா?
வந்த அந்தச் செய்திக்கு நான் பதில் சொல்லவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.
எனது எழுத்தில் தவறுகளோ பிழைகளோ இருந்தால் அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட முடியும் அல்லவா? இவ்வாறு திரைக்குப் பின்னாலிருந்து கல்லெறியும் கெட்ட பழக்கம் ஏன் அவருக்கு வந்தது. அல்லது அவரது தொழிலே இதுதானா?
என்னுடைய எந்த எழுத்து அவரை நோவு கொள்ளச் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள நான் ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு வெளிச்சத்துக்கு வந்து கருத்துச் சொல்ல வேண்டும். வெளிச்சத்திலேயே நாம் உரையாடலாம்.
அப்படியில்லாத பட்சத்தில் அவர் எந்த வகையில் பேசினாலும் அதற்கு நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. பதில் சொல்லவும் மாட்டேன். இவ்வாறு தொடர்ந்து என்னுடனோ என்னைப் பற்றி வேறு நபர்களுடனோ ‘மொட்டை’ வடிவில் பேசுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. மற்றவர்களும் அதைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்தக் கைப்பிள்ளை புரிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு நல்ல புத்தி வர நான் பிரார்த்திக்கிறேன்!
இன்று பி.ப. சரியாக 2.07க்கு எனது கைத் தொலைபேசிக்கு வந்த குறுஞ் செய்தி இது. இந்தச் செய்தி 077 1131397 என்ற இலக்கத்திலிருந்து வந்திருந்தது.
இவர் யார்? எதற்காக என்னை எழுத வேண்டாம் என்கிறார்? பத்திரிகை, சஞ்சிகைகளில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? இணையங்களில் நான் எழுதுவதைச் சொல்கிறாரா? எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்கிறாரா?
நான் எழுதுவது எனது சுதந்திரம். என்னைக் கட்டுப்படுத்தும் இந்தக் கைப்பிள்ளை யார்? எனது சொற்கள் குப்பை என்கிறார்! இருந்து விட்டுப் போகட்டும். இதனால் அவருக்கு என்ன பிரச்சினை? குப்பையைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும். அவர் மாநகர சபைக் குப்பை வண்டியில் வேலை செய்பவரா? அல்லது ‘குப்பை’ களோடு நெருங்கிய உறவு உள்ளவரா?
எனது எழுத்துக் குறித்த சிலாகிப்புக்களையே இது வரை நான் சந்தித்து வந்துள்ளேன். அவையே மேலும் மேலும் நான் எழுதுவதை உற்சாகப் படுத்துகின்றன. எனது வலைப்பூவைச் சராசரியாகத் தினமும் 60 பேர் முதல் 120 பேர் வரை உலகம் முழுவதிலுமிருந்து படிக்கிறார்கள். அது குப்பை என்றால் இப்படி இரவிலும் பகலிலும் படித்துக் கொண்டா இருப்பார்கள்?
எழுதுவது முட்டாள் தனம் என்றால் எழுதுபவர்கள் எல்லோரும் முட்டாள்களா?
வந்த அந்தச் செய்திக்கு நான் பதில் சொல்லவும் இல்லை. தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. அது எனக்கு அவசியமும் இல்லை.
எனது எழுத்தில் தவறுகளோ பிழைகளோ இருந்தால் அதைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட முடியும் அல்லவா? இவ்வாறு திரைக்குப் பின்னாலிருந்து கல்லெறியும் கெட்ட பழக்கம் ஏன் அவருக்கு வந்தது. அல்லது அவரது தொழிலே இதுதானா?
என்னுடைய எந்த எழுத்து அவரை நோவு கொள்ளச் செய்தது என்பதைத் தெரிந்து கொள்ள நான் ஆவல் கொண்டுள்ளேன். ஆனால் அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு வெளிச்சத்துக்கு வந்து கருத்துச் சொல்ல வேண்டும். வெளிச்சத்திலேயே நாம் உரையாடலாம்.
அப்படியில்லாத பட்சத்தில் அவர் எந்த வகையில் பேசினாலும் அதற்கு நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. பதில் சொல்லவும் மாட்டேன். இவ்வாறு தொடர்ந்து என்னுடனோ என்னைப் பற்றி வேறு நபர்களுடனோ ‘மொட்டை’ வடிவில் பேசுவதைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது. மற்றவர்களும் அதைக் கணக்கில் கொள்ள மாட்டார்கள் என்பதை இந்தக் கைப்பிள்ளை புரிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு நல்ல புத்தி வர நான் பிரார்த்திக்கிறேன்!
