Saturday, April 23, 2011

ஆசீர்வதிக்கப்பட்டவரா நீங்கள்?

எந்த வித நோய் நொடியுமின்றிச் சுகதேகியாக இன்று காலை நித்திரை விட்டெழுந்தீர்களா நீங்கள்? அப்படியெனில் இந்த வாரத்தில் வாழ்வை இழந்த மில்லியன் மனிதர்களை விட நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்தான்!

யுத்த ஆபத்தை ஒரு போதும் அனுபவிக்காதவராகவும் சிறையில் தனிமையில் வாடாதவராகவும் சித்திரவதை நோவினைகளுக்குள் அகப்படாதவராகவும் பட்டினியில் வாடாதவராகவும் இருக்கிறீர்களா நீங்கள்? அப்படியெனில் உலகின் ஐநூறு மில்லியன் மக்களை விடவும் நீங்கள் நல்ல நிலையில்தான் இருக்கிறீர்கள்!

உங்கள் குளிர்சாதனப் பெட்டியில் உணவும் அலுமாரியில் உடைகளும் தலைக்கு மேல் ஒரு கூரையும் உறங்குவதற்கு ஓர் இடமும் இருக்கிறதா உங்களுக்கு? அப்படியெனில் உலகின் எழுபத்தைந்து வீதமான மக்களை விடவும் நீங்கள் வசதி படைத்தவர்!

உங்களது வங்கிக் கணக்கில் மற்றும் உங்களது சட்டைப் பையில் பணமும் பகிர்ந்து கொள்வதற்கு எந்த இடத்திலாவது உணவும் இருக்கிறதா உங்களுக்கு? அப்படியெனில் உலகின் வசதி படைத்த எட்டு வீதத்தினரில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள்!

உங்களது பெற்றோர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்போராகவும் விவாக ரத்துச் செய்யாதவர்களாகவும் உள்ளார்களா? அப்படியாயின் நீங்கள் ஒரு பாக்கியசாலி!

உங்களிடம் புன்னகை பூத்த ஒரு முகமும் உண்மையான நன்றியறிதல் கொண்ட மனமும் இருக்கிறதா? அப்படியாயின் நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்தான். அப்படியிருக்க அதிகமானவர்களால் முடியும். ஆனால் அநேகமானோர் அப்படி இருப்பதில்லை!

நேற்றும் இன்றும் இறைவனை வணங்கினீர்களா நீங்கள்? அப்படியாயின் உலகில் நீங்கள் சிறுபான்மையினர்தான்! ஏனெனில் நமது பிரார்த்தனையை இறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் அதற்கு அவன் பதிலளிக்கிறான் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்!

இதை உங்களால் வாசிக்க முடிகிறதா? அப்படியானால் நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறீர்கள். ஏனெனில் உலகில் இரண்டு பில்லியன் மக்கள் அறவே வாசிக்க முடியாதவர்களா இருக்கிறார்கள்!
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 comment:

Mohamed Faaique said...

சூப்பர்....
நாம் அடுத்தவர்களையே எப்போதும் அதிஸ்டசாலி’னு நினைக்கிறோம். அடுத்தவர்களுக்கு, நாமும் அடுத்தவந்தான் என்பதை புரியாமல்...