Saturday, April 2, 2011

இரண்டு ரூபாய்







பத்து ரூபாவை வாங்கிக் கொண்டு

முன்னால் போ என்று துரத்தினாய்
எட்டு ரூபாவுக்கான
பயணச் சீட்டைத் தந்து விட்டு

இரண்டு ரூபாய்க்காக
வாய்திறக்க முற்பட்டால்
நெருக்குப் பட மட்டுமல்ல
என்னை
நிர்வாணப்படுத்தி விடவும் கூடும்
நீ

தருமதிக்கு முயற்சித்தால்
கெடுமதி விளைந்து விடுகிறது
அவ்வப்போது

பஸ்ஸில் ஏறிய பிறகுதான்
சில்லறை பற்றிய ஞாபகம் வருகிறது
‘சில்லறைகள்’ நிறைந்த நாட்டில்

‘நாணயம்’ இல்லாத உலகில்
இரண்டு ரூபாய் ஒன்றும்
பெரிய நாணயம் இல்லைத்தான்

ஆனாலும்
தவிர்க்க முடியுதில்லை -
நீ திருப்பித் தராத பணத்தில்
தன் குழந்தைகளுக்கு
இரண்டு டொபிகளை வாங்க எண்ணும்
ஓர் ஏழைத் தந்தையின் தவிப்பு
நினைவில் வருவதை!



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

No comments: